Tuesday, January 19, 2010

விரிவடையும் இஸ்லாமியப் பார்வை


விரிவடையும் இஸ்லாமியப் பார்வை

களந்தை பீர்முகம்மது


இஸ்லாம் குறித்து இன்று உலக அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களின் அரசியல் அணுகு முறைகள் மற்றும் வாழ்க்கைச் சூழல்கள் குறித்தும் விரிவான அளவில் பேசப்படுகின்றது. அதே சமயத்தில் இஸ்லாத்தின் உட்கூறுகள் பற்றிப் பல்வேறு முஸ்லிம் அறிஞர்களும் குர்ஆனையும் ஹதீஸ்களையும் ஆராய்ந்து வருகின்றனர். தம் மனதிற்குகந்த முடிவுகள் எனில் அதை வரவேற்பதும் ஒப்புக்கொள்ள முடியாத பட்சத்தில் கடும் எதிர்ப்புக் காட்டுவதும் ஒருசேர நடந்துவருகின்றது. மாற்றுக் கருத்துகள் முன்வைக்கப்படுகையில், அதற்கு முகம் கொடுத்துத் தக்க பதில்கள் கூற ஏராளமான வாய்ப்புகளும் உண்டு. ஆனால் அது போன்ற வாய்ப்புகளைச் சமூகம் நிராகரித்துவிடுகின்றது. ஹெச்.ஜி. ரசூல் இது போன்ற விஷயங்களை எதிர்கொள்கிறார்; உடன்பாடாகவோ சற்றே எதிர்மறையாகவோ பதில் கூறுகிறார். ஆனாலும் காலங்காலமாகக் கட்டிவைக்கப்பட்டுள்ள கருத்துகளின் மேல் ஒரு சிறு விலகல் நேர்ந்தாலும் அதை ஒப்புக்கொள்கிற சூழல் இல்லை, விவாதிப்பதும் இல்லை.

‘குர்ஆனிய மொழியாடல்கள் - மீள் வாசிப்பின் தருணம்’ என்பது அவருடைய புதிய தொகுப்பு நூல். முக்கியமான பத்துத் தலைப்புகள் இதில் உள்ளன. மதம் என்றாலே உணர்ச்சிமயமானது. மற்றவர்கள் உணர்ச்சிமயமாய் இயங்குகின்ற தளத்தில், ரசூல் அறிவுபூர்வமாக இயங்குகிறார். கீலீஹ் மி ணீனீ ஸீஷீt ணீ னீusறீவீனீ எனும் இப்னு வராக்கின் நூல் குறித்து ரசூல் கூறும்போது, ‘இஸ்லாத்திற்கு எதிரான இத்தகைய கருத்துப் படிமங்களை இஸ்லாமிய அறிஞர்கள் கருத்தியல் ரீதியில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது; புனிதங்களின் பெயராலோ மரபுவழி குர்ஆனிய ஆய்வு அணுகுமுறைகளாலோ இவற்றை எதிர்கொள்ள முடியாது’ என்றுதான் தன் கருத்தை முன்வைக்கிறார். பின்-நவீன கால நெருக்கடிகளையொட்டி குர்ஆனை ஆழமாக வாசித்துப் புதிய அர்த்தங்களைக் கண்டடைய வேண்டும் என்கிற நோக்கிலேயே அவருடைய இந்தத் தொகுப்பு அமைந்துள்ளது.

‘மௌனங்களைப் பேசவைத்த தப்ஸீர்’ எனும் கட்டுரை விளிம்புநிலை அரசியலுக்கான தேடலை முன்வைக்கின்றது. ‘அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள்; தொழுகையைக் கடைபிடிப்பார்கள்; நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (பிறருக்கு) செலவுசெய்வார்கள் (2:3)’ என்கின்ற இந்த வசனம் இறைவழிபாட்டை முன்னிறுத்தும் அதே அளவிற்குத் தானம் வழங்குதலையும் முன்வைக்கின்றது. தொழுகையை நிறைவேற்ற அனைவரும் தக்க மனநிலை கொண்டவர்கள்தான். ‘ஜகாத்’ எனப்படும் செலவு - ஒருவருடைய வருவாயில் 2.5 சதவிகிதம் மாத்திரமே. ஆனால் நடைமுறையில் ‘தொழுகை’ அளவிற்கு ஜகாத் முன்னிலை பெறுவதில்லை. ஏன் இவ்வாறு ஆக வேண்டும்? அது ஒரு பொருளாதாரம் சார்ந்த பிரச்சினை; தொழுகையைப் போன்ற ஓர் உடல் மொழி அல்ல. ஒரு மனிதனின் தேவை என்ன அளவில் என்பதை எவராலும் நிர்ணயம் செய்ய முடியவில்லை. உலகமயம் குவிக்கும் நுகர்வுப் பொருள்கள் ஒரு மனிதனைப் பித்துறச் செய்கிறது. ஆசைக்கான எல்லைக் கோடுகள் தாமாகவே அழிந்துவிடுகின்றன. இதில் ‘ஜகாத்’ பற்றிய சிந்தனைகள் தாக்குப்பிடிப்பதில்லை. எனவே, ஒருவனின் பொருளாதார நிலை மார்க்கக் கடமையின் மீதான பற்றுதலை ஓரங்கட்டி விடுகின்றது. நம் பொருளாதாரத்தை மீறி ஆன்மிகம் சுடர்விட முடிவதில்லை. இங்கேதான் ஆன்மிக நாட்டத்தையும் பொருளாதார வாழ்வையும் இணைத்துப் பரிசீலித்து, மாற்று வழிகளைத் தேட வேண்டும். இந்தப் புள்ளியில் ரசூலின் பயணம் தொடர்கின்றது; மார்க்க மேதைகளின் பயணம் நின்றுவிடுகின்றது. பயணத்தைத் தொடர்வோர்க்கு எந்த முரண்பாடுகளும் இல்லை; தொடர முடியாமலும் தொடர விரும்பா மலும் நின்றுவிடுவோர்க்கு அதன்பின் சொல்லப்படும் எல்லாக் கருத்துகளும் முரண்படுகின்றன. இந்தத் தேக்கமே உலகளாவிய பல நெருக்கடிகளையும் முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்டு வந்து திணிக்கிறது. இதைக் கடைசி வரையிலும் ஆன்மிகக் கருத்தியல்களுக்கு உள்ளேயே பேசி முடிப்பதால், ‘இஸ்லாமியச் செல்வம்’ பங்கீடு செய்யப்பட முடியாமல் போகின்றது. சவூதி மன்னர்கள் செல்வச் செழிப்பில் மிதக்க, மிக அண்மையிலுள்ள எதியோப்பியாவில் தாய்ப்பாலுக்காகப் பரிதவிக்கும் ஒரு முஸ்லிம் நீக்ரோ குழந்தையைக் கழுகு தன் விருந்தாகத் தூக்கிக்கொண்டு செல்கின்றது.

