Tuesday, September 29, 2009

பொருளாதார நெருக்கடியும் அமெரிக்காவில் வர்க்கமோதலின் மீள்எழுச்சியும்



1929 பின்னரான பாரிய பொருளாதார நிதி நெருக்கடி வோல் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கியான லெஹ்மன் பிரதர்ஸின் வீழ்ச்சியுடன் ஆரம்பித்து கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. பல பொருளாதார பகுப்பாய்வாளர்கள் தற்போதைய நெருக்கடி பெருமந்தநிலையைக்கூட மறைத்துவிடும் தன்மையை கொண்டுள்ளது என்று அதிகரித்தளவில் நம்புகின்றனர். இந்த நெருக்கடி மாதங்கள் என்றில்லாது பல ஆண்டுகள் நீடிப்பதுடன் இதன் நீண்ட கால விளைவுகள் மிகப் பாரியதாக இருக்கும். வரலாறு படைக்கப்படுகிறது, இந்த நெருக்கடியில் இருந்து வெளிவரும் உலகம் செப்டம்பர் 15, 2008 அன்று லெஹ்மன் பிரதர்ஸ் சரியும் முன் இருந்த உலகில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையானதாக இருக்கும்.

பொருளாதார நிலைமுறிவின் அளவை வரையறுத்துக்கொள்ளவது கடினமாகும். உலக நிதியக்கரைப்பை தூண்டிய பொறுப்பற்ற செயல்களை நடத்திய வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்களை நிலைநிறுத்துவதற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் சூறையாடி அளித்த டிரில்லியன் கணக்கான டாலர்கள் வேறு எந்தப் பொருளாதார வரலாற்றிலும் இதற்கு முன்பு இருந்ததில்லை. போர்ட் நாக்ஸில் (திஷீக்ஷீt ரிஸீஷீஜ்) உள்ள அனைத்துத் தங்கத்தையும் ஒரு பெரும் குற்றபுத்தி உடையவன் திருடிவிடக் கூடுமேயானால், அக்குவிப்பின் மதிப்பு கூட பிரச்சனைக்குரிய சொத்துக்களை விடுவிக்கும் திட்டத்தில் (ஜிக்ஷீஷீuதீறீமீபீ கிssமீt ஸிமீறீவீமீயீ றிக்ஷீஷீரீக்ஷீணீனீ-ஜிகிஸிறி) வங்கிகளுக்கு அள்ளிக் கொடுக்கப்பட்ட பணத்தைவிட பெரிதும் குறைவாக இருக்கும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கணக்குப்படி வங்கிகளின் இழப்புக்கள் கிட்டத்தட்ட 4 டிரில்லியன் டாலராக இருக்கக்கூடும். மொத்த இழப்புக்கள் 50 டிரில்லியன் டாலர் என இருக்கும். இதில் 25 டிரில்லியன் டாலரில் இருந்து 30 டிரில்லியன் டாலர் வரை உலகப் பங்குச் சந்தைகளில் பங்கு மதிப்புக்களின் சரிவும் அடங்கும்.

உலகப் பொருளாதாரச் சரிவின் விரைவுத்தன்மை முன்னோடியில்லாததாகும். 2008 உடைவின் உடனடிப் பாதிப்பை 1929 உடன் ஒப்பிடுகையில், இரு புகழ்பெற்ற பொருளாதார வல்லுனர்களான ஙிணீக்ஷீக்ஷீஹ் ணிவீநீலீமீஸீரீக்ஷீமீமீஸீ, ரிமீஸ்வீஸீ ளி'ஸிஷீuக்ஷீளீமீ தற்போதைய நிலைமை மிக மோசம் என்று கூறியுள்ளனர். 1929 உடைவைத் தொடர்ந்த ஆறு மாத காலத்தில் ஏற்பட்ட 5 சதவிகித குறைவுடன் ஒப்பிட்டால் தற்போதைய உற்பத்தி 12 சதவிகிதம் சரிவுற்றுள்ளது. முந்தைய நெருக்கடியில் 5 சதவிகித வீழ்ச்சி என்று இருந்த வணிகத்துடன் ஒப்பிட்டால், இது தற்பொழுது 16 சதவிகித வீழ்ச்சி ஆகும். 1929 வீழ்ச்சியின் மிக முக்கிய நிகழ்வு வோல் ஸ்ட்ரீட் பாரியளவில் சரிந்தது என்றாலும், 2008 கடைசி மாதங்கள் மற்றும் 2009 முதல் மாதங்களில் சந்தைச் சரிவு மிகமிக அதிகமாகும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் முன்னோடியில்லாத வகையில் உலக உற்பத்தி சரிவைக் கண்டுள்ளது. மார்ச் வரை, ஐரோப்பிய உற்பத்தி ஓராண்டிற்கு முன்பு இருந்ததைவிட 12 சதவிகிதம் சரிந்துவிட்டது, பிரேசிலிய உற்பத்தி 15 சதவிகிதச் சரிவு; தைவானில் உற்பத்தி 43 சதவிகிதம் குறைந்துள்ளது; அமெரிக்காவில் சரிவு இதுவரை 11 சதவிகிதம். வணிகத்தை பொறுத்த வரையில் ஜேர்மனிய ஏற்றுமதிகள் 20 சதவிகிதம் குறைந்துவிட்டன; ஜப்பானின் ஏற்றுமதிகள் 46 சதவிகிதம் சரிந்து விட்டன; மேலும் அமெரிக்க ஏற்றுமதிகள் 23 சதவிகிதம் குறைந்துவிட்டன.

பொருளாதார நெருக்கடியின் அளவு மற்றும் அதன் அதிர்ச்சிக்கு உட்படுத்தும் பாதிப்பின் தன்மை பற்றிய தெளிவான புள்ளிவிவரங்களின் குறிப்புக்கள் வேலையின்மையுடன் தொடர்புடைய புள்ளிவிவரங்கள் மூலம் அறியப்படுகின்றன. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (மிலிளி) 2009ம் ஆண்டு நிறீஷீதீணீறீ ஜிக்ஷீமீஸீபீs அறிக்கை உறையவைக்கும் தகவலைக் கொடுக்கிறது. 2008ல் வேலையின்மை முந்தைய ஆண்டை விட 10.7 மில்லியன் அதிகமாயிற்று. இது 1998 ஆசிய நிதிய நெருக்கடிக் காலத்தில் இருந்து மிக அதிகமானது ஆகும். உலகில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 190 மில்லியன் என்று ஆயிற்று; இவர்களுள் 109 மில்லியன் ஆண்கள், 81 மில்லியன் பெண்கள் ஆவர். இளைஞர்களிடையே வேலையின்மை என்பது 76 மில்லியனை எட்டியுள்ளது.

2009 ல் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (மிலிளி) வேலையின்மை கணிப்புக்கள் மூன்று வெவ்வேறு நெருக்கடி நிலைகளை தளமாகக் கொண்டவை. சர்வதேச தொழிலாளர் அமைப்பே அதிகம் நம்பும் மதிப்பீடு வரக்கூடிய வேலையின்மை உயர்வு 30ல் இருந்து 50 மில்லியன் மக்கள் வரை அதிகரிக்கலாம் என்ற நிலைப்பாடுதான். உண்மையான எண்ணிக்கை கூடுலாகத்தான் இருக்கும்.

அதிகம் அபிவிருத்தியடையாத நாடுகளின் வறுமைக் கோட்டில் நுழைவு என்பது நாளன்றுக்கு 2 டாலர் வருமானம் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மிக வறுமையான நிலையாக நாளன்றுக்கு 1.25 டாலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி இன்னும் கூடுதலாக 200 மில்லியன் தொழிலாளர்களை ஆழ்ந்த வறுமையில் தள்ளும் நிலையை தோற்றுவிக்கும் என்றும் இந்த அமைப்பு கணித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு மதிப்பிட்டுள்ள மற்றொரு முக்கிய பிரிவு பாதுகாப்பற்ற நிலையில் வேலை இருப்பதாகும். அதாவது மிகக் குறைந்த ஊதியங்கள், மோசமான பணி நிலைகள், உயர் வாய்ப்புக்கள் இல்லாத நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்படுதல் என்பதும் ஆகும். இத்தகைய தொழிலாளர்களின் எண்ணிக்கை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கருத்தின்படி 2008ல் 84 மில்லியன் அதிகரித்து மொத்தம் 1.6 பில்லியன் எனப் போயிற்று.

அதிகம் அபிவிருத்தியடையாத பகுதிகள் சமூக நிலைமை ஏற்கனவே பேரழிவு தரக்கூடிய நிலையில் இருக்கையில், முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி மோசமான பாதிப்பைத் தொழிலாள வர்க்கத்திடையே ஏற்படுத்தியுள்ளது. 30 பணக்கார நாடுகளில் பொருளாதார நெருக்கடி 25 மில்லியன் மக்களுக்கு வேலையின்மையை கூடுதலாகக் கொடுக்கும்.

