Friday, July 30, 2010

விளிம்பு நிலை மக்களின் குரல்தான் மையத்திற்குப் பெரிய சவால்'


பின்காலனியச் சொல்லாடலைக் கட்டமைத்ததில் முக்கியப் பங்கு வகிக்கும் கூகி வா தியாங்கோ(சஞ்ன்ஞ்ண் ரஹ பட்ண்ர்ய்ஞ்ர்) 1938இல் ஆப்பிரிக்காவில் 'வெள்ளையின மேட்டுப் பகுதி' (ரட்ண்ற்ங் ஏண்ஞ்ட் கஹய்க்ள்) என்று அழைக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட கென்யாவில் பிறந்தவர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 20ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலங்களில் நடத்தப்பட்ட 'மாவ் மாவ்' (ஙஹன் ஙஹன்)ஆயுதப் போராட்டச் சூழலில் வளர்ந்த இவர் தமது எழுத்துக்களில் காலனிய எதிர்ப்புக் கருத்தாக்கத்தை மிக ஆழமாக முன்வைத்தார். சுதந்திரத்திற்குப் பிந்தைய கென்யாவின் நிலைபற்றியும், அங்குள்ள அரசியல்வாதிகளையும் விமர்சித்து அவர் எழுதிய டங்ற்ஹப்ள் ர்ச் ஆப்ர்ர்க் நூல் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதன் விளைவாக 1977இல் இவர் கைது செய்யப்பட்டார். நாடுகடத்தப்பட்ட இவர் 1993வரை அமெரிக்காவில் உள்ள யேல் (வஹப்ங்)பல்கலைக்கழகத்திலும் அதன்பின் இன்றுவரை நியூயார்க் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்துவருகிறார்.
இயற்கையின் ஒவ்வொரு அங்கமும் தனித்தன்மையோடு இருக்கின்றன. இயற்கையின் பெரும் ரகசியங்களில் இதுவும் ஒன்று. ஒரு பூவின் நிறமும், வடிவமும் ஒருபோதும் பிறிதொன்றை ஒத்திருப்பதில்லை. எந்தப் பறவையும் வேறொரு பறவையின் குரலில் பாடுவதில்லை. இந்தத் தனித்தன்மை கூற்றினை மனிதனைத் தவிர பிற அனைத்து உயிரினங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. மனிதன் மட்டுமே பிற மனிதனின் தனித்தன்மையை ஏற்க மறுப்பதோடு, தனது ஆளுமையை பிறர் மீது திணிக்கவும் முயல்கிறான். எல்லா மனிதர்களும் தமது ஆதிக்கத்தை சக மனிதர்கள் மீது செலுத்தும் முயற்சியிலேயே தமது வாழ்நாளின் பெரும் பகுதியையும், தம் ஆற்றலின் பெரும் பகுதியையும் செலவிடுகின்றனர். அதற்கு இயல்பான தனித்தன்மைகளை விடுத்து, செயற்கையான சில அடையாளங்களை ஆதிக்கத்தின் கருவிகளாகப் பயன்படுத்துகிறார்கள். சாதி, நிறம், மதம், பாலினம், மொழி, பண்பாடு ஆகியவை ஒடுக்குமுறைக்குப் பயன்படும் ஆயுதங்களாக அவர்களிடம் மாறுகின்றன. இந்த ஆதிக்கத் திணிப்பால் தனது அடையாளத்தை ஒருவன் இழக்க நேரிடும்போது, அதை மீட்டெடுக்கத் துணிகிறான். அவனைப் பொறுத்தவரையில் அடையாள மீட்புக்கென அவன் நடத்தத் துணியும் போராட்டம், அவன் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்கானப் போராட்டத்துக்கு இணையானது. சில நேரங்களில் அதைவிடவும் மேலானது!

Koogi vaa tiyange
தமது மொழியையும், இலக்கியத்தையும், பண்பாட்டையும் மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் ஆப்பிரிக்க படைப்பாளிகள் மேற்கொண்ட முயற்சிகள், அடையாள மீட்பின் மகத்துவத்தை உணர்த்துகின்றன. கென்ய மொழி எழுத்தாளரான கூகி வா தியாங்கோ ‘காலனிய ஓர்மை அகற்றல்' எனும் தனது நூலில் ஆப்பிரிக்க அடையாளத்தை ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கக் கூறுகளிலிருந்து மீட்டெடுக்க மேற்கொண்ட எதிர்செயல்பாடுகளை விவரிக்கிறார் (அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல் - கூகி வா தியாங்கோ; தமிழில்: அ. மங்கை, வல்லினம் - 2004). ஏகாதிபத்தியம் ஆப்பிரிக்க நாடுகளின் மீது நிகழ்த்திய, இன்னும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற அடக்குமுறைகளையும், கொடுமைகளையும் முற்றிலும் புதிய பரிமாணத்தில் பார்ப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் கூகியின் நூல், நமக்குப் பெரிதும் உதவி செய்கிறது. ஆப்பிரிக்காவின் மொழி, இலக்கியம் மற்றும் நிகழ்த்துக் கலைகளில் ஏகாதிபத்தியம் செய்திருந்த சீரழிவுகளை விரிவாகச் சொல்வதன் மூலம் ஆப்பிரிக்காவின் ‘ஆன்மா' எப்படி சிதைவுக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

தனித்த மொழி, மண் மற்றும் மரபுக் கூறுகளுடனான புனைக் கதை, இன அடையாளம், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய ஆப்பிரிக்க படைப்புகளின் அடிப்படைக் கூறுகளை தலித் இலக்கியக் கூறுகளோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளவும், தலித் படைப்புகளையும், படைப்பாளிகளின் எழுத்துச் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்யவும் கூகியின் நூல், நமக்குப் பெரிதும் உதவும் என்று தோன்றுகிறது. ஆப்பிரிக்காவைப் பற்றி பிற மக்களிடம் பதிய வைக்கப்பட்டிருக்கும் இனக்குழு மோதல்களைப் பற்றிய கருத்தை நிராகரித்து விடும்படி கூகி, நூலின் தொடக்கத்திலேயே நம்மிடம் உறுதியாகக் கேட்டுக் கொள்கிறார். ஆப்பிரிக்கப் படைப்பாளிகளின் படைப்புகளில் வரும் பாத்திரங்கள் இனக்குழு அடையாளத்துடன் அணுகப்படுவதையும், விமர்சிக்கப்படுவதையும் அவர் முற்றிலும் நிராகரிக்கிறார். ஏகாதிபத்தியமே இனக்குழு மோதல்களுக்கான காரணம் என்கிறார்.
ஆப்பிரிக்காவின் சிக்கல்களுக்கு அடிவேர் ஏகாதிபத்தியம் என்பதை உணரவிடாமல் தடுப்பதில் மேற்குலக ஆய்வாளர்களும், ஊடகங்களும் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இனக்குழு அடிப்படையில்தான் இன்று முழு ஆப்பிரிக்காவும் விளக்கப்படுகிறது. இப்படியான விளக்கங்கள், ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியை மறைத்து விடுகின்றன. எனவே, ஆப்பிரிக்க இயல்பு நிலையை அணுகுவதற்கு இரண்டு பார்வைகள் கூகி வா அவர்களால் முன்வைக்கப்படுகின்றன. ஏகாதிபத்திய மரபும், எதிர்ப்பு மரபும்தான் அந்த இரண்டு பார்வைகள். இப்பார்வையினூடே அவர் முன்வைக்கும் கருத்துகள், ஆப்பிரிக்காவை புரிந்து கொள்ள வகை செய்கின்றன. ஒரு கையில் பைபிளையும் மறு கையில் வாளையும் கொண்டு ஆப்பிரிக்காவை நிர்மூலமாக்கிவரும் ஏகாதிபத்தியத்தின் அழிப்புகளை, கூகியின் அணுகுமுறையின் வழியாகவே நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

பிற இனங்களால் நிகழ்த்தப்படும் பெரும் ஒடுக்குமுறைகளில் நிரந்தரமானதும், நீண்டதுமான பாதிப்பினை செய்வது மொழி அழிவு. ஆப்பிரிக்காவின் மொழிகள், ஏகாதிபத்திய அரசுகளால் வேட்டையாடி சிதைக்கப்பட்டுள்ளன. அங்கு பல மொழிகளுக்கு வரி வடிவம் இல்லை; பல மொழிகள் பேசப்படுவதில்லை. காலனிய அரசுகள் தமது மொழியை தமது ஆதிக்கத்திற்குள் உள்ள ஆப்பிரிக்க மக்களிடம் திணித்தது மட்டுமின்றி, அந்த நாடுகளின் எல்லைகளையும் இந்தத் திணிப்பின் அடிப்படையிலேயே பிரித்திருக்கிறார்கள். 1884 இல் பெர்லின் நகரில் கூடிய காலனிய அரசுகளின் ஆட்கள் ஆப்பிரிக்காவை ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துகீசியம் பேசும் நாடுகளாக வரையறுத்து எல்லைகளை உருவாக்கியுள்ளனர். இதன் அடிப்படையில்தான் ஆப்பிரிக்கர்களின் அடையாளங்களும்கூட உருவாக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளிலும், பல்கலைக் கழகங்களிலும், அரசின் நிர்வாகத்துறையிலும், இலக்கியத்திலும் பல ஆண்டுகளாக காலனிய நாடுகளின் மொழிகளே பயன்படுத்தப்பட்டு, ஆப்பிரிக்கர்கள் தமது தாய்மொழியை மறந்து விட்டிருக்கிறார்கள். ‘பிறிதொரு மொழிக்காக ஒருவர் தனது தாய் மொழியைக் கைவிடுவது சரியா? அது மிகப் பெரிய துரோகச் செயலாகத் தோன்றுகிறது; பெரும் குற்ற உணர்வைத் தோற்றுவிக்கிறது. ஆனால், எனக்கு வேறு வழியேதும் இல்லை. எனக்கு இம்மொழி (காலனிய மொழி) கொடுக்கப்பட்டுள்ளது. நான் அதைப் பயன்படுத்த எண்ணியுள்ளேன்' என்று சினுவா ஆச்சிபி போன்ற புகழ் பெற்ற ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் கூறும் அளவுக்கு அங்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.

சினுவா மட்டுமின்றி செங்கோர், டேவிட்டியோப், பீட்டர் ஆப்ரஹாம்ஸ் என்ற பல ஆப்பிரிக்க புகழ் பெற்ற படைப்பாளிகள் அனைவரும் தமது தாய் மொழியில் எழுதாமல் காலனிய மொழியில் எழுதுகிறவர்களாகவே இருக்கிறார்கள். ஆங்கில வழியேயும், பிரெஞ்சின் வழியேயும் ஆப்பிரிக்க இலக்கியத்தைப் படைத்ததற்காக இந்த எழுத்தாளர்களுக்கு காலனிய அரசுகள் - ‘புதியதொரு கலையை உருவாக்கியதற்காக' பரிசுகளையும், பாராட்டுகளையும் அளித்திருக்கின்றன.

இந்த இலக்கியங்களே பள்ளிகளில் கற்பிக்கப்பட்டுள்ளன. பீரங்கிகளால் பணிய வைக்கப்பட்ட வழிமுறைகளுக்கு மாற்றாக, மொழித் திணிப்பு அதிகமான பலனைத் தந்ததாக சொல்கிறார் கூகி வா. துப்பாக்கி ரவை உடலை வருத்திப் பணிய வைக்கும் சாதனம். மொழி ஆன்மிக அடிமைப்படுத்தலுக்கு வழி வகுக்கும் என்று எழுதும் அவர், தனது கருத்துக்கு மிகப் பொருத்தமாக செயிக் கானேயின் நூலிலிருந்து ஒரு பகுதியை மேற்கோள் காட்டுகிறார். ‘கருப்புக் கண்டத்தில் நாம். அவர்களது உண்மையான சக்தி பீரங்கிகளில் இல்லை; அதைத் தொடர்ந்த வழிமுறைகளில் இருந்தன என்பதைப் புரிந்து கொண்டோம். பீரங்கிகளுக்குப் பின்னால், புதிய பள்ளிகள் இருந்தன. அப்பள்ளி பீரங்கியிலிருந்து போரிடும் ஆயுதத்தின் வலுவைப் பெற்றது. ஆனால், பீரங்கியை விட நிரந்தரமான வெற்றியை ஈட்டித் தந்தது. பீரங்கி உடலைப் பணிய வைக்கிறது. பள்ளி ஆன்மாவை ஈர்க்கிறது.”

தம் வீட்டிலும், வயல் வெளிகளிலும், வேலை செய்யுமிடத்திலும், மக்களிடத்திலும் பேசிய மொழியை ஆப்பிரிக்க குழந்தைகள் பள்ளிகளில் படிக்க முடியவில்லை. அவர்கள் தாய்மொழியில் கேட்ட கதைகளும், பாடல்களும், விடுகதைகளும் பள்ளிப் புத்தகங்களில் இல்லை. ஆப்பிரிக்க குழந்தைகள் படித்த காலனியப் பள்ளிகளில் தங்கள் தாய் மொழியில் பேசினால் தண்டிக்கப்பட்டார்கள்; அவனமானப்படுத்தப்பட்டார்கள். நிர்வாணப்படுத்தப்பட்டு, அவர்களின் புட்டத்தில் பிரம்படிகள் வழங்கப்பட்டன. கழுத்தில் ‘நான் ஒரு முட்டாள்' என்றும் ‘நான் ஒரு கழுதை' என்றும் எழுதப்பட்ட பலகைகள் மாட்டப்பட்டு உலா வரவைக்கப்பட்டனர். தண்டத் தொகை வசூலிக்கப்பட்டது.

தாய்மொழியில் பேசும் மாணவரிடம் முதலில் ஒரு பொத்தான் காலையில் வழங்கப்படும். அந்தப் பொத்தான் அன்று முழுதும் யாரெல்லாம் தாய்மொழியில் பேசினார்களோ, அவர்களிடமெல்லாம் கைமாறி பயணம் செய்து கொண்டே இருக்கும். மாலையில் அது எந்தக் குழந்தையிடம் இருக்கிறதோ, அவரைக் கொண்டு எத்தனை பேரின் கைமாறியிருக்கிறது என்ற எண்ணிக்கை கண்டுபிடிக்கப்படும். பிறகு இந்த சங்கிலித் தொடரில் இருக்கும் ‘தாய் மொழி பேசிய குழந்தை குற்றவாளிகளுக்கு' ஆசிரியர் மூலம் தண்டனை கிடைக்கும். இத்தகைய கொடூர நடைமுறைகள் ஆப்பிரிக்க குழந்தைகளிடையே தாய்மொழியை ஒழித்துக்கட்ட உதவின. இதனோடு ஆங்கிலத்தில் பேசும், எழுதும் மாணவர்களுக்கு பெரிய அளவில் பாராட்டுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன. ஒரு மாணவன் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றாலும், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அவனுக்கு தேர்ச்சி உயர்வு மறுக்கப்பட்டது.