குர்ஆன் சமூகத்தை நோக்கிய ஒரு பிரகடனம். அந்தக் குர்ஆனியத் தளத்தில் நின்றபடிக்கே வெளியுலகை எட்டிப் பார்க்கலாம். இஸ்லாமியப் பொருத்தப்பாட்டைக் கருதி விவாதம் செய்யலாம். ஆன்மிகக் கருத்திலேயே நின்று உழலும்படி குர்ஆனோ ஹதீஸ்களோ வலியுறுத்துவதில்லை. ஆனால், குர்ஆன் இன்றளவிலும் ஓர் ஆன்மிகப் பிரதியாக மட்டுமே வாசிக்கப்படுகின்றது.

குர்ஆனியத் தத்துவயியலும் சூஃபித்துவமும், பீர்முகம்மது வலியுல்லாவின் குர்ஆனிய உரையாடல் என்கிற இரண்டு கட்டுரைகளும் சூஃபிசத்தின் விரிவைக் காண்பவை. சூஃபித்துவம் உலகளாவிய கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பினும் தமிழ்ச் சிந்தனையின் தனித்த அடையாளமும் கொண்டது என்கிறார் ரசூல். சூஃபித்துவமும் ஆன்மிகக் கருத்தையே பேசுகின்றது. ஆனால் அதன் அடிப்படையை வரையறுக்கக் காரணமாயிருந்தவை அரசியல் கருத்தாக்கங்கள்; லௌகீக வாழ்வில் காணப்பட்ட வெறித்தனமான சுயநலப் போக்குகள்! இறைவழிபாட்டை வெறும் சமயச் சடங்காச்சாரமாக்கியவர்களுக்கு எதிரான கருத்துகள் சூஃபித் துவத்தில் அடங்கியுள்ளன. சூஃபிகள் மக்களுக்குச் சேவையாற்றவும் மனித மனங்களை அன்பால் இணைக்கவுமான செயல்பாடுகளைக் கொண்டவர்கள். மேலும் இஸ்லாமியக் கலை இலக்கியத்தின் விதைகள் சூஃபித்துவத்தின் பயன்களே! இலக்கியம் தழைக்கும்போது மக்கள் நலனுக்கான போராட்டங்களும் தோன்றிவிடுகின்றன அல்லவா? இஸ்லாமிய அரசர்கள் சூஃபித்துவத்தை இதன் காரணமாகவே தான் வெறுத்தார்களோ? பீர்முகம்மது வலியுல்லாவின் ஞானப்புகழ்ச்சியில் வரும் பல வரிகளில் ஏழ்மை, வறுமை, பசி போன்ற சொல்லாடல்கள் இடம் பெறுவது மட்டுமல்லாமல் வித்தார வாழ்வு தருவாய், குறையாத செல்வம் தருவாய் போன்ற வேண்டுதல்களும் இடம்பெற்றுள்ளன. சூஃபித்துவம் ஆன்மிகத்தை மாத்திரமே பேசாமல், மக்களின் வாழ்நிலை பற்றியும் பேசுவதால் அரசர்களின் பீடம் அசைவதற்கான இயக்கு சக்திகள் உண்டாகின்றன. இலக்கிய வடிவங்களை நிராகரிப்பதின் மூலம் இஸ்லாமிய அரசாட்சிகள் வறட்டுத் தன்மையைக் கொண்டுள்ளன. சமூக அவல நிலைகளைக் கண்ணுறும் பீரப்பா, அதிகாரத்திலிருந்து மீட்சிபெறும் வழியைத் தேடுகிறார். அதிகாரத்திலிருந்து மீட்சி பெறுவதை அரசர்கள் விரும்புவார்களா?