அமெரிக்காவில் நிலைமை தொடர்ந்து சரிவடைகிறது. ஏப்ரல் மாதம் மற்றும் 563,000 மக்கள் தங்கள் வேலைகளை இழந்து தேசிய வேலையின்மை விகிதம் 8.9 என உயர்ந்தது. இப்பொழுது வேலையில்லா தொழிலாளர்களின் எண்ணிக்கை 13.7 மில்லியன் ஆகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தில் இது மிக உயர்ந்த எண்ணிக்கை ஆகும். பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து 6,000,000 தொழிலாளர்கள் வேலையில் இருந்து அகற்றப்பட்டுவிட்டனர். மார்ச் மாதம் வேலையின்மை கலிபோர்னியாவில் 62,000 அதிகரித்தது, புளோரிடாவில் 51,000 அதிகரித்தது, டெக்சாஸில் 47,000 அதிகரித்தது, வட கரோலினாவில் 41,000, இல்லிநோய்ஸில் 39,000, ஒகையோவில் 37,000 அதிகரித்தது. பிராந்திய அளவில் மிக அதிக வேலையின்மை மேற்கில் இருந்தது; இப்பொழுது அங்கு அது 9.8 சதவிகிதமாக உள்ளது. இது மத்திய மேற்கில் 9.0 ஆக உள்ளது.

மாநிலவாரியாக காணும்போது மிச்சிகனில் வேலையின்மை விகிதம் (மார்ச்சை ஒட்டி) 12.6 என நாட்டில் மிக அதிகமானதாக இருந்தது. இதைத் தொடர்ந்து ஒரேகான் 12.1 சதவிகிதம், தெற்கு கரோலினா 11.4 சதவிகிதம், கலிபோர்னியா 11.2 சதவிகிதம், வட கரோலினா 10.8 சதவிகிதம், ரோட் ஐலந்து 105 சதவிகிதம், நெவடா 10.4 சதவிகிதம் மற்றும் இந்தியானாவில் 10 சதவிகிதம் வேலையின்மை என்று உள்ளது.

இந்த வேலையின்மை தரங்கள் மற்ற தீவிர சமூக இடர்ப்பாடுகளின் அறிகுறிகளாக மாறுகின்றன: பேரலைகள் என ஏலத்திற்கு விடப்படுதல்கள், தனிநபர் திவால்தன்மை, கல்லூரிகளில் சேர்வதில் வீழ்ச்சி, அதிகரிக்கும் குற்ற விகிதங்கள், சுகாதார, பொதுநலனில் மக்கள் காணும் பொதுவான சரிவு ஆகியவை ஏற்பட்டுள்ளன. நாடெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின்மீது 10 சதவிகிதம் அல்லது அதற்கு மேலும் என்று ஊதிய வெட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவை அவர்களுடைய வாழ்க்கைத் தரங்களை அரித்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களை நிதியப் பேரழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளது.

வருங்காலம் பற்றி என்ன கணிக்க முடியும்? எந்தக் கட்டத்தில் "மிகக் கீழ் நிலை" என்பது அடையப்படும், ஒரு "மறு எழுச்சி" என்பது ஆரம்பமாகும்? சமீபத்தில் மார்ச் மாத மோச நிலையில் இருந்து உலகச் சந்தைகள் எழுச்சி பெற்றது ஒரு திருப்பத்தின் ஆரம்பம் என்று கூறப்படுகிறது. வங்கி முறைக்குள் பொதுப் பணத்தை பல பில்லியன் டாலர்கள் உட்செலுத்தியதை தவிர, மந்த நிலை தவிர்க்க முடியாமல் முடிவிற்கு வந்துவிட்டது என்று கூறும் பல நம்பிக்கை மிகுந்த கணிப்புக்களுக்கு ஆதாரமாக உறுதியான தகவல்கள் அதிகம் இல்லை. மிகச்சமீபத்திய அமெரிக்க வேலையின்மை புள்ளிவிவரங்கள் சற்றே குறைவான வேலை இழப்புக்கள் விகிதத்தை உறுதி கூறுகின்றனவே அன்றி வேறு எதையும் கூறவில்லை. அது ஒன்றும் பெரிய செய்தி எனக் கூற முடியாது. மேலும் "மறு எழுச்சி" பற்றி தவிர்க்க முடியாத ஊகம் தற்போதைய நெருக்கடி பற்றிய தவறான விளக்கத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. அது வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறுவதற்கில்லை, ஒரு கட்டத்தில் ஊகத்தில் சற்று முன்னேற்றம் இருக்கலாம். அதே போல் பொருளாதார நிலைமை இன்னும் மோசமாகக் கூடும் என்று நினைப்பதும் கடினம் அல்ல.

ஆனால் சந்தைகளிலும் உலகப் பொருளாதாரத்தின் பிற குறியீடுகளில் எத்தகைய குறுகிய கால ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், இவை முன்பு இருந்த நிலைக்கு திரும்பப் போவதில்லை. முந்தைய நிலைமைகள் சென்றுவிட்டன, மீண்டும் வாரா. இது உலக நிதிய முறைக்கு ஏற்பட்டுவிட்ட மகத்தான சேதத்தினால் மட்டும் அல்ல. இந்த நெருக்கடி இரண்டாம் உலகப் போருக்குப் பின் வெளிப்பட்ட உலக முதலாளித்துவத்தின் உலகளாவிய கட்டமைப்பின் முறிவைக் குறிக்கிறது. அமெரிக்காவில் இந்த நெருக்கடி தோன்றியது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. இந்த நெருக்கடியின் இன்றியமையாத முக்கியத்துவம் அமெரிக்காவில் உலக மேலாதிக்க பொருளாரார நிலைமை நீண்ட காலமாக சரிந்துவருவதில் இருந்து வந்துள்ளது என்பதுதான் நெருக்கடியின் துல்லியமான உண்மை ஆகும்.

அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தின் அடிப்படை மறுகட்டமைப்பு மற்றும் அது அடித்தளமாக கொண்டிருக்கும் சமூக வர்க்க உறவுகளில் மறுகட்டமைப்பு நடந்து கொண்டிருக்கும் வடிவைத்தான் இந்த நெருக்கடி கொண்டுள்ளது. இது இரண்டில் ஒரு வழியில்தான் தீர்க்கப்பட முடியும். ஒரு முதலாளித்துவ முறை அல்லது ஒரு சோசலிச அடிப்படையில். முதலாவதான முதலாளித்துவ முறையின்படி என்றால் அமெரிக்காவிலும், உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மிக மோசமான அளவிற்கு குறைந்திடும் என்ற பொருளைத்தரும். இத்தீர்விற்கு பாரிய உள்நாட்டு அடக்குமுறை, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் தகர்க்கப்படுதல் மற்றும் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் காணப்பட்டிராத அளவிற்கு இராணுவ வன்முறை கட்டவிழ்த்தல் ஆகியவை வரும்.

இந்தப் பேரழிவிற்கு ஒரே மாற்றீடு சோசலிசத் தீர்வுதான். அதற்கு அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுதல், தொழில்துறை, நிதிய மற்றும் இயற்கை இருப்புக்கள் மீது மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டை நிறுவதல் மற்றும் அழிவுதரும் இலாப, தனியார் சொத்து முறையைத் தொடர்தல் என்பதற்கு பதிலாக சமூத்தின் தேவைகள் முழுவதையும் தீர்த்து வைத்தலுக்கு அர்ப்பணிக்கப்படும் அறிவார்ந்த முறையில் உலகப் பொருளாதாரத்தை வளர்த்தல் என்பவை தேவையாகும்.

இந்த நெருக்கடி கடந்த 30 ஆண்டுகளாக வளர்ச்சியுற்ற அமெரிக்க ஊக்கம் பெற்ற "தடையற்ற சந்தை" முதலாளித்துவத்தை தளமாகக் கொண்ட உலக முதலாளித்துவ முறையின் ஊழல் மற்றும் ஒட்டுண்ணித் தன்மைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. சமூகத்தின் ஒரு மிகச் சிறிய பிரிவு பரந்த முறையில் செல்வக் கொழிப்பு அடைதலும், முன்னோடியில்லாத அளவிற்கு சமூக சமத்துவமின்மை பெருகுவதும் ஊழல் நலிந்த, நோயுற்ற பொருளாதார முறையில் அடையாளங்கள் ஆகும். நெருக்கடியின் கடுமையான தன்மையில், பொருளாதார வர்ணனையாளர்கள் பெருகிய முறையில் இந்த நெருக்கடிக்கு வழிவகுத்த கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் 1979ல் பிரிட்டனில் மார்க்ரெட் தாட்சர் பதவிக்கு வந்த காலம், மற்றும் அமெரிக்காவில் ரோனால்ட் ரேகன் 1980ல் பதவிக்கு வந்த நேரம் முதல் ஆரம்பிக்கப்பட்டன என்று ஒப்புக் கொள்கின்றனர். இவர்கள் இருவரும் அடைந்த வெற்றிகள், ஜோன் மேநார்ட் கீன்ஸினால் (யிஷீலீஸீ விணீஹ்ஸீணீக்ஷீபீ ரிமீஹ்ஸீமீs) முன்வைக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட முதலாளித்துவ முறையை நிராகரித்து மில்ரன் ப்ரீட்மானுடைய (விவீறீtஷீஸீ திக்ஷீவீமீபீனீணீஸீ) "அடிப்படைவாத" தடையற்ற சந்தை அறிமுகப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்தது.