இப்படி கல்வி பயின்று இலக்கியவாதிகளாக மாறியவர்களுக்கு வேறொரு சிக்கலும் இருந்தது. அவர்களால் விரும்பினாலும் தமது தாய் மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்த இயலவில்லை. அதன் வரிவடிவம் காலனிய அறிஞர்களால் உருவாக்கப்பட்டதாகவும், அதன் இலக்கணங்களும், அகராதிகளும் அவர்களால் எழுதப்பட்டதாகவும் இருந்தன.
போட்டி ஏகாதிபத்தியங்கள் மற்றும் காலனியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி ஆகியவற்றால் ஒரே மொழியின் ஒலி அமைப்புகளுக்கு வேறுபட்ட வரிவடிவங்கள் ஏற்பட்டன. ஒரே காலனிய எல்லைக்குள் இருந்த ஒரே மாதிரியான ஆப்பிரிக்க மொழிகளுக்கும் இதே கதிதான் ஏற்பட்டன. எடுத்துக்காட்டாக, ‘கிகூயூ மொழிக்கு இரண்டு வகையான போட்டி வரிவடிவங்களை, பிராடெஸ்டெண்டு மற்றும் கத்தோலிக்கப் பாதிரியார்கள் உருவாக்கினர்' என்கிறார் கூகி வா. கூகி இதை மிகத் தெளிவாக உணர்வதால், மொழி மூலம் உருவாகும் பிரிவினையை நீக்கி, ஒத்திசைவை உருவாக்க பங்களிப்பினை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்.

1961இல் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கிய அவர், 1977இல் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். அதன் பின்னர் அவரின் அனைத்து எழுத்துகளும் அவரின் தாய் மொழியான கிகூயூ மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. அவரின் இம்முடிவுக்குப் பின்னால் இருக்கும் கருத்தியல் முக்கியமானது. ‘கென்ய மக்களின் தாய் மொழிகள் குழந்தையின் பேச்சு மொழி லயத்தை மட்டுமின்றி, அவர்களின் இயற்கையுடனான போராட்டம் மற்றும் சமூகப் பண்புகளைக் காட்டக்கூடிய இலக்கியங்களை உருவாக்க வேண்டும் என விழைகிறேன். தனது தன்னிலை, மொழி, சூழலோடு இயைந்த ஒத்திசைவைத் தொடக்கக் காலத்தில் பெற்ற ஒருவர் பிற மொழிகளைக் கற்கலாம். அவற்றின் வளமான, மனிதநேயம் மிக்க, சனநாயக, புரட்சிகர அம்சங்களை அறிந்து கொள்ளலாம்' (பக். 37).

கிகூயூ மொழியில் எழுத முயன்றபோது, கூகி அவர்கள் சந்தித்திருக்கும் போராட்டங்கள் மிகவும் கடுமையானவை. தனியே விரிவாக விளக்கும் அளவு ஆழமானவை. இம்முயற்சிக்கென அவர் அரசு அடக்குமுறைகளை சந்தித்திருக்கிறார். மொழி, ஆன்மாவிலிருந்து உருவாகிறது. அது பேசும்போது தரும் பொருளை விடவும் வேறொரு பொருளை மிக ஆழமாக, வெளிப்படுத்த முடியாத வகையில் தன் மக்களுக்குத் தருகிறது. தன் எழுத்துகளில் மொழியைப் பயன்படுத்தும் படைப்பாளி, மொழியுடன் உறவாடுவதிலும், பண்பாட்டைப் பாதுகாப்பதிலும், உயிர்ப்பிப்பதிலும், மாற்றத்தைக் கட்டமைப்பதிலும் அதிக பங்கினை ஆற்றுகிறான். அவன் தாய் மொழியைப் புறக்கணிக்கிறபோது, வேறொரு மொழியின், கருத்தின் பிரதிநிதியாகி விடுகிறான். மொழியின் ஊடே ஆழமான பிளவையும், மிக நெருக்கமான உறவையும் ஏற்படுத்த முடியும் என்பதை வேறெவனைக் காட்டிலும் அவனே அறிந்திருக்கிறான். அடக்குமுறைக்கு எதிராக அவன் தன் தாய் மொழியை உயர்த்திப் பிடிக்கிறபோது ஒடுக்கப்படுகிறான்.

‘மக்களது மொழியில் புரட்சிகர ஒற்றுமை, நம்பிக்கையை வெளிப்படுத்தும் படைப்பாளி, நிலைகுலைவுப் பண்பு கொண்டவராகக் கருதப்படுகிறார். எனவே, ஆப்பிரிக்க மொழியில் எழுதுவது குற்றமாகிறது. தண்டனைக்குரியதாகிறது. அந்த எழுத்தாளர் சிறைவாசம், நாடு கடத்தல், மரணம் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. அவருக்கு ‘தேசிய விருது'கள் இல்லை; புத்தாண்டு மரியாதைகள் இல்லை; ஆனால் வசவுகளும் அவதூறுகளும் அள்ளி வீசப்படும். ஆளும் சிறுபான்மை ராணுவ சக்திகளின் எண்ணற்ற பொய்கள் அவர்கள் மீது சுமத்தப்படும்” என்று தான் அனுபவித்த ஒடுக்குமுறைகளைப் பொதுமைப்படுத்தி கூறுகிறார் கூகி.
கூகியின் மொழி பற்றிய கருத்துகளும், மொழியை மீட்டெடுக்க அவர் மேற்கொண்ட செயல்முறைகளும் இந்தியா போன்ற நாடுகளுக்கு பொருத்தப்பாடு உடையதாகவே இருக்கிறது. ஏகாதிபத்தியம் இங்கே ஆங்கிலத்தை தன் காலனி ஆதிக்க எச்சமாக விட்டுச் சென்றிருக்கிறது. அதற்கு முந்தைய ஆதிக்கமான பார்ப்பனியம் தனது சாதிய கருத்தியல்களையும், மூடக் கருத்தியல்களையும் இன்னும் விடாமல் நம்மைப் பற்றிக் கொள்ளச் செய்திருக்கிறது. தசைக்குள் ஊடுறுவி உயிர் வாழும் ஒட்டுண்ணியாக, ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் பார்ப்பனியம் இருக்கிறது. எனவே, நாம் கூகியின் கருத்துகளை நம் மொழியோடும், படைப்புச் செயல்பாட்டோடும் மிகவும் லாவகமாகவும், இயல்பாகவும் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். கீகூயூ மொழி பேசியதால் ஆப்பிரிக்க கென்ய குழந்தைகள் பெற்ற அதே விதமான தண்டனைகளை, இங்கே தமிழகத்தின் பல ஆங்கிலப் பள்ளிகளில் நமது குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள்; இன்னமும் பெற்றுக் கொண்டுமிருக்கிறார்கள்.

ஆங்கிலத்துக்கு இருக்கும் பருண்மையான மதிப்பு தமிழுக்கு இங்கே இல்லை. பயிற்று மொழி, வழிபாட்டு மொழி, அலுவல் மொழி, வழக்குமன்ற மொழி, கணினி மொழி என இன்னும் தமிழ் முழுமையாக இங்கே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. மக்கள் பீரங்கி குண்டுகளாலும், துப்பாக்கி ரவைகளாலும் பணிய வைக்கப்படாமல், மொழியால் பணிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு மனிதனின் உடலை வெற்றி கொள்வதைவிடவும் மனதை வெற்றி, கொள்வதே முழுமையான வெற்றியாகிறது. அத்தகு வெற்றி ஆங்கிலத்தாலும் வடமொழியாலும் இங்கே ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இலக்கியத்திலும், ஊடகத்திலும், இன்று நல்ல தமிழ் பயன்படுத்தப்படுவதில்லை. நல்ல தமிழில் எழுதப்படும் இலக்கியங்கள் பரப்புரை செய்யப்படுவதாக ஒதுக்கப்படுகின்றன.

கூகியின் மொழி குறித்த கருத்துகளோடு மற்றொரு ஒப்புமை யையும் நாம் செய்யலாம். அடையாள மீட்பின் நோக்கத்துடனேயே அவர் தனது தாய் மொழியான கிகூயூ மொழியில் எழுத முனைகிறார். ஆங்கிலத்தில் எழுதி மிகப் பரவலான கவனிப்பைப் பெற்றிருந்த நிலையிலும், கருத்தியல் நேர்மைக்கெனவும், தனது சமூகக் கடமைக்கெனவும் அவரால் அப்படி ஒரு முடிவுக்கு வரமுடிகிறது. தமிழ் இலக்கியத்தில் தனித்த அடையாளக் கூறுகளுடன் வெளிப்பட்ட தலித் இலக்கியம், தனக்கான மொழியை தனி அடையாளத்துடன் எப்படி கட்டமைத்துக் கொண்டுள்ளது என்பதை கூகியின் செயல்பாட்டுடன் இணைத்துப் பார்க்கலாம். தலித் படைப்பாளிகளுக்கு கையளிக்கப்பட்ட சாதிய தன்மைகள் கொண்ட, இந்து மத சார்பினைக் கொண்ட, ஆண் தன்மை கொண்ட மொழியை அவர்கள் எப்படி மாற்றி, தமது படைப்புகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது ஆழ்ந்த ஆய்வுக்குரியது.

Yal Library
தலித் இலக்கியத்தின் மொழி கலகத் தன்மை கொண்டது எனவும், வெளிப்படையானது எனவும் தொடக்கக் காலத்தில் மதிப்பிடப்பட்டது. அது மெல்ல நவீனத் தன்மையையும், செவ்வியல் தன்மையையும் இன்று பல படைப்பாளிகளின் படைப்புகள் வழியே பெற்றுக் கொண்டிருக்கிறது. நேரடித் தன்மையும், பேச்சு மொழியின் சாயலும், வழக்குச் சொற்களின் பயன்பாடும், விசையூக்கப் பண்பும் கொண்ட மொழியாக அது இருக்க வேண்டும் என்று விமரிசகர்கள் அவ்வப்போது சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இந்த அம்சங்களை தலித் படைப்பு மொழி முழுமையாகப் பெற்று வளரவில்லை. பேச்சு மொழி என்கின்ற அம்சத்துடனும், ஆத்திரத் தின் மொழி என்ற அம்சத்துடனும் மட்டுமே - இன்னும் அது பல தலித் படைப்பாளிகளின் படைப்புகளில் சுழன்று கொண்டுள்ளது; அல்லது முன்னமே உருவாக்கி கையளிக்கப்பட்ட இலக்கிய மொழியுடன், செறிவு பூண்டு கச்சிதமாக வெளிப்படுகிறது.

புது சொல்லாக்கங்களோ, சனாதன, சாதியத் தன்மைகளை கிலி கொள்ளச் செய்யும் தன்மையுடைய வார்த்தை உருவாக்கங்களோ இல்லை. தலித் இலக்கியம் தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தின் தாக்கத்திலிருந்தும், பிடியிலிருந்தும் விடுபடாததினால்தான் இந்த நிலை உருவாகி இருக்கிறது என்று உறுதியாகக் கூறிவிடலாம்; அல்லது அது செவ்வியல் தன்மையுடையவைகளின் வரிசையில் இடம்பிடித்துக் கொள்ள முன்னேறுவதால், தனது ஆதிக்கக் கருத்தியலின் ஓர்மையை மிகக் கவனமாக தவிர்க்க அது மறந்து விடுகிறது. தலித் பிரதிகள் மீது அன்றிலிருந்து இன்றுவரை வைக்கப்படும் விமரிசனத்தில் தொடர்ந்து வரும் இரு கருத்துகளில் ஒன்று, அதன் சொல் பிரயோகம். மற்றொன்று அதன் வடிவம் அல்லது கட்டமைப்பு. தலித் பிரதிகள் தனக்கான தனி வடிவத்தை உருவாக்கிக் கொள்வதைத் தடுப்பதிலும், உருவாக்கிக் கொண்டதைப் புறக்கணிப்பதிலும் இவ்விமரிசனங்கள் பங்காற்றுகின்றன என்று நாம் அறிந்து கொள்ள முடியும். அவ்வகையில் தலித் படைப்பு மொழி இன்று கவனிப்புக்கும், மீளாய்வுக்கும் உள்ளாக்கப்பட வேண்டியுள்ளது. தலித் மனித முகத்துடனான மொழியாகவும், உயிர் தன்மை கொண்ட மொழியாகவும் அது மாற வேண்டி யுள்ளது. இந்த மாற்றத்தை இப்போது எழுதிக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் மட்டுமின்றி, இனி எழுத வரும் தலித் படைப்பாளிகளும் கவனத்தில் கொண்ட பின்னர் எழுதத் தொடங்கலாம்.

ஈழத்தில் சிங்களப் பேரினவாதத்தால் எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தின் புகைப்படம், என் வீட்டு மேசை மீது இருக்கிறது. அதைப் பார்க்கின்ற போதெல்லாம் தீத்துண்டு ஒன்றைப் பார்ப்பது போலவும், இறந்த ஒருவரின் சாம்பலை பார்ப்பது போலவும் நான் உணர்வதுண்டு. எழுதும்போது, கை சோர்ந்து மேசையின் மேல் தலைவைத்து சாய்ந்து கொள்கையில் ஆயிரக்கணக்கான கூக்குரல்கள் கேட்கும். அப்போது மாலை நேரத்தில் பலநூறு பறவைகள் கூடு திரும்பும் கூட்டொலி கேட்கும். காட்டின் அருகே நின்று கொண்டிருப்பது போலவும் தோன்றும். அந்தப் புகைப்படம் ஒரு கண்ணாடிப் பேழைக்குள் போடப்பட்டு, எழில் என்ற கவிஞரால் எனக்குப் பரிசளிக்கப்பட்டது. அவரின் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டபோது (உள்மை), ஈழத்தில் இருக்கும் அன்றாட வாழ்வின் சில தருணங்களை, ஆவணப்படமாகப் போட்டுக் காட்டினார். அவரின் கவிதைச் சொற்களுக்கு அப்படங்கள் மேலும் வலுவேற்றின. அதனுடன் கவிதைக்கான காட்சியையும் மனதுக்குள் விரித்தன. அக்டோபர் 30, 1995 என்ற அவர் கவிதை, யாழ் நூலகம் எரியூட்டப்பட்டதை இவ்வாறு கூறுகிறது :
யாழ் / தேனீக் கூட்டம் / கலைந்தது / அய்ந்து லட்சம் / தேனீக்கள் / முதுசத்தை / உழைப்பை / வரலாற்றுப் / பாரம்பரியங்களை / கலாச்சாரப் / புனிதங்களை / வியர்வையின் / உப்பை / ஒரே / ஒரு / இரவு / ஒரே / ஒரு பாலம் / விடுதலைப் / பயணம்

வெலிக்கடை சிறைச்சாலையைப் பற்றிய பிறிதொரு கவிதை, கொடூரச் சூழலை கண்முன் நிறுத்துகிறது.