இலண்டன் நகரிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பின் காலனியக் கல்வியியல் பேராசிரியராகப் பணியாற்றும் ஜியாவுதீன் சர்தாரின் முக்கியப் பணிகளில் ஒன்று, ஷரீஅத் எனப்படும் இஸ்லாமியச் சட்டத்தைப் புரிந்து கொள்ள உதவும் சிந்தனைகளை முன்வைப்பது. நபிகள் நாயகத்தின் காலத்தில் பள்ளிவாசலில் மக்களோடு கலந்தே பல பிரச்சினைகளுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் நவீன கால இஸ்லாமிய ஆட்சிமுறைகளில் இப்படி ஒரு அரசியல் பண்பாட்டைத் தேடிப் பார்க்கவும் முடியாது. மத்திய காலச் சூழலில் இஸ்லாமிய அறிஞர்களால் வரையறைக்குள்ளான ஷரீஅத் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தின் வடிவமாக வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளதை விவரிக்கும் கட்டுரை ‘மறு சிந்தனையில் இஸ்லாமியக் கருத்தாடல்கள்’ என்பது. சமூகநலன் குறித்து இயங்க வேண்டிய ஷரீஅத், மக்களின் பங்கேற்புக்கு வாய்ப்பு தராமல் சமய அறிஞர்களின் ஒருமித்த கருத்து என்கிற அளவில் சுருக்கப்பட்டுள்ளது. ஜிகாத் என்கிற கருத்தாக்கம் ஒரு முஸ்லிமின் ஆன்மிகம் (மற்றும் உளவியல்) எல்லைக்குள்ளே உலவ வேண்டிய ஒன்று. ஆனால் அதன் பொருள் இஸ்லாமிய வெளிவட்டத்தில் மாற்றுச் சமூகத்தினருக்கு எதிரான சொல்லாடலாக மாற்றம் பெற்றுள்ளது. குர்ஆனின் சில வசனங்களை அதன் தோற்றுவாய்த் தன்மைக்கு மாறாக, நவீன அரசியல் நடவடிக்கைகளுக்கான அர்த்தமாகப் புரிந்துகொள்ளும் போது விகற்பமான செயல்பாடுகள் தோன்றுகின்றன. மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப இஸ்லாமியக் கோட்பாடுகள் இயங்கியல் தன்மையைப் பெற வேண்டும். அவ்வாறு பெறாதுபோனால் அது பொது இழப்பாகும். எனவே ஜியாவுதீன் சர்தாரின் கருத்துகளைச் சமூகம் உள்வாங்கிக்கொள்ள முயல வேண்டும் என்பது அந்தக் கட்டுரையின் நோக்கமாக உள்ளது.

இஸ்லாம் ஏன் உளவியல் பகுப்பாய்வை நிராகரிக்க வேண்டும்? முந்திய கட்டுரையில் சொல்லப்படும் அதே தன்மைகளைக் கொண்டே இந்தக் கேள்விக்கான பதிலையும் காணலாம். சிக்மண்ட் ஃப்ராய்ட் ஒரு யூதர் என்பதால் அவர் வகுத்த உளவியல் கோட்பாடுகளை இஸ்லாம் சமூகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதையும்விட வலுவான காரணம் இன்னொன்று இருக்கின்றது. உளவியல் பகுப்பாய்வு இறுதியில் இறை நிராகரிப்பைச் செய்துவிடும் என்பதான அச்சம். இப்படியொரு அச்சம் சரிதானா? தங்களின் வேதத்தின் மீது முஸ்லிம்களுக்கு இன்னும் உறுதியான நம்பிக்கை ஏற்படவில்லை என்கின்ற நிலைக்குத்தானே இந்நிராகரிப்பு கொண்டு சேர்க்கும்? இந்தக் கட்டுரை இன்னும் விரிவாக எழுதப் பட்டிருக்கலாம்.

‘அதிகார வன்முறைக்கு எதிரான ஜிகாத்’ குடிப் பண்பாடு பற்றிய அவரது கட்டுரையால் உண்டான விளைவுகளைப் பேசுகின்றது. அப்போது உண்டான சலசலப்புக்குரிய காரணங்களையும் குறைபாடான புரிதல்களையும் தன் கட்டுரைக்கு ஆதரவான தரவுகளையும் இக்கட்டுரையில் விவரிக்கிறார். குர்ஆன் உலகப் பொதுமறை என்றே சொல்லப்படுகின்றது. ஆனால் உலகில் பல விசித்திரமான அல்லது கடினமான தொழில் முறைகள் உள்ளன. இந்தத் தொழிலைக் கொண்டே ஜீவிப்பவர்களிடம் உண்டான குடிப் பழக்கம் வெறும் ரவுடித்தனம் அல்லது கெட்ட சகவாசம் அல்லது பொறுப்பின்மை சார்ந்து உருவான பண்பாடல்ல என்று நாம் புரிந்துகொள்ளலாம். அது அவர்களின் வாழ்க்கைமுறை சார்ந்த பொது அம்சம். மலக்கிடங்கைச் சுத்தம்செய்யும் ஒரு தொழிலாளியின் மனநிலையை ஒரு முஸ்லிம் உணர்ந்து அறியாதவரைக்கும், உச்சி வெயிலில் வியர்வை சொட்டச் சொட்டக் கல்லுடைக்கும் ஒரு தொழிலாளியின் போராட்டத்தை உணர்ந்து அறியாதவரைக்கும் இங்கே எதையும் பேசிவிட முடியாது. குர்ஆன்-ஹதீஸ் பற்றிய ஒரு முஸ்லிமின் கருத்து வெற்றுப் பிரமைகளால் உண்டாக்கப்பட்டதாகத்தான் இருக்கும். அவனிடம் உள்ள குர்ஆனியப் பார்வையானது, இஸ்லாமின் மேட்டுக்குடி சார்ந்த, மூளை உழைப்பாளியின் பார்வை சார்ந்த ஒரு குறுகிய தளமாகவே இருக்கும். ஓர் உலகப் பொதுமறை, மலக்கிடங்கைச் சுத்தம் செய்பவனையும் கல்லுடைக்கும் தொழிலாளியையும் அரவணைக்க முடியாமல்தானே போகும்? அறிவுஜீவிகளுக்கு வாய்த்த இஸ்லாம் உலக வாழ்க்கைமுறை சார்ந்து வெளிப்படவில்லை. பொது அரங்கில் தங்களையும் ஒரு தூய முஸ்லிமாகக் காட்ட வேண்டி நிறையப் பேர் அப்போது சின்னச் சின்ன டிராமாக்களை நடத்திக் கொண்டிருந் தனர்-ரசூலுக்கு எதிரானவர்கள் என்னும் போர்வையில்! (முஸ்லிம்களின் வாழ்க்கைமுறையோடு இறுகிப் பிணைந்துள்ள ‘வட்டியும் வட்டி சார்ந்த வருவாய்க்கும்’ எதிரான குர்ஆனிய வாளை அப்போது எந்த இடைக்கச்சில் அவர்கள் சொருகி வைத்திருந்தார்கள் என்பதையே பார்க்க முடியாமல் போயிற்று.) ‘தாராளமய ஷரீ அத்’ கட்டுரையை இன்னும் புரியும் படியாக அவர் விளக்கியிருக்க வேண்டும். சொல்லவந்த கருத்துகளை விட்டுவிட்டு வேகவேகமான ஓட்டம். ஷரீ அத்தைத் தாராளமய நோக்கில் பார்ப்பதற்கு நமக்கு முதலும் முடிவுமாக உதவுவது இந்த காலம் ஜ் வெளி, காலம் ஜ் சூழல் போன்ற தரவுகள்தான். ஓர் அறிவுஜீவியும்கூடக் கடினமான தடைகளைத் தாண்டியே ரசூலின் இந்தக் கட்டுரையைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும். அக்கட்டுரையை அவர் ஒரு கருத்தரங்கில் வாசித்திருக்கிறார். அப்படியானால் வரிக்கு வரி அவர் இடை நின்று விளக்கம் கொடுத்திருப்பாராய் இருக்கும்.