இப்பகுப்பாய்வில் உண்மையின் கூறுபாடு உள்ளது; ஆனால் இது இன்னும் அடிப்படைப் பிரச்சினையைத் தவிர்க்கிறது: இந்த மாறுதல் ஏன் நடக்கிறது? கீன்சியனிசத்தில் இருந்து ப்ரீட்மனின் தடையற்ற சந்தை அடிப்படைவாதத்திற்கு மாறியது பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்தின் மிகச் சக்தி வாய்ந்த பிரிவுகள் ஏற்கனவே இருந்த முதலாளித்துவ முறையின் நெருக்கடிக்கான பிரதிபலிப்பாகும். 1967 இலேயே கீன்சினால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதலாளித்துவத்தை உறுதிப்படுத்திக் கட்டமைக்க தயாரித்திருந்த வழிவகைகள் முறிந்துவருகின்றன என்பதற்கான பெருகிய அடையாளங்கள் இருந்தன. 1944ம் ஆண்டு பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில் (ஙிக்ஷீமீttஷீஸீ கீஷீஷீபீs சிஷீஸீயீமீக்ஷீமீஸீநீமீ) ஏற்கப்பட்டிருந்த டாலர்-தங்க மாற்று முறை, போருக்குப் பிந்தைய பொருளாதார விரிவாக்கத்திற்கு அடிப்படையைக் கொடுத்த சர்வதேச உறுதியான நிதிய முறையை நிறுவியது, 1960 களின் கடைசிப் பகுதிகளில் பெருகிய முறையில் செயல்பட முடியாத நிலை வந்தது. ஆகஸ்ட் 1971ல் அந்த முறை முற்றிலும் முறிவு அடைந்தது; ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் டாலர்-தங்க மாற்று முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஒன்றுடன் ஒன்று தொடர்புற்ற மூன்று காரணிகள் பிரெட்டன் வூட்ஸ் முறிவிற்கு காரணமாயின. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் அமெரிக்கா பெற்றிருந்த மேலாதிக்க பொருளாதார நிலைமை, 1950களிலும் 1960களிலும் படிப்படியே அரிப்பை பெற்றது முதலாவது காரணம் ஆகும். 1960 களின் நடுப்பகுதியில் இலாப விகிதத்தின் பொதுச் சரிவு ஏற்பட்டு அமெரிக்க, ஐரோப்பிய. ஜப்பானிய பெருநிறுவனங்களுக்கு கணிசமான அழுத்தத்தை கொடுத்து உலகப் போட்டி அழுத்தங்களை தீவிரமாக்கியது இரண்டாவது காரணம் ஆகும். இறுதியாக இன்னும் தீவிரமாக நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக தொழிலாள வர்க்கத்தை சுரண்ட நினைத்த முதலாளித்துவ வர்க்கத்தின் முயற்சிகளை உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணம் திகைப்பிற்கு உட்படுத்தியது ஆகும்.

1967 முதல் 1975 வரையிலான காலம் தொழிலாள வர்க்கப் போர்க்குணம் மற்றும் அரசியல் தீவிரமயமாக்கலின் வெடிப்பு ஆகியவற்றால் குணாதிசயப்படுத்தப்பட்டிருந்தது. மே-ஜூன் 1968ல் பிரெஞ்சு பொது வேலை நிறுத்தம், இத்தாலியில் 1969ல் மிகப் பெரிய வேலைநிறுத்தம், தென்னமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி, வலதுசாரி பழைமைவாத அரசாங்கத்தை பதவியில் இருந்து பின்னர் வெளியேற்றிய பிரிட்டனில் சக்திவாய்ந்த வேலைநிறுத்துங்கள், போலந்தில் ஸ்ராலினிச ஆட்சியை அதிர்ச்சிக்கு உட்படுத்திய நிபீsஸீsளீ கப்பல்கட்டும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், அந்தந்த நாடுகளில் பின்னர் சர்வாதிகார ஆட்சிகளை இறுதியில் நசுக்கிவிட்ட கிரேக்க, போர்த்துகீசிய, ஸ்பெயின் தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆகியவை புரட்சிகர பரிணாமத்தைக் கிட்டத்தட்ட அடைந்த, தொழிலாளர் போர்க்குணத்தின் மிக முக்கியமான, உலகளாவிய வெளிப்பாடு ஆகும். இந்த இயக்கம் முக்கிய முதலாளித்துவ மையங்களுக்கு தொலைவிலும் விரிவடைந்திருந்தது. ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் மக்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க, ஐரோப்பிய காலனித்துவ முறைகளின் எஞ்சிய பகுதிகள் அகற்றப்படுவதற்கு எதிரான வெகுஜன போராட்டங்களில் ஈடுபட்டனர். வியட்நாமிய மக்களின் போராட்டமும் இந்த உலகளாவிய இயக்கத்தின் பெரும் வீரம் செறிந்த வெளிப்பாடு ஆகும்.

அமெரிக்காவில் உள்ள தொழிலாள வர்க்கமும் இந்த உலகந்தழுவிய நிகழ்போக்கில் முக்கிய பங்கை கொண்டிருந்தது. 1950, 1960 களில் அமெரிக்க சமூகத்தை அதிர்ச்சிக்கு உட்படுத்திய வரலாற்றுப் புகழ்மிக்க குடியுரிமைகளுக்கான போராட்டம் சாராம்சத்தில் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மிக சுரண்டப்பட்ட, மிக வறிய பிரிவுகள் அமெரிக்க சமூகத்தின் வகுப்பு கட்டமைப்பில் வேரூன்றியிருந்த அடக்குமுறை, பிரிவினை இவற்றிற்கு எதிரானவையாகும். லொஸ் ஏஞ்சல்ஸ், நெவார்க் மற்றும் டெட்ரோயிட் போன்ற நகரங்களில் இப்போராட்டங்கள் ஒரு எழுச்சி வடிவமைப்பை கொண்டிருந்தன. மாநில அரசாங்கங்கள் இதற்கு விடையிறுக்கும் வகையில் தேசியப்பாதுகாப்புப் படைகளை திரட்டி இராணுவச்சட்டத்தையும் செயல்படுத்தினர். டெட்ரோயிட்டை பொறுத்தவரையில் ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் மக்கள் எழுச்சியை அடக்குவதற்கு மத்திய அரசின் துருப்புக்களை அனுப்பி வைத்தார்.

வர்க்கப் போர்க்குணத்தின் மிக அடிப்படை குறியீடான வேலைநிறுத்தம் 1960களின் நடுப்பகுதியில் இருந்து தொழிற்துறை தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் இடையே வியத்தகு முறையில் அதிகரித்தது. 1930கள் மற்றும் 1940களின் கடைசியில் சூறாவளியென நடைபெற்ற போராட்டங்களுக்கு பின்னர் 1950களிலும் 1960களின் ஆரம்பப்பகுதியிலும் படிப்படியாக வேலைநிறுத்தங்களில் சரிவு ஏற்பட்டது. 1959ம் ஆண்டுதான் இதற்கு விதிவிலக்கு; அந்த ஆண்டு 116 நாட்கள் கடுமையான வேலைநிறுத்தம் ஏற்பட்டு அதில் நூறாயிரக்கணக்கானன எஃகு நிறுவனங்களின் தொழிலாளர்கள் பங்கு பற்றி மில்லியன்கணக்கான மனித நாட்கள் உற்பத்தி நேரத்தில் இழக்கப்பட்டன. 1960க்கும் 1966க்கும் இடையே வேலைநிறுத்தங்களின் விளைவாக இழக்கப்பட்ட மனித நாட்கள் ஆண்டு ஒன்றுக்கு 10 முதல் 16 மில்லியனுக்கு இடைப்பட்டு ஊசலாடியது. 1967ல் இந்த நிலைமை முற்றிலும் மாறி வேலை நிறுத்தங்கள் முதலாளிகளுக்கு 31 மில்லியன் மனித நாட்களை இழப்பை ஏற்படுத்தின. இந்த எண்ணிக்கை 1968ல் 35 மில்லியன் மனித நாட்கள் என்று ஆயிற்று. 1969ல் அது சற்றே குறைந்து 29 மில்லியன் மனித நாட்கள் என்று இருந்தது. 1970ல் வேலை நிறுத்தங்களால் ஏற்பட்ட மனித நாட்கள் இழப்பு 52.7 மில்லியன் என்று உயர்ந்தது. அந்த ஆண்டில்தான் ஜெனரல் மோட்டார்ஸ§க்கு எதிராக கார்த் தொழிலாளர்கள் ஒரு இரு மாத காலம் நீடித்த வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். அந்த ஆண்டுதான் கென்ட் மாநில பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்புப் பிரிவு நான்கு மாணவர்களை படுகொலை செய்தது.