மின்சார வேலி / இரும்புக் / கரங்கள் / வெளிச்சத்தைத் / தேடும் / இருள் / நிரம்பி / வழியும் / கைதிகள் / கோரப் பசி / மலங்களைப் / புசிக்கும் / வாய்கள் / மூத்திரங்கள் / தீர்க்கும் / தாகங்கள் / உரோமமே / இல்லாது / உடல்கள் / நகங்களை / வேண்டி / விரல்கள் / காடைத்தனத்தின் / கட்டவிழ்ப்பு / இரவு / நிசப்தத்தைக் / கிழிக்கும் கதறல் / அடங்கிப்போகும் / முனகல் / காலை / சுத்திகரிப்பு / ரத்த வெடில் / அடுத்தது / நானாகலாம் / பருந்து / உயரப் பறக்கிறது

அடையாள மீட்பின் எதிர் செயல்பாடுகளில் மேலும் மேலும் சந்திக்க வேண்டிய கொடுமைகளையும், சந்திக்க வேண்டிய இழப்புகளையும் அங்கிருந்து வரும் செய்திகள் நமக்கு ஓயாமல் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.
உங்களது இளமைப் பருவம், கல்விச் சூழல், காலனியத்தையும் ஆங்கில மொழியையும் சாடும் தீவிர விமர்சகராகவும், படைப்பாளியாகவும் நீங்கள் உருவானது ஆகியவை பற்றிக் கூற முடியுமா?

பிரிட்டிஷ் காலனியத்திற்கு உட்பட்ட கென்யாவில் 1938இல் நான் பிறந்தேன். எனது பெற்றோர் விவசாயிகளாகவும், பல சமயம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் குடியேறிகளுக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்தும் வந்தனர். காலனியத்தைப் பற்றிய எனது விமர்சனக் கண்ணோட்டத்தைத் தீர்மானிக்கும் முக்கியச் சம்பவமாக இளமைப் பருவத்தில் நான் கண்ட 'மாவ்மாவ்' ஆயுதப் போராட்டத்தைத்தான் கூறவேண்டும். இது மட்டுமல்லாமல் கதை சொல்லும் / கதை கேட்கும் பாரம்பரியத்தில் வளர்ந்தவன் நான். எங்களது வாய்மொழி மரபு மிகவும் முக்கியமானதாகவும், எனது படைப்புலகைப் பெருமளவு பாதிக்கும் வகையிலும் இருந்தது.

உங்களைப் பொருத்தவரை ஆங்கில மொழியை நிராகரிப்பது அரசியல் தேவையாக மட்டுமுள்ளதா? அல்லது கென்யாவின் கதை சொல்லும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கத் தேவையான உத்தியாகவும் உள்ளதா?

இதனை எனது ஈங்ஸ்ரீர்ப்ர்ய்ண்ள்ண்ய்ஞ் ற்ட்ங் ஙண்ய்க் என்ற நூலில் விளக்க முற்பட்டுள்ளேன். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு அரசியல் பிரச்சினைதான். ஒரு எழுத்தாளன் யாருக்காக எழுதுகிறான் என்ற கேள்விதான் முதலில் எழுகிறது. அவர் எந்த மொழியில் எழுதுகிறார் என்பது கண்டிப்பாக அவரது வாசகர்களாலேயே முடிவு செய்யப்படுகிறது. ஆனால், அதற்குப்பின் கலையனுபவத் தேவைகளும் சேர்ந்துகொள்கின்றன. என்னுடைய மக்களின் மொழியோடு (உதாரணமாக, ஒரு ஆப்பிரிக்க மொழியோடு) என்னைத் தொடர்புபடுத்திக்கொள்ளும்போதுதான் என்னு டைய மக்களின் கதை சொல்லும் திறனோடு என்னால் உறவு கொள்ள முடிகிறது. இதற்கு உதாரணமாக எனது ஙஹற்ண்ஞ்ஹழ்ண் மற்றும் ஈங்ஸ்ண்ப் ர்ய் ற்ட்ங் இழ்ர்ள்ள் ஆகிய புதினங்களைக் குறிப்பிடலாம். அவை பெருமளவு கென்யாவின் நாட்டார் மரபை ஒட்டி எழுந்தவை.
கென்ய வேர்களை மீட்டெடுக்கும் உங்கள் எழுத்துமுறை காலனிய நீக்கு சக்தியாக மட்டும் செயல்படுமா? அல்லது பின்காலனியச் சொல்லாடலையும் கேள்விக்குள்ளாக்குவதாக இருக்குமா?

இரண்டையும் செய்யும் என்றுதான் நினைக்கிறேன். பின்காலனியம் என்பது பெருமளவு காலனியத்தின் கூறுகளைத் தாங்கியபடியும் அதன் தொடர்ச்சியாகவுமே இருக்கிறது. அதாவது, 'பின் காலனியம்' 'நவ காலனியத்தை' தன்னகத்தே மறைத்து வைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

நவகாலனியத்தை மையப்படுத்திப் பேசும் கறுப்பின அறிவு ஜீவியாக இருக்கும் உங்களது நிலைப்பாடு எந்த அளவு பின்காலனியச் சொல்லாடலிலிருந்து மாறுபட்டிருக்கிறது?

உழைக்கும் மக்களை முன்வைத்துத்தான் எனது நிலைப்பாடு எப்போதும் இருந்துவருகிறது. அவர்களுக்குத்தான் என் எழுத்துக்களில் முதலிடம்.

இதனை இன்னும் தெளிவாக விளக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதாவது தலித் அறிவுஜீவிகள் இந்தியாவை முன்னிலைப்படுத்திப் பேசப்படும் பின்காலனியத்தை சந்தேகிக்கும் அதே சமயம் சையத், பேனான் மற்றும் கருப்பினத்தவரின் எழுத்துக்களை ஆர்வத்தோடு வாசிப்பதுடன் மொழியாக்கம்கூடச் செய்திருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் பின்காலனியச் சொல்லாடல் என்ற பரந்த அறிவு தளத்தில் உங்களது நிலைப்பாட்டை விளக்குங்களேன்.

உங்களது விளக்கத்துக்கு நன்றி. நான் அக்கறை காட்டுவதெல்லாம் 'பின்காலனியம்' என்று சொல்லப்படுவது. 'நவ காலனியத்தை' கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது என்பதைத்தான். அறிவுஜீவிகளின் தனிப்பட்ட சமூக மற்றும் கருத்துருவக் கண்ணோட்டம்தான் மிக முக்கியமானதெனக் கருதுகிறேன். இதுவே ஒரு பின் காலனிய அறிவுஜீவியை வேறொரு அறிவுஜீவியிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது. கென்யச் சூழலிலும் இதுவே உண்மை. ஆதிக்க வெறி கொண்ட 'மோய்' (ஙர்ண்)ஆட்சியாளர்களையும், அவர்களுடன் தற்போது இணைந்துள்ள கிபாக்கி (ஓண்க்ஷஹந்ந்ண்) ஆட்சியாளர்களையும் ஆதரிக்கும் சில அறிவுஜீவிகள் தற்போதைய கென்யாவில் இருக்கின்றனர். இவர்கள் மக்களுக்கு ஆதரவாக இயங்கிவரும் அறிவு ஜீவிகளை எதிர்த்து வருகின்றனர். அனைத்து வகையான தேசிய இனங்களையும் சமமாக பாவிக்கும் போக்கே எனது செயல்பாடுகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. மேலும், இந்தப் பலதரப்பட்ட தேசிய இனங்களிலும் உள்ள அடித்தட்டு மக்களின் அரசியல், பண்பாட்டு மற்றும் மனதளவிலான விடுதலைக்கான செயல்பாடுகளே என்னை வழி நடத்திவருகின்றன. அதனால்தான் நான் தொடர்ந்து 'உழைப்பாளிகள், விவசாயிகள்' என்ற சொற்களை பயன்படுத்திவருகிறேன்.

சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் அபர்ஜின் இனத்தவரும், நியூசிலாந்தில் மெüரி இனத்தவரும், இந்தியாவில் 'தீண்டத்தகாதவர்' என கருதப்படும் தலித்துகளும், கனடாவில் 'முதல் தேசத்து மக்கள்' என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பூர்வீகக் குடியினரும் இதுநாள்வரை கட்டமைக்கப்பட்டு வந்த தேசியத்தை எதிர்த்துக் குரல் எழுப்புகின்றனர். இவர்கள் பல சமயம் பின்காலனியச் சொல்லாடலையும் கடுமையாக விமர்சிக்கிறார்களே. இவர்களது குரல்கள் எழுப்பும் சவால்களைப் பற்றி. . .

நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, எந்தப் பின் காலனிய அறிவுஜீவிகளைக் கருத்தில் கொண்டு அந்தக் குரல்கள் எழுப்பப்படுகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். அதே சமயம் தங்கள் பிரச்சினைகளைத் தாமே முன்வந்து பேசுமளவு அவர்கள் மேமிழுந்து வந்திருப்பது மிகவும் முக்கியமானதாகப்படுகிறது. இவர்களது குரல்கள்தான் இன்று மையத்தை நோக்கி எழுப்பப்படும் பெரிய சவால்களாக இருக்கமுடியும். மையத்திடம் தனக்கான இடத்தை, உரிமையை வேண்டி போராடும் உண்மையான குரல்களாக இந்த விளிம்பு நிலை மக்களின் குரல்களைத்தான் கூறவேண்டும்.
பின்காலனிய அறிவுஜீவிகள் முன்வைக்கும் தேசியம், தேசியமொழி, பாரம்பரியம் என்பது இந்தப் பூர்வீகக் குடியினரின், அடித்தட்டு மக்கள்மீதான மற்றொரு ஏகாதிபத்தியமாகத்தானே இருக்கிறது? இதற்கு ஆங்கிலமே மேல் என்று சொல்லுமளவுதான் இங்கு சமுதாயக் கட்டுப்பாடும், அறிவு தளத்தின் செயல்பாடும் இருக்கிறது. இதன் பின்னணியில் ஆங்கில மொழியை முற்றிலும் புறக்கணிக்கும் உங்கள் நிலைப்பாடு கென்யச் சூழலையே முன்னூதாரணமாக வைத்து எழுந்தது என்று கூறலாமா?

மொழியாக்கம் என்பது ஒரு பரந்துபட்ட வாசக வட்டத்தை எதிர்நோக்கும் அரசியல் செயல்பாடாக ஆகிவிட்ட இன்றைய சூழலில், நாம் ஆங்கிலத்தில் எழுத வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் நினைக்கிறேன். தலித் எழுத்தாளர்களும், மற்ற பூர்வீகக் குடியினரும் தமது மொழிகளிலேயே எழுதி, தேவைப்படுமானால் அவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நமது மொழியில் நாம் ஆழமாக உன்றி இருப்பது அவசியமென நான் கருதுகிறேன்.

இந்தியாவில் தீண்டப்படாதவர்கள் அனுபவித்துவரும் கொடுமைகள், கென்யாவில் 'வாட்டாக்களும்' (ரஹற்ற்ஹள்)சொமாலியாவில் 'மிட்கான்' (ஙண்ற்ஸ்ரீர்ய்ள்) என்ற பிரிவினரும், நைஜிரியாவில் 'ஓசஸ்' (ஞர்ள்ன்ள்) என்ற பிரிவினரும் அனுபவித்துவரும் கொடுமைகளோடு ஒப்பிடுமளவுக்கு இருக்கிறது. இதேபோல இவர்களின் துயர்களைத் துடைக்க சில காலனிய அதிகாரிகள் மற்றும் மிஷினரிகள் எடுத்த முயற்சிகளுக்கு இடையேயும் ஒப்புமையைக் காண முடிகிறது. இந்த நிலையில், வெறுமனேக் காலனிய எதிர்ப்பு என்று குரல் எழுப்புவது ஒருவித தேசியவாத, மேல்தட்டு வர்க்கத்தின் கூக்குரலாக மட்டும்தானே இருக்கும்?

காலனிய வெறுப்பு என்பது பொதுவான அர்த்தமுள்ள சமுதாயப் புரட்சியின் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. 'சமூக நீதி' என்பது ஒரு தேசத்தில் உள்ள பல்வேறு இனங்களின் பொருளாதாரம், அரசியல் மற்றும் பண்பாடுகளும் சமமாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்பதில்தான் அடங்கும் என நினைக்கிறேன்.

கென்யப் பண்பாட்டு வேர்களை மீட்டெடுக்கும் தங்களது முயற்சி எந்த அளவுக்கு அதன் பன்முகத்தன்மையை வெளிக் கொணர உதவுவதாக இருக்கும்?

நமது பண்பாட்டினுடைய பன்முகத்தன்மையின் ஒரு பகுதியாகத்தான் நாம் இருக்கிறோம். இதனை உணர்ந்தால், நாம் பேசுகிற மொழி மற்றும் நமது எழுத்துக்கள் அங்குள்ள பலவகைப்பட்ட தேசியங்களையும், தேசிய இனங்களையும் கவனத்தில் கொள்ளுவதாக அமையும். கென்யச் சூழலை வைத்து இதனை விளக்க முயல்கிறேன். கென்யா 1895இதான் பிரிட்டிஷ் காலனியாக ஆனது. கென்யாவில் பல மொழிகள் பேசிவந்த, தமக்கான பிரத்தியேகமான வரலாற்றையும், பண்பாட்டையும் கொண்டிருந்த பல்வேறு இனங்களை ஒரு எல்லைக்குட்பட்ட அரசுக்குக் கீழ் கொண்டுவந்த காலகட்டமாகவும் இதனைக் கூறலாம். காலனிய எதிர்ப்புத் தேசியவாதம் இந்தப் பலதரப்பட்ட இனங்களை ஒருங்கிணைத்த ஒரு 'கென்யத் தன்மையை'க் கட்டமைக்கவும் உதவியது. இந்தக் காலனிய எதிர்ப்பின் உச்சகட்டமாக 20ஆம் நூற்றாண்டில் 50களில் நடந்த 'மாவ் மாவ்' ஆயுதப் போராட்டத்தைச் சொல்லலாம். அதன்பின் 1963இல் கென்யா பிரிட்டிஷிடமிருந்து விடுதலைபெற்றது. அதன்பின் ஆங்கிலமே அதன் அரசு மொழியாக அறிவிக்கப்பட்டது. 'கிஸ்வாஹிலி' என்ற மொழிதான் அதன் பேச்சுமொழி. இதைத் தவிரக் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் தங்களுக்கென தனிப்பட்ட மொழிகளையும், பண்பாட்டையும் கொண்டிருந்தன. இவை யாவும் தத்தமது தேசியத்தை மட்டும் பேசாமல் ஏனைய தேசிய இனங்களையும், கென்ய தேசத்தையும் அதன் நீட்சியாக உலகு பற்றியும் பேச வேண்டும் என நினைக்கிறேன். இந்த மொழிகள் யாவும் (மொழியாக்கம் வழியாக) மற்ற பிராந்திய மொழிகளுடன் கலந்துறவாட வேண்டிய தேவையும் உள்ளது. எந்த ஒரு மொழியும் பண்பாடும் வேறொன்றின்மேல் திணிக்கப்படக்கூடாது. மொழிகளுக்கு இடையேயான உரையாடல் மூலம் ஒரு புதிய மொழி உருவானால், அது அனுகூலமான விசயமே. அதே சமயம் (என்னுடைய ஙர்ஸ்ண்ய்ஞ் ற்ட்ங் இங்ய்ற்ழ்ங் என்ற நூலில்“ஐம்ல்ங்ழ்ண்ஹப்ண்ள்ம் ர்ச் உய்ஞ்ப்ண்ள்ட்” என்ற பகுதியில் நான் சொல்லியிருப்பதைப்போல) இந்தப் புதிய மொழியின் பிறப்பு மற்ற மொழிகளின் கல்லறையின் மேல் உருவாகக்கூடாது.