‘முக்கானத்துன்’ என்னும் அரபிச் சொல் மூன்றாம் பாலினத்தாரைக் குறிக்கிறது. அரவானிகள் குறித்துத் தெளிவான வசனங்கள் குர்ஆனில் இல்லை. ஷான்மாமோன் என்ற பெண் ஆய்வாளர் அரவானிகளைப் பற்றிய ஆய்வைச் செய்துள்ளார். மெக்காவின் கஃபத்துல்லாவின் ஹரம் எல்லையிலும் மெதினாவில் உள்ள நபி முகம்மதுவின் சமாதியிலும் அவர்கள் காவலர்களாகப் பணியாற்றுகிறார்கள். இதைத் தவிர அவர்களுக்குக் கௌரவ மளிக்கும் தகவல்கள் (குர்ஆனிலோ-ஹதீஸிலோ) இல்லை. இப்போது நிலவிவரும் அதே மனப்பான்மைதான் அந்தக் காலத்திலும் நிகழ்ந்துள்ளது. முன்கட்டுரையில் குறிக்கப்பட்டுள்ள காலம் ஜ் வெளி போன்ற தரவுகள், மருத்துவ ஆய்வுகள் இன்னும் இஸ்லாமிய உலகில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது தெரிய வருகிறது. 1984க்குப் பிறகு பாதுகாவல் பணிக்கு மூன்றாம் பாலினத்தாரைச் சவூதி அரசு தேர்வுசெய்யவில்லை. இதெல்லாம் மூன்றாம் பாலினத்திற்கு எதிரான அநீதிகளே.

தொகுப்பில் இடம்பெற்ற கட்டுரைகள் அனைத்துமே இஸ்லாமியப் பார்வையை விரிவுபடுத்தக்கூடியவை. அரேபிய மார்க்கவாதிகளும் மேலை நாட்டு அறிஞர்களும் இஸ்லாத்தைப் பற்றிக்கொள்கிற சாதகமும் பாதகமுமான தகவல்களை உடனடியாகத் தமிழுலகின் கவனத்திற்குக் கொண்டு வருகிற பணியை ஹெச்.ஜி. ரசூல் நீண்டகாலமாகவே செய்துகொண்டிருக்கிறார். முஸ்லிம்கள்மீதும் இஸ்லாத்தின் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குத் தக்க பதிலடியைத் தருவதிலும் அவர் பின்தங்கியதில்லை.

இந்த நூலை வெளிக்கொண்டு வந்ததில் கீற்றுப் பதிப்பகம் பாராட்டிற்கு உரியது. ஆனால் தமிழப் பதிப்புலகம் கண்டிருக்கும் பாய்ச்சலைக் கீற்றுப் பதிப்பகம் கவனத்தில் கொள்ள வேண்டும். துணைப்பாட நூல்தான் என்றெண்ணும்படியாக அச்சும் அமைப்பும் உள்ளது.