வேலைநிறுத்த அளவுகள் குறைந்து 1972, 1973ல் 16 மில்லியன் வேலை நாட்கள்தான் இழக்கப்பட்டன; இதற்குக் காரணம் ஊதியக் கோரிக்கைகளை கட்டுப்படுத்த நிறுவப்பட்ட அரசாங்கம்-நிர்வாகம்-தொழிலாளர் குழுக்களில் கிதிலி-சிமிளி, ஜிமீணீனீstமீக்ஷீs, ஹிகிகீ ஆகியவற்றின் கூட்டுழைப்பு ஆகும். ஆனால் 1974ம் ஆண்டு போர்க்கணமிக்க நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் தலைமையில் வேலை நிறுத்தங்கள் கிட்டத்தட்ட 32 மில்லியன் மனித நாட்களை தகர்த்தன. 1975ல் வேலைநிறுத்த அளவுகள் 17.5 மில்லியன் நாட்கள் இழப்பு என்று குறைந்தன. ஆனால் தசாப்தத்தின் எஞ்சிய பகுதியில் 1976ல் இருந்து 1980 முடிய வேலைநிறுத்தங்கள் முதலாளிகளுக்கு 20 முதல் 23 மில்லியன் மனித நாட்கள் இழப்பை ஏற்படுத்தின.

இப்புள்ளிவிவரங்கள் 1970கள் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் போர்க்குணத்திற்கு சான்றாக உள்ளவை. வர்க்கப் போராளித்தனத்தின் உயர்கட்டம் 1977-78 ல் நடந்த தேசிய நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஆகும். வேலைநிறுத்ததில் ஈடுபட்டவர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவம் பேச்சுவார்த்தைகள் மூலம் கொண்டு வந்த இரு விற்றுவிடும் ஒப்பந்தங்களை நிராகரித்து ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் வேலைக்கு திரும்புக என்று இட்ட ஆணையையும் மீறினர். ஜிம்மி கார்ட்டர் இகழ்வான ஜிணீயீt-பிணீக்ஷீtறீமீஹ் சட்டத்தின்கீழ் இதற்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வரலாற்றுப் பரிசீலனை கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்க சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை புரிந்து கொள்ள அவசியமானதாகும். இந்த ஆண்டு தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஆளும் வர்க்கம் மேற்கொண்ட கடுமையான எதிர் தாக்குதலை தொடக்கிய மூன்று நிகழ்வுகளின் 30வது நிறைவு ஆண்டைக் குறிப்பது ஆகும். இந்த எதிர் தாக்குதலுக்கான நிலைமைகள், 1960, 1970களின் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள், போர்க்குணத்தை கொண்டிருந்தாலும் சுயாதீன அரசியல் முன்னோக்கு இல்லை என்ற காரணத்தால் தோன்றியவை ஆகும். தொழிற்சங்க அதிகாரத்துவம் ஜனநாயகக் கட்சியுடன் கொண்டிருந்த கூட்டு வெகுஜன இயக்கத்தை முதலாளித்துவ அரசியல் மற்றும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் தளைகளுக்குள் அடக்கி வைத்திருந்தது. வேறுவிதமாகக்கூறினால், இந்த இயக்கம் இறுதியில் மேலே செல்ல முடியாத பாதையில் முடிவுற்றது. இது ஆளும் வர்க்கத்திற்கு முந்தைய தசாப்தங்களில் அது கொண்ட தாக்குதல்களை மீண்டும் செய்வதற்கான வாய்ப்பை கொடுத்து மேலும் தாக்குதலில் ஈடுபட வைத்தது.

இந்த எதிர் தாக்குதல் ஒரு ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜனாதிபதி கார்ட்டர் மத்திய வங்கிக் கூட்டமைப்பின் தலைவராக போல் வோல்க்கரை நியமித்ததில் தொடங்கியது. உலக சோசலிச வலைத் தளத்தின் முன்னோடியான ஜிலீமீ ஙிuறீறீமீtவீஸீ ஜூலை 27, 1979ல் இவருடைய நியமனம், "வேலைகள், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்கள் ஆகியவற்றின் மீதான யுத்தப் பிரகடனம் என்பதை குறிக்கிறது" என்று எச்சரித்திருந்தது. இப்பகுப்பாய்வு விரைவில் சரியென உறுதியாயிற்று. தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் முதுகெலும்பை முறிக்கும் முயற்சியில் வோல்க்கர் உடனே ஈடுபடும் வகையில் வட்டி விகிதங்களை முன்னோடியில்லாத அளவிற்கு உயர்த்தினார்; அது கடுமையான மந்தத்தை ஏற்படுத்தி வேலையின்மையை உயர்த்தியது. வோல்கக்ரின் கீழ் முக்கிய விகிதம் இறுதியில் 21.5 என்ற அளவிற்கு உயர்ந்துவிட்டது.

இரண்டாம் நிகழ்வு கிறைஸ்லர் கொடுத்த அறிவிப்பான அது டெட்ரோயிட்டில் உள்ள பல ஆயிரம் தொழிலாளர்களை கொண்ட புகழ்பெற்ற பிணீனீtக்ஷீணீனீநீளீ இல் உள்ள ஞிஷீபீரீமீ விணீவீஸீ முக்கிய ஆலையை மூட இருப்பதாகக் கூறியது ஆகும். இந்த முடிவு ஐக்கிய கார் தொழிலாளர் சங்கத்தினால் (ஹிகிகீ) ஏற்கப்பட்டது. அது வேலைகளை பாதுகாப்பதற்கு அடிமட்டத் தொழிலாளர்கள் விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டது. எதிர்ப்புக்கள் நெரிக்கப்பட்டு ஆலை எந்த எதிர்ப்பும் இல்லாமல் மூடப்பட்டது.

இறுதியாக, ஹிகிகீ அதிகாரத்துவம் கிறைஸ்லருக்கு ஊதியங்கள் மற்றும் பணிநேர விதிகளில் முக்கிய விட்டுக்கொடுப்புக்களை செய்ய முடிவெடுத்தது. இது தொழிற்சங்கம்-நிர்வாகம் ஒத்துழைப்பு என்ற வடிவமைப்பை தொடக்குவதற்கும், பின்னர் வேலைகள், ஊதியங்கள், பணி நிலைமகள் மற்றும் அமெரிக்க தொழிலாள வர்ககத்தின் அனைத்துப் பிரிவின் நலன்கள் ஆகியவற்றை தாக்குவதற்கும் பாதை வகுத்தது. இந்த நிகழ்வுகள் அனைத்துமே றேகன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு நடந்தவை. ஜனவரி 1981ல் அவர் அதிகாரத்திற்கு வந்தது, 1979ல் கார்ட்டர் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் தொடக்கிய போரை தீவிரப்படுத்தி விரைவுபடுத்தியது. றிகிஜிசிளி தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 11,000 விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளை பதவி நீக்கம் செய்த றேகன் ஜனாதிபதிக் காலத்தினை சுட்டிக்காட்டும் நிகழ்வு அனைத்து பெருநிறுவனங்களுக்கும் வேலைநிறுத்தங்கள் முறித்தல் மற்றும் தொழிற்சங்கங்களை உடைத்தல் என்பது சட்டபூர்வமானது மற்றும் அதற்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும் என்ற சைகையை அனுப்பியது. ஆனால் றேகன் றிகிஜிசிளி வை அழித்தது கிதிலி-சிமிளி அதிகாரத்துவத்தின் ஆதரவை அவர் பெற்றிராவிட்டால் முடியாது; பாதிக்கப்பட்ட விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு வந்த எந்த நடவடிக்கைகையும் அது எதிர்த்தது.

