Saturday, November 28, 2009

ஆதிகால மனிதர்களும், நவீனகால மனிதர்களும்

Cave Paintings Pictures, Images and Photos
ஆதிகால மனிதர்களும், நவீன மனிதர்களுக்கும் இடையிலான உறவு குறித்து சமீபத்தில் இரண்டு ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. மிக நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே இந்த இரண்டு மனித மூதாதையர்களும் ஒருபொதுவான மரபு உயிரணு வகையில் இருந்து பிரிந்துள்ளதாக கூறப்படுவதற்கு இந்த அறிக்கைகள் மேலும் வலு சேர்க்கின்றன. மேலும், மனிதயின பரிணாமம் பல்வேறு கிளைகளாகவும், பல முடிவில்லா வழிகளிலும் உருவானது என பண்புருவாக்கப்பட்ட கண்ணோட்டத்தை இந்த முடிவுகள் ஆதரிக்கின்றன. இது உண்மையானால், பின்னர் குறைந்தபட்சம் 5 மில்லியன் ஆண்டுகளில் வெவ்வேறு காலங்களிலும், வெவ்வேறு இடங்களிலும் உயிர் வாழ்ந்த அல்லது உடன் வாழ்ந்த பல மனிதயின தோற்றங்களில் ஹோமோ சேப்பியன்கள் (பிஷீனீஷீ ஷிணீஜீவீமீஸீச்) எனப்படும் நவீனகால மனிதர்கள் தான் இறுதியாக பிழைத்திருக்கும் ஓர் உயிரினமாகிறது. உண்மையில், தற்போதைய சூழலில் ஒரேயரு மனித உயிரினம் தான் உயிர் வாழ்கிறது. அது ஒரு விதியாக (ஸிஉறீமீ) அல்லாமல் விதிவிலக்காக இருக்கலாம்.

விஞ்ஞானங்களுக்கான தேசிய ஆணைய (வீவர், ரோஸ்மென் மற்றும் ஸ்ட்ரிங்கர் ஆகியோரால் 2008) செயல்திட்டத்தில் விளக்கப்பட்ட இந்த அறிக்கைகளில் முதலாவதானது, ஆதிகால மனிதர்களிடமும், நவீனகால மனிதர்களிடமிருந்தும் எடுக்கப்பட்ட 37 மண்டை ஓடு அளவீடுகளில் கண்டறியப்பட்ட வேறுபாடுகளை அடைய எவ்வளவு காலம் மரபணு மாற்றத்திற்கு (அதாவது, மரபணுவில் ஏற்படும் ஒழுங்கற்ற மாற்றங்கள்) தேவைப்படும் என்பதை கணிக்க ஓர் ஆய்வு தேவை என்பதை குறிப்பிடுகிறது. இந்த முதலாவது அறிக்கையின் முடிவுகள், வெறும் 500,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களின் மூதாதையர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறித்து காட்டுகின்றன. அண்ணளவாக 400,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிமான (திஷீச்ச்வீறீச்) தடயங்களில் தான் முதன்மையாக ஆதிகால மனிதர்கள் காணப்படுகிறார்கள். ஆதிகால மனிதர்களுக்கும் மற்றும் நவீனகால மனிதர்களை வார்த்தெடுத்த மரபினர்களுக்கும் மற்றும் பிற மனித உயிரினங்களுக்கும், தற்போது இல்லாமல் அழிந்து போன மரபினங்களுக்கும் ஒரு பொதுவான மூதாதையர்கள் இருக்கலாம் என்று சுமார் 500,000த்திற்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்து போன ஹோமோ ஹெய்டில்பேர்ஜென்ஸிஸ் (பிஷீனீஷீ லீமீவீபீமீறீதீமீக்ஷீரீமீஸீச்வீச்) எனப்படும் மனித இனங்களில் இருந்து எடுக்கப்பட்ட புதைபடிமானங்கள் எடுத்துரைக்கின்றன. உண்மையில் 500,000க்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மரபணு உடைவு (அதாவது ஒரு புதிய உயிரினம் தோன்றும் நிகழ்வு) இருந்திருந்தால், நவீன மனித மரபணு தொகுப்பிற்கு ஆதிகால மனிதர்களால் எந்த பங்களிப்பும் செய்திருக்க சாத்தியமில்லை.

இரண்டாவது அறிக்கையானது, குரோசியாவின் (சிக்ஷீஷீணீட்வீணீ) குகையில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 38,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிகால மனிதனின் கால் எலும்பில் மேற்கொள்ளப்பட்ட மைட்டோகான்ரியல் மரபணு (விவீட்ஷீநீலீஷீஸீபீக்ஷீவீணீறீ ஞிழிகி) ஆய்வின் முடிவுகளை விளக்குகிறது. (இதன் ஒரு பகுதி ஆகஸ்டு 8, 2008ல் வெளியான ஜிலீமீ நிஉணீக்ஷீபீவீணீஸீ இதழில் உள்ளது). மைட்டோகான்ரியல் மரபணு (னீட்ஞிழிகி) என்பது கலங்களில் இருக்கும் 'சக்தி உற்பத்தி நிலையங்களான' மைட்டோகான்ரியாவில் மட்டுமே காணப்படும். ஒரு பாதி ஓர் தாயிடமும், மற்றொரு பாதி தந்தையிடமிருந்தும் எடுக்கப்படும் நியூக்ளியர்ஞிழிகி போலில்லாமல், மைட்டோகான்ரியல் மரபணு தாய்மார்களிடம் இருந்து மட்டுமே அவர்களின் வழிதோன்றலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆதிகால மனிதர்களின் னீட்ஞிழிகி, நவீனகால மனிதர்களின் னீட்ஞிழிகிவில் இருந்து தெளிவாக மாறுபட்டிருப்பதை ஜேர்மனியின் லைப்சிக் நகரிலுள்ள மக்ஸ்-பிளங்க் மனிதயின பரிணாம ஆய்வு பயிலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு குறிப்பிட்டு காட்டுகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில், ஆதிகால மனிதர்களுக்கும், இறுதியில் நவீனகால மனிதர்களை படைத்தளித்த மரபினர்களுக்கும் இடையிலான இடைவெளி அண்ணளவாக 660,000 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கலாம். இந்த 660,000 ஆண்டுகள் என்பது மேற்குறிப்பிட்ட வீவர், ரோஸ்மென் மற்றும் ஸ்ட்ரிங்கர் ஆய்வில் கணிக்கப்பட்ட காலத்திற்கு மிக அண்மையில் தான் அமைகிறது. காலப்போக்கில் ஆதிகால மனிதர்களின் னீட்ஞிழிகிவில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக அந்த ஆராய்ச்சி குறிப்பிடுவதால், இது அந்த உயிரினங்கள் மிக குறுகிய காலங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்திற்கு இட்டு செல்கிறது. ஆதிகால மனிதர்களின் நியூக்ளியர் ஞிழிகி பற்றிய முழு ஆய்வும் இந்த ஆண்டின் இறுதியில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், இந்த அறிக்கைகளும் மற்றும் பிற சமீபத்திய ஆய்வு அறிக்கைகளும் நவீனகால மனிதர்கள் மற்றும் ஆதிகால மனிதர்கள் இடையிலான உறவுகள் மீதான எதிர்விவாதங்களுக்கு மேலும் பல புதிய தகவல்களை சேர்த்துள்ளன. கிடைத்திருக்கும் புதைபடிமான தடயங்களின் அடிப்படையில், ஆதிகால மனிதர்கள் மனிதர்களின் தோற்றத்தை கொண்டிருந்தார்கள்; இவர்கள் அண்ணளவாக 400,000 ஆண்டுகள் முன்பிலிருந்து, சுமார் 38,000 ஆண்டுகள் முன்னர் வரை ஐரோப்பா மற்றும் மேற்கத்திய ஆசியாவின் பெரும்பகுதிகளில் வாழ்ந்திருந்தனர். பிரமாண்ட எலும்பு வடிவம் மற்றும் பெரிய நெற்றி முகடுகளுடன், தாடை இல்லாமல் (அதாவது, தாடை உள்வாங்கி இருக்கும்) இருந்த குறிப்பிடத்தக்க பல்வேறு உடல் தோற்றக்கூறுகள் தான், இன்று வழக்கத்தில் இல்லாத இந்த 'குகை மனிதர்கள்' பற்றிய பிரபல கருத்துருக்கள். தொடக்கத்தில் ஆதிகால மனிதர்களின் புதைபடிமானங்கள் 1856ல் ஜேர்மனியிலுள்ள நியாந்தர் பள்ளத்தாக்கில் (ழிமீணீஸீபீமீக்ஷீ க்ஷிணீறீறீமீஹ்) கண்டுப்பிடிக்கப்பட்டன. அவை, வேறு வகைப்பட்ட மனிதர்களும் பூமியில் ஒருபோது வாழ்ந்திருந்தார்கள் என்பதற்கான முதல் நேரடி ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன. இவ்வாறு, மனிதர்கள் அவர்களின் முந்தைய தோற்றங்களிலிருந்து உருவாகி இருக்கிறார்கள் என்ற புதிய மற்றும் விவாதத்திற்குரிய பல சிந்தனைகள் பின்னர் ஏற்பட அது உதவியது.

மற்றொருபுறம், சுமார் 100,000த்திற்கும் 200,000த்திற்கும் இடைப்பட்ட காலத்திற்கு முன்னர் முதன்முதலில் ஆப்ரிக்காவில் நவீனகால மனிதர்கள் தோன்றியதாக புதைபடிமான தடயங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அவர்கள் தொடர்ந்து விரைவாக, நிலப்பரப்பில், அதாவது கிழக்கு மற்றும் மேற்கத்திய நிலப்பகுதிகளில், அவர்களுக்கு முந்தைய மனித உருவங்களை விட மிக தொலைவிற்கு அவர்கள் பரவினார்கள். நவீனகால மனிதர்களுடன் தொடர்புடைய மனிதயின ஆய்வு, முந்தைய அனைத்து மனித உயிரினங்களை விட மிகவும் வளமான ஒரு கலாச்சாரத்தை வெளிப்படுத்தி காட்டுகிறது. அதில் நுட்பமான தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி, தனிநபர் அலங்கார பொருட்கள் (அதாவது, நகைகள்) மற்றும் கலை பாவனை (சான்றாக, பனிகால ஐரோப்பாவிற்கு பிந்தைய குகை ஓவியங்கள்) போன்ற கலை உணர்வுகளையும் கொண்டுள்ளது. தெளிவாக, நவீனகால மனிதர்களின் தோற்றம் மனிதயின பரிணாமத்தில் ஓர் உண்மையான அளவுரீதியான பாய்ச்சலை எடுத்துக்காட்டுகிறது.

ஆதிமனிதர்களின் புதைபடிமானங்கள் கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு பின்னர், ஆதிகால மனிதர்களும், நவீனகால மனிதர்களும் உண்மையில் எவ்வாறு வேறுபட்டுள்ளார்கள் என்பது குறித்த விஞ்ஞான கருத்துக்களும், பிற பிரபல கருத்துக்களும் தொடர்ந்து மாறுபட்டு வந்தன. மூட்டுவீக்கம் காரணமாக எலும்புகளில் அசாதாரண தன்மைகளை கொண்ட வயதான ஆணின் முழுமையான எலும்புகூட்டைச் சார்ந்து கூறப்பட்ட கருத்துகள் என்பதால் ஆதிகால மனிதர்கள் பற்றிய சில முந்தைய வர்ணனைகள் மிகவும் மாறுபட்டிருந்தன. பெருமளவிலான மாதிரிகளின் அடிப்படையில் பின்னர் மாற்றி அமைக்கப்பட்ட ஆதிகால மனிதர்களின் உருவ தோற்றம் நவீனகால மனிதர்களுடன் இருந்த ஓரளவு வேறுபாட்டை குறைத்தது. தற்போதும் உயிருடன் இன்றைய நகர தெருக்களில் நடந்து செல்லும் ஆதிகால மனிதர்கள் (பொருத்தமான உடைகள் அணிந்து, அலங்காரம் செய்து கொண்ட ஆதிகால மனிதர்கள்) யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதாக சில ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள். இந்த சிந்தனை அமெரிக்காவின் சமீபத்திய வாகனத்துறை காப்பீட்டு தொடர்பான விளம்பரங்கள் ஒன்றிலும் பிரதிபலித்திருந்தது.

பேலியோன்தாலஜியின் (ஆதிகால மனிதர்கள் பற்றிய புதைபடிமானங்களை ஆராயும் துறை) ஒரு பகுதியாகவும், மனிதயின பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்விலும் குறிப்பாக, புதைபடிமான எலும்பு மற்றும் தொல்பொருள் போன்ற பிற ஆதார தரவுகளின் பாரம்பரிய ஆராய்ச்சிகளுக்கும் கூடுதலாக, எந்த அளவிற்கு புதைபடிமான மரபணு பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதையே கடந்த தசாப்தங்களில் வெளியான ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

விஞ்ஞான ஆய்வுகளின் உண்மையான அபிவிருத்திகளையும், பல்வேறு வகையான தரவுகளின் கருத்துகளுக்கு இடையிலுள்ள முரண்பாடுகள் மீதான ஒரு செயல்முறையையும் மற்றும் தர்க்கரீதியாக நோக்கங்கள் மாறுபடுவதையும் வெளிச்சமிட்டு காட்ட இந்த புதிய தரவுகளின் அபிவிருத்தி உதவுகிறது. இந்த முரண்பாட்டின் காரணமாக, ஒரு காலத்தில் வலுவாக பொருள்படுத்தப்பட்டதாக தோன்றிய தகவல்கள், முன்னர் இருந்த தரவுகளையும், கைவசம் இருக்கும் புதிய தரவுகளையும் மிக துல்லியமாக ஒருங்கிணைக்கும் தெளிவான புதிய ஒன்றால் தூக்கி எறியப்படுகின்றன. இந்த சச்சரவான செயல்முறை, அடிக்கடி பரந்த சமூகத்தில் உள்ள அரசியல் மற்றும் சமூக போக்குகளின் 'வெளித்தாக்கத்தையும்' பிரதிபலிக்கிறது.

புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால், மனிதயின பரிணாமத்தையும், குறிப்பாக ஆதிகால மனிதர்களைப் பற்றிய சில அடிப்படை ஆய்வுகளையும் மீள்பார்வையிட வேண்டியது அவசியமாகும்.

பல்வேறு கருத்துகளின் முடிவுகளை குறிக்கும் விதமாக, ஆதிகால மனிதர்கள் குறித்த இரண்டு முக்கிய கண்ணோட்டங்கள் வரையறுக்கலாம். ஒன்று, உயிரினங்களின் அளவில் நவீனகால மனிதர்களை முற்றாக பிரித்து (வேறுபடுத்தி) பார்ப்பது. மற்றொன்று, நவீனகால மனிதர்களுடனான வேறுபாடுகள் நவீனகால மனிதர்களின் வேறுபட்ட மக்களிடையே இன்று காணப்படும் பல்வேறு வேறுபாடுகள் தான் என கருதப்படுதல். இதே போன்ற முடிவுக்கு வருபவர்கள் கருதுவது என்னவெனில், ஐரோப்பாவில் வாழ்ந்த பண்டைய ஆதிகால மனிதர்களிடமிருந்து குறிப்பாக ஐரோப்பியர்கள் சில மரபணு பாரம்பரியத்தைப் பெற்றிருக்கின்றனர் என்பதாகும். தகவல்களின் மறுபக்க கருத்துப்படி, ஆதிகால மனிதர்களும், நவீனகால மனிதர்களின் மூதாதையர்களும் நீண்ட காலத்திற்கு முன்னரே (அதாவது, 400,000த்திற்கு மேலான ஆண்டுகளுக்கு முன்னர்) கூடி இருந்ததாகவும், அவர்களுக்கு இடையிலான மரபுவழி வேறுபாடுகள் மாதிரிகளின் அளவில் வேறுபட்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறது. வேறு வார்த்தைகளில் குறிப்பிடுவதானால், இரு குழுக்களும் மரபுவழியில் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அவை தங்களுக்குள் கலப்பின சேர்க்கையிலும் ஈடுபட்டிருக்க முடியாது என்பதேயாகும். ஆதிகால மனிதர்கள் ஒருவேளை ஒரேயின ஆதிகால மனிதர்களாக, அதாவது ஓரின மரபணு மட்டுமே கொண்ட ஓர் உயிரினமாக (ஆணாகவோ அல்லது மனிதர்களாகவோ) இருந்திருக்கலாம்; ஆனால் ஹோமோசேப்பியன்களில் (நவீன மனிதர்களில்) இருந்து வேறுபட்டோ அல்லது நவீன மனித ஆதிவாசிகளாகவோ (ஹோமோசேப்பியன்களுக்கு இணையான தகுதிகளைக் கொண்ட உபஉயிரினங்களாகவோ) இருந்திருக்கலாம் என்ற கருத்துகளின்படி, இந்த வேறுபாடானது படிமுறையியலின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உபஉயிரினம் என்பது நவீன மனிதயினத்தை குறிக்கிறது.
abducted Pictures, Images and Photos
வெவ்வேறு உயிரினங்களுக்கு இடையே மரபணு பரிமாற்றம் ஏற்பட முடியுமா என்பதில் தான் உயிரினங்கள் அளவிலான பிளவுகள் அமைந்துள்ளது. ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதயினத்திற்கும் இடையே கலப்பின சேர்க்கை இருந்ததா, இல்லையா என்ற கேள்வியை வரலாற்றின் முக்கிய கலாச்சாரங்களில், சான்றாக, சிறீணீஸீ ஷீயீ ட்லீமீ நீணீஸ்மீ ஙிமீணீக்ஷீ மற்றும் னிஉமீச்ட் யீஷீக்ஷீ யீவீக்ஷீமீ போன்ற திரைப்படங்களில் தொடப்பட்டுள்ளன. அண்ணளவாக 400,000த்திற்கு முந்தைய ஆண்டுகளின் தொடக்கத்தில், நவீனகால மனிதயினம் முதன்முதலாக ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் தோன்றியதாகவும், வெளிப்படையாக ஆதிகால மனிதர்களுடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்து வாழ்ந்ததாகவும், பின்னர் இவை புதைபடிமான தடயங்களில் மறைந்துவிட்டன என்பது போன்று கடைசி உறைபனி காலத்தின் (மிநீமீ கிரீமீ ஷீக்ஷீ றிறீமீவீச்ட்ஷீநீமீஸீமீ) இறுதி பகுதிக்குரிய காலத்தை இந்த திரைப்படங்கள் எடுத்துக்காட்டின.

இந்த இரண்டு மக்களுக்குமிடையே ஏதேனும் தொடர்புகள் இருந்திருந்தால், இயல்பாக என்ன மாதிரியானதாக இருந்திருக்கும்? நவீனகால மனிதர்கள் தங்களின் பண்டைய உறவினர்களான ஆதிகால மனிதர்களுடன் புத்திசாலித்தனமாக போட்டியிட்டு, உணவுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் அல்லது ஒருவேளை வன்முறையால் அவர்களை பூண்டோடு இல்லாதொழித்தனவா? அல்லது முந்தையவர்களின் மரபணு பின்னர் வந்தவர்களால் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையில் நவீனகால மனிதர்களும் ஆதிகால மனிதர்களும் கலப்பு சேர்க்கையில் ஈடுபட்டனரா? இரண்டாவதாக கூறப்படும் கருத்து உண்மையானால், ஆதிகால மனிதர்கள் நடப்பிலிருந்து மறைந்துவிடவில்லை என்றாகிறது. அவர்கள் புதைபடிமான தடயங்களிலிருந்து மட்டுமே மறைந்திருக்கிறார்கள் என்றும், ஏனெனில் அவர்களின் வழிதோன்றல்கள் நவீனகால மனிதர்களிடம் இருந்து வேறுபடுத்த முடியாத அளவிற்கு பெருமளவில் அவர்களுள் கலந்துள்ளனர் என்றும் தோன்றுகிறது.