குர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்

ஹெச்.ஜி. ரசூல்
பக். : 92 விலை: ரூ. 50
முதல் பதிப்பு: ஜூலை 2008
வெளியீடு
கீற்று வெளியீட்டகம்
1-48கி, அழகிய மண்டபம்
முளகுமூடு அஞ்சல் - 629 167
குமரி மாவட்டம்

நன்றி:காலச்சுவடு

Monday, January 18, 2010

அறிவியல் குறித்த பொதுமக்களின் மனப்போக்குகள்



அறிவியல் குறித்த பொதுமக்களின் மனப்போக்குகள்

- ஸ்டீஃபன் ஹாக்கிங்

நாம் விரும்புகிறோமோ இல்லையோ, நாம் வாழும் உலகம் கடந்த நூறு ஆண்டுகளில் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. அடுத்த நூறு ஆண்டுகளில் மேலும் பல மாற்றங்கள் உண்டாகும். இம்மாற்றங்களை நிறுத்திவிட்டு, தூய்மையானது எளிமையானது என நினைக்கப்படும் முற்காலத்திற்கு செல்ல வேண்டும் என சிலர் எண்ணுகின்றனர். ஆனால் கடந்தகாலம் அப்படி ஒன்றும் அலாதியானது அல்ல என்பதையே வரலாறு நமக்கு சொல்கிறது. நவீன மருத்துவ வசதிகள் இல்லாதிருந்தும், பெண்களுக்கு பிள்ளைப்பேறு ஆபத்தான ஒன்றாக இருந்தும் – அதிகாரம் பொருந்திய சிறிய சதவிகித மக்களுக்கு கடந்த காலம் பிரச்சனைகள் அதிகமற்றதாகவே இருந்தது. ஆனால் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்க்கை கரடுமுரடாக, அற்பாயுசுடன் முடிந்தது.

எப்படியும், நாம் விரும்பினாலும், காலத்தை பின்னகர்த்தி முற்காலத்திற்கு செல்வது சாத்தியம் இல்லை. சேகரித்த அறிவையும் தொழிற்நுட்பத்தையும் மறந்துவிட முடியாது. எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் வளர்ச்சிகளை தடுக்கவும் முடியாது. ஆராய்ச்சிக்கு என செலவிடும் பணத்தை அரசு முழுமையாக நிறுத்தினாலும் (தற்போதைய அரசு இதற்காக தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறது) சந்தை போட்டிச் சூழல் தொழிற்நுட்ப வளர்ச்சிகளை உண்டாக்கும். மேலும், தேடல் கொண்ட உள்ளங்கள் அடிப்படை அறிவியல் குறித்து சிந்தித்துக்கொண்டு தான் இருக்கும், சம்பளம் இருந்தாலும் இல்லாவிட்டாலும். வளர்ச்சியை தடுப்பதற்கான ஒரே வழி உலகம் தழுவிய அடக்குமுறை அரசு ஒன்று புதியவை அனைத்தையும் ஒடுக்குவது தான். ஆனால் மனித முனைப்பும் அறிவும் இதை வென்றுவிடும். இது போன்றதொரு அடக்குமுறை வளர்ச்சி வேகத்தை குறைக்குமே அன்றி தடுக்காது.

அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப வளர்ச்சிகள் நமது உலகில் மாற்றங்கள் உண்டாக்குவதை தடுக்க முடியாது என்பதை ஒத்துக்கொள்வோமேயானால், அம்மாற்றங்கள் சரியான திசையில் செல்ல நம்மாலான முயற்சிகளை செய்யலாம். ஒரு மக்களாட்சி சமூகத்தில் இது நிகழ, அறிவியல் குறித்த அடிப்படை புரிதல்கள் மக்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். இப்புரிதல், அறிவியல் குறித்த முடிவுகளை வல்லுனர்கள் கைகளில் விடாமல் மக்களே எடுக்க உதவும். அறிவியல் குறித்த மக்களின் தற்போதைய மனப்போக்கு விருப்பும் வெருப்பும் கலந்த ஒன்றாக இருக்கிறது. அறிவியல் வளர்ச்சியினால் உண்டாகும் வாழ்நிலையின் சீரான வளர்ச்சியை எதிர்ப்பாக்கும் அதே வேளையில், அறிவியல் குறித்த புரியாமையினால் விளையும் நம்பிக்கையின்மையும் இருக்கத்தான் செய்கிறது. இந்த நம்பிக்கையின்மை, கார்ட்டூன்களில் வரும், ஃப்ராங்கிஸ்டைனை உருவாக்க இரவு பகலாக உழைக்கும் பித்தேறிய விஞ்ஞானியின் வாயிலாக வெளிப்படுகிறது. பசுமைக் கட்சிகளுக்கான ஆதரவிற்கான முக்கிய காரணியாக இந்த நம்பிக்கையின்மையே இருக்கிறது. அதே சமயம் அறிவியல் குறித்த ஆர்வமும் மக்களுக்கு இருந்துகொண்டு தான் இருக்கிறது, குறிப்பாக வானவியல் போன்ற துறைகளில். காஸ்மோஸ் (Cosmos) போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கு பெருகி வரும் பார்வையாளர்க் கூட்டமும், அறிவியல் புனைவுகளுக்கு பெருகிவரும் முக்கியத்துவமும் இதை நிரூபிக்கின்றன.