இதைத் தொடர்ந்த ஆண்டுகளில் கிதிலி-சிமிளி அதிகாரத்துவம் அரசாங்கம் மற்றும் பெருநிறுவனங்கள் வேலைநிறுத்தங்களை உடைப்பதற்கு ஒப்புதல் கொடுத்தது. 1980களில் வேலைநிறுத்தங்களுக்கு ஒன்றும் குறைவு இருக்கவில்லை. நிக்ஷீமீஹ்லீஷீuஸீபீ பஸ் சாரதிகள், கொன்டினென்டல் விமான ஓட்டிகள், றிலீமீறீஜீs ஞிஷீபீரீமீ செப்பு சருங்கத் தொழிலாளர்கள், பிஷீக்ஷீனீமீறீ இறைச்சி பதனிடும் தொழிலாளர்கள், கிஜி விணீssமீஹ் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் என்பவை 1980 களின் வேலைநிறுத்தங்களில் நன்கு அறியப்பட்ட சிலதான். இவையும் மற்ற வேலைநிறுத்தங்களும் கிதிலி-சிமிளி ஆல் தனிமைப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்டன. பிஷீக்ஷீனீணீறீ வேலைநிறுத்தத்தை பொறுத்தவரையில், ஹிஸீவீtமீபீ திஷீஷீபீ ணீஸீபீ சிஷீனீனீமீக்ஷீநீவீணீறீ கீஷீக்ஷீளீமீக்ஷீs ஹிஸீவீஷீஸீ வேலைநிறுத்தத்தின் மையத்தில் இருந்து உள்ளூர் சங்கத்தின் அங்கீகாரத்தை இரத்து செய்துவிட்டது.

இவை அரசாங்கம், ஜனநாயகக் கட்சி மற்றும் பெருவணிகத்துடன் வேலை நிறுத்தங்களை உடைப்பதில் ஒத்துழைத்த நிலையில், பாசிச இத்தாலியிலும், நாஜி ஜேர்மனியிலும் 1920 கள், 1930களில் தொழிலாளர்-நிர்வாகம் கூட்டு அமைப்புக்களை உருவாக்கிய மாதிரி தொழிற்சங்கங்கள் தடையற்றமுறையில் வெளிப்படையாக பெருநிறுவன உறவுகளில் நுழைந்தன. இவை தடையற்ற முறையில் தொழிற்சங்கம் மற்றும் நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறின. கூட்டுழைப்புவாத சிந்தனைப்போக்கிற்கு மாதிரியாக இருந்த நடவடிக்கையில் ஹிகிகீ தன்னுடைய பெயருக்கும் மூன்று பெரிய கார்த்தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையே "ஹிகிகீ-நிவி", "ஹிகிகீ-சிலீக்ஷீஹ்sறீமீக்ஷீ", "ஹிகிகீ-திஷீக்ஷீபீ" என்ற விதத்தில் ஒரு இடைக் கோட்டை (-) போட்டது.

ஒரு தசாப்தம் நாசவேலை நடத்தியபின் கிதிலி-சிமிளி, ஹிகிகீ, ஜிமீணீனீstமீக்ஷீs ஆகியவை பெயரளவிற்குத்தான் தொழிற்சங்கங்களாகின. தொழிலாள வர்க்க்தின் பாதுகாப்புடன் எவ்விதத்திலும் தொடர்புடைய அமைப்புக்களாக அவை இல்லாமற் போயின. மாறாக நிதிய மற்றும் மத்தியதர வர்க்கத்தின் உயர்ந்த அடுக்கின் சமூக நலன்கள், வலதுசாரி செயலர்கள் அடுக்கு இவற்றிற்கு அவை பணி புரிந்து பெறுநிறுவனங்களுக்காக, அவற்றின் ஒத்துழைப்புடன் தொழிலாளர்களை கண்காணித்தன.

தொழிலாள வர்க்கத்தின்மீது பெருநிறுவனக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள தொழிற்சங்கங்களின் தாக்கத்திற்கான சரியான புள்ளிவிவரச் சான்றுகள் அமெரிக்காவில் வேலைநிறுத்தங்கள் கிட்டத்தட்ட மறைந்து போனதுதான். 1990ல் இருந்து 1999க்குள் வேலைநிறுத்தத்தின் விளைவாக 6 மில்லியன் மனித நாட்கள் இழப்பு ஒரு ஆண்டில்கூட இருந்தது இல்லை. இந்த தசாப்தத்தில், நிலைமை இன்னும் மோசமாகப் போய்விட்டது. 17 மில்லியன் மனித நாட்களை இழக்க வைத்த நடிகர்களின் நீடித்த வேலைநிறுத்தத்தின் விளைவாக 20 மில்லியன் மனித நாட்கள் தகர்ந்த 2000ம் ஆண்டைத் தவிர, அடுத்த ஆண்டுகளில் (2002-2008) வேலைநிறுத்தங்கள் குறைந்த 659,000 நாட்களை 2002ல் இழந்ததில் இருந்து 2003ல் 4 மில்லியன் என உயர்ந்து நின்றதற்குள் ஊசலாடின. 2004ல் இருந்து வேலைநிறுத்தங்களினால் இழக்கப்பட்ட மனித நாட்கள் இழப்புக்கள் எண்ணிக்கை ஆண்டு ஒன்றுக்கு 2 மில்லியன் மனித நாட்கள்தாம்.

வர்க்கப் போராட்டம் வலதுசாரி தொழிற்சங்க அதிகாரத்துவ அமைப்புக்களால் அடக்கப்பட்டதன் விளைவுகள், சமூக சமத்துவமின்மை, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களில் தேக்கம் மற்றும் சரிவு, முன்னோடியில்லாத வகையில் அரசியல் அதிகாரத்தை செலுத்தும் நிதியத் தன்னலக்குழுவின் வெளிப்பாடு, ஜனநாயகம் அழிக்கப்பட்டது, இறுதியில் இராணுவவாதத்தின் வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் காணப்படலாம். அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் பிற்போக்குத்தன மற்றும் சமூக அளவில் அழிக்கும் தன்மையுடைய பொருளாதார வளர்ச்சி தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆழ்ந்து, தீவிரமாக நிர்வாகத்துடன் ஒத்துழைப்பதில் நம்பியிருந்தது.

ஆனால் இது ஒரு தனிப்பட்ட அமெரிக்க நிகழ்வு மட்டும் அல்ல என்பது வலியுறுத்தப்பட வேண்டும். இதை ஒத்த சமூக நிகழ்போக்குகள் சர்வதேச அளவில் நடைபெற்றன. 1968 முதல் 1975 வரையிலான காலத்தில் மகத்தான தொழிலாள வர்க்க எழுச்சியில் இருந்து முதலாளித்துவம் தப்பிப் பிழைத்தது; இதற்குக் காரணம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் காட்டிக் கொடுப்புக்கள்தாம். ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களும் தங்கள் இயல்பில் அமெரிக்காவில் முதலாளித்துவ சார்பு உடைய தொழிற்சங்கங்கள் கொண்டிருந்ததைப் போலவே பிற்போக்குத்தன பங்கை செயல்படுத்தின. பிரிட்டனில் மே 1979ல் மார்க்கரெட் தாட்சர் தேர்ந்தெடுக்கப்பட்டது தடையற்ற சந்தைக் கொள்கைகள் என்று அமெரிக்க கொள்கைகளை பிரதிபலித்த வகையில் அறிமுகம் ஆவதற்கு பாதை வகுத்ததுடன், அதையத்த சமூக விளைவுகளும் ஏற்பட்டன. அமெரிக்காவில் இருந்ததைப் போலவே தொழிலாளர் அதிகாரத்துவமும் இங்கு வலதுசாரி அரசாங்கத்தின் கொள்கைகளுக்காக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அடக்குவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

மேலும், ஸ்ராலினிச ஆட்சிகள் போருக்குப் பிந்தைய காலத்தில் அவை ஆதிக்கம் கொண்டிருந்த நாடுகளில் மீண்டும் முதலாளித்துவத்தை அறிமுகப்படுத்திய முடிவு கடந்த 20 ஆண்டுகளில் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது, முதலாளித்துவம் மீண்டும் கிழக்கு ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது ஆகியவை அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய முதலாளித்துவத்திற்கு சுரண்டுதலுக்கு மகத்தான புதிய இருப்புக்களை திறந்துவிட்டது. பொருளாதார வகைகளைவிட முக்கியத்துவம் வாய்ந்தது சீனாவில் ஸ்ராலினிச ஆட்சி முதலாளித்துவ முறையை மீண்டும் அறிமுகப்படுத்தியதாகும். சீனப் பொருளாதார மாற்றம், குறைவூதியச் செலவுடைய உற்பத்தி மையமாக உலக மூலதனத்திற்கு ஆனது என்பது 1980களில் தொடங்கியது. இந்த நிகழ்வுப்போக்கு சமூகப் போராட்டங்களை தோற்றுவித்து அவை 1989ல் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்களால் நடத்தப்பட்ட மிகப் பெரிய எதிர்ப்புக்களில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஜூன் 1989ல் தியானன்மென்னில் நடைபெற்ற படுகொலை ஸ்ராலினிச ஆட்சிகளில் வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை அடக்கியதில் மிக முக்கியமான நிகழ்வு ஆகும்.