அடிப்படையில் வன்முறை தான் மனித இயற்கை என்பதன் அறிகுறியாக முதல் கருத்தை (அதாவது, ஆதிகால மனிதர்கள் இல்லாதொழிக்கப்பட்டனர் என்ற கருத்து) திரித்து கூறும் முயற்சிகளும் நடைமுறையில் உள்ளன. இதன் மறுபக்கம், அமைதிக்கான மனிதயின மனப்போக்கு (அதாவது, யுத்தம் இல்லாமல் அன்பை உருவாக்கும் மனப்போக்கு) இருப்பதற்கான ஒரு 'நம்பிக்கையான' அறிகுறியைக் குறிக்கும் வகையில், இரண்டு குழுக்களின் மரபணு ஒன்று கலந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. உண்மை மேலும் குழப்பமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் இந்த முடிச்சு அவிழ்க்கப்படும் போது, ஒட்டுமொத்தமாக மனிதயின பரிணாமத்தை புரிந்து கொள்வதற்கான உயர்ந்த படிப்பினை கிடைக்கும். கடந்த தசாப்தத்தின் தோற்ற பதிவேடு ஆராய்ச்சி மற்றும் மரபணு ஆராய்ச்சி இரண்டும் இந்த கேள்விக்கான பதிலை அளிக்கும் பல தகவல்களை அளித்துள்ளன.

கடந்த அரை நூற்றாண்டில், கிழக்கு ஆரிக்காவில் பண்டைய உடல்கூறு (கிஉச்ட்க்ஷீணீறீஷீஜீவீட்லீமீநீவீஸீமீ லீஷீனீவீஸீவீபீ) புதைபடிமானங்கள் கிட்டத்தட்ட கண்டுப்பிடிக்கப்பட்டதிலிருந்து, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதயினத்தின் முன்னோர் வாழ்ந்தனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. மனிதயின பரிணாமம் குறித்து பொதுவாக இரண்டு வித கண்ணோட்டங்கள் நிலவுகின்றன. ஒன்று, ஹிஸீவீறீவீஸீமீணீறீ (யூனிலீனியவாதம் -ஒரேயரு பெற்றோர் வழியில் வந்த உயிரினங்கள்); மற்றொன்று, விஉறீட்வீறீவீஸீமீணீறீ (மல்டிலீனியவாதம்- அதாவது பல பெற்றோர் வழியில் வந்த மரபு) அல்லது கிளை வழி கண்ணோட்டம் என்பது. ஹோமினிட் (பிஷீனீவீஸீவீபீ) என்ற வார்த்தை நவீனகால மனிதர்களைக் குறிக்கிறது. மேலும் அவர்களின் மூதாதையர்கள் மற்றும் அவர்களின் உடனொத்த கிளை மரபு உறவினர்களிடையே நடந்த இனக்கலப்பு ஹோமினிட்களிடையே பிரிவை ஏற்படுத்தியது. இறுதியாக, அதன் வழிதோன்றல்களான சிம்பன்சிகளை (சிலீவீனீஜீணீஸீக்ஷ்மீமீ) உருவாக்கியது. இது சுமார் 6.5 மில்லியன் மற்றும் 10 மில்லியன் ஆண்டுகளில் நடந்திருக்கலாம். மனிதர்களின் மற்றும் சிம்பன்சியின் ஞிழிகி சுமார் 96 சதவீதம் ஒத்திருக்கின்றன. பிற வாலில்லா குரங்குகளை விட இந்த இரண்டு குழுக்களுக்கு இடையே நெருங்கிய பரிணாம உறவுகள் இருப்பதை தான் இது குறிப்பிட்டு காட்டுகிறது.

1960களில் மற்றும் 1970களில் மிகவும் பரவலாக இருந்த தனித்த உயிரினங்களின் தற்காலிக கோட்பாடு என அறியப்படும் யூனிலீனியவாதம், மனித நடவடிக்கைகளான (குறிப்பாக, இவை பின்வருமாறு பண்புப்படுத்தப்பட்டன): வீ பொருட்களை எடுத்து செல்லவும், நிலையாக கருவிகளை உருவாக்கவும், பயன்படுத்தவும் ஏற்ற வகையில் கைகளை சுதந்திரமாக இயக்க உதவும் நிமிர்ந்த நடை. வீவீ) தொடர்ந்து வளர்ந்து வரும் சிக்கலான சமூக அமைப்புகள் மற்றும் வீவீவீ) அனைத்தையும் புரிந்துகொள்ளும் சிந்தனை திறன் ஆகியவை பிற அனைத்து விலங்குகளை விட்டு மிகவும் வேறுபட்டிருந்தது; மேலும், இந்த யூனிலீசவாதம் உயிரின பரிணாமத்தின் பொதுவான தோற்றங்கள் கணிசமாக மாற்றப்பட்டிருந்தன என்பதை உண்மையென ஏற்றுக் கொண்டது. இந்த கண்ணோட்டத்தில், பிற விலங்குகளைப் போல் அவற்றின் பரிணாம மாறுதல்களால் அல்லாமல் கலாச்சாரத்தால் (அறிந்துகொள்ளும் தன்மையால்) ஹோமினிட்கள் (பிஷீனீவீஸீவீபீச்) ஆரம்பம் முதலாகவே நிறைய தெரிந்து கொண்டார்கள். இதனால் புவியியல்ரீதியாக பரவலாக உயிரின கூட்டம் தொடர்ந்து நகர்ந்த போது, மனிதயினமும் பல்வேறு சூழ்நிலைகளில் பரவலாக விரிந்து சென்றது. இதன் மூலம் முழு உயிரினங்களையும் உள்ளடக்கி கிட்டத்தட்ட நிலையான மரபணு பரிமாற்றம் இருந்து வந்தது.
Medieval Man Enters Modern World Pictures, Images and Photos
யூனிலிசவாதத்தின் கண்ணோட்டத்தில், ஹோமினிட்கள் மத்தியில் இருக்கும் தொடர்ச்சியான மரபணு ஒற்றுமை குறிப்பது என்னவென்றால், தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் கூட்டத்தின் வழிதோன்றல்கள் மனிதயின மூதாதையர் மத்தியில் ஏற்படவில்லை என்பதாகும். ஆனால், உயிரியியல் பரிணாமத்தின் முதன்மை செயல்பாட்டின்படி, மரபணு வேறுபாடுகள் காரணமாக அப்போதிருந்த உயிரினங்களிலிருந்து புதிய உயிரினங்கள் பிரிந்து வந்தன என்று குறிக்கப்படுகிறது. புவியியல்ரீதியாக தூரத்திலிருந்த மனிதர்களுக்கு இடையே மரபணு வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம். கலாச்சாரரீதியான பரப்பப்பட்ட இணைந்துபோவதை அல்லது கலாச்சாரரீதியான இடம்பெயர்வை மற்றும் தொடர்ச்சியான மரபணு பரிமாற்றத்தையோ எதிர்த்த சக்திகளால் அது ஒருபோதும் இனப்பெருக்க தொடர்பின்மையை ஏற்படுத்தும் புள்ளியை சென்றடையவில்லை.

இனப்பெருக்க தொடர்பின்மை என்பது இனப்பெருக்கத்தின் மூலம் வழிதோன்றல்களை உருவாக்க வெவ்வேறு உயிரினங்கள் தங்களுக்குள் உயிர்கலப்பில் ஈடுபடும் போது அவற்றிற்கிடையில் இருக்கும் பொருத்தமின்மையைக் குறிக்கும். சான்றாக, குதிரைகளும், கழுதைகளும் உயிர்கலப்பில் ஈடுபட்டு கலப்பினங்களை உருவாக்க முடியும். ஆனால் அவ்வாறு உருவானவை, தங்களுக்குள் கலப்பின விலங்குகளை உருவாக்க முடியாது. ஆகவே, குதிரைகள் மற்றும் கழுதைகளுக்கு இடையே மரபணு பரிமாற்றம் கிடையாது. அவை வெவ்வேறானவையே, ஆனால் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடைய உயிரினங்கள். இவ்விரு உயிரினங்களின் உறுப்பினர்கள் தங்களுக்குள் உயிர்கலப்பில் ஈடுபட்டு உயிர் வாழ்வனவற்றை உருவாக்க முடியும். ஆனால் இவற்றிலிருந்து உருவான உயிர்கள் மலடாக இருக்குமேயானால், அவற்றின் வழித்தோன்றல்களின் மரபணு அமைப்பு பெருமளவில் ஒரேமாதிரியாக தான் இருக்கும்; அவை வெவ்வேறு உயிரின பிரிவுகளாக கடந்த காலத்தின் சமீபத்தில் தான் ஏற்பட்டிருக்க முடியும்.

யூனிலிசவாத பொருள்விளக்கத்தின்படி, ஹோமினிட்கள் உயிர்வாழ்ந்த முழு புவியியல் பகுதிகளிலும், மனித மரபுகளில் ஏற்பட்ட உயிரியியல் மாற்றங்கள் படிப்படியாகவும், முறையாகவும் ஏற்பட்டது. ஏதோவொரு மூலைகளில் பரவலாக பரவியிருந்த ஒரேயரு உயிரினத்தில் ஏற்பட்ட அனுகூலமான மரபணு மாற்றங்கள், அதனோடொத்த உயிரினங்களுக்கு இடையே ஏற்பட்ட உயிர்சேர்க்கைகளாலும் மற்றும்/அல்லது இடப்பெயர்வினால் அவ்விடத்தில் இருந்த உயிரினங்களுடன் ஏற்பட்ட கலப்பின சேர்க்கையாலும், மீதமிருந்த பகுதிகளிலும் பரவியது. பல மில்லியன் ஆண்டுகளில் ஹோமினிட்களின் உடல் தோற்ற அமைப்பு மாறியிருந்த போதினும், இந்த மாற்றம் படிப்படியாகவும், முன்னேற்றம் பெற்ற வகையிலும் இருப்பதாக பொருள்படுத்தப்படுகிறது. அண்ணளவாக, சமகாலத்தின் ஹோமினிட் உடற்சுவட்டு ஆதாரங்களில் எலும்புக்கூடு தோற்றத்தில் காணப்பட்ட வேறுபாடுகள், மல்டிலீனிசவாதத்தால், வெவ்வேறு ஹோமினிட் உயிரினங்கள் உயிர் வாழ்ந்ததற்கான ஆதாரமாக பொருள்படுத்துகிறது. இதுவே யூனிலிசவாதத்தில், பாலியல் வேறுபாட்டுவாதம் (பீவீனீஷீக்ஷீஜீலீவீச்னீ-அதாவது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான உடலளவு போன்ற உடல்தோற்ற வேறுபாடுகள்) மற்றும்/அல்லது பாரியளவிலான மரபணு வேறுபாட்டைக் கொண்ட மக்களின் விளைவாக குறிக்கப்படுகிறது.

எதிர்மறை சிந்தனையின் பள்ளியான மல்டிலீனிசம் அல்லது கிளை சார்பு கண்ணோட்டமானது, உண்மையில் பிற விலங்குகளில் இருந்து மனிதர்களின் ஏற்புத்திறன் மாறுபட்டு இருந்தாலும் கூட, ஹோமினிட் உயிரியியல் பரிணாமத்தின் மீது அதன் செல்வாக்கு யூனிலிசவாதிகளால் வரையறுத்து காட்டப்படுவது போன்று, குறைந்தபட்சம் நவீனகால மனிதர்கள் உருவானது வரையிலாவது அத்தனை உயர்ந்ததன்று. ஹோமினிட்களின் வாழ்க்கை பெருமளவில் வளர்ச்சி அடையும் வரையிலும் அவர்களின் மக்கள்தொகை மிக குறைவாகவே இருந்தது; மக்கள்தொகையின் அடர்த்தியும் குறைவாக இருந்தது. மேலும் தொழில்நுட்ப ஏற்புத்திறனும் குறிப்பிடும் அளவிற்கு சாதாரணமாகவும், நீண்ட காலம் மாற்றம் இல்லாமலும் தான் இருந்தன என்று மல்டிலீனிசவாதிகள் வாதிடுகிறார்கள். எனவே, மரபணு பரிமாற்றம் பொதுவாக எல்லைக்குட்பட்டு முக்கியமாக, ஹோமினிட்கள் வசித்திருந்த தொலைதூர பிரதேசங்களில் (அதாவது, ஆப்ரிக்கா மற்றும் யூரேஷியாவின் பல பகுதிகளில்) இருந்தது. இது வெகுதொலைவு மக்களுக்கு இடையே துல்லியமாக மரபணு தொடர்பின்மையை உருவாக்கியது. மேலும் ஹோமினிட்கள் ஒரு பிரத்யேக நடைமுறை பண்பாட்டை கொண்டிருந்த போதிலும், இயற்கையால் அளிக்கப்பட்ட சில குறிப்பிட்ட அழுத்தங்களுக்கு எதிராக கணிசமான இடைநிலையை உருவாக்க முடியவில்லை. அதற்கு மாறாக, ஹோமினிட்கள் தொடர்ச்சியான வழிதோன்றல்களுக்கு உள்ளானார்கள் என்றும், குறிப்பிட்ட தட்பவெப்ப சூழலுக்கும் மற்றும்/அல்லது உயிர்வாழ்வதற்கான நிலைகளுக்கும் ஏற்ப பல்வேறு உயிரினங்கள் உருவாயின என்றும் மல்டிலீனியவாதிகள் வாதிடுகின்றனர். சில விடயங்களில், சில மில்லியன் ஆண்டுகளில் வெவ்வேறு ஹோமினிட் உயிரினங்கள் புவியியல்ரீதியாக ஒரேயிடத்தில் வந்திருப்பதையும் மற்றும் காலவகையில் நெருங்கி உடன் வாழ்ந்திருப்பதையும் காணமுடிகிறது. (அதாவது, கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்காவின் உடல்வலிமை மிக்க மற்றும் வலிவற்ற ஆதிவாசிகள்)

மல்டிலீனிசவாதத்தில் கூறப்படும் மனிதயின பரிணாமம், நவீன பரிணாம கோட்பாட்டுடன் மிகவும் நெருக்கமாக உள்ளது. சான்றாக, சமநிலை வலியுறுத்திய நிஷீஉறீபீ ணீஸீபீ ணிறீபீக்ஷீவீபீரீமீ இன் கோட்பாடு. இதில் கூறப்படுவதென்னவென்றால், ஒரு தொடர்பற்ற உயிரின சட்டம், குறிப்பிட்ட பிரத்யேக அழுத்தத்திற்கும் மற்றும்/அல்லது மாறுபட்ட மரபணு மாற்றத்திற்கும் உட்படும் போது முதன்மை உயிரின உறுப்பினர்களிடம் இருந்து மரபணுரீதியாக போதியளவில் வேறுபடும். அவ்வாறில்லாத வரை ஒரு குறிப்பிட்ட உயிரினங்கள் மாற்றத்திற்குட்படாமல் தான் இருக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வழித்தோன்றல்கள் ஏற்படுகின்றன என்பதேயாகும். தர்க்கவாத வகையில், ஒரு தனிமைப்படுத்தப்பட்ட உயிரின கூட்டத்தின் மட்டுப்படுத்தப்பட்ட மரபணு தொகுப்புக்களும் மற்றும் ஒரேமாதிரியான சுற்றுசூழலால் உருவாக்கப்பட்ட இயற்கை தேர்வின் அழுத்தத்தாலும் மரபணு மாற்றத்தால் இதற்கு எதிர்மாறாக ஒரு குறிப்பிட்ட புள்ளியை எட்டுகிறது. அங்கு புதிய உயிரினங்களின் தோற்றம் அல்லது அந்த உயிரின கூட்டத்தின் அழிவு உருவாகிறது.

ஒட்டுமொத்தமாக பார்ப்போமேயானால், பல தசாப்தங்களாக நடந்து வரும் எண்ணிலடங்கா ஆராய்ச்சிகள், ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களும் ஒரே உயிரினத்தின் உறுப்பினர்களா அல்லது வெவ்வேறு உயிரினங்களின் உறுப்பினர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்க முயன்றிருக்கின்றன. எவ்வாறிருப்பினும், இந்த கேள்விக்கான பதில், மனிதயின பரிணாமம் பற்றிய யூனிலினிசம் அல்லது மல்டிலினிச கண்ணோட்டத்தைச் சார்ந்து தான் அமையும். எனவே இது மனிதயினம் எதிலிருந்து தோன்றியது என்பதை நாம் அறிந்து கொள்வதற்கு மிகவும் முக்கியமாக உள்ளது. எவ்வாறிருப்பினும், இந்த புதிய ஆராய்ச்சி முடிவுகளுக்கு இடையில், தற்போதிருக்கும் தகவல் தரவுகள் இந்த முரண்பாடுகளுக்கு இன்னும் தெளிவான தீர்வு அளிப்பதாக இல்லை.
Old lady Pictures, Images and Photos
ஆதிகால மனிதர்கள்/நவீனகால மனிதர்களின் உறவுகள் தொடர்பான கேள்விகள் சார்ந்த ஆதாரங்கள் பல வகைகளின் கீழ் வருகின்றன. இவை ஒவ்வொன்றும் உண்மையின் ஒரு பகுதியை மட்டுமோ அல்லது ஒருதலைபட்சமான கண்ணோட்டத்தையோ தான் வெளிப்படுத்துகின்றன. இருந்தும், இவ்வகைகளில் குறிப்பிடத்தக்க இரண்டு வகைகள் உயிரியலில் உள்ளன. ஒன்று படிமான ஆதாரங்கள், மற்றொன்று சமீபத்திய ஞிழிகி பகுப்பாய்வு. இதையடுத்து மூன்றாவது முக்கிய ஆதார தரவு மனிதவியல் ஆய்வியல். அதாவது இது, இரண்டு மக்கள் கூட்டங்களாலும் விட்டு செல்லப்பட்ட உற்பத்திசகய்யப்பட்ட அல்லது புத்துருக்கொடுக்கப்பட்ட பொருட்களும், பிற பொருளாயத தடயங்களும் சார்ந்த ஆய்வாகும். சமீபத்திய அறிக்கைகளின் தோற்றவாயாக (ளிக்ஷீவீரீவீஸீ) உயிரியியல் தரவுகள் இருப்பதால், நான் இந்த கட்டுரையில் அவற்றை சார்ந்து கவனம் செலுத்தவிருக்கிறேன்.

முன்பே குறிப்பிட்டது போல, ஒவ்வொரு ஆதார தரவும் அதற்குரிய சொந்த வரையறைகளையும், ஒருதலைபட்சமாக சார்ந்திருக்கும் தன்மையையும் கொண்டுள்ளன. "புதைபடிமானங்களை மீண்டும் உருவாக்க முடியாது" என்பது தொல்பொருளியியலின் உண்மை. உயிர்வாழும் உயிரினங்களின் பரிணாம உறவுகளைப் புரிந்து கொள்வதற்கான ஒரு முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால் மரபணு தனிமைப்படுத்தல் (ரீமீஸீமீட்நீ மிச்ஷீறீணீட்வீஷீஸீ) என்பதாகும். இரண்டு உயிரின கூட்டங்களின் உறுப்பினர்கள் தங்களுக்குள் வெற்றிகரமாக உயிர்கலப்பில் ஈடுபட்டு, அவற்றின் இனப்பெருக்கம் செய்யக்கூடிய வழித்தோன்றல்களை உருவாக்க முடியுமா என்றால், இதற்கான பதில், தற்போது உயிர்வாழும் விலங்குகளின் அடிப்படையில், வெளிப்படையாக நேரடியாக உள்ளது. முன்னர் அளிக்கப்பட்ட சான்றில், குதிரைகளும், கழுதைகளும் உயிர்கலப்பு செய்து கலப்பின உயிர்களை உருவாக்க முடியும். ஆனால் இந்த கலப்பின உயிர்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாது. கலப்பினங்களின் கூட்டம் சுயமாக தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது. காலப்போக்கில், குதிரைகளுக்கும், கழுதைகளுக்கும் இடையே இயற்கையாகவே மரபணு பரிமாற்றம் இல்லாமல் போவதால், அவை வெவ்வேறானவையாக ஆகிவிடுகின்றன. மற்றொரு புறம், வீட்டு நாய்கள், கொயோட்கள் (சிஷீஹ்ஷீட்மீ - ஒருவகை ஓநாய்), ஓநாய்கள் அவற்றுக்குள் உயிர்கலப்பில் ஈடுபட்டு தொடர்ந்து கலப்பின கூட்டத்தை உருவாக்க முடியும் என்பதாய் தோன்றுகிறது. இது உண்மையானால், உடல் தோற்றம் மற்றும் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்தாலும் கூட, இந்த உயிரினங்கள் அனைத்தும் ஒரே உயிரினத்தின் பகுதியாக உள்ளன; ஆனால் வெவ்வேறு உயிரினங்களாக குறிக்கப்படுகின்றன.