விமர்சனம் மை (கவிதைத் தொகுப்பு) - 35 கவிஞைகளின் கவிதைகள்



பதிவு என்று வரும் போது அதற்கு நீண்ட கால வாழ்வை இணையத்தளம் எந்தளவுக்குக் கொடுக்க
முடியும் என்பது கேள்விக்குறிதான் அது மட்டுமன்றி சமூகத்தின் கீழ்மட்டம் வரை
இப்பதிவுகள் எடுத்துச் செல்லப்படுவதற்கு இருக்கும் சவால்களை நிவர்த்திப்பதற்கான
வழிமுறையாகவே ஊடறு இணையத்தளத்தின் கடந்த மூன்றாண்டு கால சேகரிப்புகளில் உள்ளடங்கிய
கவிதைகள் இங்கு மை கவிதைத்தொகுப்பாகிறது என மை கவிதைத்தொகுதிக்கான தேவையை ஆசிரியர்
குழாம் வெளிப்படுத்தியுள்ளது. ஊடறு எனும் பெண்கள் அமைப்பு புலம் பெயர்ந்வர்களால்
சுவிஸில் உருவாக்கப்பட்டு 2002 இல் ஊடறு எனும் நால் வெளியிடப்பட்டது. 2004 இல் ஊடறு
இணையத்தளம் உருவாக்கப்பட்டது. அதன்பின் 2006 இல் பெண்ணியாவின் கவிதைத் தொகுதி
வெளியிடப்பட்டது. 2007 இல் ஊடறு கவிதைத்தொகுதி வெளியிடப்பட்டது. பல்வேறு
நாடுகளிலிருந்து சுமார் 35 கவிஞர்களின் 110 கவிதைகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.


முன்னுரையில் சொல்லப்பட்டது போல் இக்கவிதைகள் பெண்களின் பிரச்சினைகளை மட்டுமன்றி
சமூகத்தை கலை இலக்கியங்களை ஆண்நோக்கிலிருந்து இடம்பெயர்த்து பெண்நோக்கில் வைத்து
புரிந்துகொள்வதற்கான முயற்சிகளும் அதன் வழியான பெண் மொழிகளின் உருவாக்கம் பற்றிய
பொருளாக முனைப்புக் கொண்டுள்ளது.

ஊடறு கவிதைத்தொகுதி 2007 இதுவரை தமிழில் வெளிவந்த பெண் கவிஞர்களின்
கவிதைத்தொகுதிகளிடையே தனக்கெனவோர் நீண்ட கால இடத்தைப் பிடித்துக்கொள்ளும். என்பதை
தொகுதியை வாசித்துக் கொண்டிருக்கும் போதே உணர முடியும். பிரபல்யமான தமிழ்க்
கவிதாயினிகள் பலரினதும், புதியவர்கள் சிலரினதும் கவிதைகளும் இதில் அடங்கியுள்ளன.


அவ்வகையில் அவுஸ்ரேலியா ஆழியாளின் வீடு கவிதையில்

என்னைச் சுழற்றும் கடிகாரமும்
என்னோடே வளரும் சுவர்களும்
சுற்றி உயர்ந்து இறுகிய கல்மதிலுமற்றதோர்
வீடு வேண்டும் எனக்கு�
-------
குளிரில் கொடுகி
வெயிலில் உலர்ந்து
மழையில் குளித்து
காற்றில் அசைந்து என் பூக்கள்
பறந்து பரவசம் எய்த
ஒரு வட்ட வீடொன்று வேண்டும் எனக்கு
வானத்து வளைவுடன்

என பெண்ணின் வாழ் சூழலையும் வாழவிரும்பும் வாழ்க்கையையும் தொனித்து நிற்கிறது.
இக்கவிதையில் 'ஒரு வட்ட வீடொன்று வேண்டும்' எனும் அடிகளில் ஒரு வீடு எனும் கருத்தை
விளக்க கவனமின்மை காரணமாக
ஒரு, ஒன்று என இரு சொற்கள் வந்து விழுந்திருக்கின்றன. வட்ட வீடொன்று வேண்டும்.
எனக்கு என்பது போதுமானது. இவரின் கி.பி. 2003ல் தைகிரிஸ் எனும் கவிதையில் மனம்
தொலைந்து போகிறது.
மேலும் சில இரத்தக் குறிப்புக்கள் எனும் இலங்கை அனாரின் கவிதையில்

மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து
பழக்கம் பட்டிருந்தும்
குழந்தை விரலை அறுத்துக் கொண்டு
அலறி வருகையில்
நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகிறேன்
இப்போதுதான் முதல் தடவையாக காண்பது போல
இரத்தம; கருணையை; பரிதவிப்பினை
அவாவுகின்றனது�

எனத் தொடங்கும் கவிதை தொடர்ந்து செல்கையில் இலங்கையின் வெளிப்படை அரசியலை பேசிப்
போகிறது பெண்ணின் மென்மன அதிர்வை காட்சிப்படுத்தப் போகிற ஆவலைச் சுமந்த வண்ணம்
அடுத்த வரிக்குத் தாவுகையில் எதிர்பாராத அதிர்ச்சிகளை பல்வேறு தளங்களில்
விரிவதனூடாக தருகிறது.

பஞ்சுத் தலையணையில் படுத்துறங்க வேண்டிய
பதின்ம வயதின் ஆரம்பம்
கரகரத்த தரையில்
கையூன்றி சரிந்திருக்கிறேன்.
கனக்கின்ற குண்டுகளைச் சுமந்தபடி
எல்லைகளில் காவல் நிற்கிறேன்

மதனியின் சொல் தெரிவில் குழப்பங்களும் சுருக்கமிலா சொல்லாடல்களும்
மிகுந்திருக்கின்றன. கரகரத்த எனும் சொல் பொதுவாக குரலோடு தான் தொடர்புபடுத்தபடுவது
இங்கு தரையோடு இணைந்து வருகிறது. சொர சொரத்த தரையில் என கையாளப்பட்டிருந்தால்
பொருத்தமாயிருந்திருக்கும் இவரது இன்னொரு கவிதையில்

என் மகன்
நாட்டின் ஏதொவொரு மூலையில்
இன்னொரு கிடங்கிலிருந்து
எதிரிக்குக் குறிவைப்பான்
மீண்டும் என் பரம்பரை
அடிக்கடி இடம் பெயரும்
குழிகளில் ஒதுங்கும்
மண்ணுக்காய் சண்டையிடும்
முடிவில் மண்ணை உண்ணும்


எனும் வரிகள் ஒரு தாயின் போர் மறுப்பும், விரக்தியும் நிராகரிப்பும் மேலெழுகிறது.
இதற்குள் இருக்கும் அரசியல் வெளிப்படை முடிவில் மண்ணை உண்ணும் எனும் வரிகளில்
வெளிப்படும் நம்பிக்கையீனம்
'தம் மண்ணில் நிம்மதியாய் உண்ணும்' எனும் முடிவிற்கு
காத்திருக்கும் லட்சக்கணக்கானோர் முகத்தில் ஏமாற்றத்தை பீய்ச்சியடிக்கிறது.

இந்தியா புதிய மாதவியின் கவிதைகள் ஈர்ப்பு மிக்கவை புல்லின் நுனியில்

மலர்ந்த பனித்துளியில்
ஊஞ்சலாடும் காதலிருட்டு
எப்போதும்
காணாமல் போய்விடுகிறது.
யோனியும் முலைகளும்
தேடித்தேடி
பாறைகளின் இடுக்களில்
படரும் வெளிச்சங்களைக் கண்டு

காமச சுகத்தை தேடியலையும் பேர்களிடம் தொலைந்து போய்விடும் காதலின் மெல்லிய உணர்வுகளை
புல் நுனி பனித்துளியில் ஒளித்திருக்கும் மெல்லிய இருட்டுக்கு உவமித்திருக்கின்றமை
புதிய படிமங்களை தோற்றுவிக்கிறது.
கரப்பான்களின் தொல்லை
எவ்விடமும்
எக்காலமும்
எல்லேரிடமும்
------------
ஓரிடத்தில் குவித்திருந்த கரப்பான்கள்
ஊரெல்லாம் பரவி

வெவ்வேறு பெயர்களில்
ஊர்ந்து கொண்டிருப்பது

எனும் வரிகள் எல்லா களங்களையும் பேசுகிறது. இவரின்
'மின்னலைப் பரிசளிக்கும் மழை' எனும் கவிதையில் புதிர்மையை மொழிப்பெயர்த்தல்
'ராஜவனம்' போன்ற சொல்லாடல்கள்
கவிதையின் தொடர்வில் உற்சாகத்தைப் பொழிகின்றன. எளிமையான மொழியினுடாக ரசனா வெளியை
விஸ்தரிப்பது புதிய மாதவியின் பலம் எனலாம். இத்தொகுதியில் இவரது 4 கவிதைகள்
உள்ளடங்கியுள்ளன.

ஜேர்மன் மதனியின் கவிதைகள் நான்கும் இலங்கையின் போர்ச்சூழலில் சிறுவர் போராளிகளின்
உளவியல் ஊடாட்டங்களையும் தாய்மாரின் தவிப்புக்களையும் பாடுகின்றன.

லீனா மணிமேகலை (இந்தியா) எழுதிய தலைப்பிலிக் கவிதையொன்றில்

காயங்கள் நாறும்
முலைகள் தோறும்
சிதைவுற்றழிந்த
கருப்பைகள் தோறும்
எமது மானுடத்தின்
வெற்றிக்கும் தோல்விக்குமான
குருதி தோய்ந்த
கொடித்தடங்கள்

எனத் தொடரும் கவிதையின் முடிவில்

-------------------
ஆயதங்கள்
தீரும் - பின்
யோனிகளற்றுப் போகட்டும்
பிரபஞ்சம்
வேட்டையாடுவதற்கும்
எந்த உயிருமின்றி
இடுகாடாகட்டும்

எனும் சாபத்தோடு கூடிய முடிவில் பிரசார நெடிமேலுயர்ந்து வீசுகிறது லீனா மணிமேகலையின்
எழுத்துக்களில் வழமையாக எங்காயினும் காணக்கிடைக்கும் நடைமுறைக்கு மாறான விடயங்கள்
இக்கவிதையிலும் காணக்கிடக்கின்றது.

மெல்ல அசையும் திரையின் இடுக்கில்
வீழ்ந்து சிதறும் வெண்மணி வெளிச்சம்
தோற்றம்,தெளிவு, சுவாசக் கறையென
வெளிச்சக் கீற்று விரசம் பயில
தியானம் தொடரும்
உலகை நோக்கி

என முடிவுறும் அமெரிக்கா மோனிகாவின் மூடிய அறை எனும் கவிதை ஒரு பெண்ணின் தனிமையின்
தாய்க்குரலை பேசுகிறது. அக்கவிதை முதல்வரி தொடங்கி இறுதிவரை காட்சிப்படுத்தலில்
தொடர் இணைப்பை சிறப்பாக பேணி வருகிறது. எனினும் இறுதி வரியான
'உலகை நோக்கி' எனும்
வரி கவிதையின் பாடுபரப்புக்கு வரம்பிடுகிறது. கவிதையின் முடிப்பை சப்பென்றாக்கி
விடுகிறது. ஓசை நயத்துக்கு போதிய முக்கியத்துவமளித்திருக்கிறார். மோனிகா

முலைகளும் இரவுகளும் எனும் இன்னொரு கவிதையில்

தேடித் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
நம் காதல்களை, கடவுளர்களை, கேள்விகளை
என்பாராமுற்ற முலைகளுக்கும் உனது
எல்லையற்ற சிறகுகளுக்கும் ஊடே

என ஆண் பெண் உறவிகளுக்கிடையிலான உணர்வுத் தேடலின் அசம நிலையை தெளிவு படுத்துகிறார்.
இத்தொகுதியில் மோனிகாவின்
'உடலைத் தவிர்த்து' எனும் தலைப்பில்

உடலைத் தவிர்த்தென்ன உண்மை
வேண்டும் உங்களுக்கு
அண்ணாசாலையின் ஆடைவிளம்பர
அழகியின் உடலும்
தேவியில் திரையில் தீண்டத் துடிக்கும்
திரைப்பட உடலும்
தின்று தொலைக்கும் வறுகடலை
காகிதமும, அந்த கவர்ச்சிப் படமும்
என்னுடலல்ல...!

ஒப்பனைக் கவர்ச்சிக்கும் நிஜவாழ்வில் சாமான்ய பெண்ணுக்குமிருக்கும் முக்கியத்துவ
இடைவெளிக்கிடையில் கம்பீரமாக எழுந்து நின்று பெண்மையின் அடையாளத்தைப்
பிரகடனப்படுத்துகிறார். மோனிகா கவிதைகளின் பாடுபொருளும் உத்திகளும்
மகிழ்வுட்டுகின்றன.

நளாயினி தாமரைச் செல்வன் எழுதிய
'புரியும் வேதனை' எனும் கவிதை தலைப்பிலேயே கவிதையைச்
சொல்லிவிடுகிறது சுவிஸ் நளாயினியின் ஹைக்கூ வடிவ குறுங்கவிகள் கவிதைத்தளம் இன்னும்
பயணிக்க வேண்டியிருக்கிறது. ஹைக்கூ வடிவ குறுங்கவிகள் கவிதைத்தளம் நோக்கி இன்னும்
பயணிக்க வேண்டியிருக்கிறது. ஹைக்கூ என்றாலே விடுகதைப்பாணி என்று பொதுவான
வாய்ப்பாட்டுக்குள் இவரது கவிதைகள் உள்ளன.