இந்த ஆர்வத்தை எவ்வாறு பயன்படுத்தி மக்களுக்கு அமில மழை, கண்ணாடி கூண்டு அனல் விளைவு பசுமைக்குடில் விளைவு( greenhouse effect), அணு ஆயுதம், மரபுப் பொறியியல் (genetic engineering) போன்ற முக்கிய அறிவியல் நிகழ்வுகள் குறித்த சரியான முடிவுகளை எடுப்பதற்கான அறிவியல் புரிதலை ஏற்படுத்தலாம்? நிச்சயமாக இது பள்ளிகளில் இருந்தே தொடங்கப்படவேண்டும். ஆனால் பள்ளிகளில் அறிவியல் வரண்ட , ஆர்வமூட்டாத வகையிலேயே புகட்டப்படுகிறது. பிள்ளைகளும், நாம் வாழும் உலகில் அவற்றின் பயன்பாடு குறித்து எந்த புரிதலும் இன்றி, மதிப்பெண்களுக்காகவே படிக்கின்றனர். மேலும், அறிவியல் பெரும்பாலும் சமன்பாடுகளைக்கொண்டே சொல்லித்தரப்படுகிறது. கணித கருத்துக்களை விளக்க சமன்பாடுகள் சரியான முறை தான் என்றாலும் அவை பெரும்பாலான மக்களை அச்சுறுத்தவே செய்கிறது. சமீபத்தில் நான் ஓர் பிரபல புத்தகத்தை எழுதுகையில், நான் பயன்படுத்தும் ஒவ்வொரு சமன்பாடும் விற்பனையை பாதியாக குறைக்கும் என அறிவுருத்தப்பட்டேன். ஒரே ஒரு சமன்பாட்டை பயன்படுத்தினேன், ஐன்ஸ்டைனின் பிரபல சமன்பாடான E = mc2. ஒருவேளை அது இல்லாதிருந்தால் விற்பனை இரட்டிப்பாகி இருக்கலாம்.

விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் தங்களது கருத்துக்களை சமன்பாடுகளாக வெளிப்படுத்துகின்றனர், ஏனெனில் அவர்களுக்கு எண்ணிக்கை ரீதியில் துல்லியமான விடை தேவைப்படுகிறது. ஆனால் மற்றவர்களுக்கு அறிவியல் விடயங்களில் கருத்தாக்க ரீதியிலான புரிதலே போதுமானது. இதற்கு, சொற்களும் விவரண படங்களுமே போதுமானது, சமன்பாடுகள் தேவையில்லை.


பள்ளியில் கற்பிக்கப்படும் அறிவியல் மக்களுக்கு ஓர் அடிப்படை கட்டுமானத்தை அளிக்கிறது. தற்போதைய விஞ்ஞான வளர்ச்சி விகிதத்தை கணக்கில் கொள்ளவேண்டும். பள்ளி, பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேருவதற்குள் பல புதிய முன்னேற்றங்கள் நிகழ்துவிடுகின்றன. எனக்கு பள்ளியில் மூலக்கூறு உயிரியலை (molecular biology) குறித்தோ, டிரான்ஸிஸ்டர்கள் குறித்தோ சொல்லித்தரப்படவில்லை, ஆனால் மரபுப் பொறியியலும், கணினிகளும் நமது எதிர்கால வாழ்வை முற்றிலுமாய் மாற்றப்போகின்றன. அறிவியல் பற்றிய பிரபல புத்தகங்களும் பத்திரிக்கை கட்டுரைகளும் புதிய முன்னேற்றங்களைக் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறலாம். ஆனால் மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகமும் மக்கள்தொகையில் ஓர் சிறு சதவிகிதத்தினரையே சென்றடைகிறது. மிகப் பரவலாக மக்களை சென்றடைய தொலைக்காட்சி தான் சிறந்த ஊடகம். தொலைக்காட்சிகளில் அறிவியல் குறித்த சில நல்ல நிகழ்ச்சிகள் உள்ளன. ஆனால் அவை அறிவியல் அற்புதங்களை, விளக்கங்களோ அறிவியல் கருத்தாங்களில் இந்நிகழ்வுகளில் பங்கு குறித்தோ ஏதும் கூறாமல், ஒரு மந்திரத்தை போல காட்டுகின்றன. பொழுதுபோக்கு மட்டுமன்றி மக்களுக்கு கற்பிக்கும் கடமையும் தங்களுக்கு இருப்பதை இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளர்கள் உணரவேண்டும்.

மக்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய அறிவியல் சம்மந்தப்பட்ட விவகாரங்கள் எவை?

மிக முக்கியமானது அணு ஆயுத விவகாரம். மற்ற பிரச்சனைகளின் – உணவு கையிருப்பு, கண்ணாடி கூண்டு அனல் விளைவு (greenhouse effect) போன்றவற்றின் – விளைவுகள் அதிக கால அளவில் தெரிய வரும். ஆனால் அணு ஆயுதப் போர் சில நாட்களுக்குள் மனித இனத்தையே அழித்துவிடும் வல்லமைக்கொண்டது.

Saturday, January 9, 2010

பெண் எப்போது பெண்ணியவாதி ஆகிறாள்?



நம் சமூகத்தில் மட்டுமல்ல, பல சமூகங்களிலும் பெரும்பான்மையான பெண்கள் பெண்ணியவாதிகளாகவோ அப்படி இருப்பது பற்றிய சுய பிரக்ஞை இல்லாமல் வாழ்வதற்கு விதிக்கப்பட்டவர்களாகவோ இருக்கிறார்கள். சமயங்களில் ஆண்களுடனான முரண்கள் ஏற்படும்போதும் அது பெண்களுக்கான பிரத்யேகப் பிரச்சினைகளின் அடிப்படையில் இருப்பதில்லை.




இந்தச் சூழலில் ஒரு பெண் தனது, தன்னைப் போலுள்ள பிற பெண்களின் உரிமைகளை உணர்ந்து அதனடிப்படையில் செயல்படுவதைப் பெண்ணியவாதச் செயல்பாடு எனக் கொள்ளலாம்.