துரதிஷ்டவசமாக விஞ்ஞானத்திற்காக, உயிர் வாழும் எந்த ஆதிகால மனிதயினமும் கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் அதுபோன்ற எதுவும் உலகில் கண்டுபிடிக்கப்படவும் கூட இல்லை. உயிர் வாழும் மனிதயினம் அல்லது பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிமானங்கள் எடுத்துக்காட்டும் நவீனகால மனிதர்களிடமிருந்து வேறுபட்ட புதைப்படிமான எலும்புகளின் மாறுபட்ட உடற்கூறு தன்மைகளைக் கொண்டு முதன்முதலில் ஆதிகால மனிதயினம் கண்டறியப்பட்டது. புதைபடிமான உயிரினங்கள் ஒரே உயிரினங்களைச் சேர்ந்தனவா அல்லது வெவ்வேறு உயிரினங்களைச் சேர்ந்தனவா என்பதை தீர்மானிக்க, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கிடைத்திருக்கும் புதைபடிமானங்களில் மிக கவனமாக ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். பின்னர், மரபணு தொடர்பின்மையைக் குறிப்பிட போதிய வேறுபாடுகள் இருக்கின்றனவா என்பதை கணிக்க, உடல்தோற்றங்களிலும், குறிப்பிட்ட நடவடிக்கைகளிலும் உள்ள வேறுபாடுகளின் அளவுகளை ஒப்பிடுகிறார்கள். இந்த விளக்கங்கள் யாவும் தற்போது உயிர் வாழும் உயிரினங்களுக்கு இடையில் அறியப்பட்ட வேறுபாட்டு அளவுகளுடன் ஒப்புமையால் கூறப்பட்டவையாகும். வெவ்வேறு குறிப்பிட்ட உயிர்வகைகளைத் துல்லியமாக ஆய்வு செய்தாலும் கூட, மிகவும் நெருக்கமாக தொடர்புடைய உயிரினங்களை ஆய்வு செய்யும் போது, அவற்றை வேறுபடுத்தி பார்ப்பது மிகவும் கடினமாக உள்ளது.

பொதுவாக ஆதிகால மனிதர்களின் எலும்புகள் நவீனகால மனிதர்களின் எலும்புகளை விட மிகவும் பெரியதாகும். ஆதிகால மனிதர்கள் அவர்களின் கண் இமைகளின் மேல் முகடுகளையும் (இமை முகடுகள்), பொதுவாக நவீனகால மனிதர்களிடம் காணப்படாத மண்டை ஓட்டு வளைவுகளையும் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு நவீனகால மனிதர்களை விட தட்டையான, பரந்த மூக்குகள் இருந்தன. அவர்கள் சுருங்கிய தாடைகளைக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மூளை நவீனகால மனிதர்களை விட அளவில் பெரியதாக இருந்தது. (குறிப்பு: இவ்வாறு இருப்பதால் அவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருந்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. அதாவது மூளையின் அளவிற்கும், புத்திசாலித்தனத்திற்கும் நேரடியாக எந்த தொடர்பும் கிடையாது.) ஆதிகால மனிதர்களும், நவீனகால மனிதர்களும் மாறுபட்ட சூழலில் வாழக்கூடிய வழித்தோன்றல்களை உருவாக்கியிருக்க முடியாது எனும் வகையில், மேற்கூறிய ஒன்றோ அல்லது பல வேறுபாடுகளோ மரபணு வேறுபாடுகளைக் குறிக்கின்றனவா?

மேலும் நிச்சயமற்றதன்மையை கூட்டும் வகையில், ஆதிகால மனிதர்களின் புதைபடிமானங்களிலும் நிறைய மாற்றங்கள் உள்ளன. மேற்குறிப்பிட்ட ஆதிகால மனிதர்களின் பண்புருக்கள், பண்டைய ஆதிவாசிகள் (சிறீணீச்ச்வீநீ ழிமீணீஸீபீமீக்ஷீட்லீணீறீச்) என்று அழைக்கப்பட்ட, ஐரோப்பாவில் இருந்த உயிரினங்களிலும் வலுவாக காணப்படுகின்றன. இந்த பண்புகள் முற்போக்கான ஆதிவாசிகள் (றிக்ஷீஷீரீக்ஷீமீச்ச்வீஸ்மீ ழிமீணீஸீபீமீக்ஷீட்லீணீறீச்) என்று அறியப்பட்ட, மத்தியகிழக்கில் இருந்த ஆதிகால மனிதர்களிடம் குறைவாக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. இது பண்டைய ஆதிவாசிகளை விட முற்போக்கு ஆதிவாசிகள் நவீனகால மனிதர்களிடம் இருந்து மிக குறைவாக வேறுபட்டு இருந்தார்கள் என்பதை குறிக்கிறதா? அப்படியானால், முற்போக்கான ஆதிவாசி மனிதர்கள் மூலமாக, பண்டைய ஆதிவாசிகளுக்கும் நவீனகால மனிதர்களுக்கும் இடையே மரபணு பரிமாற்றம் இருந்திருக்குமா?


ஆதிகால மனிதர்களின் பிரமாண்ட தோற்றமும், தட்டை மூக்கு போன்ற பிற உடல் அமைப்பும், குறிப்பாக பண்டைய ஆதிவாசிகளுடன் ஒத்திருந்த இந்த பண்புகள், ஐரோப்பாவின் பனிகாலத்தில் ஏற்பட்ட கடுமையான சீதோஷ்ண நிலைமை மாற்றங்களால் மாற்றம் அடைந்திருக்கலாம் என்று பொருள்படுத்தப்படுகிறது. நவீனகால மனிதர்களுடன் ஒப்பிடும் போது, பின்தங்கி இருந்த ஆதிகால மனிதர்களின் தொழில்நுட்பமும், அவர்களின் பிரமாண்ட உருவ தோற்றமும், குறிப்பாக பெருமளவில் பாலூட்டிகளை மட்டும், துரத்தி சென்றும், ஈட்டி பயன்படுத்தியும் மற்றும் இரையுடன் கைகளால் சண்டையிட்டும் வேட்டையாடும் முறைகளைக் குறிப்பதாக உள்ளது என்று சிலரால் கருதப்படுகிறது. ஐரோப்பாவில் இருந்த போது ஆதிகால மனிதர்களும், நவீன மனிதர்களும் ஒரே வகையான விலங்குகளின் இரையையே உண்டு வந்தார்கள் என்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் டோனால்டு கிரேசன் மற்றும் போர்டியக்ஸ் பல்கலைக்கழகத்தின் பிரேன்கோஸ் டெல்பெக் ஆகியோரின் ஆராய்ச்சி (ரிஸீவீரீலீட், ஷிமீஜீட்மீனீதீமீக்ஷீ 2003, ழிமீஷ்ஷிநீவீமீஸீட்வீச்ட்.நீஷீனீ) குறிப்பிடுகிறது. எவ்வாறிருப்பினும், அவர்களின் வேட்டையாடும் முறைகள் சமமளவில் ஆக்கப்பூர்வமாக இருந்தன என்பதை நிரூபிக்க மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

எவ்வாறிருப்பினும், குளிர்ந்த சீதோஷ்ண நிலையைத் தாங்கும் ஆதிகால மனிதர்களின் தன்மை சற்றே மிகை மதிப்பீடு செய்யப்பட்டதாக இருக்கலாம். ஆதிகால மனிதர்களும், ஆரிங்னேசியன்கள் (கிஉக்ஷீவீரீஸீணீநீவீணீஸீச்) என்று தொல்பொருள் ஆய்வாளர்களால் அறியப்படும் ஐரோப்பாவின் முந்தைய நவீனமனிதயின மக்களும் அதிகரித்த குளிர்ச்சியாலும், அதற்கு முந்தைய குளிர் சீதோஷ்ண நிலையாலும் தெற்கு நோக்கி தள்ளப்பட்டார்கள் என்று கடந்த பனிக்காலத்திலும் (குளிர் காலத்திற்கும் சாதாரண சீதோஷண நிலைமைக்கும் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தன) இருந்த, கடுமையான பனிக்காலத்திலும் தட்பவெப்ப நிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை ஒப்பிட்டு செய்யப்பட்ட ஆராய்ச்சி (ஸ்ணீஸீ கிஸீபீமீறீ, யிணீஸீஉணீக்ஷீஹ் 2002, னிஉணீட்மீக்ஷீஸீணீக்ஷீஹ் ஸிமீச்மீணீக்ஷீநீலீ ணீஸீபீ ளிறீச்க்ஷ்மீஷ்ச்ளீவீ 2006 றிணீறீமீஷீகிஸீட்லீக்ஷீஷீஜீஷீறீஷீரீஹ்) குறிப்பிடுகிறது. இந்த சீதோஷ்ண நிலைமைகளின் கடுமையான அழுத்தத்தின் கீழ், பெரும்பாலான இரைக்குரிய உயிரினங்கள் வடக்கு ஐரோப்பாவிலிருந்து இடம் பெயர்ந்தன. ஆரிங்னேசியன்கள் (கிஉக்ஷீவீரீஸீணீநீவீணீஸீ) மற்றும் ஆதிகால மனிதர்களின் பொருளாதாரங்களும், தொழில்நுட்பங்களும் பெருமளவில் பாலூட்டிகளை வேட்டையாடுவதை மையமாக கொண்டிருந்ததால், கிடைத்த உணவு பரிவர்த்தனையில் ஏற்பட்ட மாற்றம் இவ்விரு குழுக்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்திருக்கலாம். எவ்வாறிருப்பினும், இந்த விளக்கத்தின்படி, ஆதிகால மனிதர்களை விட கலாச்சாரரீதியாக ஏற்றுக் கொள்வதற்கு தேவையான திறமை நவீனகால மனிதர்களிடம் மிகவும் இலகுவாக இருந்தது. இதனால் நவீனகால மனிதர்களால் உயிர்வாழ முடிந்தது. ஆதிகால மனிதர்களால் நிலைத்திருக்க முடியவில்லை.

மாறும் சீதோஷ்ண நிலைமைகளுக்கு நவீனகால மனிதர்கள் மாற்றியமைத்துக்கொள்ளும் தன்மையானது, ஆரிங்னேசியன்களில் இருந்து கரேவிட்டயன் (நிக்ஷீணீஸ்மீட்ட்வீணீஸீ) கலாச்சார வடிவத்திற்கு மாறியதை மனிதவர்க்க ஆய்வியல் வெளிப்படையாக பிரதிபலிக்கிறது. ஈட்டி எறிதல், வலை வீசுதல், பல்வேறு உணவு வகைகளின் கண்டுபிடிப்பு, மேலும் தைத்த ஆடைகள், நெய்த துணிவகைகள் ஆகியவற்றை கிரேவிட்டேயன் தொழில்நுட்பம் உட்கொண்டிருந்ததாக பண்புருவாக்கப்பட்டது. நவீனகால மனிதர்களுடன் ஒப்பிடும் போது, ஆதிகால மனிதர்கள் மிகவும் குறைந்த தொழில்நுட்பங்களையே கொண்டிருந்ததாக மனித இன ஆய்விற்கு கிடைத்திருக்கும் தடயங்கள் குறிப்பிடுகின்றன.

ஒட்டுமொத்தமாக, ஆதிகால மனிதர்கள் மற்றும் நவீனகால மனிதர்களிடையே உடல் தோற்றம் மற்றும் கலாச்சாரம் இரண்டுமே குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் இருந்ததைக் காண முடிகிறது. உண்மையென கொள்ளத்தக்க அளவில், இயற்கை தேவைகளால் உந்தப்பட்டு பல்வேறு பரிணாம மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும், பல்வேறு சீதோஷ்ண நிலைகளில் வாழும் மக்களிடேயே குறிப்பிடத்தக்க உடல்தோற்ற வேறுபாடுகள் உள்ளன. சான்றாக, வெப்ப ஏற்பு மற்றும் இழப்பு கட்டுப்பாட்டின் தேவையானது, ஆப்ரிக்காவிலுள்ள சூடான மற்றும் வறண்ட பகுதிகளில் வாழும் ஒல்லியான, உயர்ந்த மக்களை விட ஆர்டிக் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு குட்டையான, குண்டு உடல் தோற்றத்தை உருவாக்கி உள்ளது. இது நிலப்பரப்பு மற்றும் அளவு விகிதத்தை மாற்றுவதன் மூலம் வெப்பயியக்க சமத்தன்மை கொண்டு வரப்பட்டிருப்பதை தெளிவாக பிரதிபலிக்கிறது. இருந்த போதினும், உயிர் வாழும் அனைத்து மனிதர்களும் ஒரே உயிரினங்களின் உறுப்பினர்களே; மேலும் அவை ஒன்றோடொன்று உயிர்கலப்பு செய்யலாம் என்பதுடன் மாறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் வழிதோன்றல்களையும் அவற்றால் உருவாக்க முடியும். ஆதிகால மனிதர்களுடன் ஒப்பிடும் போது நவீனகால மனிதர்களுக்கு குறைந்த வலிமையுடைய உடல் தோற்றமே உள்ளது என்பதானது நவீனகால மனிதர்கள் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினார்கள் மற்றும் உயிரினங்கள் அளவில் ஒரு தொடர்பின்மையை அத்தியாவசியமாக எடுத்துக்காட்டும் வேறுபாடுகள் இல்லாமல் பின்னர் மிதமான தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற உடல் தோற்றத்தை பெற்றார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. உண்மையில் உணவுக்கான மற்றும் பிற அபிவிருத்திக்கான அழுத்தங்கள் (அதாவது, பற்களின் வளர்ச்சி போன்றவை) நவீன எஸ்கிமோக்களில் காணப்படுவது போன்று ஆதிகால மனிதர்களிடம் பெரியளவில் காணவில்லை என்று சில ஆய்வுகள் (நிஉணீட்மீறீறீவீ-ஷிட்மீவீஸீதீமீக்ஷீரீ, கிஉரீஉச்ட் 2003, யிஷீஉக்ஷீஸீணீறீ ஷீயீ பிஉனீணீஸீ ணிஸ்ஷீறீஉட்வீஷீஸீ) குறிப்பிடுகின்றன.

ஆதிகால மனிதர்களின் பற்கள் பற்றிய மற்றொரு ஆய்வானது, அவர்கள் நவீனகால மனிதர்களை விட விரைவாக முதிர்ச்சியடைந்தார்கள் என்றும், அதாவது 15 வயதிற்குள் முழு முதிர்ச்சிபருவத்தை அடைந்தார்கள் என்றும் தீர்மானிக்கிறது. ஆதிகால மனிதர்கள் நவீனகால மனிதர்களை விட உயர்ந்த இறப்பு விகிதத்துடனும், குறைந்த வாழ்நாட்களுடனும் உடலளவில் மிகுந்த அழுத்தமான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்றால், விரைவிலேயே ஏற்பட்ட முதிர்ச்சியானது, விரைவான பாலியியல் முதிர்ச்சிநிலை மற்றும் விரைவான இனவிருத்தியை அளித்திருக்க வேண்டும். (ஆதாரம்: ஸிணீனீவீக்ஷீமீக்ஷ் ஸிஷீக்ஷ்க்ஷ்வீ, கிஜீக்ஷீவீறீ 2004, ழிணீடுக்ஷீமீ). ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையே இருந்த முதிர்ச்சி விகித வேறுபாடுகள் கலப்பின மரபுகளின் அபிவிருத்திக்கு சாத்தியமற்ற விளைவை ஏற்படுத்தி இருக்கும். இது இரு குழுக்களுக்கும் இடையில் இனவிருத்தியைக் கட்டுப்படுத்தி இருக்கும் அல்லது தடுத்தும் கூட இருக்கலாம்.

பின்னர், புதைபடிமான தடயங்களின் சமீபத்திய ஆய்வுகளின் கூட்டு தகவல், ஆதிகால மனிதர்களைப் பற்றிய பல புதிய தகவல்களை ஒப்பு கொண்டுள்ளன. எவ்வாறிருப்பினும், இந்த தகவல் முரண்பாடான விளக்கங்களைத் தான் கொண்டு வருவதாக தோன்றுகிறது. இது, இதுவரை, ஒரேமாதிரியான விளக்க கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படவில்லை. மிக நெருக்கமான தொடர்புடைய இந்த குழுக்கள் ஒரே உயிரினத்தைச் சார்ந்தனவா அல்லது வேறுபட்ட உயிரினங்களைச் சார்ந்தனவா என்பது குறித்து ஒரு தெளிவான தீர்மானத்தை அடைய புதைபடிமான அமைப்பியல் ஆய்வுகள் மட்டும் போதியதாக இல்லாமல் இருக்கலாம்.

பொதுவாக இந்த பிரச்சனை குறித்தும் மற்றும் குறிப்பாக ஆதிகால மனிதர்கள்/நவீனகால மனிதர்களிடையேயான உறவு குறித்தும் கடந்த தசாப்தங்களில் அல்லது அதற்கு முந்தைய தசாப்தங்களில் ஒரு புதிய ஆதார தரவு உருவாக்கப்பட்டது. வாழும் உயிர்வகைகளின் மரபணுக்களை ஒப்பிடவும், பரிணாம உறவுகளின் மாதிரிகளை உருவாக்குவதற்காக அவற்றிற்கிடையிலான ஒற்றுமையின் அளவை தீர்மானிக்கவும் பல தசாப்தங்களாக ஞிழிகி பகுப்பாய்வு பயிற்சி செய்யப்பட்டது. எவ்வாறிருப்பினும், மிக சமீபத்தில் தான், புதைபடிமானங்களில் இருந்து ஞிழிகி பிரித்தெடுக்கும் நுட்பங்கள் கண்டறியப்பட்டன. ஞிழிகி கெட்டிப்படும் என்பதால், சாத்தியமான சூழ்நிலைகளில் அது புதைபடிமானங்களில் உயிர்த்திருக்க முடியும். ஜூராசிக் பார்க்கில் காட்டப்படுவது போன்று, குறைந்தபட்சம் இதுவரையிலும் நம்மால் அழிந்து போன விலங்குகளை பிரதியாக்கம் (நீறீஷீஸீமீ) செய்ய முடியவில்லை என்ற போதினும், போதியளவு ஞிழிகி மீட்டெடுக்கப்பட்டால், நீண்ட காலத்திற்கு முன்பே இறந்து போன உயிர்வகைகளின் மரபணுக்களை ஆய்வு செய்ய முடியும். இறுதி விளைவாக, வாழும் மக்களிடையே செய்யப்படுவது போன்று, அதே முறையில் அழிந்து போன மக்களிடையேயும் மரபணு ஒப்பீடுகளைச் செய்ய குறைந்தபட்சம் இது சாத்தியக்கூறை ஏற்படுத்தியுள்ளது.