இலங்கை பஹிமா 4 கவிதைகள் எழுதியுள்ளார். இவற்றில் எனது சூரியனும் உனது சந்திரனும்
எனும் கவிதை இவ்வாறு முடிகிறது.
வாழ்வின் விதிமுறைகள்
எனதுலகையும் உனதுலகையும்
வேறுபிரித்த வேளையில்
விடைபெற்றோம்
ஒன்றித்துப் பறந்த வானத்தையிழந்தோம்
இறுதியாக அன்று தான் அழகாய் சிரித்தோம்
எனது சூரியனும் தனித்துப் போயிற்று
உனது சந்திரனும் தனித்து போயிற்று

இத் தொகுதியில் இருக்கும் சிறந்த காதல் கவிதையாக இதனை முன்மொழிய முடியும்.
தொடர்ச்சியாக ஏறத்தாழ ஒரே பாடுபொருளை கொண்டிருந்த கவிதைகளின் இடையில் இக்கவிதை
வாசகருக்கு வேறுவகை சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது பஹிமாவின் அழிவின் பின்னர் தடுமாறும்
தனிப்பாதம் போன்றவை வேறு வேறு விடயங்களை பேசுவது வாசகருக்கு உற்சாகமளிக்கின்றது

இலங்கை விஜயலக்சுமியின் கவிதை குடும்ப பெண்ணின் அடுப்படி வாழ்வு பற்றி பேசுகிறது.


இலங்கை சுல்பிகாவின் கற்பும் கதவும் எனும் கவிதையில்

கதவுக்கும் கற்புக்கும் உறவுண்டு
கருகிப் போன புல் வெளிக்கும்
இறவாதிருக்கும் உன் தாய்க்கும்
இருப்பது போல

எனும் உவமை நமக்குள் மீண்டும் மீண்டும் அதிர்வுகளோடு பரவுகிறது. இவரின் உயில்களல்ல
உயிர்கள் எனும் கவிதை உரத்து கூவுகிறது

இந்தியா திலகபாமாவின் உதிரும் நதியில் சிறந்த முறையில் குறியீடுகள்
கையாளப்பட்டுள்ளன எனலாம்.

தாய்ச் செடி வாசம் துறந்து
கடத்தி வரப்பெற்று
கரையோரம் வேர்விட்ட விருட்சம் நான்

எனத் தொடங்கும் கவிதையில் துறந்து எனும் சொல் கவிதையின் வீச்சினை சிதறடித்து அல்லது
சொல்ல வந்த விடயத்தை கூர்மையாக வெளிப்படுத்த தடையாக அமைகிறது. துறந்து என்பதை விட
துண்டிக்கப்பட்ட போன்ற சொல் கவிதையின் கணத்தை அதிகரிக்கச் செய்திருக்கும்.

கந்தல்களைக் கட்டிக்கொண்டு
அருவருப்பில் அல்லாடும்
என் உணர்வுகள்
சாக்கடைக்குள் புரளும்
பூச்சிகளின் தாபம் உனக்கும் புரியாதவை

இங்கு பூச்சிகிளின் தாபங்கள் உனக்கும் புரியாதவை என வரவேண்டிய இடம்
'தாபம' எனும்
ஒருமைச் சொல் வசனப் பிழையை தோற்றுவிக்கிறது. எனினும் இவ்விடத்தில் கையாளப்பட்ட
உனக்கும் என்ற பதம் மறைவாக இன்னும் பலருக்கு என்பதைச் சொல்லிவிடுகிறது.

லண்டன் சாரங்காவின் ஒரு கவிதாமரத்தின் இறப்பு எனும் கவிதையில்

ஒரு அழகிய நதி
குதியல் தெலைந்து
குளமாகிய
அதே கணத்தில் இருந்துதான்
என் கழுத்தில் ஆடுகிறது
உன்னால் இடப்பட்ட மூன்று முடிச்சி

பெண் ஒருத்தியின் கனவுகள் களவாடப்பட்ட காட்சியை அழகாய் கண்முன்கொண்டு வருகிறது
இவரின் 'எல்லாம் செய்கின்றாய்' எனும் கவிதை பக் (64) இறுதி வரியில் எதிர்பாரா
அதிர்ச்சியை தந்து அழுகிறது.

இலங்கை இஸ்மாலிகாவின் கொள்கைக் குடைபிடித்து நடப்பாள் பக் 65 மிக எளிமையாக ஓர்
சிறுவர் பாடலாக, நிறையவற்றை பேசி நடக்கிறது. பாடசாலைகளில் படிப்பிக்க வேண்டிய
பாடல்களில் ஒன்றாக இதனை முன்மொழியலாம். மை தொகுதியில் மலையக மண்ணை அடையாளப்படுத்தி
எழுதப்பட்ட ஒரே ஒரு கவிதையாக இதனை கூறமுடியும்.

எட்டக் தெரிகின்ற ஏற்றமிகு நம்பிக்கை
ஏந்திடவே மொழிகள் பல உரைப்பாள்
சுட்ட பொன்னாக விளங்கி மலைநாட்டில்
சூழ்ந்த கருமைதனைத் துடைப்பாள்

எனும் வரிகள் மலையக சூழலில் வளரும் குழந்தைகட்கு இருக்கவேண்டிய சமூகப் பொறுப்பைச்
சொல்லி நிற்கிறது. சிறந்த தாளக்கட்டோடு எழுதப்பட்ட கவிதையாக இதனைச் சொல்லலாம்.

அவுஸ்ரேலிய பழங்குடியினரின் போராட்டம் பற்றி அவுஸ்ரேலிய பாமதியினால் எழுதப்பட்ட
'தொலைக்கப்பட்ட
தரவுகள'; குறிப்பிடப்படவேண்டிய கவிதை. அவுஸ்ரேலிய பழங்குடியினர் வந்தேறு குடிகளால்
விரட்டியடிக்கப்பட்டு தமது தாய் நிலத்தில் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்ட அவலத்தை
வர்க்கப்பார்வையுடன் படைத்துள்ளார். பாமதியின் இக்கவிதை எல்லைகள் கடந்து
வியாபிக்கிறது. இம்மக்கள் மீதான பாமதியின் கவிதா நெஞ்சம் இறுதிவரிகளில் இவ்வாறு
சினமுற்று சிலிர்க்கிறது. (பக் 69)

அவர்களின் அடையாளத்தை

காவி நின்றவை
எல்லைகளுக்கு அப்பால்
அழுது கொண்டிருந்த மலைப்பாறைகள் மட்டும் தான்
அதில்
வரிபோட்ட மீன் குஞ்சுகளும்
வயிற்றில் குட்டிகளைப் சுமந்துகொண்டு
நிற்கும் கங்காருவும்
இலைகளின் ஆயள் ரேகையை
இயற்கையை நேசித்து பாதுகாத்த
அழகான மனிதர்களையா சீ...!

இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெண் படைப்பாளிகள் முகம் திருப்பி பார்க்க வேண்டிய
இன்னொரு பக்கதத்திற்கு தன் எழுதுகோலை திருப்பியிருக்கிறார். முழுமனித குல விடுதலையை
நேசிக்கும் படைப்பாளிகளின் நோக்குதிசை ஒன்றிரண்டு மட்டுமல்ல என்பதை இக்கவிதை
உணர்த்துகிறது. பாமதி போன்றவர்களின் இத்தகைய பார்வை இன்னும் விரிவடைய நிறைய
இடமுள்ளது. கவிதையின் சொல் ஒழுங்கில் மேலும் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கை வாசுகியின்
'கருக்கலைப்பு' இவ்வாறு முடிகிறது.(பக் 73

தாயின் கரு உதிர்த்த
ஒரு பிள்ளையைத் தானும் கொல்லும் அதிகாரத்தை
இனத்தின் பெயராலும்
மதத்தின் பெயராலும்
உலக தலையென்ற பெயராலும்
யாரும் எடுப்பாரெனில்
கருவில் கரைக என் பிள்ளாய்�!

இக்கவிதையில் வெளிப்படும் போர் மறுப்புக்குரலும் போர்ச்சூழலின் நிர்ப்பந்திப்பும்
தாய்மையின் கையறு நிலையும் வெளிப்படை.

இலங்கை அச்சு ஊடகங்களுக்கு தொடர்ந்து பெண்ணியபடைப்புக்களை வழங்கிவரும் லண்டன்
நவஜோதியின் 'பிரசவம்'
'பறவைப்பெண்' கவிதைகள் நன்றாயிருக்கின்றன. இந்தியா
குட்டிரேவதியின் மூன்று கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
'உனக்கான கடிதங்கள்'
'பிரசவம்' 'எனது
வீடு' என்பவையே அவை. குட்டிரேவதியின் வெகுஜன கவிதா மொழியை துல்லியமாக இக்கவிதைகளில்
கையாண்டுள்ளார் இவரது மொழியில் கவிதையின் வீச்சுக்கள் உச்சத்தை தொடுகின்றன.

பிரசவம் கவிதை இவ்வாறு படர்கிறது

நீர்ப்பாத்தியில் நிழலேதும் வேண்டாது
தாவர இச்சையின் மிடுக்குடன் எழும்
திரண்ட கவர்ச்சியின் வாழை
குலைத்தள்ளும் நாளில்
உமது அரிவாள் வெட்டி சாய்த்தது.
தோலுரித்தது
உடல் கழித்தது
காலைச் சுற்றிலும்
கணுக்கால் உயரத்தில்
மறுமுறை முளைத்தெழும்
என் கம்பீரத்தோகைகள்

வாழையை பெண்ணாக பார்த்தால் எல்லாமே புரிந்துவிடும்

பிரான்ஸ் தர்மினியின் 4 கவிதைகள் இடம் பெற்றுள்ளன அவற்றுள்
'யுத்தமும் தர்மமும்' கவிதை இவ்வாறு பேசுகிறது.

எங்கள் பெண்களும் குழந்தைகளும்
அப்பாவி இளைஞரும்
துப்பாக்கிகள் மீதும்
அதிகாரங்கள் மீதும்
வெறிகொண்டவர்களால் மட்டுமே
சூழப்பட்டுள்ளனர்
கிழக்கிலும் மேற்கிலும்
வடக்கிலும் தெற்கிலும்
தீவின் திசையெங்கிலும்
தீவின் திசையெங்கும்
வெறிகொண்டவர் அலைகின்றனர்.

என முடிவுறும் இக்கவிதை ஈழச்சூழலை படம் பிடிக்கிறது. இவரின்
'விலங்குகள்' 'ஆயதம்
வைத்திருப்பவர் நாசமாய் போகட்டும்' எனும் கவிதைகள் குறிப்பிடக் கூடியன.

இலங்கை மலராவின் மூன்று கவிதைகள் இடம் பெற்றுள்ளன காதலின் இனிய அனுபவங்களை பெண்ணின்
பார்வையில் பதிவு செய்துள்ளார்.

இலங்கை பெண்ணியாவின் கவிதைகள் 4 இடம்பெற்றுள்ளன. காதலுணர்வை பெரிதும் மையப்படுத்தி
எழுதப்பட்ட இவரது கவிதைகளில் அவசரக்குறிப்பு குறிப்பிடத்தக்கது.

உண்மைகளை எல்லாம்
அழுக்குத் துணிகளுக்கடியில்
ஒளித்துவைத்துள்ளேன்
நான்
இறக்க வைக்கப்பட்டால்
என்
அந்தரங்க சிநேகிதியிடம்
இடத்தை
அறிந்துகொள்ளுங்கள் (பக் 90)

இக்கவிதையில் இடம் பெறும் நான் இறக்க வைக்கப்பட்டால் எனும் சொல்லாடல் ஈர்ப்பு
மிக்கது நிறைய பேசுகிறது. எளிமையான மொழியில் அதிகம் பேசுகிறார். பெண்ணியா இவரது 4
கவிதைகள் இத்தொகுதியில் உள்ளன.

கற்பகம் யசோதரவின் 4 கவிதைகள் தன் இயலுமையின் எல்லைகளைத் தேடி தீவிரமாக விசாரணை
நடத்துகின்றன கவிதைகளின் உருவ விரிவுக்கேற்ப பொருள் விரிவையும் வியாபித்துச்
செல்கின்றன. இவரின்
'கவிஞர்களின் குசு'
'இருகால அழைப்பு'
'பிள்ளைகள் தேவை' என்பவற்றோடு தலைப்பிலிக் கவிதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது தலைப்பிலிக் கவிதையில்

என்றைக்கோ
எனக்கான முத்தங்களைக்
காற்று விழுங்கிவிட்டது
என்னை என்னால்
கைவிட முடியாது முடியவில்லை

என தனக்குள் தானே மீண்டெழும் நம்பிக்கை வாசகருக்கு நம்பிக்கையூட்டுகின்றன. எனினும்
இறுதி வரியில் என்னை- என்னால்- கைவிடமுடியாது. முடியவில்லை கைவிடமுடியாது என
வந்திருந்தால் இறுதிவரி தனது இலக்கை இன்னும் உறுதியுடன் எட்டியிருக்கலாம்.