முதலாளித்துவ நாடுகளில் வர்க்கப் போராட்டங்களை அடக்குதல் மற்றும் கிழக்கு ஐரோப்பா, சீனாவில் முதலாளித்துவத்தை மீட்டது 1980கள், 1990கள் மற்றும் 21ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் கடன்கள் நிறைந்திருந்த நிதிய தொழிலின் மகத்தான வளர்ச்சிக்கு தேவையான, சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவதுடன் தொடர்பைக் கொண்டது. இச்சூழலுக்கு சமூக, அரசியல் மற்றும் சட்டரீதியான அனைத்துத் தடைகளும் ஒடுக்கப்பட வேண்டும் என்று இருந்தது. அது மூலதனம் பொறுப்பற்ற முறையில் ஊக செயல்களில் ஈடுபட உதவியது.

ஒரு நீடித்த சமூக மற்றும் அரசியல் பிற்போக்குத்தனம் என்பது சமூக மற்றும் பொருளாதார முரண்பாடுகளை கட்டாயமாக, செயற்கையாக அடக்குவது என்பதைக் காட்டுகிறது. இந்த முரண்பாடுகள் எந்த அளவிற்கு அடக்கப்படுகின்றன என்பதின் அளவுதான் அதைத் தொடரும் நெருக்கடியின் ஆற்றலையும், தீவிரத்தையும் தீர்மானிக்கின்றது. எனவே தற்போதைய நெருக்கடியும் வெடிப்புத் தன்மை உடைய சமூக எழுச்சிகளுக்கு வகை செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

அதன் முதல் 100 நாட்களில் ஒபாமா நிர்வாகம் அதன் ஆற்றல்களை நிதியத் தன்னலக் குழுவின் செல்வம், பிற நலன்களை பாதுகாப்பதில் செலவிட்டுள்ளது. நிதி மந்திரி டிம் கீட்னர் நிர்வாகத்தின் பிணை எடுப்புத் திட்டத்தை அறிவித்ததை அடுத்துத் தொடங்கி, ஒபாமா கார்த் தொழிலில் மகத்தான மறுகட்டுமானத்திற்கு உதவியை வழங்கியபின் பலமடைந்த பங்குச் சந்தையில் சமீபத்திய ஏற்றம் வோல் ஸ்ட்ரீட் வெள்ளை மாளிகை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. வரிசெலுத்துபவர்கள் கொடுக்கும் நிதியில் இருந்து அளிக்கப்படும் வங்கிப் பிணை எடுப்பு நிதிய தன்னலக்குழுவிற்கு அதன் நலன்களை பாதுகாப்பதில் எச்செலவும் செய்யப்படும் என்பதைத் தெளிவாக்கியுள்ளது.

கார்த் தொழிற்துறை நெருக்கடியில் ஒபாமா குறுக்கிட்டது, நிர்வாகம் பரந்த பொருளாதார நிலைமுறிவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி மிகப் பெரிய அளவில், தொழிலாள வர்க்க இழப்பில், அமெரிக்காவிற்குள் சமூக உறவுகளை பெரிதும் மறுகட்டமைக்கும் விதத்தில் காண்கிறது என்பதை நிரூபித்துள்ளது. இதைத்தான் ஒபாமாவின் முக்கிய உதவியாளரான ஸிணீலீனீ ணினீணீஸீuமீறீ "ஒரு நெருக்கடி வீணாகச் சென்றுவிட அனுமதியாதீர்கள்" என்று கூறியபோது உண்மையில் மனதில் கொண்டிருந்திருக்கின்றார். மே 2ம் தேதி நியூ யோர்க் டைமஸின் வணிகப் பகுப்பாய்வாளர் திறீஷீஹ்பீ ழிஷீக்ஷீக்ஷீவீs எழுதினார்:

இது திரு.ஒபாமா, "சீனாவில் நிக்சன்" என்ற கணத்தை ஒத்திருப்பதைக் காண முடியும். ஒரு பழைமைவாத குடியரசுக் கட்சிக்காரர் உலகின் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் நாட்டுடன் உறவுகளை ஆரம்பிக்க தேவைப்பட்டது போல் ஒரு தாராளவாத ஜனநாயகவாதியான ஒபாமாவிற்கு ஹிகிகீ வை உடைக்கத் தேவைப்பட்டது.

ஆனால் கீழ்க்கண்ட முக்கிய கருத்தையும் சேர்த்துக்கொள்ளுவதும் அவசியமாகும். ஹிகிகீ வை ஒபாமா "உடைக்க" வேண்டிய தேவை இல்லை. நீண்ட காலம் முன்னரே எவ்வித சமூக அரசியல் அர்த்தத்திலும் அது ஒரு தொழிற்சங்கமாக இருக்கவில்லை. ஹிகிகீ ஒரு ஒட்டுண்ணித்தன, சுரண்டல் தன்மையுடைய, போலித்தனமாக அமைப்பு உறுப்பினர்கள் முறையில் அதன் வருமானத்தை தளமாகக் கொண்டுள்ள பரந்த நிர்வாகத்தின் நலன்களை செயல்படுத்தும் அமைப்பு ஆகும்.

ஹிகிகீஇன் சர்வதேசத் தலைமையகம் 2,000க்கும் மேலானவர்களை வேலைக்கு வைத்துள்ளது. ஹிகிகீ இன் சர்வதேச ஊழியர்களின் எண்ணிக்கை பற்றிய குறிப்புக்கள் கிட்டத்தட்ட 130 சட்ட வடிவு பக்கங்களில் இருக்கிறது. ஹிகிகீஇன் சர்வதேச தலைமையகத்தின் 2008ம் ஆண்டில் ஊழியர்களுக்கு ஊதியங்கள், படிகள், செலவினங்கள் என்ற விதத்தில் சங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி 101,896,200 டாலர் ஆகும்!

"பணிப்பிரதிநிதிகள்", "ஒழுங்கமைப்பாளர்கள்", "தட்டெழுத்து, குறுக்கெழுத்துப் பணிபுரிபவர்கள்", "நிர்வாக உதவியாளர்கள் என்று பெரும்பாலான ஊழியர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். வேறுவிதமாகக்கூறினால் அவர்கள் பெயரளவு வேலைதான் செய்பவர்கள், உயர்மட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு ஆதரவு கொடுத்தல் என்பதைத் தவிர வேறு எதையும் செய்யத் தேவையில்லை. கிட்டத்தட்ட மொத்த ஊழியர்களில் கால் பகுதியினர் ஆண்டு ஒன்றுக்கு 110,000 டாலர் பெறுகின்றனர். பல நூறு "பணிப் பிரதிநிதிகள்" ஊதியங்களையும், கூடுதல் ரொக்க உதவித் தொகைகளையும் பெறுகின்றனர்; இது $120,000 க்கும் $140,000 க்கும் இடையே இருக்கும். "பணிப் பிரதிநிதிகள்" மாதிரி என்பவர்கள் தன்னுடைய 40 களின் கடைசிப்பகுதியில் அல்லது 50 களில் இருக்கும் பகுதி ஓய்வுபெற்றுவிட்ட வலதுசாரி அதிகாரத்துவத்தினராவர். இவர்கள் உள்ளூர் சங்கத்தில் இருந்து வருபவர் (ஆலைகள் மூடலால் அவை இல்லாமற்கூட போயிருக்கும்) ஒரு சில நூறு தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒப்பந்த உடன்பாடுகளை செயல்படுத்தவதை கண்காணிக்கவேண்டும் என்ற சற்றே தெளிவற்ற "பொறுப்பு" இவருக்கு உண்டு. ஹிகிகீ வின் சர்வதேச ஊழியர்களில் பலர் குடும்ப உறவினர்கள் ஆவர்; இதையட்டி குடும்பங்கள் கூட்டாக ஆண்டு ஒன்றுக்கு தொழிற்சங்கத்தில் இருந்து வருவாயாக 200,000 டாலர் பெறுவது அசாதாரண நிகழ்வு அல்ல.

ஹிகிகீ இன் உறுப்பினர்கள் எண்ணிக்கை மிகப் பெரிதாகக் குறைந்தது நிர்வாகத்தின் நிதிய நலன்களில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 2001ல் தொழிற்சங்கம் 701,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இதன் மொத்த சொத்துக்கள் 1.1 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டிருந்தன. 2008 ஐ ஒட்டி இதன் உறுப்பினர் எண்ணிக்கை 431,000 என்று கிட்டத்தட்ட 40 சதவிகிதம் குறைந்துவிட்டது.




ஆனால் இதே காலத்தில் ஹிகிகீ இன் சொத்துக்கள் 1.2 பில்லியன் டாலர் என்று உயர்ந்தன.




இப்படிச் சொத்துக்கள் உயர்ந்தது ஹிகிகீ நிர்வாகத்தின் வருமானத்திலும் கணிசமான முன்னேற்றத்தை கொடுத்தது. 2000ம் ஆண்டு சர்வதேச தலைமையகத்தில் தன்னுடைய ஊழியர்களுக்கு 89.6 மில்லியன் டாலர் ஊதியமாகக் கொடுத்தது. 2008ல் ஊதியங்கள் 100.9 மில்லியன் டாலர் என்று உயர்ந்துவிட்டன. வேறுவிதத்தில் இப்புள்ளிவிவரங்களை பார்த்தால், 2000த்தில் ஹிகிகீ இன் மத்திய அதிகாரத்துவம் தொழிற்சங்க உறுப்பினர் ஒவ்வொருவரிடம் இருந்து 133 டாலரை பெற்றது. எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் மத்திய அதிகாரத்துவம் தொழிற்சங்க உறுப்பினரிடம் இருந்து தலா 233 டாலரை வருமானமாகப் பெற்றது.