புதைபடிமான ஞிழிகி பயன்படுத்திய மரபணு பகுப்பாய்வின் சமீபத்திய முடிவுகளின் முக்கியத்துவத்தை தீர்மானிக்க, இந்த ஆதார தரவுகளிலுள்ள சில குறைபாடுகளைக் கவனிக்க வேண்டியதாய் உள்ளது. முதலாவதாக, உயிர்வகைகளின் மரபணு குறியீட்டை ஞிழிகி கொண்டிருந்தாலும் கூட, பெரும்பாலான மரபணு குறியீடுகளின் செயல்பாடுகளை விஞ்ஞான ஆராய்ச்சி புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. எனவே, குறியீடுகளின் தொடர்ச்சிக்கு இடையிலான பெரும்பகுதிகளை மட்டுமே ஒப்பீடு செய்ய முடியும். ஒரு வாழும் உயிர்வகையின் குறியீட்டை இத்துடன் ஒப்பிட முடியாது. எனவே புதைபடிமான எலும்புக்குள் உள்ள புதைபடிமான ஞிழிகி , குறைந்தபட்சம் தற்போது ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் தொடர்பான தகவல்களை அளிக்கிறது. இதனை கொண்டு வெவ்வேறு ஞிழிகி மாதிரிகள் குறிப்பிடும் உயிர்வகைகள் தங்களுக்குள் உயிர்கலப்பில் ஈடுபட்டு மாறுபட்ட சூழலில் வாழக்கூடிய மரபினங்களை இனவிருத்தி செய்ய முடியுமா என்பதை உறுதியாக வரையறுப்பது சாத்தியமில்லை.

புதைபடிமான ஞிழிகி ஆய்வில் சில நடைமுறை சிக்கல்களும் உள்ளன. குறிப்பாக, குறிப்பிட்ட முடிவுகளின் நம்பகத்தன்மை மீது மனிதர்கள் கேள்வி எழுப்புவார்கள். இந்த சர்ச்சையில் கலப்பட பிரச்சனை தான் முக்கியமாக முன்நிற்கும். (ஆதாரம்: சிணீக்ஷீணீனீமீறீறீவீ மீட் ணீறீ, 16 யிஉறீஹ் 2008, றிலிஷீஷி ளிழிணி). புதைபடிமான ஞிழிகி வின் ஆதாரமாக விளங்கும் உயிரினங்களின் புதைபடிமான எலும்புகளை தோண்டி எடுப்பதற்கும், செறிவூட்டுவதற்கும் மனிதயினம் பொறுப்பாகிறது என்றாலும், மனிதர்கள் தொடர்ந்து அவர்களின் உடலிலிருந்து ஞிழிகி அடங்கியுள்ள பொருட்களை வெளியேற்றுவதாலும் (சான்றாக, தோல், முடி, உமிழ்நீர் ஆகியவை), ஞிழிகி எடுப்பு மற்றும் பகுப்பாய்வு செயல்முறை முழுவதும் மிக கடுமையான செயல்முறைகளை நடைமுறைப்படுத்தினால் ஒழிய, ஆய்வு செய்யப்பட வேண்டிய மாதிரிகளில் மனித ஞிழிகி கலந்து விடுவதற்கான நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. அவ்வாறு கலந்து விட்டால், எந்த பகுப்பாய்வின் முடிவும் சந்தேகத்திற்கு இடமாகிவிடும்.

இந்த குறைபாடுகள் இருந்த போதினும், புதைபடிமான எலும்பு ஆய்வியலில், புதைபடிமான ஞிழிகி ஆய்வானது முற்றிலுமான ஆதார தகவல்களையும் அளிக்கிறது. இதனால் பல்வேறு வகையான ஆய்வுகளில் போன்று, ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு பல வேறுபட்ட வழிகளிலான ஆதாரங்களை கருத்திற்கொள்ள முடியும். இதனூடாக மிகவும் நம்பகமான, இறுதி விளக்கத்தை பெறுவது சாத்தியமானதாகும்.

புதைபடிமான எலும்பு ஆய்வியல் மற்றும் புதைபடிமான ஞிழிகி ஆகிய இரண்டு ஆய்வுகளிலும் உள்ள ஓர் இறுதி பிரச்சனை கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது மாதிரியின் அளவு மற்றும் பிரதிநிதித்தவத்தன்மையின் பிரச்சனைகள். பத்து அல்லது நூறாயிரக்கணக்கான அல்லது மில்லியன்கணக்கான ஆண்டுகளின் காலஅளவை உட்கொண்டிருக்கும் உயிரின பரிணாமத்தை ஆராயும் போது, வாழ்ந்து இறந்த உயிர்வகைவம்சங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். இதற்கும் மேலாக, குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட உயிரினங்களின் வாழும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தாயிரம் அல்லது அதற்கு மேலாக கூட இருக்கலாம். அந்த காலத்தில் வாழ்ந்த உயிரினங்களில் எந்தவொரு தனிப்பட்ட உயிரினமும் எண்ணிலடங்கா மரபணு மற்றும் அமைப்பியலில் ஒரு சிறு பகுதியேயாகும். ஆகவே, ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் மட்டும் உயிர் வாழ்ந்தவைகளில் எந்தவொரு குறிப்பிட்ட இயல்பிலும் (சான்றாக மண்டை ஓடு, எலும்புகளின் தடிமன் போன்றவை) ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் குறித்து போதியளவு நம்பிக்கையைப் பெற வேண்டுமானால், அந்த உயிரின கூட்டத்திடமிருந்து பெருமளவிலும், புள்ளிவிபரங்களிலும் வேறுபட்ட மாதிரிகளைப் பெற வேண்டும்.

துரதிஷ்டவசமாக, ஒரு குறிப்பிட்ட உயிரினங்களின் காலகட்டத்தில் உயிர் வாழ்ந்திருக்க கூடிய அவற்றின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், ஆதிகால மனிதயினங்களின் புதைபடிமானங்களின் எண்ணிக்கையும் மற்றும் தற்போது இருக்கும் நவீனகால மனிதர்களுக்கு முந்தையவர்களின் எண்ணிக்கையும் மிக சிறிய விகிதத்திலேயே உள்ளன. இதற்கும் மேலாக, கண்டெடுக்கப்பட்ட மாதிரிகள் புள்ளியியலுக்கு உட்பட்ட மாதிரியாக இல்லாமல் ஒழுங்கற்ற வகையில் உள்ளன. ஆகவே, கிடைத்திருக்கும் புதைபடிமான மாதிரி நாம் ஆராய விரும்பும் கடந்தகால உயிரின கூட்டங்களுக்கு சொந்தமானவையே என்று உறுதியாக தீர்மானிப்பது கடினமாக உள்ளது. இதன் இறுதி வரிகள் என்னவென்றால், நிறைய மாதிரிவகைகள் கண்டறியப்பட்டு, ஆய்வு செய்யப்படும் போது, முழு விளக்கங்களுக்காக தற்போதைய விளக்கங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டியதாய் இருக்கலாம்.

தற்போதுள்ள முன்னெச்சரிக்கைகளை கருத்திற்கொண்டு, புதைபடிமானங்கள் மற்றும்/அல்லது ஞிழிகி தரவுகளைப் பயன்படுத்தி ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை அளிக்கும் சமீபத்திய ஆராய்ச்சிகளின் சில சான்றுகளை மீள்பார்வை செய்யப்படலாம்.

ஒரே உயிரினங்களுக்கான புனைவுகோளின் முன்னணி ஆதரவாளரான மிசௌரியின் புனித லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் எரிக் டிரின்காஸ், சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆதிகால மனிதர்கள் மற்றும் நவீனகால மனிதர்களுக்கு இடையே கலப்பின சேர்க்கை இருந்ததை பல புதைபடிமான மாதிரிகள் எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டார்.
சுமார் 24,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட, போர்ச்சுகல்லில் கண்டறியப்பட்ட ஒரு சிறுவனின் புதைபடிமான எலும்புக்கூடு இதற்கு ஒரு சான்றாகும். (ஆதாரம்: ஞிஉணீக்ஷீட்மீ மீட் ணீறீ. 1999, றிக்ஷீஷீநீமீமீபீவீஸீரீச் ஷீயீ ட்லீமீ ழிணீட்வீஷீஸீணீறீ கிநீணீபீமீனீஹ் ஷீயீ ஷிநீவீமீஸீநீமீச்). ஆதிகால மனிதர்கள் பிறவற்றுடன் வெளிப்படையாக காணாமல் போன ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர் உறுதியாக நவீன பண்புகளுடன் சார்ந்த பல ஆதிகால மனிதர்களின் பண்புகளை இந்த மாதிரி புதைபடிமானங்கள் கொண்டுள்ளன. இந்த சந்தேகத்திற்குரிய ஆதிகால மனிதர்களின் பண்புகள் நவீன மூளையுடன் ஒப்பிடும் போது பருத்த உடல் மற்றும் குட்டையான கால்கள் கொண்ட மூளை வளர்ச்சி பெற்ற எலும்பு கூட்டில் உள்ளன.


அந்த சிறுவன் கடல் சிப்பிகளால் கட்டப்பட்ட மாலையுடன் சிவப்பு ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிட்டு புதைக்கப்பட்டிருந்தான். இந்த புதைக்கும் பழக்கம் நவீனகால மனிதர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது. டிரின்காசின் விளக்கம் சரியென்றால், இந்த சிறுவன் ஆதிகால மனிதர்களுடன் மற்றும் நவீனகால மனிதகுழு கலந்த வம்சாவளியில் வந்த ஒரு கலப்பின கூட்டத்தின் உறுப்பினராவான். சிறுவனின் சந்தேகத்திற்கிடமான ஆதிகால மனிதபண்புகள் அந்த காலகட்டத்தில் நவீன மனிதர்களின் பல மாற்றங்களுக்குள் இருந்திருக்கலாம். மேலும் அது கலப்பின சேர்க்கையைத் தான் கட்டாயம் குறிக்கிறது என்றாகாது என்று விமர்சனங்கள் வாதிடுகின்றன. (ஆதாரம்: ஜிணீட்ட்மீக்ஷீச்ணீறீறீ ணீஸீபீ ஷிநீலீஷ்ணீக்ஷீட்க்ஷ் 1999, றிக்ஷீஷீநீமீமீபீவீஸீரீச் ஷீயீ ட்லீமீ ழிணீட்வீஷீஸீணீறீ கிநீணீபீமீனீஹ் ஷீயீ ஷிநீவீமீஸீநீமீச்).

மிக சமீபத்தில், உருமானியாவிலுள்ள ஒரு குகையில் கிடைத்த 30,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நவீனகால மனிதயின எலும்புகளை டிரின்காஸ் மற்றும் கூட்டாளிகள் ஆராய்ந்தனர். (ஆதாரம்: கிஉரீஉச்ட் 2007, சிஉக்ஷீக்ஷீமீஸீட் கிஸீட்லீக்ஷீஷீஜீஷீறீஷீரீஹ்). நவீனகால மனிதர்கள் மற்றும் ஆதிகால மனிதர்களின் பண்புகளின் கலவையை மூளை வெளிப்படுத்துவதால், உருமானிய புதைபடிமானங்கள் குறிப்பிடத்தக்க கலப்பின பெருக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன என்பது இந்த ஆய்வாளர்களின் கருத்து. தலையின் பின்புற கொண்டை (மூளையின் பின்னால் இருக்கும் வீக்கம்), மூளையின் பின்னால் இணைந்திருக்கும் ஒரு தசை மற்றும் தாடையின் பின்னால் இணைந்திருக்கும் சில தசைகள் ஆகியவற்றை ஆதிகால மனிதர்களின் தன்மைகள் உட்கொண்டிருக்கின்றன. இந்த தன்மைகள் நவீனகால மனிதர்களிடம் காணப்படுவதில்லை அல்லது எப்போதாவது மட்டும் காணப்படுகிறது.

நவீனகால மனிதர்கள் மற்றும் ஆதிகால மனிதர்களின் பொதுவான மூதாதையராக கருதப்படும் ஐந்து ஹோமோ ஹெடெல்பெர்ஜென்சிஸின் (பிஷீனீஷீ லீமீவீபீமீறீதீமீக்ஷீரீமீஸீச்வீச்) மூளைகளின் பகுதியைப் பயன்படுத்திய ஸ்பானிய ஆராய்ச்சியாளர்களின் மற்றொரு புலனாய்வு (விணீக்ஷீட்வீஸீமீக்ஷ் மீட் ணீறீ., 22 யிஉஸீமீ 2004, றிக்ஷீஷீநீமீமீபீவீஸீரீச் ஷீயீ ட்லீமீ ழிணீட்வீஷீஸீணீறீ கிநீணீபீமீனீஹ் ஷீயீ ஷிநீவீமீஸீநீமீச்) மூளையின் கணனி கதிராய்வு(சிஷீனீஜீஉட்மீக்ஷீட்ஷீனீஷீரீக்ஷீணீஜீலீவீமீ-சிஜி) வடிவத்தை உருவாக்கியது. இந்த மறுவமைப்பு, நவீனகால மனிதர்களைப் போன்றே அண்ணளவாக செவிகளைப் பெற்றிருப்பதையும், ஆனால் தெளிவாக சிம்பன்ஜிகளிடமிருந்து வேறுபட்டு இருப்பதையும் குறிக்கும் உடற்கூறு அமைப்பியல் பண்புகளை எடுத்துக்காட்டுகிறது. அதவாது, ஹோமோ ஹெடெல்பெர்ஜென்சிஸ் உயிரினங்களின் உறுப்பினர்கள் நவீனகால மனிதர்களின் பேசும் ஒலியின் அளவையே பெற்றிருந்ததாக தெரிகிறது என்பதே இதன் பொருள்விளக்கமாக உள்ளது. ஆகவே, ஆதிகால மனிதர்கள் உட்பட அவர்ளின் வம்சாவளியினருக்கும் அந்த திறன் இருந்திருக்கலாம்.

மனிதயின பரிணாம ஆய்வியலுக்கான விணீஜ் றிறீணீஸீநீளீ பயிலகத்தின் பிரத்யேக ஆய்வு, நவீனகால மனிதர்களிடம் காணப்படும் மொழி மற்றும் பேச்சுத்திறனோடு தொடர்புடைய திளிஙீறி2 எனும் மரபணு போன்ற வடிவத்திலான மரபணு ஆதிகால மனிதர்களிடமும் காணப்படுவதாக கண்டறிந்துள்ளது.

ஙிஷீநீணீ ஸிணீட்ஷீஸீ நகரில் உள்ள புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழக மனித வர்க்க ஆய்வாளர் ஸிஷீதீமீக்ஷீட் விநீநீணீக்ஷீட்லீஹ் ஆதிகால மனிதர்களின் குரல் ஒலிகளை வடிவமைத்துள்ளார். அவர்கள் ஒலிப்பு நவீனகால மனிதர்களிடம் இருந்து சிறிது வேறுபட்டிருக்கலாம், ஆனால் இருந்தபோதினும் பேச்சு திறனுக்கு பொருத்தமானதே ஆகும். (ஆதாரம்: சிணீறீறீணீஷ்ணீஹ், 15 கிஜீக்ஷீவீறீ 2008, ழிமீஷ்ஷிநீவீமீஸீட்வீச்ட்.நீஷீனீ).

முன்நிற்கும் ஆதாரங்கள் ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையிலான ஒற்றுமையைக் குறித்த போதினும், உயிரினங்கள் அளவிலான தொடர்பின்மை இரண்டிற்கும் இடையில் இருந்திருக்குமோ என்பதன் மீது ஹோமோ ஹெடெல்பெர்ஜென்சிஸ் வெளிச்சமிட்டு காட்டவில்லை.

முன்னர் விளக்கப்பட்ட கீமீணீஸ்மீக்ஷீ, ஸிஷீச்மீனீணீஸீ, ஷிட்க்ஷீவீஸீரீமீக்ஷீ போன்ற சில தோற்ற அமைப்பியல் ஆய்வுகளுடன், மரபணு ஆய்வுகளும், நவீனகால மனிதர்கள் மற்றும் ஆதிகால மனிதர்களுக்கு இடையிலான உறுதியான தொடர்பின்மை கண்ணோட்டத்திற்கு ஆதரவாக சார்ந்துள்ளது. பாரிய விரிவான புலனாய்வுகளுடன், இரண்டு குழுக்கள், ஒன்று லாரன்ஸ் பெர்க்லே தேசிய ஆய்வகம் மற்றும் அடுத்தது ஜேர்மனியிலுள்ள மனிதவர்க்க பரிணாம ஆய்வியலுக்கான விணீஜ் றிறீணீஸீநீளீ பயிலகம், இரண்டும் வெவ்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி குரோசியா நாட்டின் குகையில் கண்டெடுக்கப்பட்ட 38,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிகால மனிதர்களின் நியூக்ளியர் ஞிழிகிவை குறித்து ஆய்வு செய்தன. இந்த ஆய்வு, முன்னர் விளக்கிய விணீஜ் றிறீணீஸீநீளீ பயிலகத்தின் னீட்ஞிழிகி ஆய்விலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதன் முடிவுகளில், ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையே 99.5 சதவீதத்திற்கும் மேலாக மரபணு ஒற்றுமை இருப்பதாகவும், எனவே இவற்றிற்கிடேயே நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் உறுதிப்படுத்தியது. ஏதேனும் வகையில் ஒற்றுமைகள் இருந்த போதினும், நவீனகால மனிதர்களுக்கும் மற்றும் ஆதிகால மனிதர்களுக்கும் இடையே கலப்பின சேர்க்கை இருந்ததாக கூறும் யோசனைக்கு ஆதரவாக ஆராய்ச்சியாளர்கள் எந்த ஆதாரத்தையும் பெறவில்லை. இருப்பினும், இந்த தரவுகளைக் கொண்டு அக்கருத்தை முற்றிலுமாக விட்டுவிடவும் முடியாது. அதிகளவில் மரபணு இருப்பதாவது தொடர்ச்சியான அல்லது புதுப்பிக்கப்பட்ட மரபணு பரிமாற்றம் என்று பொருள்படுத்தப்படுவதை விட, முன்னர் குறிப்பிட்ட குதிரைகள் மற்றும் கழுதைகள் சான்றை போல ஒரு பொதுவான மூதாதையரால் ஏற்பட்டது என்று விளங்கப்படுத்தப்படுகிறது.


மரபணு ஆய்வு முடிவுகளை மதிப்பிடுகையில், உயிரினங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை துல்லியமாக ஞிழிகி தொடர்ச்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையின் ஒப்பீட்டு எண்ணிக்கையால் தீர்மானிக்க முடியாது என்பதை முக்கியமாக புரிந்து கொள்ள முடியாது. எளிய வார்த்தைகளில் கூறுவதானால், அதில் 'வடிவக்கூறு மரபணுவும்' (ணீக்ஷீநீலீவீட்மீநீடுக்ஷீமீ ரீமீஸீமீச்) உள்ளன; 'கட்டுப்பாட்டு மரபணுவும்'(நீஷீஸீட்க்ஷீஷீறீ ரீமீஸீமீச்) உள்ளன. வடிவக்கூறு மரபணுக்கள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை கட்டுப்பாட்டு மரபணுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கட்டுப்பாட்டு மரபணுவின் ஒரு சிறிய மாற்றம், ஒன்று அல்லது பல வடிவக்கூறு மரபணுக்களின் வெளிப்பாடுகளை கணிசமாக பாதிக்கலாம். எனவே மரபணு தொடர்ச்சியில் மாற்றம் ஏற்படுகிறது என்ற உண்மை இருந்த போதினும், குறிப்பிட்டளவில் வேறுபட்ட உயிர்வகைகளுக்கு வழிவகுக்கும் என்பது மிக சிறியளவேயாகும். ஆகவே, நவீனகால மனிதர்கள் ஆதிகால மனிதர்களிடம் ஒருசில தொடர்புகளில் மட்டும் மாறுபடலாம்; மிக முக்கியமாக கட்டுப்பாட்டு மரபணுக்களில் மாறுபடலாம்.

ghosts of modern man Pictures, Images and Photos

ஐரோப்பாவில் தோராயமாக ஆதிகால மனிதர்களுடன் நவீனகால மனிதர்கள் கலந்த காலத்திய புதைபடிமானங்களில் இருந்து நவீனகால மனிதர்களின் மைட்டோகான்ரியல் ஞிழிகிவை ஆராயும் மற்றொரு ஆராய்ச்சி, இன்றும் ஐரோப்பாவில் அதேபோன்ற னீட்ஞிழிகி இருப்பதாக கண்டறிந்துள்ளது. எவ்வாறிருப்பினும், இந்த னீட்ஞிழிகி ஆதிகால மனிதர்களின் னீட்ஞிழிகி இல் இருந்து கணிசமாக வேறுபட்டுள்ளது. (ஆதாரம்: சிணீக்ஷீணீனீமீறீறீவீ மீட் ணீறீ., 16 யிஉறீஹ் 2008, றிலிஷீஷி ளிழிணி). இது ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையே மரபணு தொடர்பின்மை இருப்பதை தான் மீண்டும் குறிக்கிறது.