இந்தியா உதயச்செல்வியின்
'முக்கிய அறிவிப்பு' , சுவிஸ் தில்லையின்
'வரிமங்குகிற
நினைவு', 'வாழ்ந்து முடிந்த கதை', இந்தியா வைகச்செல்வியின்
'போரில் சிந்தும்
மகிழம்பூக்கள்' என்பனவும் குறிப்பிடப்படவேண்டியவை. டென் மார்க் சந்தியாவின் இன்னும்
பிறக்காத எனது குழந்தைக்கு கவிதை உரையாடல் கலந்து சுவையூட்டுகிறது. இன்னும்
பிறக்காத குழந்தையுடனான தாயின் அனுபவம் குழைத்த உரையாடலாக தொடர்கிறது எனினும்
கவிதையின் இறுதிவரியே தலைப்பாகவும்ம் அமைந்திருப்பதால் இறுதி வரியில் கிடைக்க
வேண்டிய திகிலும் அனுபவமும் வரண்டு போய்விடுகின்றன.
இந்தியா அரங்கமல்லிகாவின்
'உழைப்பு' தலித்துக்களின் மொழி குறித்து எழுதப்பட்டுள்ளது
இக்கவிதை முழுமையான தலித் மொழியில் எழுதப்பட்டிருக்கலாம் என் எண்ணத்தோன்றுகிறது

இந்தியா சுகிர்தராணியின் 4 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
'இயற்கையின் பேரூற்று'
'எதுவும்
மிச்சமில்லை' 'உப்பின் சுவையேறிய காதல்'
'சாம்பல் பூக்காத முத்தங்கள்' என்பன மொழியை
கனமாக கையாள்கின்றன

நானே நிலமாகி
நானே நெருப்பாகி
நானே வானாகி
நானே காற்றாகி
நானே நீராகி
அடைக்க அடைக்க பீறிடுகின்ற
பிரபஞ்சத்தின் ஊற்றுக்கள் நான்


எனும் வரிகளில் பெண்மையைக் காணலாம் இவரின் எதுவும் மிச்சமில்லை. கவிதை
ஈழப்போராட்டத்தைப் பாடுகிறது

பள்ளியிலிருந்து திரும்பி வருகையில்
வல்லுறவால் உயிரிழந்த மகளுக்கு
வாங்கி வைத்த துணி
கள்ளத் தோணியில் அனுப்பி வைத்த
அகதி மகனின் மரண ஓலம்
சேலைத்தலைப்பில் முடிந்துவைத்த
குருதி நனைத்த பிறந்த மகன்
-----------------
பஞ்சடைந்த என் கண்களுக்கு
படமாய் விரிகின்ற தனிஈழம்

என முடியும் கவிதை யுத்தச் சூழலையும் தனிமனித வாழ்வுச் சூழலையும்
காட்சிப்படுத்துகின்ற அதே வேளை விடுதலைப்போராட்டக் கனவையும் (எல்லா இழப்புகளின்
பின்னரும்) கண்களில் ஏந்திய தாயின் உணர்வையும் வெளிப்படுத்துகிறது. எனினம் இறுதி
வரியில் வருவது தனி ஈழம் தமிழ் ஈழமா என்பதில் கவிதையின் பாடுபொருள் வேறுபடுகிறது.

இலங்கையை சேர்ந்த மரியா என்டனீட்டா
'புதியபூமியோடு முகாரி ராகங்களாய் பெண்கள'; சமீலா
'சிலுவை', 'அகதி' ஆகிய கவிதைகளை படைத்துள்ளனர் எழுத்துக்களை உணர்வு மயப்படுத்த
வேண்டிய தேவை இவர்களிடம் உள்ளது.

இலங்கை சலனியின் நாணல் சிறகுகளில் என் நயனங்கள் கருமேகங்களும் காக்கணாங் குரவிகளும்
வெள்ளைநடனம் ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. விபச்சரித்து தொடக்கிறுத்து
முழுக்கிறுக்கிறது போன்ற சொல்லாடல்கள் கவிதையில் துருத்தி நிற்கின்றன. ஏனைய
கவிதைகளில் மொழி வளமாக கையாளப்பட்டுள்ளது.

இலங்கை மாதுமையின் அப்பா, திரவப்பாடல், என்புத்தகம் ஆடை என நான்கு கவிதைகள்
இடம்பெற்றுள்ளன. மாதுமையின் கவிதைகளில் புதியவற்றை தரிசிக்கவும் மனதை
சிறைப்படுத்தவும் விவரிக்க்கவும் கவிதைகள் முயல்கின்றன. மாதுமையின் கவிதைகளில்
இழையோடும் உணர்வுகள் மனவெளியெங்கும் ஒருவித சிலிர்ப்பைத் தூவுகிறது.

இவரின் என் 'புத்தகம்' கவிதையில் வரும்

சிலர் அழுதார்கள்
சிலர் சிரித்தார்கள்
சிலர் ஏதேதோ பேசினார்கள்
எல்லாவற்றையும் கேட்டும்
திறந்துதானிருந்தது புத்தகம் (பக் 125)

என் புத்தகம் கவிதை ஒரு கவிதைப் புத்தகத்தை போன்றது நீங்களும் வாசிக்க வேண்டும்

இவ்வாறான நல்ல கவிதைகள் நிறையவற்றை சுமந்து வந்திருக்கிறது மை.

மை கவிதைத் தொகுதியையும் ஊடறு இணைய சஞ்சிகையையும்
www.oodaru.com எனும் இணையத்தள
முகவரியில் வாசிக்கமுடியும்.

மை கவிதைத்தொகுதி பெண்ணியச் சிந்தனைகளை பெண் எழுத்துக்களோடு பதிவு செய்ய
முனைந்துள்ளது இத்தொகுதியில் உள்ளடங்கிய கவிதைகள் வரையறைகளை கடக்க துடிக்கும்
பிரவாகமாக மிளிர்கின்றன. எனினும் பாடுபொருள்கள் தொகையளவில் வரையறைகளை தாண்டவில்லை.
எமது சமுதாய அலகுகளின் அனைத்து மூலைகளிலும் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர்
இவ்வொடுக்குமறை ஒரு நூற்றாண்டுக்குள் திடீரென எழுந்ததல்ல பல்லாயிரம் வருடங்களுக்கு
முன்னிருந்து ஆண்மேலாதிக்கச் சிந்தனைகளால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டவை. இவை
கலாச்சாரத்தின் அடித்தளத்தில் உறுதியாக ஊன்றப்பட்டவை. இவ்வாறு முனைப்பிக்கப்பட்ட
இச்சிந்தனைகளை தகர்க்க வேண்டிய அவசியம் அவசரமெனினும் மையத்தகர்ப்பை முதன்மையாக
கொண்டு மேற்கொள்ளப்படும் போராட்டங்களின் சாத்தியப்பாடு பற்றியும் எதிர்விளைவுகள்
பற்றியும் நாம் சிந்தித்தாக வேண்டும். எனவே பெண்ணானவள் தன்னளவிலும் குடும்ப அலகிலும்
சமூக அலகிலும் தனக்கான விடுதலையை பரிமானிக்க வேண்டிய நிலையில் உள்ளாள். இந்நிலை
வளர்ந்து சமூகவிடுதலைக்கான முன் நிபந்தனை பெண்விடுதலையே எனும் சிந்தனைப்புரிதல்
ஏற்கப்படும் நிலையிலேயே நாம்
'' என்பதன் பொருளை உணரமுடியும்.

'மை' தொகுதியின் கவிதைகள் அவ்வாறான வளர்நிலையை உதிர்க்காவிட்டாலும் கூட முழுமொத்த
பெண் சமூக விடுதலைக்கோஷங்களை கையிலெடுத்த பெரும் பரப்பில் ஆங்காங்கு நின்று தன்
இயலுமையின் எல்லைவரை முன்வைக்கின்றன என்பதை ஏற்கவேண்டும். பெரும்பாலான கவிதைகள்
ஆணாதிக்க ஒடுக்குமறைக்கு எதிரான மாற்றுக்கலாச்சாரத்தை கட்டமைக்கும் பணிக்கு உழைக்க
வந்திருக்கின்றன. அனுபவமற்ற கவிதாயினிகள் சிலரின் எழுத்துக்கள் ஆணாதிக்கத்திற்கும்
ஆண்களுக்குமிடையிலான வேறுபாட்டை உணராமல் கூவிக் களைக்கின்றன தமிழ்ப்பெண்
எழுத்துச்சூழலில் அறியப்படும் கவிஞைகள் கூட
'மை'யில் பாலியல் விடுதலையை
மையப்படுத்தியே தம் படைப்புக்களை தந்துள்ளமையானது நம் சிந்தனைகள் விரிவடைய வேண்டிய
தூரத்தைக் காட்டி நிற்கிறது. ஆணாதிக்க சிந்தனைக் கூறுகளையும் அதன் உட்பிரிவுகளையும்
தோலுரித்துக் காட்டவும் பெண்ணின் ஆளுமை தொடர்பாகவும் மேலும் பல கோணங்களில்
முனைந்திருக்கலாம்.

பெண் பொருளாதார ரீதியிலும் உடல்,உள உழைப்பின் அடிப்படையிலும் சாதிய அடிப்படையிலும்
சுரண்டப்புடுவதும் நிறையிடப்படுவதும் கண்முன்னே காணக் கிடைப்பன இவற்றோடு
கலாச்சாரத்தின் பேரால் ஒடுக்கப்படும் பெண்குரலும் சிந்தனையும் மொழியூடு
பீறிட்டெழவும் நுண்ணதிர்வுகளை பதிவு செய்யவும் முடியும்.

முன்னெப்போதுமில்லாத வகையில் உலகளாவிய ரீதியில் மானுடர் தம் விடுதலை நோக்கிய
சிந்தனைகளை விரிவு படுத்தியுள்ளனர். அவ்வகையில் பெண்களின் விடுதலை ஆழமாக கண்கொள்ள
வேண்டியது மேலைத்தேய அதிதீவிர பெண்ணியச்சிந்தனைகள் பாலியல் பிறழ்வுகளை
நியாயப்படுத்தி நிற்கின்றன.
'மை' கவிதைத்தொகுதி கவிதைகள் அவற்றை வேண்டி
நிற்காவிட்டாலும் பாலியல் விடுதலையை வேண்டும் எழுத்துக்கள் தன்னை நிதானமாய்
உணர்வதும் அவசியமாகும்.

பெண்ணானவள் மானுட வாழ்வை நிர்ணயிக்கும் தவிர்க்க முடியாத சக்தியாவாள். பெண்
விடுதலையே மானுட விடுதலையின் பெரும் பகுதியாகும். பெண்களுக்கான விடுதலையே
அப்பெண்வாழும் சமூகத்தின் விடுதலையை நிர்ணயிக்கிறது. எனவே பெண்விடுதலையின் சமூக
விடுதலை நோக்கம் இருத்தல் அவசியமானதாகும். உலகில் இடம்பெற்ற வரலாற்றுத்
திசைமாற்றங்களுக்கு பெண்களின் முக்கியத்துவம் கணிசமானவை ஒக்டோபர் புரட்சி,
சீனப்புரட்சி, வியட்நாம், கியூபா, கொரிய புரட்சிகளுக்கும், தேசியவிடுதலை
இயக்கங்களுக்கும் பெண்களின் பங்களிப்புக்கள் அதிகமானவை. இலங்கையின் தமிழீழ
போராட்டவரலாற்றிலும் இடதுசாரி இயக்கவளர்ச்சியிலும் வெகுஜன போராட்ட
முன்னெடுப்புக்களிலும் பெண்களின் அர்ப்பணிப்புக்கள் மதிக்கத்தக்கன.
இத்தகைய வரலாற்று உண்மைகள் தற்கால பெண்ணிய சிந்தனையாளர்களால் பதிவுசெய்யப்படவேண்டும்
எழுத்துக்களில் இலக்கியங்களில் இவை புதுப்பிக்கப்பட்டு கூட்டு சமூக
மீளுருவாக்கத்திற்கு பெண்கள் தம் விடுதலைச் சிந்தனைகளோடு இயங்கவேண்டும். குடும்ப
சமூக உறவுகளில் பெண்ணின் முக்கியத்துவம் தீவிரமாக உணர்த்தப்படுவதும் பெண் சிந்தனை
விரிவு பெறுவதற்கும் அதனூடு சமூக விடுதலை முன்னெடுக்கப்படுவதற்கும் பெண்
எழுத்துக்களும் பெண்விடுதலையை நேசிக்கும் எழுத்தாளர்களும் உழைக்க வேண்டும்.
அவ்வுழைப்பு சாத்தியமாகும் போதே நாம் பெண்விடுதலை எனும் சிந்தனையால் முழுமையாய்
மகிழ்வுற முடியும். இவ்வாறான மகிழ்ச்சிக்கு தன்னாளான பணியை
'மை' ஆற்றியுள்ளது.
ஆங்காங்கு மிகக்குறைவாய் எழுத்துப் பிழைகள் காணப்படினும் அவை கவிதைகளில்
பொருட்பிழைகளை ஏற்படுத்தவில்லை. என்பது கவலைக்குரியதல்ல

உலகளாவிய ரீதியில் எழுதிக்கொண்டிருக்கும் பல்வேறுநாடுகளைச் சேர்ந்த கவிதாயினிகளின்
கவிதைகளை ஒன்றுசேர்த்த முக்கியநிகழ்வாக இதனைக் கூறலாம்.
வெவ்வேறு நாடுகளில் பல்வேறு
காரணங்களுக்காக புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப்பெண்களின் ஒருமித்த சிந்தனைகளை ஒன்றாய்
வாசிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளமை
'மை' யின் அடர்த்தியை அதிகமாய் உணரத் தூண்டுகிறது.
தரமான கடதாசியும் சிறந்த ஓவிய முகப்பும் நேர்த்தியான வடிவமைப்பும்,
அச்சுக்கோர்ப்பும் மகிழ்சியூட்டுகின்றன. நூலின் உள்ளே ஒரு சில ஓவியங்களையாவது
இணைத்திருக்கலாம். கவிதைகளை முழுதாய் வாசித்து முடித்த வாசகர் தனது பொழுதை
பயனுடையதாய் கழித்தார் என்பதை நிச்சயம் உணர்வார்

தமிழ்க்கவிதையுலகில் பெண் எழுத்துக்கான வரிசையில்
'மை'க்கு நீண்ட கால இடமுண்டு.
இத்தொகுதியை உருவாக்க முனைந்த ஊடறு இணையசஞ்சிகை ஆசிரியர் குழுவை நாம் பாராட்டுவதில்
மகிழ்ச்சியடையலாம்.

வே. தினகரன்
பத்தனையூர்
இலங்கை

இலங்கையிலிருந்து வெளிவரும் தினகரன் (16,23,30செப்டம்பர் ஞாயிறு தினகரன்)
பத்திரிகையில் வெளியான விமர்சனம் நன்றியுடன் பிரசுரமாகின்றது.

Saturday, July 24, 2010

பாலஸ்தீனீய நாடகக்குழு இன்டிஃபாடா











இஸ்ரேலின் தணிக்கையையும், தொந்தரவுகளையெல்லாம் மீறி, ஜெருசலத்திலுள்ள பாலஸ்தீனிய கலாச்சாரக்குழு ஒன்று, தங்களின் 'அன்சார் ' என்ற நாடகத்தை மேடையேற்ற வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலியச் சிறையில் பாலஸ்தீனர்கள் காட்டும் எதிர்ப்பை இந்நாடகம் தெளிவகவும் உயிர்துடிப்புள்ளவகையிலும் சித்தரிக்கிறது. பாலஸ்தீன பண்பாட்டு மற்றும் கலைக்குழுவுக்காக, அல்-மஸ்ராவால் தயாரிக்கப்பட்ட இந்நாடகம், நகரப் பாலைவனத்தில் கெட்ஸியாட் அருகிலுள்ள அன்சார் 3 சிறைப்பாசறையில் துவங்குகிறது. அன்சார் 3ல் முட்கம்பி வேலியால் சூழப்பட்ட பல கூடாரங்கள் உள்ளன இன்டிஃபாடா (பாலஸ்தீன எழுச்சி) ஆரம்பித்ததிலிருந்து, இஸ்ரேல், இந்தப் பாசறையில் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர்வரை அடைத்து வைத்திருந்துள்ளது. எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லாமலேயே பலரும் இங்கு மாதக் கணக்கில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நாடகம், துவக்கம் முதலே அரசின் தொந்தரவுகளுக்கு ஆட்பட்டு வந்துள்ளது. நாடகத்தின் ஒத்திகையையும், தயாரிப்பையும் மிகச் சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்பதற்காகவே இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீனப் பகுதிகளில் அடிக்கடி ஊரடங்கை அமல்படுத்தியது. இந்நாடகம் பற்றிய விமர்சனங்கள் வெளியாவதைக் கூட இஸ்ரேல் அரசு தடை செய்துள்ளது. தேசிய உணர்வுகளைக் கொண்ட எந்தப் பாலஸ்தீன கலாச்சார விஷயத்தையும் ஒடுக்குவது என்பது இஸ்ரேலின் வரலாற்றில் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாகும். இன்டிஃபாடாவுக்குப் பிறகு அது மேலும் அதிகரித்துவிட்டது.