பெண்ணியவாதச் செயல்பாடுகளில் ஒரு பெண் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் தூண்டும் காரணிகளாக இரண்டு அடிப்படை விஷயங்களைச் சொல்லலாம். முதலாவதாக, வாசிப்பின் மூலம் வரும் புரிதல், விழிப்புணர்வு. சிமொன் டி பிவோரிலிருந்து க்ளோரியா ஸ்டெயினம் வரை இதற்குச் சில உதாரணங்களைச் சொல்லலாம். (க்ளோரியா ஸ்டெயினத்தின் குழந்தைப் பருவம் மோசமாக இருந்தாலும் அதற்கு அவர் தந்தையோ பிற ஆண்களோ காரணமல்ல). இரண்டாவது காரணம் அடக்குமுறை. ஒரு பெண் வன்முறைக்குட்படுத்தப்படும்போது, அடக்கு முறைக்கு ஆளாக்கப்படும்போது அதை மீறும் செயல்பாடுகளின் வழியாகப் பெண்ணியம் குறித்த புரிதல்கள் அவளுக்கு ஏற்படுகின்றன. பல சமயங்களில் பெண்கள் இப்படித்தான் பெண்ணியவாதிகளாக மாறுகிறார்கள்.




இந்த வகையில் குறிப்பிடத்தகுந்த உதாரணம் முக்தார் மாய். பாகிஸ்தானிலுள்ள மீராவாலா என்னும் குக்கிராமத்தில் பிறந்த 37 வயது முக்தார் மாய் 2002இல் அவரது கிராமப் (கட்ட) பஞ்சாயத்தாரால் தண்டனைக்குள்ளாக்கப்படுகிறார். மேல் ஜாதியைச் சேர்ந்த சல்மா என்னும் 27 வயதுப் பெண்ணுடன் முக்தாரின் 12 வயதுத் தம்பி ஷாகூர் பாலியல் உறவு கொண்டான் என்பதுதான் வழக்கு. முக்தாரின் குடும்பம் எவ்வளவோ மன்றாடியும் முக்தார் தண்டனைக்குள்ளாக்கப்படுகிறார். அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கூட்டுப் பாலியல் வல்லுறவு (gang-rape). அவரது தந்தை மற்றும் பிற உறவினர்களின் முன்னிலையிலேயே சல்மாவின் சகோதரன் அப்துல் காலிக் உள்பட நான்கு பேர் முக்தாரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கிட்டத்தட்ட நிர்வாணமாக வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.




இப்படிப்பட்ட தண்டனை விதிக்கப்படும் முதல் பெண்ணல்ல முக்தார். அவரது சாதியில் பல பெண்கள் இத்தண்டனையைப் பெற்றிருக்கிறார்கள். இத்தகைய தண்டனைக்குள்ளாகும் பெண்கள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்வதுதான் வழக்கம். தண்டனை விதிப்பவர்களின் எதிர்பார்ப்பும் அதுதான். ஆனால் தன்னைப் பற்றி வரும் ஒரு பத்திரிகைச் செய்தி, அதன் மூலம் கிடைத்த ஆதரவு தற்கொலை முடிவுக்குக் கிட்டத்தட்ட தயாராகிவிட்ட முக்தாரைத் தன் முடிவை மாற்றிக்கொள்ள வைக்கிறது. இந்த அநீதியை இழைத்தவர்களுக்கு எதிராகப் போராட முடிவுசெய்கிறார். அதிலும் பல சிக்கல்கள். உதாரணத்துக்குச் சில: எழுத, படிக்கத் தெரியாத முக்தார் கொடுக்கும் வாக்குமூலத்தைக் குற்றவாளிகளுக்குச் சாதகமான ஒன்றாக எழுதுகிறார்கள் காவல் துறையினர். குற்றவாளிகளுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டால் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆபத்து உண்டாகும் என மிரட்டுகிறார்கள். முக்தாரின் உறுதியையும் போராட்டக் குணத்தையும் பற்றிப் பத்திரிகைகள் மூலம் கேள்விப்படும் பல தேசங்களைச் சேர்ந்த பெண்ணிய அமைப்பினர் அவரைத் தங்கள் தேசங்களுக்கு அழைத்துப் பேச வைக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு அவப்பெயர் உண்டாக்குகிறார் என்று பெர்வெஸ் முஷ்ஷரப் தலைமையிலான பாக். அரசு அவரை ஒருமுறை வெளிநாடு செல்லக் கூடாது எனத் தடுத்தது. “புகழ், பணம், எளிதில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வேண்டுமென்றால் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் போதும்” என்று அவரைப் பற்றி அரசாங்க மேல்மட்டத்தில் ஒருவர் சொன்னார்.




இங்கு இன்னொரு வழக்கு பற்றியும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. 2005இல் ஷாசியா காலித் என்னும் மருத்துவரை அவரது வீட்டிலேயே வைத்துப் பாலியல் வல்லுறவுள்ளாக்குகிறான் ஒரு ராணுவ அதிகாரி. ஷாசியா காலித்துக்கு எந்தச் சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. மாறாக அவர் ஒரு மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி குற்றவாளியல்ல என முஷ்ஷரப்பே சொல்கிறார். கடுமையான நெருக்கடிகளுக்கிடையில் ஷாசியா காலித் உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலையில் பாகிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டார். முக்தாரின் தொடர்ச்சியான போராட்டமும் அதனால் ஏற்பட்ட விழிப்புணர்வும் பாகிஸ்தானிய சமூகத்தில் எந்தப் பெரிய மாற்றத்தையும் கொண்டுவந்துவிடவில்லை என்றாலும் முக்தாரின் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.