இந்தப் புள்ளிவிவரங்களை பரிசீலிக்கையில் இவை ஹிகிகீ ன் சர்வதேச தலைமையகத்தில் உள்ள பணிபுரிபவர்களை மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள்கிறது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். இன்னும் பல மில்லியன்கள் உள்ளூர் தொழிற்சங்க நிலையங்களில் இருக்கும் ஊழியர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஹிகிகீ க்கும் அப்பால் பல நூற்றுக்கணக்கான மற்ற "தொழிற்சங்க" அமைப்புக்களும் இதே விதத்தில் செயல்படுகின்றன; இவை கூட்டாக பல பில்லியன் டாலர்களை ஊதியங்கள் இன்னும் பிற நலன்களுக்கு அள்ளிக் கொடுத்து உலகிலேயே மிக செலவு நிறைந்த பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொழிலாளர்-நிர்வாகக் கண்காணிப்பு பிரிவைத் தக்க வைத்துள்ளன.

ஒபாமா செய்தது அனைத்தும் ஹிகிகீஇன் ஒப்புதலுடன்தான் செயல்படுத்தப்பட்டுள்ளன. கிறைஸ்லருக்கும் ஹிகிகீ க்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம், நிர்வாகத்தின் திவால்தன்மைக்கு முன்பு இருந்ததில் கீழ்க்கண்ட விதிகள் இருந்தன: 1) வாழ்க்கைத்தரப் படிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன; 2) முன்பு பேச்சுவார்த்தைகள் மூலம் ஒப்புக் கொள்ளப்பட்ட வேலையின் அடிப்படையிலான மேலதிக கொடுப்பனவுகள் நிறுத்தி வைக்கப்படுகிறது; 3) கிறிஸ்துமஸ் காலத்தில் கொடுக்கப்படும் மேலதிக கொடுப்பனவுகள் நிறுத்திவைக்கப்படுகிறது; 4) ஊழியர்களுக்கு பணி இடைவெளிநேரம் கணிசமாக குறைக்கப்படுகிறது; 5) தற்காலிக தொழாளர்கள் பயன்படுத்தப்படுவது விரிவாக்கப்படுகிறது; 6) அனைத்து மோதல்களும் கட்டுப்பட வேண்டிய நடுவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.; 7) ஓய்வூதியக்காரர்களில் சுகாதார நலன்கள் உடனடியாகக் குறைக்கப்படுகின்றன.

கிறைஸ்லரின் திவால்தன்மை அறிவிப்பிற்கு பின்னர் ஹிகிகீ அதன் ஒபாமா நிர்வாகத்துடன் கொண்டிருக்கும் நெருக்கமான பிணைப்புக்கள் கிறைஸ்லர் தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்க பாதுகாப்பை அளிக்கும் என்று கூறுகிறது. இது ஒரு பொய் ஆகும். மீண்டும், நோரிஸை மேற்கோளிடுவாம்:

கடந்த ஆண்டுத் தேர்தலில் திரு ஒபாமாவிற்கு கொடுத்த ஆதரவிற்காக ஓய்வூதியர்களைவிட பங்குப்பத்திரம் பெற்றிருப்போரை மோசமாக நடத்துவதின் மூலம் ஹிகிகீ திறமையுடன் பரிசளிக்கப்படும் விதத்தில் நடாத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஓய்வூதியம் பெற்றவர்கள் உறுதியளிக்கப்பட்ட நலன்களை பெறுவதில் சற்று கூடுதலான வாய்ப்பைக் கொண்டிருக்கலாம், ஆனால் தற்போதைய தொழிலாளர்கள் தங்களது வேலையை தொடர்ந்து வைத்திருப்பதற்கு சற்று அதிகமான ஊதியத்தையே பெறுகின்றனர்.

இத்தகைய மகத்தான தாக்குதல்களில் ஹிகிகீ நேரடியாகத் தொடர்பு கொண்டிருப்பது கார்த் தொழிலாகளர்களின் இந்த பிற்போக்குத்தன அமைப்பின் எஞ்சியிருந்த நம்பகத்தன்மையையும் அழித்து விட்டது. தங்கள் அடிப்படை உரிமைகள் மற்றும் வர்க்க நலன்களை தொழிலாளர்கள் பாதுகாத்தல் என்பது ஹிகிகீ மற்றும் பிற பெருநிறுவன, முதலாளித்துவ அமைப்புக்களுக்கு எதிராக ஒரு எழுச்சியை ஏற்படுத்தும், கட்டாயமாக ஏற்படுத்த வேண்டும். முதலாளித்துவ முறைக்கு எதிராக தொழிலாளர்கள் போராட முன்வருகையில் வர்க்க அமைப்புக்களின் புதிய வடிவங்கள் வெளிப்படும்.

நாம் கடந்த 20 ஆண்டுகளில் வேலைநிறுத்தங்கள் எண்ணிக்கை மற்றும் வேலைநிறுத்தங்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அசாதாரண முறையில் குறைந்துவிட்டது பற்றிப் பரிசீலித்துள்ளோம். 1989ல் இருந்து 2009 வரை தொழில்துறை மோதல்கள் கிட்டத்தட்ட இல்லாமல் இருந்தது, உள்நாட்டுப் போருக்கு பிந்தைய அமெரிக்காவில் இந்த இரு தசாப்தங்களையும் தனிக்காலமாக காட்டுகிறது. 1870களில் இருந்து 1980 கள் வரை ஒவ்வொரு தசாப்தத்தையும் ஆராய்ந்தால், ஒவ்வொன்றும் தொழில்துறை வர்க்கப் மோதல்களின் முக்கிய அளவுகளைக் கண்டது என்பது நிரூபணம் ஆகும். 1990கள் மற்றும் 2000கள் மட்டும் தீவிர எதிரிடையில் உள்ளன.

ஆனால் கடந்த இரு தசாபத்தங்களில் இத்தகைய மாறுபட்ட தன்மை என்பது இக்காலத்தில் இருந்த மற்றொரு முக்கிய கூறுபாட்டின் பின்னணியில் பகுத்தாராயப்பட வேண்டும்: அதாவது அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மிகச் செல்வம் கொழித்த பிரிவுகளில் மகத்தான அளவிற்கு செல்வக் குவிப்பு நடந்த பின்னணியில். 1947ல் அமெரிக்க மக்களின் மிக செல்வம் படைத்த .01 சதவிகிதம் தேசிய வருமானத்தில் 1 சதவிகிததைக் கொண்டிருந்தது. இது 1929 வோல் ஸ்ட்ரீட் சரிவிற்கு முன்பு தேசிய வருமானத்தில் இப்பிரிவு கொண்டுந்த 3.61 சதவிகிதத்தைவிட குறிப்பிடத்தக்க வகையில் குறைவு ஆகும். இடைப்பட்ட ஆண்டுகள் வன்முறை நிறைந்த வர்க்கப் பூசல், தொழில்துறை அமைப்புக்களின் கூட்டமைப்பு ஏற்றம் ஆகியவற்றால் அடையாளம் காணப்படுகின்றது. 1973 ஐ ஒட்டி மிக அதிக செல்வக் கொழிப்பைக் கொண்ட .01 சதவிகிதத்தின் வருமானம் தேசிய வருமானத்தில் 0.6 என்று குறைந்து விட்டது. இந்த குறைந்த கட்டம் முந்தைய இரண்டரை தசாப்தங்களில் தொடர்ச்சியாக வர்க்க மோதல்கள் உயர்ந்த அளவில் இருந்ததின் விளைவு ஆகும்.

இந்த நிகழ்வுப்போக்கு எதிர்த் திசையில் நகர ஆரம்பித்தது--இன்னும் கூடுதலான வகையில் செல்வக் குவிப்பு மிகச் செல்வம் படைத்த .01 சதவிகிதத்திடம் 1979ல் இருந்து குவிப்பு அடைந்த விதத்தில் (உண்மையில் செல்வம் நிறைந்த 5 சதவிகிதத்தினரிடத்தில்). 1989 ஐ ஒட்டி அதன் வருமானப் பங்கு 2.3 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. 1999 ஐ ஒட்டி உயர் அடுக்கின் வருமானத்தின் பங்கு 2.92 என்று போயிற்று. கடைசியாக நமக்குப் புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ள ஆண்டான 2006ல் (பேராசிரியர்கள் றிவீநீளீமீttஹ், ஷிணீமீக்ஷ் ஆய்வின் அடிப்படையில்), செல்வம் அதிகம் உள்ள அமெரிக்கர்களின் தேசிய வருமானப் பங்கு 3.76 என்று ஆயிற்று.