'அன்சார், நாடகத்தை பார்த்தவுடன், இஸ்ரேலிய அரசு இந்நாடகத்தையும், இதுபோன்ற பாலஸ்தீன கலாச்சார விஷயங்களையும் ஏன் ஒடுக்க விரும்புகிறது என்று புரிந்துவிடும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடும், பாலைவனத்தில் சோர்வுடன் உலவும், கம்பிவேலிக்குப் பின்னால் திரியும் பாலஸ்தீன உருவங்கள் என்று இப்படியாக மேடை முழுவதையும் நிறைக்கிறது இந்நாடகம். சில நேரம் சிறைக்கைதிகளை, சுட்டெரிக்கும் வெயிலில் பல மணி நேரம் உட்கார வைக்கிறது. மற்ற நேரங்களில் தங்களின் தற்காலிக கூடாரங்களின் கீழ் கூடி ஒலிபெருக்கியில் சோம்பேறித்தனமாக வந்து கொண்டிருக்கும் ஹீப்ரூ குரல்களை கேலி செய்து தங்களுக்குக் கிடைக்கும் எந்த பொருளையும் எப்படி எதிரிக்கு ஆயுதமாக மாற்றுவது என்பது குறித்து ஆலோசனை செய்கின்றனர்

சுவரில் இஸ்ரேலிய எதிர்ப்பு முழக்கங்களை எழுதியதாக பொய்க்குற்றம் சாட்டப்பட்ட ஒரு பாத்திரம் தன்னைப் பிடித்து வைத்திருப்பவரிடமிருந்து ஒரு பேனாவை பிடுங்குகிறார், சக கைதியின் உதவியோடு தன் குடும்பத்துக்கு கடிதம் எழுதுகிறார். இதுதான் படிப்பதிலும், எழுதுவதிலும் அவர் படித்த முதல் பாடம்.

மற்றொரு காட்சியில், பாலஸ்தீன மக்கள் தங்கள் எதிர்ப்பை எப்படி வெளியிடுவது ? ஒத்துழையாமையின் மூலமா அல்லது உற்பத்திக் கருவிகளை கைப்பற்றுவதன் மூலமா ? என்ற விவாதம் கைதிகளுக்கிடையே ஏற்படுகிறது. ஒருவன் விவாதிக்கிறான். 'இன்றைக்கு நீ உயிர்பிழைப்பாயானால் நாளை தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும் ' மற்றொருவன் மறுக்கிறான் 'இல்லை, இவ்வளவு நாட்களாக நாம் செய்து வரும் தவறு அதுதான் '. இதற்குப்பின் இரண்டு நடிகர்களும் பார்வையாளர்களோடு விவாதிக்கின்றனர், 1988 ஆம் ஆண்டு அன்சாரில் ஆறு மாதங்கள் இருந்த நிடால்--அல்-கதீப் கூறுகிறார் 'அன்சார் அனுபவம் என்பது பாலஸ்தீனர்களுக்கு ஒருவகை அடிப்படையான விஷயம். நீங்கள் அன்சாருக்குள் நுழைந்தால் நீங்கள் நிச்சயமாக மாற்றப்படுவீர்கள். இதில் சந்தேகமேயில்லை.

அன்சார் பாலஸ்தீனத்தின் மாதிரி வடிவமாக இருக்கிறது. இளைஞர், வயதானவர், படித்தவர் விவசாயி, நகரவாசி, வடக்கில் வாழ்பவர், தெற்கில் வாழ்பவர் எல்லோரையும் காணலாம். அவர்கள் அச்சிறையில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் தங்கள் தொழிலைச் செய்கிறார்கள். இது கைதிகளிடையே ஒற்றுமையை வளர்க்கிறது. அது வாழ்க்கையின் பொருளைக் கொடுக்கிறது. பாலஸ்தீன மக்கள், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும் கூட ஏதாவது ஒரு பலனளிக்கும் காரியத்தைக் கட்டியமைக்கிறார்கள். கல்வியறிவு அற்றவர்கள் படிக்கக்கற்றுக் கொள்ள வேண்டும் என்பது பாலஸ்தீன சிறைவாசிகளிடம் ஒரு விதியாகவே உள்ளது. சிறைச்சாலை இன்டிஃபாடா இயக்கத்தின் பல்கலைக் கழகம்

1990 ஆம் ஆண்டு ஜஉன் முதல் ஜெருசலேத்தில் உள்ள எல்ஹகாவிடி தியேட்டரில் ஏறத்தாழ 16 முறை அரங்கேறியப் பிறகு இப்போது அமெரிக்கா வந்துள்ளது இந்த நாடகம்.

Saturday, July 10, 2010

பேராண்மை : இட ஒதுக்கீடு புரிதலை நோக்கி… :முருக சிவகுமார்

“ரிசர்வேசன் கோட்டாவுல படிச்சி வர்றவங்களுக்கு என்ன தெரியும்னு நெனச்சோம். ஆனா, உங்களுக்கு மார்க் போட வாத்தியாரே இல்லை சார். உங்களுக்கு ஸ்டூடண்டா இருக்க பெருமையா இருக்கு சார்’’

- இட ஒதுக்கீட்டை பற்றி தவறாக எண்ணியிருப்பவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் இந்த வசனம், பேராண்மை திரைப்படத்தில் வருகிறது.

காலம்காலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிடியில் அதிகாரங்கள் இருந்து வந்ததால், ஏழை, எளிய பாட்டாளி மக்கள் பல்வேறு மோசமான விளைவுகளை எதிர்கொண்டனர். இதனைக் கண்ட தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள், அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் விளைவாக அதிகாரத்தை பகர்ந்தளிக்க இட ஒதுக்கீடு என்னும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இட ஒதுக்கீடு என்பது சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை பகிர்ந்து தருவதற்கான ஓர் செயல்திட்டம். குறிப்பாக, சாதி அடிப்படையில் கற்பிக்கப்பட்ட உயர்வு தாழ்வு நிலையால் இந்தச் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் இனங்களில் பிறந்தவர்களுக்கு அவரவர்களுக்கான பங்கு மறுக்கப்பட்ட நிலையில், பங்கு வழங்குவதை கட்டாயமாக்கும் ஓர் ஆவணமாகவே இட ஒதுக்கீட்டு முறை கருதப்படுகிறது. ஆகவேதான், அம்பேத்கர், பெரியார் ஆகிய தலைவர்களின் தொடர்ச்சியாக, இட ஒதுக்கீடு முறையின் அவசியத்தை அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் இப்போதும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சமூகத்தில் நீதியை நிலைநாட்டுவதற்காக இட ஒதுக்கீட்டு முறை கொண்டுவந்ததால், தலைமுறை தலைமுறையாக பலகாலம் அனுபவித்து வந்த அதிகாரம் கைநழுவி போனதை மேட்டுக்குடியினரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே, இட ஒதுக்கீடு முறையை ஏளனம் செய்வதற்கான புது யுக்தியைக் கண்டுபிடித்து பரப்பினர். அதாவது, இட ஒதுக்கீட்டில் படித்து வேலைக்கு வருபவர்களுக்கு “திறமை” இருக்காது! என்ற மனோபாவம் மனங்களில் கற்பிக்கப்பட்டு வருகிறது. நஞ்சைவிட மிக கொடிய இந்தப் பரப்புரையால் பள்ளிகளில் படிப்பதில் தொடங்கி கல்லூரி படிப்பு, பிறகு வேலை என அனைத்து மட்டங்களிலும் ஏழை, எளிய பாட்டாளி மக்களை, அதிகார வர்க்கத்தினரும், மேட்டுக்குடிகளும் எதிரிகளாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதன் விளைவுதான் ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டபோது, அதனை எதிர்த்து மோசமான ஆர்ப்பாட்டங்களை மேட்டுக்குடி உயர்சாதியினர் வெட்கமின்றி மேற்கொண்டனர். அந்த ஆர்ப்பாட்டங்களை வட இந்திய ஊடகங்களும் சிறிதும் குற்ற உணர்வின்றி தொடர்ந்து ஒளிபரப்பின.

இட ஒதுக்கீடு முறையில் படித்து விட்டு, அரசு அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்கள் தங்கள் பணியை செவ்வனே செய்து வந்த போதிலும், அதே நிறுவனத்தில் உடன் பணியாற்றும் மேட்டுக்குடி மனோபாவம் கொண்டவர்களின் ஏளனத்திற்கு ஆளாகாமல் இருக்க முடியவில்லை. இட ஒதுக்கீட்டில் படித்து வருபவர்களும் ஒரு செயலை பெரிய ஆளுமையுடன் செய்து முடிப்பார்கள் என்பதை சொல்லி, இட ஒதுக்கீட்டை ஏளனம் செய்யும் கேடுகெட்ட மனோபாவம் கொண்டவர்களின் முகத்தில் அரைந்து பாடம் கற்பிப்பதாக “பேராண்மை” திரைப்படம் இருக்கிறது..

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து நிலங்களைக் கொண்ட இந்த புவி பரப்பில், நெய்தல் நிலத்தில் வாழும் மீனவ மக்களின் வாழ்க்கையையும், கடலோடிகளின் உணர்வுகளையும் தனது முதல் திரைப்படத்தில் சிறப்பாக வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். அடுத்து, ஈ திரைப்படத்தில் மருந்துக் கம்பெனிகள் மற்றும் தொற்று நோய்கள் சார்ந்த சர்வதேச பிரச்சனையை சாதாரண மக்களுக்கும் புரியும்படி செவிட்டில் அறைந்தாற் போல சொல்லியிருப்பார். அத்திரைப்படத்திற்கு பிறகு தனது மூன்றாவது படமாக பேராண்மையை மலையக மக்களின் வாழ்நிலையோடு சாதிப்பிரச்சனை, இட ஓதுக்கீடு, பெண்ணியம், சர்வதேச அரசியல், சுற்றுசூழல் பாதுகாப்பு, உழவர்களின் வளர்ச்சி, தேசியம் , அடித்தள மக்களின் வாழ்வுரிமை ஆகியவற்றுடன் அர்ப்பணித்துள்ளார். பொதுவுடமை கொள்கை மீது அதிக அளவு நம்பிக்கை கொண்ட இயக்குநர் ஜனநாதன், தான் உருவாக்கிய மூன்று திரைப்படங்களிலும் ஒடுக்கப்பட்ட அடித்தள மக்களின் உரிமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐங்கரன் இண்டர்நேஸ்னல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி, தீப ஒளித் திருநாள் அன்று திரையரங்கிற்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பேராண்மை திரைப்படத்தில், ஜெயம் இரவி, தனுஸ்கா, லயசிறீ, சரண்யா, வர்ஷா, வசுந்தரா, ரொனால்டு கிக்கிஜர், ஊர்வசி, பொன்வண்ணன், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை சதீஷ்குமார் செய்துள்ளார். படத்தொகுப்பு கணேஷ்குமார். இசை வித்யாசாகர்.

கதை சுருக்கம்

முதுமலை காட்டுப் பகுதியில் வாழும் பழங்குடியினத்தில் பிறந்த துருவன்(ஜெயம் இரவி), கஷ்டப்பட்டு படித்து, தான் பிறந்த பகுதி காட்டுக்கே வனக் காவலராக பொறுப்பேற்று பணியாற்றுகிறார். பழங்குடி இனத்தில் பிறந்த துருவனின் சாதியை வைத்து அவரை எப்போதும் விமர்சனம் செய்து வருகிறார் உயரதிகாரி கணபதிராம்(பொன்வண்ணன்) . அந்த அவமானங்களை தாங்கிக்கொண்டு, தனது வேலையை சிறப்பாக செய்து வருகிறார் துருவன். இந்நிலையில், பெண்கள் கல்லூரியில் இருந்து தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவிகள், காட்டுப் பயிற்சிக்காக முதுமலை காட்டுப் பகுதிக்கு வருகின்றனர். அந்த மாணவிகளை வழிநடத்தும் தலைமை மாணவிகளாக கல்பனா, ஜெனிபர், துளசி, சுசிலா, அஜிதா – ஆகிய ஐந்து பேரும் வருகிறார்கள். அவர்களில் அஜிதா மட்டுமே பள்ளிக் கல்வியை தமிழ்வழியில் படித்தவர். இசுலாமிய சமூகத்தை சேர்ந்தவர். மற்ற நால்வரும் நகரத்து பதின் நிலைப் பள்ளிகளில் படித்த மேட்டுக்குடி மாணவிகள். இவர்கள் தங்களுக்கு பழங்குடியினத்தை சேர்ந்த வனக் காவலர் துருவன் பயிற்சியளிப்பதை ஏற்காமல் அவரை அவமானப்படுத்துகின்றனர். அதனை பொருட்படுத்தாத துருவன், காட்டைப் பற்றி அறிந்துகொள்ளும் இறுதிப் பயிற்சிக்கு அந்த ஐந்து மாணவிகளையே தேர்வு செய்கிறார். காட்டுக்குள் மாணவிகளுடன் இருக்கும்போது, இந்தியா ஏவ இருக்கும் வேளாண் புரட்சிக்கான ஏவுகணையைத் தாக்கி அழிக்க வந்துள்ள சர்வதேச கூலிப்படையைக் காண்கிறார் துருவன். நவீன ஆய்தங்களுடன் வந்துள்ள 16 பேர் கொண்ட சர்வதேச கூலிப்படை கும்பலை, மாணவிகளுடன் சேர்ந்து எப்படி அழிக்கிறார்? இட ஒதுக்கீட்டில் படித்து விட்டு பணியாற்றி நாட்டுக்காக உழைக்கும் துருவனுக்கும், அவரின் சமூகத்திற்கும் இந்த நாடு செய்யும் நன்றிக் கடன் என்ன?. இதுவே பேராண்மை திரைப்படத்தின் கதை.