இறுதியாக, ரேடியோகார்பனின் காலஅளவு ஒப்பீடுகளில் திருத்தங்களின் சமீபத்திய மாற்றங்கள், ஐரோப்பாவில் ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலப்பு காலத்தை ஆயிரம் ஆண்டுகள் என்ற அளவில் சுருக்கி உள்ளது. (ஆதாரம்: விமீறீறீணீக்ஷீச், 23 திமீதீக்ஷீஉணீக்ஷீஹ் 2006, ழிணீடுக்ஷீமீ). இது ஒரு நீண்ட கால கூட்டு இருப்பினதும் மற்றும், சிலவேளை ஒன்றின் மீதான ஒன்றின் தாக்கத்திற்கு பதிலாக, கலாச்சாரீதியாகவும், மரபணுரீதியாகவும் ஆதிகால மனிதர்கள் நவீனகால மனிதர்களுடன் வளத்திற்காக போராடும் திறன்யின்மையாலும் மற்றும்/அல்லது பிந்தையதால் முந்தையது இல்லாதழிக்கப்பட்டிருக்கலாம் என்பதாலும் ஆதிகால மனிதர்களின் விரைவான அழிவுக்கு இட்டு சென்றிருக்கலாம் என்ற முடிவிற்கு இட்டுச்செல்கின்றது.

ஒட்டுமொத்தமாக, ஆதிகால மனிதர்களும், நவீனகால மனிதர்களும் உயிரின அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன என்ற விளக்கத்தையே மரபணு ஆய்வுகள் சார்ந்துள்ளன. இது புதைபடிமான எலும்பு ஆய்வுகளில் இருந்து வரும் முடிவுகளுக்கு முற்றிலும் முரணாக நிற்கிறது. இருந்தபோதினும், மொத்தத்தில், உயிரின தொடர்பின்மை குறித்த வாதத்தின் பக்கத்தை சார்ந்தே ஆய்வுகளின் போக்கு இருப்பதாக தெரிகிறது.

மரபணு ஆராய்ச்சி இதுவரை ஆதிகால மனிதர்களின் ஞிழிகிவின் ஒரு பகுதியை மட்டுமே ஆய்வு செய்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கதாகும். ஆதிகால மனிதர்களின் முழு ஞிழிகி தொடர்ச்சிகளும் இந்த ஆண்டு முடிவில் ஆராய்ச்சி செய்யப்படும் போது, மேலும் தெளிவான கண்ணோட்டம் கிடைக்கலாம். பின்னர் இது மனிதயின மரபணு திட்டத்தால் (பிஉனீணீஸீ நிமீஸீஷீனீமீ றிக்ஷீஷீழீமீநீட்) வரையறுக்கப்பட்ட நவீனமனித ஞிழிகி தொடர்ச்சியுடன் ஒப்பிடப்படும்.

முன்னர் குறிப்பட்டது போல, ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையிலான இயற்கையான தொடர்புகள் மீதான ஆராய்ச்சி பெரும்பாலும் பொதுவாக மனிதயின பரிணாம போக்கை புரிந்து கொள்ள பயன்படுகிறது. ஒருவேளை சிறப்பு ஆராய்ச்சிகளால் மனித பண்புகளில் ஒரேயரு சிகரமான புத்திஜீவித்தனமான சிந்தனை திறனின் அபிவிருத்தியையும் மூலத்தையும் அறிய இவை உதவுமா? இந்த திறன் முழுமையாக மொத்தத்தில் ஒரேதடவையில் உருவாகி விட்டதா? அல்லது படிப்படியாக பல மில்லியன் ஆண்டுகளாக பல உயிரினங்களைக் கடந்து உருவானதா? அதாவது ஒருவேளை கடந்த காலத்தில் இதன் பழைய வளர்ச்சி பெறாத நிலைகள் இருந்தனவா? அவ்வாறு இருந்தால் இந்த பரிணாம செய்முறை தொடர்ச்சியில் சமீபத்திய வரவாக நமது இன்றைய மனதின் திறன்கள் அமைகின்றன. அதேபோன்று, நமது நிலை தான் இதுவரை எட்டப்படாத மிகவும் நூதனமான ஒன்றாகவும் அமைகிறது, ஆனால் இதுவே இறுதியானதாக இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல.

Wednesday, November 18, 2009

இஸ்லாம் வாளால் பரவியதா?


முன்னுரை: இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று முஸ்லீம்கள் ஏகமாக சொல்கிறார்கள். ஆனால், முகமது மற்ற நாட்டு மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களே போதும், நமக்கு இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வதற்கு. மற்ற நாட்டு மன்னர்களுக்கு முகமது கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்தார், அபுமுஹை அவர்கள் அக்கடிதங்களின் தமிழ் மொழியாக்கத்தை பதித்துள்ளார். இக்கடிதங்களை ரஹீக் என்ற புத்தகத்திலிருந்து பதித்ததாக, அபுமுஹை அவர்கள் குறிப்பு எழுதியுள்ளார்கள்.
இக்கட்டுரையில் நாம் கீழ் கண்ட இரண்டு விவரங்களைக் காணப்போகிறோம்.



1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்.

2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?







1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்


முகமது எட்டு அரசர்களுக்கு கடிதம் மூலம் இஸ்லாமை தழுவும் படி அழைப்பு விடுத்ததாக அபூமுஹை அவர்கள் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இக்கடிதங்கள் ஆங்கிலத்தில் முஹம்மத் டாட் நெட் என்ற தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டு மன்னருக்கு முகமது அனுப்பிய முதலாவது கடிதம் கிடைக்காததால், அதை நான் இக்கட்டுரைக்கு எடுத்துக்கொள்ளவில்லை, அக்கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்.

இந்த கட்டுரைகளில் சிலவற்றில், எங்கெல்லாம் இஸ்லாமைக் கொண்டு முகமது மற்றவர்களை பயப்பட வைத்தாரோ, அங்கெல்லாம் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் அவ்வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் போல" காட்சி அளிக்கும் படி மொழிபெயர்த்துள்ளார்கள்.

அவைகளைப் பற்றிய விவரங்களை கீழே காணலாம்:

ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு நமக்கு உபயோகமாக இருக்கும் என்பதால், இக்கடிதங்களை ஆங்கிலத்தில் நான் கீழே பதித்து, அதன் பக்கத்தில் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்த விவரஙகளைத் தருகிறேன். முழு கடிதங்களைப் படிக்க கொடுக்கப்பட்ட தமிழ் அல்லது ஆங்கில தொடுப்புக்களை சொடுக்கவும்.

வரிசை எண் எந்த நாட்டு அரசனுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டது தமிழில்(அபூமுஹை த‌ள‌ம் எழுதிய‌து) இக்கடிதம் ஆங்கில‌த்தில்
1. அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷிக்கு ….. நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய். .......

Source: http://abumuhai.blogspot.com/2008/07/1.html …. I call you unto the fold of Islam; if you embrace Islam, you will find safety, ….

Source: A Deputation to Abyssinia (Ethiopia)
2. எகிப்து மன்னருக்கு நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/2.html … I invite you to accept Islam. Therefore, if you want security, accept Islam.

Source: Letter to the Vicegerent of Egypt, called Muqawqas
3. பாரசீக மன்னருக்கு …நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/3.html …… Accept Islam as your religion so that you may live in security,….

Source: A Letter to Chosroes, Emperor of Persia
4. ரோம் நாட்டு மன்னருக்கு ….நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய்….

Source: http://abumuhai.blogspot.com/2008/07/4.html ……I invite you to embrace Islam so that you may live in security.

Source: The Envoy to Caesar, King of Rome
5. யமாமா நாட்டு அரசருக்கு ….குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html … Be informed that my religion shall prevail everywhere. You should accept Islam, and whatever under your command shall remain yours."

Source: A Letter to Haudha bin 'Ali, Governor of Yamama
6. சிரியா நாட்டு மன்னருக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.''

அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html From Muhammad, Messenger of Allâh to Al-Harith bin Abi Shamir. Peace be upon him who follows true guidance, believes in it and regards it as true. I invite you to believe in Allâh Alone with no associate, thenceafter your kingdom will remain yours."

Shuja' bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered: "Who dares to disposs me of my country, I'll fight him (the Prophet)," and arrogantly rejected the Prophet's invitation to the fold of Islam.

Source:A Letter to Harith bin Abi Shamir Al-Ghassani, King of Damascus
7. ஓமன் நாட்டு அரசருக்கு நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'

Source: http://abumuhai.blogspot.com/2008/07/8.html If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you've got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship."

Source: Letter to the King of 'Oman, Jaifer, and his Brother 'Abd Al-Jalandi



2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?

மேலே உள்ள சில கட்டுரைகளில்,

ஆங்கிலத்தில் "if you embrace Islam, you will find safety" என்று உள்ளதை

தமிழில் "நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.

ஆங்கிலத்தில் உள்ள வரிகளில் "ஒரு நிபந்தனை" இருப்பதை காணமுடியும், அதாவது, "நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், பாதுகாப்பாக இருப்பீர்கள்" என்று உள்ளது. இதன் உள் அர்த்தம் என்ன? "நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லையானால், பாதுகாப்பாக இருக்கமாட்டீர்கள், அதாவது நான் வந்து போர் புரிந்து, உங்கள் மீது வெற்றிக்கொள்வேன்" என்று பொருள். இந்த விவரத்தை மிகவும் தெளிவாக, முகமது ஓமன் நாட்டு மன்னருக்கு எழுதிய கடிதத்தில் விவரித்துள்ளார்.



ஓமன் நாட்டுக்கு முகமதுவின் கடிதம்:

...நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'

...If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you've got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship."


மேலே உள்ள கடிதத்தில் முகமது சொல்வதை கவனியுங்கள். ஓமன் நாட்டு அரசர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், தன் நாட்டை தானே ஆட்சி செய்யலாமாம். யார் யாருக்கு ஆட்சிப் பொறுப்பை தருவது? நான் ஆட்சி செய்யும் நாட்டில், எனக்கு யாரோ ஒருவர் கடிதம் அனுப்பி, இஸ்லாமை ஏற்றுகொள், அப்போது நீயே உன் நாட்டை ஆட்சி செய்யலாம் என்று சொன்னால், நான் என்ன காதில் பூவைத்து இருப்பேனா? ஒருவேளை எனக்கு இராணுவ பலம் குறைவாக இருந்தால், தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளமுடியும் [அப்படி தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இதனால் அல்லாவிற்கும், இஸ்லாமுக்கும் என்ன மேன்மை சொல்லுங்கள்?]. எனக்கு இராணுவ பலம் அதிகமாக இருந்தால், முகமதுவோடு போர் புரிவேன். எது எப்படியானாலும், இது தான் அல்லாவின் தீனை பரப்பும் விதமா? சிந்தியுங்கள்.

ஒரு வேளை முஸ்லீம்கள் இக்கடிதங்களுக்கு "அப்படி அர்த்தம் இல்லை, கிறிஸ்தவர்கள் பொய் சொல்கிறார்கள்" என்று சொல்லக்கூடும். ஆனால், சிரியா அரசன், இக்கடிதம் படித்து என்ன சொன்னார் என்பதை சிறிது படித்துப்பார்த்தால் புரியும், இஸ்லாமை முகமது எப்படி பரப்பினார் என்பதை. அந்த அரசன் "என்னிடத்திலிருந்து என் ஆட்சியை யார் பிடுங்க முடியும்?" என்றுச் சொல்கிறான், அப்படியானால், அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கும் என்று தெரிந்துக்கொள்ள ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை.



அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.


Shuja' bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered: "Who dares to disposs me of my country, I'll fight him (the Prophet)," and arrogantly rejected the Prophet's invitation to the fold of Islam.



சிலர் சொல்லக்கூடும், முகமதுவின் இக்கடிதங்களுக்கு பலர் ஆமோதம் அளித்தார்கள், இஸ்லாமியர்களாக மாறினார்கள் என்று. உண்மை தான் பலர் அமோதம் அளித்தார்கள், சிலர் எதிர்த்தார்கள். இங்கு பிரச்சனை "இஸ்லாமின் கோட்பாடுகள், கட்டளைகள்" மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததா இல்லையா என்பதல்ல? முகமது இஸ்லாமை பரப்பிய விதம் சரியா? உடனே, முகமதுவை விட்டுவிட்டு மற்ற அரசர்களின் பெயர்களை குறிப்பிட்டு, இந்த நாட்டில் இப்படி அமைதியான முறையில் இஸ்லாம் பரவியது என்று சொல்லவேண்டாம், இப்போது கேள்வி, முகமது இஸ்லாமை எப்படி பரப்பினார்? என்பது தான். முகமதுவின் கடிதங்களில் உள்ள உண்மை என்ன? என்பதைப் பற்றியது தான்.




முகமது இஸ்லாமை வாளால் தான் பரப்பினார்:

இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்பதை காட்ட முஸ்லீம்கள், பல நாடுகளின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், முகமது எப்படி பரப்பினார் என்பதை இக்கடிதங்கள் படம் பிடித்துக்காட்டுகின்றன. இதற்கு முஸ்லீம்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? நான் ஒரு கேள்வியை கேட்கட்டும், அதாவது உலகத்தில் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு, இந்திய அரசாங்கம் அல்லது வேறு ஒரு மேற்கத்திய நாடு அல்லது இராணுபலம் அதிகமாக உள்ள நாடு, கீழ் கண்டவாறு கடிதம் எழுதி அனுப்பினால், எப்படி இருக்கும்.



மான்புமிகு சூடான்/பாகிஸ்தான்/சௌதி அரேபியா etc... நாட்டு அதிபருக்கு, இந்தியாவின்/சைனாவின்/அமெரிக்காவின்/ஜெர்மனியின் etc... நாட்டு அதிபர் எழுதிக்கொள்வது. உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்.

நாங்கள் a/b/c/x/y/z etc.. என்ற இறைவனை வணங்குகிறோம், மற்றும் இத்தெய்வமே உண்மையானவர். எனவே, உங்கள் அல்லாவை தொழுவதை இனி விட்டுவிடுங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால், இந்துத்துவத்தை / கிறிஸ்தவத்தை / புத்தமதத்தை / etc... ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்க‌ள் இஸ்லாமை விட்டு விட்டு எங்கள் தெய்வ‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ள‌வில்லையானால், எங்க‌ள் இராணுவ‌ம் உங்க‌ள் நாட்டில் வ‌ந்து இற‌ங்கும், எங்க‌ள் வ‌லிமையை உங்க‌ளுக்கு காட்டுவோம். எங்க‌ள் மார்க்க‌த்தை ஏற்று, உங்க‌ள் இஸ்லாமை விட்டு விடுங்க‌ள் என்று உங்க‌ளுக்கு அழைப்பு விடுக்கிறோம். அப்ப‌டி நீங்க‌ள் மாற‌வில்லையானால், அல்லாவை வ‌ண‌ங்கும் மூஸ்லீம்க‌ளின் பாவ‌ங்க‌ள் எல்லாம் உங்க‌ள் மேல் சும‌ரும் என்ப‌தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மேலே உள்ள கடிதத்திற்கும், முகமது அனுப்பின கடிதங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள். இதை படித்தவுடன் கோபம் வரவில்லையா உங்களுக்கு? அப்படித்தான், முகமதுவும் தன் தெய்வமாகிய அல்லாவை பரப்ப, ஆயுதத்தையும், போரையும், சர்வாதிகாரத்தையும் பயன்படுத்தினார். அதற்கு இக்கடிதங்களே சாட்சிகள். இக்கடிதங்களையும், அவைகளில் உள்ள செய்திகளையும், உலகத்தில் உள்ள மக்களுக்கு எப்படி விளக்குவீர்கள்? என்ன நியாயத்தை கற்பிப்பீர்கள்? சாதாரணமாக, கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தாமல், பொன்னுக்கும் மண்ணுக்கும் ஆசைப்பட்டு பல அரசர்கள் பக்கத்து நாட்டு அரசர்கள் மீது போர் தொடுப்பார்கள். ஆனால், தன்னை ஒரு இறைவனின் தூதன் என்றுச் சொல்லிக்கொண்டு, உலகத்திற்கு அமைதியை கொடுப்பேன் என்றுச் சொல்லிக்கொண்டு, இரத்தம் சிந்தியது சரிதானா என்று சிந்தித்துப் பாருங்கள். இப்படியும் ஒரு மதத்தை பரப்பனுமா? என்று உங்களை நீங்களே கேள்வியை கேட்டுப்பாருங்கள்.


முகமதுவை விட மற்ற இஸ்லாமிய அரசர்கள் நல்லவர்கள் என்று சொல்லும் இஸ்லாமியர்கள்:

இஸ்லாமை பரப்ப இஸ்லாமிய அரசர்கள் வாளைப்பயன் படுத்தவில்லை, அவர்கள் தங்கள் நல்ல நடத்தையினால் தான் பரப்பினார்கள் என்றுச் சொல்லி, இஸ்லாமுக்காக பரிந்துப்பேசும் இஸ்லாமியர்கள் ஒன்றை கவனத்தில் வைக்கவேண்டும். இப்படி நீங்கள் செய்வதினால், நீங்கள் மேற்கோள் காட்டும் இஸ்லாமிய அரசர்கள், "முகமதுவை விட நல்லவர்களாக இருந்தார்கள்" என்பதை மறைமுகமாக நீங்கள் சொல்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் முகமது கடிதங்களை அனுப்பி, அரசர்களை இஸ்லாமுக்கு அழைத்து, வரவில்லையானால் தொலைத்துவிடுவேன் என்று பயமுறுத்தி இஸ்லாமை பரப்பினார், ஆனால், அவரை பின்பற்றியவர்கள் அப்படி செய்யவில்லை என்று நீங்கள் சொல்வதினால், என்ன தவறு செய்துள்ளீர்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.


இறையடியான்

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/abumuhai/MletterSword.html

Tuesday, November 17, 2009

கல்வியிலிருந்து விலக்கப்படும் தலித்துகள்


வெறும் பட்டப் படிப்பு அல்லது சட்டத்துறைப் படிப்பு படித்து முடிப்பது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிகப் பயன் அளிக்காது. இந்துக்களுக்குக்கூட அது அதிக பலன் அளிக்கவில்லை. எது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவுமெனில், விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் உயர்தர கல்வி கற்பதுதான்'' -அம்பேத்கர்.