மிக உயர்மட்ட 0.1 சதவிகிதத்தின் (ஒரு சதவிகிதத்தில் பத்தில் ஒரு பங்கு) வருமானப் பங்கை ஆராய்ந்தால், இந்த பிரிவு 1929ல் தேசிய வருமானத்தில் 8.7 சதவிகிதத்தைக் கொண்டிருந்தது. 1947ல் இதன் பங்கு 3.4 சதவிகிதம் குறைந்தது. அதன் மிக குறைவான கட்டத்தில் 1973ல் இருந்தது; அதன் வருமானத்தில் பங்கு 2.2 சதவிகிதம் என்று குறைந்தது. 1979ல் இது 2.7 சதவிகிதம் என்று உயர்ந்தது. 1989ல் அதன் பங்கு 5.5 சதவிகிதம் என்று எகிறியது. 1999ல் இது 8 சதவிகிதம் ஆயிற்று. 2006ல் மிக உயர்மட்ட 0.1 சதவிகிதத்தின் வருமானப் பங்கு 9.1 சதவிகிதம் என்று இருந்தது.




இறுதியில் உயர்மட்ட 1 சதவிகிதத்தில் இருப்பவர்களுடைய வருமானத்தைக் காண்போம். 1929ல் இந்த பிரிவு தேசிய வருமானத்தில் 19.8 சதவிகிதத்தைக் கொண்டிருந்தது. 1947ல் இதன் பங்கு 11.25 என்று குறைந்தது. 1973ல் மிகக் குறைவான கட்டத்தில் தேசிய வருமானத்தில் அதன் பங்கு 8.3 சதவிகிதமாக இருந்தது. 1979ல் இது சற்றே உயர்ந்து 9 சதவிகிதமாயிற்று. 1999ல் இதன் பங்கு இரு மடங்கையும்விட அதிகமாகி 18.4 சதவிகிதம் என்று இருந்தது. 2006ல் இது 20 சதவிகிதமாக இருந்தது. அதாவது மக்களில் செல்வம் படைத்த உயர்மட்ட 1% பகுதியினர் தேசியவருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டிருந்தனர்.




1947ல் இருந்து 2006 வரையில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வம் நிறைந்த பிரிவின் வருமான பங்கின் வரைபடம் இதே காலத்தில் இருந்த வேலைநிறுத்தங்கள் தரத்தின் வரைபடத்தின் மீது பதிய வைக்கப்பட்டால், இந்த இடைத்தொடர்புகளில் இருக்கும் மாறக்கூடிய கூறுபாடுகளின் உறவு மிகத் தெளிவாகத் தெரிய வரும். தொழிலிடங்களில் மிக அதிகப் போர்க்குணம், வெளிப்படையான வர்க்க மோதல்கள் ஆகியவை செல்வந்தர்களிடையே செல்வக் குறைப்பில் சரிவு ஏற்படும்போதும் சமூகச் சமத்துவமின்மையில் சரிவு ஏற்படும்போதும் தோன்றுகின்றன. சமூகப் போராட்டங்கள் நசுக்கப்படும் சூழ்நிலையில், செல்வக் குவிப்பு வெகுவிரைவில் சமுக சமத்துவமின்மையுடன் அதிகரிக்கிறது. இந்த தொடர்புடைய நிகழ்வுகளின் வரைபடம் நிரூபிப்பது போல் மிக அதிக செல்வம் படைத்த 0.1 சதவிகிதத்தனரின் செல்வக் குவிப்பும் வேலைநிறுத்த நடவடிக்கையின் அளவும் கடந்த 20 ஆண்டுகளில் மிக அதிகமாக வளர்ந்துள்ளன.



"மோதல் பகுதி" சாத்தியப்பாட்டை கொண்டுள்ளது என விவரிக்கக் கூடிய இந்த இடைவெளி சமூக "அமைதி" என்பதுடன் இயைந்திருக்க முடியாத பரிமாணங்களை அடைந்துவிட்டது. சமூக சமத்துவமின்மையைப் பொறுத்தவரையில் அமெரிக்கா இப்பொழுது பெரு மந்தநிலை 1929 க்கு முன்பு இருந்த நிலைக்கு திரும்பிவிட்டது; இதையட்டி அங்கு அப்பொழுது தொழிலாள வர்க்கத்தின் சமீப எழுச்சி ஏற்பட்டது. ஒபாமா நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க கருவிகள் சமூக மோதலை அடக்குவதின் திறனுக்கு வரம்புகள் உள்ளன. அமெரிக்காவில் சமூக முரண்பாடுகள் வர்க்கப் போராட்டம் புதிதாக வெடிக்கும் தன்மையுடன் வரக்கூடிய கட்டம் என்பதை தவிர்க்க முடியாததாக்கியுள்ளன.

ஆனால் எதிர்வரவிருக்கும் போராட்டங்கள் கடந்த கால வடிங்களை மீண்டும் மட்டும் கொண்டு வரா. இவ்வாண்டு ஆரம்பத்தில் சோசலிச சமத்துவக் கட்சி கூறியது:

சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகள் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளின் தர்க்கத்தில் இருந்து விளைகின்றன. இந்த தீவிரமாகும் நெருக்கடி அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை சமூக மற்றும் அரசியல் தீவிரமயமாக்கல் தன்மைக்கு இட்டுச்செல்லும் என்று கட்சி எதிர்பார்க்கிறது. இந்த தீவிரமயமாக்கல் வெகுஜனப் போராட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவிடும்; அவை பிற்போக்குத்தன தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவ தளைகளில் இருந்து உடைத்துக் கொள்ளும் வெகுஜன போராட்டங்களின் வளர்ச்சியாக வெளிப்பட்டு பெருகிய முறையில் அரசியல் மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு பரிமாணத்தை அடையும்.

வரலாறு மீண்டும் ஒரு தீவிர திருப்பத்தைக் கொண்டுள்ளது. கடந்த 12 மாதங்கள் புறநிலைச் சூழலில் ஒரு அசாதாரண மாற்றத்தைக் கண்டுள்ளன. மனித குலம் உலகளாவியரீதியில் ஒரு புதிய அரசியல் எழுச்சிகள் மற்றும் சமூகப் போராட்டங்கள் என்ற காலத்தில் நுழைகின்றது. இது மனித குலத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும். உலக சோசலிசப் புரட்சிக்கான புறநிலை முன்னிபந்தினைகள் மிகவிரைவில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்விதத்தில் அகநிலைக் காரணியான புரட்சிகரக் கட்சியின் பங்கு முக்கியமான வரலாற்று முக்கியத்துவத்தை பெறுகிறது. புறநிலை நிலைமை கனிதலுக்கும் தற்போதைய தொழிலாள வர்க்கத்தின் நனவுக்கும் இடையே உள்ள இடைவெளி கடக்கப்பட வேண்டும். இதற்கு எல்லாவற்றிற்கும் மேலாக சோசலிச சமத்துவக் கட்சிக்குள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சேர்க்கப்படுதலும், அவர்களுடைய அரசியல் பயிற்றுவித்தல், மார்க்சிச கோட்பாடு மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும். 2009ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவை அவற்றின் முயற்சிகள் அனைத்தையும் இப்பணிக்காக மேற்கொள்ள வேண்டும்.

கடந்த ஐந்து மாதங்களில் நிகழ்ந்தது ஏதும் இப்பகுப்பாய்வும் முன்னோக்கும் திருத்தப்பட வேண்டும் என்ற விதத்தில் எமக்கு நம்பிக்கை கொடுக்கவில்லை. மாறாக ஒருமுனைப்போடு, இடைவிடாமல் இந்த நெருக்கடியை நிதியத் தன்னலக் குழுவின் நலன்களுக்கேற்ப தீர்க்க வேண்டும் என்ற ஒபாமா நிர்வாகத்தின் முயற்சிகள் வர்க்க அழுத்தங்களை அதிகரிக்கத்தான் செய்யும். வெளிப்படையான வர்க்க மோதல்கள் அதன் வடிவமைப்பு, தன்மை இலக்குகள் ஆகியவை புதுப்பிக்கப்படுவதற்கான உடனடி உந்ததுதல் எப்படி இருந்தாலும், இறுதிப் பகுப்பாவில் அவை அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் உச்சக்கட்டத்தினால்தான் தீர்மானிக்கப்படும். எதிர்வரவிருக்கும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள், எழுச்சிபெற்றுவரும் சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தின் பகுதியாக வெளிப்படுவதுடன், அதிகாரத்தை கைப்பற்றுதல் மற்றும் சோசலிசத்திற்கான ஒரு அரசியல் போராட்டத்தின் வடிவத்தை எடுக்கும்.

No comments:

Post a Comment