இட ஒதுக்கீடு ஏளனமும் – புரிதலும்:

மாணவிகளிடம் பயிற்சியாளராக துருவனை உயரதிகாரி கணபதிராம் அறிமுகப்படுத்தும்போது, “படிப்பறிவே இல்லாத காட்டுமிராண்டி சனங்க கிட்டயிருந்து, இவர் ஒருத்தரு படிச்சி மேல வந்திருக்காரு. இட ஒதுக்கீட்டுல சாதா விளக்குல படிச்சவரு… நமக்கெல்லாம் கிடைக்கிற மாதிரி சாப்பாடு இவங்களுக்கு கிடைக்காது..’’ என்று அவமானப்படுத்துகிறார். இதனைக் கேட்கும் மாணவிகள், “மாட்டுக்கார பயல நமக்கு பயிற்சியாளராக தலையில கட்டுறாங்க..” என்று கிண்டலடிக்கிறார்கள். இந்தக் காட்சியில் இருந்தே இட ஒதுக்கீட்டில் படித்து பணிக்கு வந்த ஏழை, எளிய, பாட்டாளி மக்களைப் பற்றி இந்தச் சமூகம் கொண்டுள்ள பார்வையை இயக்குநர் ஜனநாதன் அம்பலப்படுத்துகிறார். படித்த வனக் காவலர் துருவனிடம் தேநீர் வாங்கி வர சொல்வதும், காலணியை தூய்மைப்படுத்தி மெருகேற்றி வாங்கிவர சொல்லி கையில் கொடுப்பதுமான அவமானங்களை உயரதிகாரி கணபதிராம் செய்கிறார்.

reserva10மேட்டுக்குடி பெண்களின் சதித்திட்டத்தால் ஒரு நாள் முழுவதும் கழிவறையை கழுவும் தண்டனையை துருவனுக்கு உயரதிகாரி கணபதிராம் வழங்கிறார். படிப்பு வாசமே இல்லாத பழங்குடியினமான தனது சமுதாயத்தில் படித்து வேலையில் இருக்கும் துருவனை, அவரது உறவினர்கள் மறைந்திருந்து பார்த்து பெருமிதப்பட நினைக்கிறார்கள். அவர்களை வடிவேலு அழைத்து வந்த போது, கழிவறையை கழுவிக்கொண்டிருக்கும் துருவனைப் பார்த்த உறவினர்கள் கண்கலங்குகிறார்கள். அந்த சமயத்தில், வடிவேலு பாத்திரத்தினூடாக, “செருப்பு தைக்கிறவன் புள்ள செருப்புதான் தைக்கனுமா? துணி துவைக்கிறவன் புள்ள துணியத்தான் துவைக்கனுமா? முடிவெட்டுறவன் புள்ள முடியதான் வெட்டனுமா? பழங்குடியின மக்கள்ல ஒருத்தன் அதிகாரியா வரக்கூடாதா?’’ என்ற வசனத்தில் இயக்குநர், சமூகத்தின் முகத்தில் காரி உமிழ்கிறார். அந்த காட்சியில் – ”எங்களுக்கு கழிவறைகூட பாடம் கற்கும் அறைதான்’’ என்று துருவன் கூறுவதில் இருந்தும், வேறொரு காட்சியில் – தன்னை தொடர்ந்து அவமானப்பதும் மாணவிகள் ஐந்து பேரை இறுதிப் பயிற்சிக்கு தேர்வு செய்வதில் இருந்தும் அடித்தளத்தில் வாழும் ஏழை, எளிய பாட்டாளி மக்கள் எந்தப் பணியையும் அர்ப்பணிப்புடன் செய்வார்கள் என்பதை இயக்குநர் வெளிப்படுத்துகிறார்.

மேலும், இட ஒதுக்கீட்டில் படித்து வருபவர்களுக்கு பணியாற்றும் இடங்களில் நேரும் அவமானங்கள் மிக யதார்த்தமாக படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அக்காட்சிகளை காணும் பார்வையாளர்களை கோபத்தில் ஆழ்த்தும்படி படமாக்கியுள்ளமை இயக்குநரின் திறமை. சிறுபான்மை இசுலாமிய சமூகத்தை சேர்ந்த அஜிதா, மலைவாசி வனக் காவலர் துருவன் மீது நேசத்தை காட்டுகிறார். கிறித்தவம், இசுலாம் ஆகிய சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் நெருங்கி பழகுவது இயல்பு. அதையும் அஜிதா பாத்திரத்தின் மூலமாக இயக்குநர் பல காட்சிகளில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

கல்வியின் தேவை – விளைவு:

தனது பணி நேரத்தில் அரசு வேலையை செய்யும் துருவன், இரவில் தனது சமூகப் பிள்ளைகளுக்கு பாடம் கற்று தருகிறார். அந்த பிள்ளைகளிடம், “ஒரு மூட்டை தேயிலை பறிச்சா என்ன கூலி.. ஒரு கிலோ டீ தூள் என்ன விலை..’’ என்று எடுத்துரைப்பதில் இருந்து உழைப்பை சுரண்டும் சமூகத்தை குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறார் இயக்குநர்.
பயிற்சி அளிப்பதற்காக மாணவிகளுடன் சென்ற துருவன் திரும்பி வர தாமதமாவதைத் தொடர்ந்து, உயரதிகாதி கணபதிராம் தலைமையில் அதிரடிப்படையினர் தேடும்போது, பழங்குடியின மக்களை தாக்கி விரட்டுகிறார்கள்.
அப்போது, ”ஆயிரம் ஆண்டுகளாக இந்தக் காட்டில் இருக்கிறோம். திடீர்னு வந்து போங்கன்னா எங்கையா போறது..?” என்று அந்த மக்களில் ஒருவன் கேட்கிறபோதும், “காட்டில் சட்டப்படி மனுசங்க இருக்கக் கூடாது. மிருகங்கங்க தான் இருக்கனும்..’’ என்று உயரதிகாரி கணபதிராம் சொல்கிறபோதும், பழங்குடி மக்கள் மீதான அதிகாரிகளின் பார்வையை மக்கள் முன் வைத்து நியாயம் கேட்கிறார் இயக்குநர்.

சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடி மக்களின் பங்களிப்பு என்று பாடம் படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளையும் அடித்து துன்புறுத்தும் அதிரடிப்படையினர், ”உங்களுக்கென்னதுக்கடா படிப்பு..; வீடு பூராவும் புக்குடா, இங்ககூட படிக்கிறாங்கடா..; காட்டு பசங்களுக்கு புத்தகம்; பள்ளிக்கூடம் இல்லாமெ இதையெல்லாம் படிக்கிறாங்க.. இன்னும் கான்வெண்ட்ல படிச்சா எங்களை தொரத்திருவீங்கடா..; அரசாங்கத்து பணத்துல படிக்க வைச்சா, அரசாங்கத்துக்கு எதிராகவே அரசியல் பேசுறீங்களாடா? இப்ப புரிஞ்சதா ஆட்சியின்னா என்ன, அதிகாரமுன்னா என்ன?
’’ என்று கூறி அடிக்கிறபோது, ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்கள் படித்து முன்னேறுவதை விரும்பாத உயரதிகாரிகள் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்வதை அம்பலப்படுத்துகிறார்.

”சொந்த சனங்கள தொறத்திட்டு, இந்த நாட்டை வெள்ளைக்காரங்களுக்கு வாடகை விட போறீங்களாடா?, அதிகாரம்… அதிகாரம்னு சொல்லிட்டு சர்வாதிகாரம் பன்னீட்டு இருக்கீங்களாடா? உழைக்கும் மக்களோட சர்வாதிகாரத்தை இந்த உலகம் பார்க்கத்தாண்டா போகுது” என்று பழங்குடிமக்களில் ஒருவனின் குரல் மூலமாக அடித்தள மக்கள் அரசியல் ரீதியாக அணிதிரளுவதன் அவசியத்தை இயக்குநர் பார்வையாளனின் முன் வைக்கிறார்.

காட்டில் மாணவிகளை துருவன் அழைத்து செல்கையில், தேர்ந்த வழிகாட்டியாக இருந்து பார்வையாளர்களாகிய நம்மையும் அழைத்து சென்று, காட்டை பற்றி அறியாதவர்களுக்கு காட்டின் நுணுக்கங்களை சிறப்பாக கற்றுத் தருகிறார் இயக்குநர். அடர்ந்த காட்டுக்குள் குருவி பறந்தால் புதிதாக ஆள் நடமாட்டம் இருப்பதை அறிவது, காட்டு வழியில் செல்லும்போது காலடி தடங்களை கவனிப்பது, பாதையை அடையாளப்படுத்த கிளைகளை உடைப்பது, ஏரியில் அடையாளத்திற்காக துணியை மாட்டி தொங்கவிடுவது, ஏரியின் புதைமண்ணில் கால் இழுத்தால் என்ன செய்வது? பழக்கப்படாத நீளமான ஏரியில் இறங்கி கடக்கும்போது, எவ்வாறு நடப்பது? காட்டில் செல்பவர்கள் ஒன்றுகூட சங்கேத ஒலியை பயன்படுத்துவது என பலவற்றை அறிந்துகொள்ள வைத்துள்ளார். காட்டின் பிரமாண்டத்தை இயக்குநருடன் இருந்து, ஒளிப்பதிவாளர் சதிஷ்குமார் காட்டியிருப்பது பார்வையாளர்களை மிரளவைக்கிறது.

காட்டில் மாணவிகள், துருவனை புகழ்கிற நேரத்தில், ”சர்வதேச அரசியல, பொருளாதாரத்தை படிக்கனும். இந்த உலகத்துல பொதுவுடமை அரசியலைவிட சிறந்த அரசியல் இல்லை’’ என்ற சொல்வதன் மூலம் அரசியலில் அடுத்த கட்ட நிலைக்கு மக்களை அழைத்து செல்கிறார் இயக்குநர் ஜனநாதன்.

இறுதிக்காட்சியில், புத்திசாலித்தனத்தாலும், கடுமையாக உழைப்பாலும் எதிரிகளை வென்ற பழங்குடியினத்தை சேர்ந்த துருவனுக்கு விருது வழங்காமல், துருவனை சாதி அடிப்படையில் கேவலப்படுத்திவரும் உயரதிகாரி கணபதிராம், பெறுவதாக காட்சிப்படுத்தியுள்ளது படத்தின் கருவை மேலும் ஆழமாக சிந்திக்க வைக்கிறது. இந்தியாவில் நிலவும் சுரண்டல் போக்கால் காலங்காலமாக உழைத்துவரும் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எதுவுமே முறையாக கிடைப்பதில்லை. மாறாக, உழைக்காத மேட்டுக்குடிகள் எளிதாக எல்லா அதிகாரங்களையும் அனுபவிக்கிறார்கள் என்ற உண்மையைக் காட்டி அதிகார வர்க்கத்தின் முகத்தில் ஓங்கி அறைகிறார் இயக்குநர் ஜனநாதன்.

இவ்வளவு உணர்வுப்பூர்வமான கதையை திரைக்கதையாக்கிய கல்யாண்குமார் பாராட்டுக்குரியவர். என்றாலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பலரும் அவமானப்படுத்தும் சமயங்களில் அமைதியாகவே கிடக்கும் நாயகன் துருவன் பாத்திரத்தை சில காட்சிகளில் பேசவைத்திருக்கலாம்.

காடு, ஏரி, நவீன ஆய்தங்களுடன் சண்டை.. என பிரமிக்கும்படி காட்சிகள் இருந்தும், கண்களை உறுத்தாமல் மிக யதார்த்தமாக படத்தொகுப்பை செய்துள்ள கணேஷ்குமாரின் பங்களிப்பு இந்த படத்திற்கு வலு சேர்த்துள்ளது. காட்சிக்கு அவசியமானதாக வரும் இரண்டு பாடங்களும் ரசிக்கவைக்கின்றன.

இறுதியாக ஒன்று –

priyar-ambathar10இந்திய நாட்டுப்பற்றை கதையின் சில இடங்களில் இழையோட விட்டிருப்பது தமிழ்த்தேசிய அரசியலாளர்களுக்கு மனநெருடலை தரலாம். இந்த மாதிரி தீவிர அரசியல் பேசும் திரைப்படத்தில் சமூக நீதி அரசியல் பற்றி புரிந்துகொள்ளாத வேறொரு தரப்பினரையும் படம் பார்க்க வைக்கும் முயற்சியாகவே இயக்குநர் செய்துள்ளார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தப் படத்தில் அடித்தள மக்களின் வாழ்நிலையைப் பற்றி கவலைப்படாத ஒரு தேசியத் தலைவரை கொல்ல வந்த சர்வதேசக் கூலிப்படையை நாயகன் மெனக்கெட்டு அழித்திருந்தால் அது தவறு. (விஜயகாந்த் படம் போல) மாறாக, அடித்தளத்தில் வாழும் உழவர்களின் நலனைக் காக்கும் விவசாயத்தை மேம்படுத்த பயன்படுத்தவுள்ள ஏவுகணையை அழிக்க வரும் கூலிப்படையை அழித்து தேசியம் பேசியிருப்பதில் தவறில்லை (இது நடக்காத விசயம் என்றாலும் இயக்குநர் ஆசைப்படுகிறார்). காரணம், பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள ஏழை எளிய விவசாயிகளையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் நம்பில் ஒருவராக சேர்த்துக்கொள்வது தவறா? என்பதை சிந்திக்க வேண்டியிருக்கிறது.

குறைகளே இல்லாத ஒரு செயல் இருக்க முடியாது. பேராண்மை திரைப்படத்தை பொறுத்தவரை நாட்டுப் பற்று என்னும் தேசிய கண்ணோட்டம் விமர்சனத்திற்குரியதுதான் என்றாலும் அதை வலிய பிடித்துக்கொண்டு வறட்டுத்தனமாக விமர்சனம் செய்வது தேவையற்றது என்றே கருதுகிறேன். தமிழ் திரைப்படத்துறையில் அரிதாகவே வருகின்ற பேராண்மை போன்ற திரைப்படங்களை ஆதரிப்பதன் மூலம் சமூக மாற்றத்திற்கு திரைப்படம் என்னும் கலை ஊடகத்தை தைரியமாக பயன்படுத்தி கருத்துக்களை கொண்டு செல்லலாம் என்ற நம்பிக்கையை அடுத்த தலைமுறை இயக்குநர்களுக்கு ஏற்படுத்த முடியும்.

ஆக, பேராண்மை திரைப்படத்தின் மூலமாக இட ஒதுக்கீட்டை பற்றி தவறாக எண்ணியுள்ளவர்களுக்கு ஒரு புரிதலை உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனை மனம் திறந்து பாராட்டலாம்.