''.....கணிதம், கணிப்பொறி அறிவியல் போன்ற முதன்மை பாடப் பிரிவுகளில் தலித் மாணவர்கள் மிகமிக சொற்ப அளவில் பெயரளவிற்கே சேர்க்கப்படுகின்றனர். உயர் சாதி மாணவர்கள் ஒதுக்கித்தள்ளும் வரலாறு, விவசாயம் மற்றும் இன்னபிற கடைநிலை பாடப்பிரிவுகளையே தலித் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சூழ்ச்சிகரமாய் அளிக்கிறது. மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விகள் பயில்வதற்கு தலித் மாணவர்கள் தகுதி பெற்றவர்களாகிவிடக்கூடாது என்கிற மனுதர்ம மனோபாவத்துடன் பள்ளி நிர்வாகம் இத்தகைய சமூக அநீதியை சமீப காலங்களில் திட்டமிட்டு இழைத்து வருகிறது'' - ஆதிதிராவிடன் புரட்சிக் கழகம்.

இந்திய சமூகத்தில் ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் தங்களின் சமூக நிலையினை முன்னேற்றிக் கொள்வதற்கு (மேற்கத்திய) கல்வியை கற்றுக் கொண்டு அதன் மூலம் வேலையையும் பொருளாதாரத்தையும் பெறுவதால் சமூக சமத்துவத்தை அடையமுடியும் என்கிற வாதம் இருந்து வருகிறது. இதனால் தலித்துகள் கல்வி கற்பதற்கென அரசாங்கம் கொள்கை அளவில் சில சலுகைகளைக் கொடுத்து வருகிறது. (தலித்தல்லாத மாணவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் தலித் மாணவர்களுக்கு மட்டும்தான் சலுகைகள் வழங்கப்படுவது போன்ற பொய்ப் பிரச்சாரம் இருந்து வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்). சலுகை குறித்த விவாதத்தில் அதனை எதிர்ப்பவர்களும் , ஆதரிப்பவர்களும் உண்டு.

கல்வி தலித் மற்றும் பழங்குடியினரை முன்னேற்றியிருக்கிற அதே சமயம் அது அவர்களின் சொந்த பந்தங்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது என்ற வாதமும் இருக்கிறது. ஆனால் இங்கு எழுப்பப்பட வேண்டிய அடிப்படையான கேள்வி: கல்வியை கற்றல் என்பது வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கே என்றால் வேலை வாய்ப்பினை தருகின்ற கல்வியை தலித்துகளால் கடந்த காலங்களில் எளிதாகப் பெறமுடிந்திருக்கிறதா? இன்று பெறமுடிகிறதா? வேலை வாய்ப்பிற்கான கல்வியை அடைவதிலிருந்து தலித்துகள் தொடர்ந்து விலக்கப்பட்டே வருகின்றனர், அதனைப் பெறுவதற்கு தலித்துகள் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலே நிலவி வருகிறது என்று கட்டுரை விவாதிக்கிறது. கல்வியிலிருந்து விலக்கப்படுவது குறித்த விவாதம் புற உலகில் இல்லாத காரணத்தினால் தலித்துகளின் போராட்டம் தனித்தே நடைபெறுகிறது. எனவே, கல்வியிலிருந்து தலித்துகள் சமூக விலக்கம் செய்யப்படுவது குறித்து விவாதிப்பது அவசியம். தமிழ்நாடு அரசு ஆவண காப்பகம், கள ஆய்வில் பெறப்பட்ட தரவுகள், என்னுடைய சுய அனுபவம் இவையே கட்டுரையில் ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கல்வி: பொருளாதார முன்னேற்றத்தின் ஆயுதம்

காலனிய ஆட்சியாளர்களால் இந்தியாவில் நிறுவப்பட்ட மேற்கத்திய கல்வி முறை இந்து சமூக அமைப்பின் ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான ஆயுதமாக இன்றும் இருந்து வருகிறது. கல்வி கற்றல் என்பது முதலில் கற்பவர்களை பண்டைய சாதி சார்ந்த குலத்தொழிலிலிருந்து விடுவிக்கிறது. பண்பாட்டு தளத்தில் அவர்களிடத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிற அதேசமயம் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவுகிறது. அது மட்டுமின்றி கல்வி கற்ற முன்னேறிய பிரிவினரே தலித் விடுதலையில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தலித் இயக்கத் தலைவர்கள் தலித் மக்கள் கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் தலித்துகள் கல்வி கற்பதற்கு அரசாங்கத்தின் உதவியை நாடினர். தலித்துகளுக்கு கல்வி கொடுப்பதே அவர்களை முன்னேற்றுவதற்கான முறை என்றே காலனிய ஆட்சியினர் உணர்ந்திருந்தனர், அவர்களுக்கு கல்வி கொடுப்பதில் ஆர்வம் காட்டினர்.

தியாசபிகல் சொசைட்டி, டிப்ரஸ்டு கிளாஸ் மிஷன், பிரம்ம சாமாஜ், சோசியல் சர்வீஸ் லீக் மற்றும் கிறிஸ்துவ மிஷனரி இயக்கங்கள் தலித்துகளுக்கு தனிப் பள்ளிகள் மூலம் கல்வி கொடுத்திருப்பதனை அறியமுடிகிறது. தலித்துகளும் கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியிருப்பதனை சில புள்ளி விவரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடைசி கால் நூற்றாண்டில் சென்னை மாகாணத்தில் பொதுக் கல்வி நிலையங்களில் தலித் மாணவர்களின் எண்ணிக்கை 30,000-இருந்து 1,50,000-ஆக உயர்ந்திருக்கிறது. 1892ம் ஆண்டு தலித் மாணவிகளுக்கென இருந்த 11 பள்ளிகளின் எண்ணிக்கை பின்னர் 100-ஆக உயர்ந்திருப்பதே தலித்துகள் கல்வி கற்பதில் காட்டிய ஆர்வத்தை அறிந்து கொள்ள முடியும்.

தலித்துகள் அன்று கல்வி கற்பதற்கு மூன்று வழிமுறைகள் இருந்தது: 1. அரசாங்கப் பள்ளி, 2. கிறிஸ்துவ மிஷினரி பள்ளி மற்றும் 3. சொந்தமாக பள்ளிக்கூடம் நிறுவுதல். கிறிஸ்துவ மிஷினரிகள் தலித்துகளுக்கென தனிப் பள்ளிக்கூடங்களை நடத்தியிருக்கின்றனர். சில சமயங்களில் கிறிஸ்துவ மிஷினரிகள் நடத்திய கல்வி நிலையிங்களில் தலித்துகள் சேர்வது கடினமாக இருந்திருக்கிறது. திருநெல்வேலியிலிருக்கும் ஜான்ஸ் கல்லூரியில் அது தொடங்கப்பட்ட ஆரம்ப காலங்களில் பள்ளர் மற்றும் பறையர் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து பயில்வதை நாடார் சாதியினர் எதிர்த்திருப்பதே இதற்கான உதாரணம். தலித்துகள் சொந்தமாக பள்ளிக்கூடம் நிறுவியிருப்பினும் இது அரிதாக நடைபெற்றிருக்கிறது. தீண்டாமைக் கொடுமைக்குள்ளான மக்களை விடுவிப்பதற்கென கிறிஸ்துவ மிஷினரிகள் நிறுவிய கல்வி நிறுவனங்களிலேயே இதுதான் நிலையென்றால் அரசாங்கம் நடத்திய ''பொது''க் கல்வி நிலைலயங்களில் முன்னதைவிடவும் கூடுதலான ஒடுக்குமுறையை சந்தித்தனர் தலித்துகள்.

கல்வி நிலையம் நிறுவுதல், அடிப்படைக் கட்டமைப்பினை உருவாக்குதல், ஆசிரியர் மற்றும் இதர ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல் இவை அரசாங்கத்தின் ''பொது''ப் பணம் மூலம் நிர்வகிக்கப்படுவதையே ''பொது''க் கல்வி நிலையம் என்று பொருள்படும். பொதுக் கல்வி நிலையத்தில் தலித் மாணவர்கள் சேர்ந்து பயில்வதிலிருந்து அவர்கள் விலக்கப்பட்டனர். தலித்துகளுக்கு புழங்கு உரிமையற்ற பகுதியில் பள்ளியை நிறுவுதல், நேரடியாக அனுமதி மறுத்தல், தலித் மாணவர்களுக்கு அனுமதி வழங்கும் பள்ளியை தலித்தல்லாதோர் புறக்கணித்தல், பள்ளிக்குள்ளேயே தலித் மாணவர்களுக்கென தனி வகுப்பறை உருவாக்குதல், அனைத்து சாதி மாணவர்கள் இருக்கும் ஒரே வகுப்பறைக்குள் தலித் மாணவர்களுக்கென தனி இருக்கையை ஒதுக்குதல் போன்ற வடிவங்களில் தலித் மாணவர்கள் சமூக விலக்கம் செய்யப்பட்டனர். இனி, இது குறித்து விரிவாகக் காண்போம்.

புழங்கு உரிமையற்ற வெளி

குடியிருப்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப அன்றி சாதி வாரியாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்து சமூக அமைப்பில் பிராமணர் மற்றும் இதர சாதி இந்துக்களின் வசிப்பிடத்தில் தலித்துகளுக்கான புழங்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தது. பிராமணர் மற்றும் இதர சாதி இந்துக்களின் வசிப்பிடத்தின் அருகாமையிலேயே தபால் அலுவலகம், நீதி மன்றம், கல்வி நிலையம் போன்ற நவீன நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் அந்த நிறுவனங்களை அணுகுவதிலிருந்து தலித்துகள் விலக்கப்பட்டிருந்தனர். மெட்ராஸ் தொடக்கக் கல்விச் சட்டம் 1920 பிரிவு 40 (2) விதி 8, பள்ளிகள் அனைத்து சாதி மற்றும் சமூகத்தினர் புழங்குவதற்கு ஏற்ற இடத்திலியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கிறது. இருந்த போதிலும், பொதுக் கல்வி நிலையங்கள் தலித்துகளுக்கு புழங்கு உரிமையற்ற பகுதியிலேயே அமைக்கப்பட்டிருந்த காரணத்தினால் தலித் மாணவர்கள் கல்வி நிலையங்களை அணுகுவதிலிருந்தும் கல்வி கற்பதிலிருந்தும் விலக்கப்பட்டிருந்தனர்.

1928-29ஆம் ஆண்டு எடுத்த புள்ளி விவரத்தின்படி 1, 875 ''பொது''ப் பள்ளிகள் தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்படும் புவிப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் பத்தாண்டுகளுக்கு மேலான பின்னர், அதாவது 1935-36ம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி 891 பள்ளிகளும், 1935-36ம் ஆண்டு புள்ளி விவரப்படி 440 பள்ளிகளும் தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்படும் புவிப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்தன. இந்த புள்ளி விவரங்களிலிருந்து தலித்துகள் எந்த அளவிற்கு கல்வி கற்பதிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள இயலும். இதனால் தலித்துகள் கல்வி நிலையங்களை அணுகுவதற்காக முதலில் புழங்கு உரிமைக்கான போராட்டத்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. இதற்கான உதாரணமாக கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் பொதுப் பள்ளியை அணுகுவதற்கு தலித்துகள் அக்ரஹாரத்தை புழங்குவதற்கான போராட்டத்தை நடத்தியதைக் கூறலாம். இதில் தலித் மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் அக்ரஹாரம் வழியாக அழைத்துச் சென்ற பொழுது பிராமணர் மற்றும் இதர சாதி இந்துக்கள் தலித்துகள் மீது வன்முறையை ஏவினர்.

அனுமதி மறுப்பு

கல்வி கற்கும் செயல்பாட்டிலிருந்து தலித் மாணவர்களை விலக்குவதற்கு சாதி இந்துக்கள் கடைபிடித்து வந்திருக்கின்ற ஒரு வடிவம் பொதுக் கல்வி நிலையங்களில் தலித் மாணவர்களின் சேர்க்கையை வெளிப்படையாக மறுத்தல் ஆகும். தலித் மாணவர்கள் பொதுப் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பிக்கிற பொழுது அவர்களை சேர்த்துக் கொள்ள முடியாது என்று அவர்களுக்கு பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்பட்டிருக்கிற சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதனைக் காணமுடிகிறது. உதாரணமாக, சேலம் வட்டாட்சி வாரியத்தால் ராக்கிபட்டி மற்றும் எட்டிமாணிக்கம்பட்டி, சங்ககிரி வட்டாட்சியில் இருந்த வட்டாட்சி வாரியப் பள்ளி போன்ற பள்ளிகளில் தலித் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்கு அரிதாக சென்ற தலித் சாதியைச் சேர்ந்த ஒரு சிலருக்கு கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, வெள்ளிங்கிரி என்ற தலித் ஒருவர் கோயம்புத்தூர் அரசு கல்லூரிக்கு விண்ணப்பித்த பொழுது அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. அனுமதி மறுத்தல் என்பது ஒரு பொதுவான செயலாக நடைபெற்றிருக்கிறது, இதனால் அனுமதி மறுக்கப்படும் இடங்களில் சேர்க்கைக்கான போராட்டத்தை தலித்துகள் நடத்தியிருப்பதனைக் காணமுடிகிறது. வெள்ளிங்கிரிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கல்லூரி முதல்வர் மற்றும் உயர் கல்வி அதிகாரிகளுக்கு முறையிடல் என பல போராட்டங்களுக்குப் பின்னரே அவருக்கு அக்கல்லூரியில் இடம் வழங்கப்பட்டிருக்கிறது.

அனுமதி, புறக்கணிப்பு, தீண்டாமை

தலித்துகளின் போராட்டங்களுக்குப் பின்னர் தலித் மாணவர்கள் பொதுப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவ்வாறு அனுமதிக்கிற பொழுது அங்கு ஏற்கனவே படித்துவரும் சாதி இந்து மாணவர்கள் அப்பள்ளிகளை புறக்கணித்திருக்கின்றனர். இதற்கான சில உதாரணங்களைக் காண்போம். திருவண்ணாமலை கீழத்தூர் நகராட்சி தொடக்க பகல் பள்ளியில் சேர்வதற்கு சுமார் 50 தலித் மாணவர்கள் வருவதை அறிந்த தலித்தல்லாத மாணவர்கள் அப்பள்ளியை புறக்கணித்தனர். சிதம்பரம் அருகே ÿமுஷ்னம் மேல்நிலை தொடக்கப் பள்ளியில் தலித் மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட காரணத்தினால் அப்பள்ளியில் 20 ஏப்ரல் 1933ல் 183-ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை 24 ஏப்ரல் 1933 அன்று 21 பேராகக் குறைந்து விட்டது. இந்த எண்ணிக்கை பின்னரே கூடியிருக்கிறது. தலித்துகள் அனுமதிக்கப்படும் பள்ளிகளில் நாங்கள் பயில மாட்டோம் என்ற சாதி இந்துக்களின் நிலைப்பாட்டிற்குள் தலித்துகளை விலக்கம் செய்கின்ற நடவடிக்கை இருப்பதனையே காணமுடிகிறது.

சில பள்ளிகளில் தலித்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பினும் அவர்கள் பாகுபாடுதன் நடத்தப்பட்டிருக்கின்றனர். அதாவது, ஒரே பள்ளிக்குள் தலித்துகளுக்கென ''தனி'' வகுப்பறைகள், ''தனி'' இருக்கைகள் என்று ''பொது'' மாணவர்களிடத்திலிருந்து தலித் மாணவர்கள் விலக்கப்பட்டிருக்கின்றனர். சிதம்பரே அருகே உள்ள ÿமுஷ்னம் மேல்நிலை தொடக்கப் பள்ளியில் தலித் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பள்ளிக் கட்டிடத்திற்குப் பின் பகுதியில் தலித் மாணவர்களுக்கென தனியான கூடாரம் அமைத்து வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனை பள்ளி ஆய்வு அதிகாரிகள் கண்டித்த பின்னர் தனிக் கூடார முறை கைவிடப்பட்டிருக்கிறது. இரண்டாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர்களை அதே நிலை படிக்கின்ற தலித்தல்லாத மாணவர்களோடு உட்கார வைப்பதற்குப் பதிலாக முதலாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர்களோடு உட்கார வைக்கின்ற நடைமுறையும் இருந்திருக்கிறது. மற்ற மாணவர்களிடமிருந்து விலக்கம் செய்து தலித் மாணவர்களை ''தனி''யாக உட்கார வைக்கின்ற வழமைக்கு தீண்டாமையே காரணமாக இருந்திருக்கிறது.

தனிப் பள்ளி முறைக்கு வித்திட்ட சமூக விலக்கம்

மேற்கத்திய கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலந்தொட்டு தலித்துகளை கல்வி கற்பதிலிருந்து விலக்கி வைக்கின்ற செயல் மேற்குறிப்பிட்ட வடிவங்களில் நடைபெற்றிருப்பதனை விவரித்திருக்கிறோம். இந்த சமூக விலக்கலுக்கு எதிரான நடவடிக்கையை காலனிய அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது மேலும், தலித்துகளுக்கு சாதகமான நிலைப்பாட்டினை கோட்பாட்டளவில் எடுத்திருக்கிறது. சாதி அல்லது மதம் அடிப்படையில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு மறுக்கின்ற பள்ளியின் அங்கீகாரம் திரும்பப் பெறப்படும் என்று மெட்ராஸ் ஆரம்பக் கல்வி சட்டம் 1920 அறிவித்திருக்கிறது. பொதுப் பள்ளியில் தலித் மாணவர்கள் இலவசமாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற கொள்கையை கடைபிடித்தது. உள்ளாட்சி நிறுவனங்கள் நடத்துகின்ற பள்ளிகள் அல்லது அரசு மாணியம் பெறும் கல்வி நிறுவனங்கள் அரசின் கல்விக் கொள்கையை பின்பற்ற மறுத்தால் அப்பள்ளிகளுக்கு அரசாங்கம் வழங்குகின்ற மாணியம் குறைக்கப்படும் அல்லது மாணியத் தொகை ரத்து செய்யப்படும் என்று நிலைப்பாட்டினையும் அரசாங்கம் எடுத்திருந்தது. மேலும் தலித்துகளை முன்னேற்றுவதற்கென தொழிலாளர் ஆணையர் 1920களில் நியமிக்கப்பட்டிருந்தார்.

தலித்துகளை முன்னேற்றுவதற்கு செய்யப்படுகின்ற பல்வேறு பணிகளில் அவர்களுக்கு கல்வி கொடுக்கின்ற பொறுப்பும் தொழிலாளர் ஆணையருடையதே. தனிப் பள்ளி நடத்துதல், கல்விக்கான நிதி உதவு வழங்குதல், விடுதியை பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்வதும் ஆணையருடையதே. கொள்கை அளவில் தலித்துகளுக்கு ஆதரவான நிலைப்படாட்டினை எடுத்திருந்த போதிலும் நடைமுறையில் காலனிய அரசாங்கம் அதனுடைய கொள்கையினை நடைமுறைப்படுத்தியிருக்கவில்லை. தலித்துகளை கல்வி நிலையங்களில் அனுமதிக்க மறுத்தல், அனுமதித்திருந்தால் பாகுபாட்டுடன் நடத்துதல், அனுமதி மறுப்பு மற்றும் பாகுபாட்டுடன் நடத்துதல் ஆகியவற்றை எதிர்க்கும் கொள்கைகளை நடைமுறைப் படுத்தியிருக்கவில்லை காலனிய அரசாங்கம். விளைவு, தலித்துகள் தங்களுக்கனெ தனியான கல்வி நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கத் தூண்டியிருக்கிறது. சென்னை மாகாண அவையில் தலித்துகளுக்காக நியமிக்கப்பட்ட தலித் பிரதிநிதியான ஏ.எஸ். சகஜானந்தாவின் உரையிலிருந்து தலித் மாணவர்களுக்கான தனி கல்வி நிலையங்களின் கோரிக்கையும் அதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.

அவர் இவ்வாறு உரையாற்றியிருக்கிறார்: ''ஒவ்வொரு தாலுக்காகளிலும் ஒவ்வொரு சக்கண்டரி பாடசாலையை ஏற்படுத்த வேண்டும். அதில் படிப்பவர்கட்கு இலவசமாகவே உணவு முதலியன கொடுக்க வேண்டும். இது மிகவும் அவசியம். ஒவ்வொரு ஜில்லாவிலும் அவசியமாக ஆதித் திராவிடர்களுக்கு ஐஸ் கூல்களேற்படல் வேண்டும். தென்னார்காடு ஜில்லாவில் ஆறு லட்சம் ஆதித் திராவிடர்களிருக்கிறார்கள். ஆறு லட்சம் ஜனங்களிலும் ஸ்கூல் பைனல் படித்தவர் ஒருவருமில்லர். இதைவிட எங்கள் துர்ப்பாக்கியத்தைச் சொல்லிக் காட்ட வேண்டாம். இவ்விஷயமாக அரசாங்கத்தாரைக் கேட்டால் எல்லாக் கல்லூரிகளிலும் ஆதித்திராவிட மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. உங்களுக்கெனத் தனிக் கல்லூரிகள் வேண்டாமெனக் கூற முயல்கின்றார்கள். அதற்காக நாங்கள் நன்றி பாராட்டுகிறோம். அந்தச் சட்டத்தைச் செய்கையில் காண்பது அரிதாகவிருக்கிறது. நாங்களே வைதீகம் பாராட்டுமிடங்களிலுள்ள கல்வி சாலைகளுக்குச் சென்று எங்கள் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனக் கேட்டால் சட்டத்திற்குப் பயந்து சேர்த்துக் கொள்வார்கள் அல்லது சாக்குபோக்கு சொல்வார்கள். அது விஷயத்தில் அழுத்தமாக நடவடிக்கை எடுத்துக் கொண்டால் பகைமையும் மாணவன் முன்னுக்கு வர முடியாத கஷ்டங்களும் ஏற்படுகின்றன. பலவித சிக்கல்களிருக்கின்றன.

உயர்ந்த வகுப்பினராகிய வலிவுள்ளவர்களிடத்தில் நாங்கள் சென்று சண்டையிட்டுக் கொண்டு உள்ளதையுங் கெடுத்துக் கொள்வதைவிட தனியே விரும்புவது நலமாகும். ஆதித் திராவிட மாணவர்களைச் சேர்ப்பதால் கஷ்டமுண்டாகுமென்று தோன்றும் இடங்களிலெல்லாம் ஆதித்திராவிடர்கட்குத் தனிப்பாடசாலைகள் அமைத்துக் கொடுத்தால் அது எங்கள் சமூகத்திற்குப் பெரிதும் பயன்படும். எங்கள் சமூகத்திற்கென ஏற்படும் கல்லூரிகளில் கூடுமானால் மற்றைய வகுப்புப் பிள்ளைகளும் சேர்ந்து படிக்கச் சொற்ப உதவி புரிந்தால் உயர் வகுப்பு மாணவர்களும் வந்து சேர்வார்கள். அதன் மூலம் சுலபமாக சமரசம் ஏற்படக்கூடும். தற்போது மகமதிய மாணவர்கட்கு தனிக் கல்லூரிகள் ஏற்படுத்தி நடத்தி வருவதைப் போல் எங்களுக்கும் நடத்திவரக் கேட்டுக்கொள்கிறேன்''. சட்ட ரீதியான அங்கீகாரம் இருந்த போதிலும் தலித் மாணவர்கள் பொதுப் பள்ளியில் பயில்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்பது சகஜானந்தாவின் உரையிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. இதுவே தலித்துகளை தங்களுக்கென தனிக் கல்வி நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கத் தூண்டியிருக்கிறது.

பொதுப் பள்ளியில் தலித்துகள் அனுமதிக்கப்படவில்லை என்றால் அரசாங்கமே தலித்துகளுக்கென தனிப் பள்ளிகளை உருவாக்கியிருக்கிறது. திருவண்ணாமலை நகராட்சிப் பள்ளியில் தலித் மாணவர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தினால் திருவண்ணாமலை நகராட்சி அவையே தலித் மாணவர்களுக்கென தனிப் பள்ளிக்கூடத்தை நிறுவியிருப்பதை இதற்கான உதாரணமாகக் கூறலாம். தலித்துகளும் அவர்களின் சுயமுயற்சியினால் தனிப் பள்ளிக்கூடங்கள் நிறுவியிருக்கின்றனர். விருத்தாச்சலம் வட்டாட்சியைச் சேர்ந்த சத்தியவாடி கிராமம் , திருநெல்வேலி மாவட்டம் திருப்பனிகரிசல்குளம் போன்ற பகுதிகளில் தலித்துகள் நிறுவிய பள்ளிகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எனவே, ''பொது''ப் பள்ளிக்கூடங்களில் தலித்துகளுக்கு சேர்க்கை அனுமதி மறுக்கப்படுவதால் தலித்துகளுக்கென ''தனி''ப்பள்ளிக்கூடம் உருவாகியிருக்கிறது என்பது தெளிவு.

''தனி''ப் பள்ளிக்கூடம் என்ற கோரிக்கையினை அனைத்துத் தலித்துகளும் முன்வைத்திருக்கவில்லை. ''பொது''ப் பள்ளிக்கூடங்களில் தலித்துகள் அனுமதிக்கப்பட வேண்டும், தனிப் பள்ளிக் கூடங்கள் வேண்டாம் என்று போராடிய தலித்துகளும் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆர். வீரையன். இவர் தலித்துகளுக்கென தனிப் பள்ளிக்கூடம் தொடங்குவதனை தொடர்ச்சியா எதிர்த்திருக்கிறார். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று பேசப்படுகிற இந்த ஜனநாயகச் சூழலில் ஆதி-திராவிடர்களுக்கென தனிப் பள்ளிக்கூடம் என்ற கொள்கையை அரசாங்கம் அனுமதிக்கிறதா? என்ற கேள்வியை சென்னை மாகாண அவையில் எழுப்பியுள்ளார் வீரையன். இக்கேள்விக்கு கல்வி அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்: ''தனிப் பள்ளிக்கூடம் சேரி மக்களின் கோரிக்கையினால் தொடங்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர் ஆணையரின் கட்டுப்பாட்டிற்குக் கீழ்வரும் பல சேரிகளில் தனிப் பள்ளிக் கூடங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு தொடக்கக் கல்வி கொடுக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் அதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப் படுகிறது''.

வீரையன் மீண்டும் பின்வரும் கேள்வியை எழுப்பினார்: தனிப் பள்ளி என்பது எப்பொழுதும் ஆதி திராவிடர்களை தனியாக வைத்திருப்பதாக பொருள் கொள்கிறதா? ஆதி திராவிட மாணவர்கள் நகராட்சிப் பள்ளிகளில் அனுமதி கோரும் பொழுது மட்டும் தனிப் பள்ளி என்ற கருத்து நகராட்சி அவையிடமிருந்து தோன்றுகிறது? இதற்கு முன்னர் தோன்றுவதில்லையே ஏன்? இதற்கு கல்வி அமைச்சர் பின்வருமாறு பதிலளித்தார்: ''தனிப் பள்ளி இல்லாதிருப்பதே அரசாங்கத்தின் கொள்கை, ஆனால் அனைத்துப் பொதுப் பள்ளிகளும் அனைத்து மாணவர்களுக்கும் திறக்கப்பட வேண்டும். ஆனால் ஆதி திராவிடர்களிடமிருந்து தங்களுக்கென தனிப் பள்ளி வேண்டும் என்ற சிறப்பு கோரிக்கையை முன்வைத்தால் நாங்கள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்''.

இதனால் வீரையன் பின்வரும் மற்றொரு கேள்வியை இவ்வாறு எழுப்பியுள்ளார்: 300 பேர் வசிக்கின்ற சேரியில் 10 பேர் தனிப் பள்ளி கேட்கிற பொழுது 290 பேரின் உணர்வுகளை புறக்கணிக்க முடியும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? நீங்கள் யாருடையை உணர்விற்கு மதிப்பு கொடுக்க இருக்கிறீர்கள்? 290 பேரின் கோரிக்கையையா? அல்லது 10 பேரின் கோரிக்கையையா? வீரையனின் கேள்விகளிலிருந்து அவர் ''தனி''ப் பள்ளி முறையை கடுமையாக எதிர்த்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. தலித்துகள் முன்வைத்த கோரிக்கையில் தலித் மாணவர்கள் பொதுப் பள்ளிக் கூடங்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை விடவும் தனிப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அரசாங்கம் கொள்கை அளவில் தனிப் பள்ளி முறையை விரும்பியிருக்கவில்லை எனினும் நடைமுறையில் அது தனிப் பள்ளி முறையையே ஏற்படுத்தியிருக்கிறது. ''தனி''ப் பள்ளி முறை ''பொது''விலிருந்து தலித்துகளை விலக்குவதைத் தவிர வேறொன்றும் இல்லை.

கல்வியிலிருந்து விலக்கம்: இன்றைய நிலை

இன்றைய காலங்களில் தலித்துகள் கல்வி பெற வேண்டும் என்பதற்காக நிதி உதவி வழங்குதல் உட்பட பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் நடைமுறையில் அவற்றை கல்வி நிலையத்தின் நிர்வாகம் முறையாக அமுல்படுத்துவதில்லை. இங்கு இருக்கின்ற திட்டங்கள் அமுல்படுத்தப்படுகிறதா? இல்லையா? என்ற ஆராய்ச்சிக்குள் செல்லவில்லை. எவ்வாறு தலித் மாணவர்கள் உயர் கல்வியில் அறிவியல் பாடப் பிரிவில் படிப்பதிலிருந்து விலக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதை விவாதிப்போம். காரணம் அறிவியல் கல்வி பயில்வது என்பது அத்துறைகளில் படிப்பவர்களை வல்லுநர் தரத்திற்கு உயர்த்துகிறது மேலும் வேலை வாய்ப்பும் எளிதில் கிடைத்துவிடுகிறது. அம்பேத்கர் இதனை மிகத் தெளிவாக பின்வருமாறு கூறியுள்ளார்: ''பொருளாதார நிலையை உயர்த்தும் விஷயத்திலிருந்து நோக்கும்போது, தாழ்த்தப்பட்ட சாதியினருக்குப் பொதுக் கல்வியைவிட தொழில்நுட்பக் கல்வி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெளிவு''.

இந்தியாவில் சில அரசாங்கங்கள் வரலாறு, பொருளாதாரம் போன்ற படிப்புகள் பயனற்றவை என்று அறிவித்ததிலிருந்தும், அத்துறையில் பட்டம் பயின்றவர்கள் வேலை வாய்ப்பினைப் பெறுவது மிகக் கடினமான செயலாக இருந்துவரும் இன்றைய சூழலில் சமூக அறிவியல் பட்டம் என்பது தலித்துகளை பொருளாதாரத்தில் முன்னேற்றுவதற்கு உதவாது. ஆனால் இத்துறைகளை முற்றிலும் புறக்கணிப்பது என்பது தலித் விடுதலைக்கு ஊறு விளைவிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொருளாதார முன்னேற்றம் நோக்கில் என்ற தலித்துகள் அறிவியல் படிப்பதும், அவர்களின் சமூக விடுதலைக்கான நோக்கில் சமூக அறிவியல் துறையில் கவனம் செலுத்துவதும் தவிர்க்க இயலாத தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அம்பேத்கர் அறிவியல் தொழில் நுட்பத்தினை பயில்வதற்கு தலித் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். ஆனால் அத்துறையில் தலித் மாணவர்கள் சேர்வதே இன்று சிக்கலாக இருந்து வருகிறது. எனவே, பதினொராறாம் வகுப்பு, இளநிலை, முதுநிலை இளம் முனைவர், முனைவர், முதுமுனைவர் ஆகிய நிலைகளில் தலித் மாணவர்கள் எவ்வாறு அறிவியல் பாடப் பிரிவிலிருந்து விலக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதைக் காண்போம். இது குறித்து விவாதிப்பதற்கு முன்னர் பள்ளி நிலையில் தலித் மாணவர்களின் சேர்க்கை எந்த பள்ளிகளில் இருக்கிறது, அங்கு இருக்கும் பாகுபாடு என்ன என்பதைக் காண்போம்.

கிராமப் புறங்களில் இருக்கின்ற தலித்துகள் அவர்கள் வசிக்கின்ற கிராமத்தில் அல்லது பக்கத்து கிராமத்தில் இருக்கின்ற பள்ளியில் படிக்கச் செல்கின்றனர். ஒரு கிராமத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி இவைகள் இருந்தால் தலித் குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளியில் இணைந்து படிக்கின்றனர். சில கிராமங்களில் தலித்துகளுக்கென இருக்கின்ற ஹரிஜன் தொடக்கப் பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தலித் குழந்தைகள் படிக்கின்றனர். அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் கூடுதலான கட்டமைப்பு வசதிகள் இருந்த போதிலும் அப்பள்ளிகளில் படிக்க இயலாத சூழலே நிலவுகிறது. திருநெல்வேலி மாவட்டம் செந்தட்டியாபுரம், பந்தப்புளி, ரெட்டியபட்டி மற்றும் பூவன்குறிச்சி ஆகிய கிராமங்களில் கள ஆய்வு நடத்திய போது தலித் குழந்தைகள் படிக்கின்ற அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதின்மையைக் காணமுடிந்தது.

குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுப்பதற்கென தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் குறுந்தகடு இயக்குவதற்கான பெட்டி வழங்கப்பட்டிருக்கிறது, ஆனால் அப்பள்ளிகளில் மின்சாரம் இல்லாததால் இப்பொருட்கள் பயன்படுத்த இயலாத நிலையில் இருப்பதனை ரெட்டியப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் காணமுடிந்தது. பூவன்குறிச்சி ஹரிஜன் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களின் எண்ணிக்கை மூன்றாக இருந்தது இரண்டாக குறைக்கப்பட்டுவிட்டது. மேலும், குழந்தைகள் அமர்ந்து படிப்பதற்கென இருக்கைகள் இல்லை, ஒவ்வொரு வகுப்பிற்கென தனித்தனியான வகுப்பறைகள் இல்லை என்பது உட்பட பல அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதிருப்பதைக் கூறலாம். கற்பதற்குத் தேவையான வசதியின்மை தலித் குழந்தைகளின் கற்றலின் தரத்தில் பாதகமான விளைவினையே ஏற்படுத்தும். இதன் பொருள் என்னவென்றால் தலித் குழந்தைகள் தரமான கல்வி கற்பதிலிருந்து விலக்கப்படுவது என்பது தொடக்கக் கல்வி நிலையிலேயே தொடங்கிவிடுகிறது.

தொடக்கக் கல்வி நிலைக்கு முந்தைய நிலையான பாலர் பள்ளியில் தலித்தல்லாத குழந்தைகளிடமிருந்து தலித் குழந்தைகளைப் பிரித்து வைக்கின்ற பாகுபாட்டு நடைமுறையையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுக் கூறவேண்டும். பாலர் பள்ளியில் குழந்தைகள் அ மற்றும் ஆ என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தலித்தல்லாத குழந்தைகள் அதிகம் இருக்கின்ற பிரிவில் சொற்ப எண்ணிக்கையிலான தலித் குழந்தைகளும், தலித் குழந்தைகள் அதிகம் இருக்கின்ற பிரிவில் சொற்ப அளவிலான தலித்தல்லாத குழந்தைகளும் என பிரிக்கப்பட்டிருக்கின்றனர். இதனை ரெட்டியப்பட்டி மற்றும் பந்தப்புளி ஆகிய ஊர்களில் கள ஆய்வின் போது காணமுடிந்தது. இவ்வாறு பிரித்தல் என்பது மிகச் சமீபத்தில் நடப்பதாக அங்கு பணிபுரியும் பணியாளர்கள் கூறினர். இந்த பிரிவு காலனிய ஆட்சிக் காலத்தில் பள்ளிகளில் தலித் மாணவர்கள் தலித்தல்லாத மாணவர்களிடத்தில் இருந்து தனியாக பிரித்து வைக்கப்பட்ட சம்பவங்களிலிருந்து வேறுபட்டிருக்கவில்லை. சமூக விலக்கம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றை அனுபவித்தல் என்பது தலித் குழந்தைகளுக்கு பாலர் பள்ளியிலிருந்தே தொடங்கிவிடுகிறது. இந்தப் பின்னணியில் பயின்று வரும் தலித் குழந்தைகளே பின்னர் நகரங்களுக்கு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். இவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பின்னர் சந்திக்கின்ற சிக்கலைக் காண்போம்.

மாணவர்களின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய புள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அவர்கள் பெறுகின்ற மதிப்பெண். பின்னர் அடுத்த திருப்பத்தினை ஏற்படுத்தும் புள்ளி பதினொறாம் வகுப்பில் அவர்கள் சேர்கின்ற பாடப் பிரிவு. தலித் மாணவர்கள் பொதுவாக கணிதம், கணினி, அறிவியல் அல்லாத பாடப் பிரிவுகளான வரலாறு மற்றும் விவசாயம் ஆகியவற்றில் பயில்கின்றனர். தலித் மாணவர்களுக்கு வரலாறு மற்றும் விவசாயம் ஆகியவற்றின் மீது மட்டுமே ஆர்வம் இருந்து வருகிறதா? அல்லது கணிதம், கணினி, அறிவியல் ஆகிய தங்களால் படிக்க இயலாது என்ற அச்சமா? ஆர்வமும் அச்சமும் தலித் மாணவர்களிடத்தில் அக உணர்வினால் சுயமாக ஏற்படுவதில்லை அது புற உலகினால் திணிக்கப்படுகிறது. தலித் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் வரலாறு மற்றும் விவசாயம் ஆகிய பிரிவுகளிலும் சொற்ப அளவில் கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளிலும் சேர்த்துக் கொள்கிறது பள்ளி நிர்வாகம். இது எவ்வாறு நிகழ்கிறது என்றால் பள்ளியில் விண்ணப்பிக்க வரும் தலித் மாணவர்களிடத்தில் நீ பெற்றிருக்கும் மதிப்பெண்ணுக்கு கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் இடம் கிடைப்பது அரிது, வரலாறு மற்றும் விவசாயம் ஆகிய பிரிவுகளில் இடம் கிடைக்கும் அதற்கு விண்ணப்பிக்கவும் என்று கூறிவிடுவர் பள்ளி நிர்வாகத்தினார்.

சொற்ப அளவிலான மாணவர்களை கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு அனுமதிப்பர். மேலும், தலித் மாணவர்களிடத்தில் உன்னால் கணிதம் அறிவியல் போன்ற பாடங்களை படிக்க இயலாது, அவை மிகக் கடினமானவை. வரலாறு எளிதானது எனவே அதைப் படி என்று அறிவுரை கூறுவர். இவை அனைத்து தலித் மாணவர்களையும் ஒருங்கிணைத்துக் கூறுவதில்லை, தனித் தனியாகவே கூறுவர். மாணவர்கள் விண்ணப்பிக்கிற பொழுது தனித் தனியாக வருவதும் பள்ளி நிர்வாகத்திற்கு வசதியாக அமைந்து விடுகிறது. கணிதப் பிரிவில் சேர்த்து என்னை டாக்டராக்க வேண்டும் என்பது என்னுடையை தந்தையின் ஆசை. அதற்கு தூய அறிவியல் படித்தால் மருத்துவராகலாம் என்று என்னை அறிவியல் பிரிவிற்கு விண்ணப்பிக்க வைத்தது நாசரேத் மர்காஷியஸ் மேனிநிலைப் பள்ளி நிர்வாகம். தூய அறிவியல் படித்தால் மருத்துவப் படிப்பில் சேர்வது ‘கனவாகவே’ இருக்கும் என்பது அங்கு சென்ற பின்னரே தெரிய வந்தது. நான் அனுபவித்த அதே நிலை இன்றும் நீடிப்பதை அறியமுடிகிறது.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட பல்வேறு மதச் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளிலும் தலித்துகள் கணிதம், அறிவியல் போன்ற பாடப் பிரிவுகளிலிருந்து திட்டமிட்டே விலக்கப்படுவது இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு கணினிப் பிரிவிற்கு விண்ணப்பிக்கச் சென்ற தலித் மாணவர் ஒருவரிடம் உன்னுடைய மதிப்பெண் அப்பிரிவிற்கு தகுதியற்றது என்றும், கணிதம் மிகக் கடுமையானது அது உன்னால் படிக்க முடியாது என்றும் கூறி அத்தலித் மாணவருக்கு கணினிப் பிரிவில் இடம் தர மறுத்திருக்கிறது திருநெல்வேலியில் உள்ள ஒரு கிறிஸ்துவப் பள்ளி. எனவே, தலித் மாணவர்களின் ஆர்வமும் அச்சமும் பள்ளி நிர்வாகம் என்ற புற உலகு ஏற்படுத்துவதே என்பது தெளிவு. இதனால் சொற்ப எண்ணிக்கையிலான தலித் மாணவர்களே கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பாடப் பிரிவில் தேர்ச்சி பெறுகின்றனர்.

பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் பட்டப் படிப்பு செல்வது என்பது வாழ்க்கையின் அடுத்தக் கட்ட திருப்பத்தின் புள்ளி. பள்ளி நிலையில் கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் சிலருக்கு மருத்துவம், பொறியியல் போன்ற துறையில் இடம் கிடைக்கிறது. அதில் கிடைக்காதவர்கள் இளநிலையில் அறிவியல் பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கின்றனர். அங்கும் அவர்கள் விரும்பும் பாடம் கிடைப்பதில்லை. என்னை மருத்துவராக்கும் என் தந்தையின் கனவு தகர்க்கப்பட்ட போதிலும் விலங்கியில் துறையில் டாக்டர் பட்டம் பெற்றுவிட வேண்டும் எனக்குள் ஆசை இருந்தது. தூய அறிவியல் பாடப் பிரிவில் விலங்கியலை மிக ஆர்வமாக படித்து வந்த நான் பள்ளி அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தேன். நாசரேத் மர்காஷியஸ் கல்லூரியில் விலங்கியல் பிரிவில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சென்றேன். கல்லூரி முதல்வர் உன்னுடைய மதிப்பெண்ணுக்கு வரலாறு, பொருளாதாரம் போன்ற பாடப் பிரிவுகளில் இடம் கிடைக்கும், இதில் சேர்வதற்கு தாமதப்படுத்தினால் அதுவும் கிடைக்காது என்று பயமுறுத்தினார். வேறு வழியின்றி நான் வரலாற்று துறையில் சேர்ந்தேன். விலங்கியல் பாடத்தில் டாக்டர் பட்டம் பெற்றுவிட வேண்டும் எனது ஆசையும் தகர்க்கப்பட்டது.

என்னுடன் தூய அறிவியல் வகுப்பில் படித்து என்னைவிட குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த தலித்தல்லாத மாணவருக்கு விலங்கியல் பாடப்பிரிவில் இடம் கொடுக்கப்பட்டிருந்தது. என்னைவிடக் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த மாணவனுக்கு விலங்கியல் பிரிவில் இடம் வழங்கப்பட்டிருக்கிறது அதிக மதிப்பெண் பெற்றிருந்த எனக்கு மறுக்கப்பட்டிருக்கிறது ஏன் என்று எனக்குள் இருந்து கொண்டிருந்த கேள்விக்கு கிடைத்த விடை அவர் கிறிஸ்துவ நாடார், சமூகத்தில் உயர்ந்தவர்! நான் தலித், தாழ்த்தப்பட்டவன்!. சாதிய அரசியல் பெரிய அளவிற்கு புரியாதிருந்த எனக்கு அக்கல்லூரியில் தலித் மாணவர்களுக்கு அறிவியல் பாடப்பிரிவுகளில் இடம் வழங்கப்படமாட்டாது என்பது பின்னர்தான் தெரிய வந்தது. மற்றொரு உதாரணத்தையும் இங்கு காண்போம். வணிகவியல் படித்தால் வங்கி வேலைக்குச் செல்வது எளிது என்று நம்பிக்கை இன்றும் இருந்து வருகிறது. பல கல்லூரிகளில் வணிகவியல் மாணவர்கள் தங்களை பிரிவினை ராயல் டிப்பார்ட்மெண்ட் என்ற அழைத்துக் கொள்வார்கள். இன்றும் ஒரு முக்கியத்துவம் இருக்கின்ற வணிகவியல் பிரிவில் சேர்ப்பதில் இருந்தும் தலித் மாணவர்கள் விலக்கப்படுகிறார்கள். ஓரிரு வருடங்களுக்கு முன்னர் (2003) மார்த்தாண்டம் நேசமணி கல்லூரியில் வணிகவியில் துறையில் சேர்வதற்கு பன்னிரெண்டாம் வகுப்பில் 890 மதிப்பெண் பெற்றிருந்த தலித் மலையாளி மாணவர் விண்ணப்பித்த பொழுது அவருக்கு இடம் மறுக்கப்பட்டது, அவரைவிட குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த கிறிஸ்துவ நாடார் மாணவருக்கு அதே துறையில் இடம் வழங்கப்பட்டது.

தலித் மலையாளி மாணவருக்கு வணிகத்துறை மறுக்கப்பட்டது மட்டுமல்ல மாறாக அவருக்கு தமிழ் துறையில் இடம் கொடுத்ததும் ஒருவகையான ஒடுக்குமுறைதான். தலித் மலையாளி மாணவரால் எவ்வாறு தமிழ் மொழியில் இளங்கலைப் பட்டத்தைப் படிக்க இயலும்? தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கென இருக்கின்ற ஒரே அரசுக் கல்லூரி திருநெல்வேலியிருக்கும் ராணி அண்ணா கல்லூரியே, இதுவும் பெண்கள் கல்லூரியே. இதானல் தலித் மாணவர்கள் சிறுபான்மையினர் மற்றும் அரசு உதவி பெறுகின்ற கல்லூரியை மட்டுமே நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. இக்கல்லூரிகளிலிருந்து தலித் மாணவர்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவியாயிருக்கும் கல்வியிலிருந்து விலக்கப்படுவதன் விளைவினால் தலித் மாணவர்கள் பெரும்பாலானோர் சமூக அறிவியல் துறைகளிலும் சொற்ப எண்ணிக்கையில் அறிவியல் துறைகளிலும் இளநிலை மற்றும் முதுநிலையில் பட்டம் பெறுகின்றனர். இத்தகைய கல்லூரிகள், தலித் மாணவர்களின் முன்னேற்றத்திற்கென பல திட்டங்கள் வகுத்து அதற்கென நிதியும் பல்கலைக் கழக மானியக் குழு வழங்கினாலும் கல்லூரி நிர்வாகம் தலித் மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு செலவிடாமல் போலி பற்றுச் சீட்டு வைத்துக் கொண்டு அப்பணத்தை தவறாக செலவு செய்யப்படுகிறது. மேலும் உயர் கல்வியில் தலித்துகளின் பல்வேறு உரிமைகளையும் பறித்துவிடுவது குறித்து அய். இளங்கோவன் விரித்திருப்பது கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இச்செயல் தலித் மாணவர்கள் கல்வியில் திறமையானவர்களாக வளர்வதை நேரடியாகவே தடுத்துவிடுகிறது.

ஆராய்ச்சி படிப்பிற்கு அரிதான தலித் மாணவர்களே வருகின்றனர். அவர்களின் பொருளாதாரச் சூழல், ஆராய்ச்சியை நெறிப்படுத்துவதற்கான நெறியாளர் கிடைப்பதில் இருந்து வருகின்ற சிக்கல் தலித் மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதிலிருந்து விலக்குகிறது. அறிவியல் புலத்தில் ஆராய்ச்சி முடித்து டாக்டர் பட்டம் பெற்ற தலித்துகளை விரல்விட்டு எண்ணும் அளவிற்கே நிலைமை இருக்கிறது. சமூக அறிவியல் புலத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கின்ற பல தலித்துகளில் நானும் ஒருவன். என்னை டாக்டருக்குப் (மருத்துவர்) படிக்க வைக்க வேண்டும் என்ற என் தந்தையின் கனவு தகர்க்கப்பட்ட போதிலும் போதிலும் நான் டாக்டர் (முனைவர்) பட்டம் பெற்றிருக்கிறேன். ஆனால் இதனைக்கூட கண்டு மகிழ்வதற்கு அவர் இன்று உயிரோடு இல்லை. இப்புலத்தில் பட்டம் பெற்றிருந்த போதிலும் வேலை வாய்ப்பு கிடைப்பது கடினமான ஒன்றாக இருந்து வருகிறது.

சமீபத்தில் நிரப்பப்பட்ட பின்னடைவுப் பணியிடங்களில் தலித்துகளுக்கு கல்லூரி விரிவுரையாளர் பணி கிடைத்திருக்கிறது, வேலை கிடைக்காதவர்களும் இருக்கின்றனர். இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய முக்கியமான சிக்கல் இருக்கிறது. அதாவது, அறிவியல் புலத்திலிருந்து விலக்கப்படுவதல் சமூக அறிவியலில் பட்டம் பெறுகின்ற தலித்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இவர்களில் இளம் முனைவர் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அவர்களின் கல்வித் தகுதிக்குரிய பணி கிடைக்காத காரணத்தினால் நான் அறிந்த தலித்துகள் தமிழ்நாடு அரசாங்கம் நடத்துகின்ற மதுபானக் கடையில் பணி செய்கின்றனர். இதில் சட்டம் படித்த தலித்துகளும் உண்டு. வெறும் பட்டம் அல்லது சட்டம் படிப்பது தலித்துகளுக்கு அதிகம் பயனளிக்காது என்ற அம்பேத்கரின் அன்றைய கணிப்பு மிகச் சரி என்பதற்கு முனைவர் மற்றும் சட்டம் படித்த இன்றைய தலித்துகள் மதுக் கடைகளில் வேலை செய்து வருவது சாட்சியாய் இருக்கிறது.

ஒரு கல்வி நிலையத்தில் இணைந்து படிப்பது என்பதன் இறுதிக் கட்டம் முதுமுனைவருக்கான ஆராய்ச்சி படிப்பாகும், இதில் நிதி உதவியோடு மட்டுமே ஆராய்ச்சியில் ஈடுபடுவர். பல்கலைக் கழக மானியக் குழுவில் முதுமுனைவர் ஆராய்ச்சிக்கு இரண்டு வகையில் நிதி உதவி வழங்கப்படுகிறது. தலித் மாணவர்கள் சமூக அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கென முதுமுனைவர் ஆராய்ச்சி நிதி வழங்கும் திட்டம் இருக்கிறது. அறிவியல் புலத்தில் மட்டுமே முதுமுனைவர் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கென டாக்டர். கோத்தாரி முதுமுனைவர் ஆராய்ச்சி திட்டம் இருக்கிறது. இதில் அனைத்து சாதியினரும் விண்ணப்பித்து அதன் நிதி உதவியைப் பெற்றுக் கொள்ளலாம். தலித் ஒருவர் முதுமுனைவர் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தலித்துகளுக்கென இருக்கின்ற திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பினால் முனைவர் பட்டம் பெற்றிருத்தல், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டிருத்தல் ஆகியன தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் கோத்தாரி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை அவர் முனைவர் பட்ட ஆய்வேட்டினை சமர்ப்பித்திருப்பதே போதுமானது. மேலும், ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிட்டிருக்க வேண்டாம்.

அதாவது அனைத்து சாதியினரும் விண்ணப்பிக்கக்கூடிய கோத்தாரி முதுமுனைவர் ஆராய்ச்சி நிதிக்கு குறைந்த தகுதிகளும், தலித்துகளுக்கான திட்டத்தில் கூடுதலான தகுதிகளும் இருக்க வேண்டும் என்று விதியை ஏற்படுத்தியுள்ளது பல்கலைக் கழக மானியக் குழு. அறிவியல் புலத்தில் முதுமுனைவர் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தலித்துகள் விரும்பினால் அவர்கள் கோத்தாரி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இயலும். ஆனால் எத்தனை தலித் மாணவர்கள் அறிவியலில் முனைவர் பட்டத்தில் ஈடுபட்டு அதற்கான ஆய்வேட்டினை சமர்ப்பித்திருக்கின்றனர் என்றால்? அத்தகைய நபர்களை காண்பது அரிது. சமூக அறிவியல் புலத்தில் முதுமுனைவர் ஆராய்ச்சியில் ஈடுபட தலித்துகள் விரும்பினால் அவர்களால் ஆய்வுப் பட்டம் சமர்ப்பித்ததும் அதில் சேர்வது இயலாது. முனைவர் பட்ட ஆய்வேட்டினை சமர்ப்பித்த பின்னர் அது மதிப்பீடு செய்யப்பட்டு பட்டம் வழங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு அல்லது அதற்கு மேலான வருடங்கள்கூட ஆகலாம். அது வரை முதுமுனைவர் ஆராய்ச்சி நிதிக்கு விண்ணப்பிக்காமலேயே காத்திருப்பது என்பது ஆராய்ச்சியில் ஈடுபடுவதில் தொய்வினை ஏற்படுத்தக்கூடும். இதன் விளைவு தலித்துகள் முதுமுனைவர் ஆராய்ச்சியில் ஈடுபடும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்காமல் போகும் அபாயமே இருக்கிறது.

முடிவுரை

காலனிய ஆட்சிக் காலத்தில் கல்வி பயில்வது என்பதே வேலை வாய்ப்பிற்க்கான உத்தரவாதத்தினைக் கொடுத்தது. அப்பொழுது சமூக அறிவியல் படித்தால் வேலை கிடைப்பது அரிது என்றோ அல்லது அறிவியல் படித்தால் வேலை கிடைத்துவிடும் என்ற நிலையோ இருந்திருக்கவில்லை. இக்காலத்தில் தலித்துகளை சமூக அறிவியல் புலத்தில் கல்வி கற்பதை திட்டமிட்டே விலக்கினர் சாதி இந்துக்கள். இன்றைய காலங்களில் சமூக அறிவியல் புலத்திற்கான மதிப்பு குறைந்து விட்டது, அறிவியல் புலத்தில் பட்டம் பெற்றால் வேலை வாய்ப்பு கிடைப்பது மிக எளிதாக இருந்து வருகிறது. ஆனால் அறிவியல் புலத்தில் கல்வி கற்பதிலிருந்து தலித்துகளை திட்டமிட்டு விலக்கப்படுகிறார்.

காலனிய ஆட்சிக் காலத்திலும் இன்றும் தலித்துகள் கல்விப் புலத்திலிருந்து விலக்கப்படுவதற்கு இடையில் வேற்றுமை இல்லை. இந்த விலக்குதல் தலித்துகளை பொருளாதாரத்தில் முன்னெறுவதிலிருந்து தடுத்துவிடுகிறது. இதனால் தலித்துகள் மேலும் மேலும் சமுக பண்பாட்டு மற்றும் அரசியல் வெளியிலிருந்து விலக்கப்படுவதற்கே வித்திடும். கோடை விடுமுறைக்குப் பின்னர் கல்வி நிலையங்கள் திறக்கின்ற பொழுது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கட்டாய நன்கொடை என்ற பெயரில் நடைபெறும் கல்வி வணிகத்திற்கு எதிராக கல்வி அமைச்சர் மற்றும் சமூக ஆர்வலர்களின் குரல் கொடுக்கின்றனர், மாணவர் இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. தலித்துகளுக்கு முதலில் அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைத்தல் அதன் பின்னர் கட்டாய நன்கொடை என இரண்டு சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. படிப்பதற்கே இடமே கிடைக்காத பொழுது தலித்துகள் இடம் கிடைப்பதற்கான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இப்போராட்டம் அவர்களால் “தனி”த்தே நடத்தப்படுகிறது, “பொது” மக்களின் ஆதரவு அதற்கு இல்லாதிருக்கிறது.

[1] Suma Chitnis, 'Education for Equality:Case of Scheduled Castes in Higher Education', Economic and

Political Weekly, Vol. VII (August: 1972), pp.1675-1681.

[1] Kusum K Premi, 'Educational for the Scheduled Castes: Role of Protective Discrimination in

Equalisation', Economic and Political Weekly, Vol. IX (November: 1974), pp.1902-1910.

[1] A. R. Kamat, Education and Social Change amongst the Scheduled Castes and Scheduled Tribes,

Economic and Political Weekly, (August: 1981), pp.1279-1284.

[1] L. F. Rush brook Williams, India in 1920 (Calcutta: Superintendent Government Printing, 1921), p. 158.

[1] MLCD, 27 January 1932, Vol. LIX, p. 145.

[1] MLCD, 24 February 1930, Vol. LII, p. 31.

[1] MLCD, 28 November, 1938, Vol. VIII, p.85.

[1] K. Ragupathi, The History of Devendrakula Vellalar Movement in Tamil Nadu, 1920-2000, an

unpublished Ph.D. submitted to Manonmaniam Sundaranar University, Tirunelveli (December: 2007), p. 96-97.

[1] MLCD, 04 March 1926, Vol. XXVIII, p. 95, 27 November 1928, Vol. XLV, p.183.

[1] MLCD, 26 August 1925, Vol. XXIV, pp.788-789.

[1] காலனிய ஆட்சிக்காலத்தில் பகல் மற்றும் இரவுநேரங்களில் இயங்கும் பள்ளிகள் இருந்தன

[1] MLCD, 06 September 1926, Vol. XXXII, pp. 292-293.

[1] MLCD, 01 November 1933, Vol. LXVIII, p.286.

[1] MLCD, 01 November 1933, Vol. LXVIII, p.286.

[1] MLCD, 04 September 1926, Vol. XXXII, pp. 219-220.

[1] L. F. Rush brook Williams, India in 1921-22 (Calcutta: Superintendent Government Printing, 1922), p.

218.

[1] MLCD, 28 November, 1938, Vol. VIII, p.85.

[1] MLCD, 25 March 1924, p. 1089, MLCD, 24 February 1930, Vol. LII, p.31.

[1] L. F. Rushbrook Williams, India in 1920 (Calcutta: Superintendent of Government Printing, 1921), p.

159.

[1] Madras Government and Uplift of Harijans, Harijans, (October: 1934), Vol. II, No. 37, p. 294.

[1] MLCD, 04 March 1927, Vol. XXXIV, pp.256-257.

[1] MLCD, 06 September 1926, Vol. XXXII, pp. 292-293.

[1] MLCD, 14 December 1925, p.26.

[1] தகவல்:பாலசுப்பிரமணியன் , திருப்பனிகரிசல்குலம்.

[1] MLCD, 06 September 1926, Vol. XXXII, pp. 292-293.

[1] Grant of Concession to Harijans (Madras: Government of Madras, 1959), p. 2.

[1] அம்பேத்கர் பேச்சும் எழுத்தும், தொகுதி:19 பக்:35&40.

[1] கள ஆய்வு 21 ஜனவரி 2009

[1] துண்டறிக்கை, ஆதிதிராவிடன் புரட்சிக்கழகம், திருநெல்வேலி மாவட்டம்

[1] தகவல்: எட்வின், திருநெல்வேலி 01 ஜூலை 2009

[1] கோ ரகுபதி, அந்தப் பாவிகளை தண்டிப்பாராக, 2006ல் எழுதி முடிக்கப்பட்ட ஆனால் வெளியிடப்பட்டிராத சுய வரலாறு

: பால்ஸி, அருமனை, கன்னியாகுமாரி மாவட்டம், 29 ஜூன் 2009.

அய். இளங்கோவன் வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே! எங்களிடம் வராதீர்கள், தலித் முரசு

(பிப்ரவரி: 2009), பக். 18-20.

(புதுவிசை ஜூலை 2009 இதழில் வெளிவந்த கட்டுரை)