முக்தார் இப்போதும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார். தனக்குப் படிப்பறிவு இல்லாத காரணத்தால் தான் இப்படியொரு நிலை என்று உணர்ந்தவர் தனக்கு வந்த நஷ்ட ஈட்டுப் பணத்தில் மீராவாலா கிராமத்தில் பெண்களுக்கான ஒரு பள்ளியைத் தொடங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 300 பேர் அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள்.




முக்தார் மாய் வழக்கு இன்னும் பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் 15ஆந் தேதி அப்பாஸ் கபோல் என்னும் காவலரை மணந்திருக்கிறார் முக்தார். முக்தாரின் வழக்கு நடந்துகொண்டிருக்கும் போது அவரது வீட்டுப் பாதுகாப்புப் பணிக்கு வந்தவர் அப்பாஸ். ஏற்கனவே திருமணம் ஆனவர். முக்தாரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்தான். அப்பாஸ் முக்தாரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டபோது முக்தார் மறுத்திருக்கிறார். அப்பாஸ் தற்கொலைக்கு முயன்றதுடன் தன் முதல் மனைவியை விவாகரத்துச் செய்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார். அதனால் பயந்துபோன அவரது முதல் மனைவி முக்தாரிடம் வந்து கேட்ட பிறகே திருமணம் நடந்திருக்கிறது. தவிர, திருமணத்துக்கும் பல நிபந்தனைகளை விதித்திருக்கிறார் முக்தார். அதனடிப்படையில் அப்பாஸின் சம்பளமும் சொத்தும் முதல் மனைவிக்கே சேரும்.




இதனால் பெண்ணியவாதிகள் கடுப்பாகியிருக்கிறார்கள். பெண்ணியவாதியாக இருந்த முக்தார் இப்போது அந்த நிலையிலிருந்து வழுவிவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். ஏற்கனவே மணமானவரை மீண்டும் மணந்துகொண்டதன் மூலம் பல ஒதுக்கப்பட்ட பெண்களுக்கு ஆதர்சமாக இருந்த முக்தார் அந்தப் பீடத்திலிருந்து விழுந்துவிட்டதாக விமர்சிக்கிறார்கள்.




தனது 66 வயதுவரை திருமணம் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் கொண்டிருந்த க்ளோரியா ஸ்டெயினம் திடீரென்று 2000இல் பிரபல நடிகரான கிரிஸ்டியன் பேலின் தந்தை டேவிட் பேலைத் திருமணம் செய்துகொண்டார். பேல் ஏற்கனவே இரண்டுமுறை விவாகரத்தானவர். முக்தாருக்குக் கிளம்பியது போல ஸ்டெயினத்துக்கு எதிராகவும் விமர்சனங்கள் கிளம்பின. ஆனால் அது அவரைப் பாதிக்கவில்லை. “1960களிலிருந்து இப்போதுவரை திருமணம் என்கிற சமூக அமைப்பு பல மாற்றங்களைக் கண்டுவிட்டது. அப்போது போல இப்போது நான் எனது உரிமைகளை விட்டுத்தர வேண்டிய அவசியம் இல்லை” எனச் சொல்லி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ச்சியான பெண்ணியச் செயல்பாடுகளாலும் விமர்சனங்களை முறியடித்தார்.




க்ளோரியா ஸ்டெயினம் தனக்கு ஏற்படுத்திக்கொண்ட வாய்ப்பு முக்தார் மாய்க்கு மறுக்கப்படுவதற்கு அவர் சார்ந்த சமூகத்தின் பின்புலம் காரணமாக இருக்கலாம்.




கட்டமைக்கப்பட்ட பெண்ணியத்தின் (Institutionalised feminism) கடினமான கூறுகளை முக்தார் என்றுமே தன்மீது திணித்துக்கொண்டதில்லை. தான் ஒரு தீவிரமான பெண்ணியவாதி அல்ல என அவரது சுயசரிதையில் சொல்கிறார். “என்னை ஊடகங்கள் அப்படி நினைத்தபோதும் நான் தீவிரப் பெண்ணியவாதி அல்ல. நான் பெண்ணியவாதியாக மாறியதற்குக் காரணம் எனது அனுபவம். அதிலிருந்து நான் மீண்டது தான் காரணம். அப்படி நடந்திருக்காவிட்டால் ஆண்கள் ஆளும் சமூகத்தில் நான் ஒரு எளிமையான பெண்ணாக வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பேன். ஆனால் நாம் மதிக்கப்பட வேண்டுமென்றால் அது ஆண்களை வெறுப்பதன் மூலம் நடக்காது. அவர்களை வெற்றிகொள்வதில்தான் நமது வெற்றி இருக்கிறது” என்கிறார்.




அந்தச் சம்பவம் நடப்பதற்கு முன் தான் செவிவழி கற்ற குர்ரானைப் பிள்ளைகளுக்குக் கற்றுத்தரும் பணியைச் செய்திருக்கிறார் முக்தார். ஆனால் அதன் பின்னர் அப்படிப் பிள்ளைகள் வளருவதில்லை எனத் தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.




எப்படிப்பட்ட வெளிநாட்டு வாய்ப்பு வந்தாலும் முக்காடு இன்றி முக்தாரைப் பார்க்க முடியாது. இப்போதும் இஸ்லாத்தின் மீதும் குர்ரானின் மீதும் அவருக்கு இருக்கும் நம்பிக்கை அசாத்தியமானது. மிகத் தீவிரமான பெண்ணியவாதிகளின் பார்வையில் இவையும் பிரச்சினைகளாக இருக்க வேண்டும். இஸ்லாத்தில் நம்பிக்கையுள்ள முக்தார் இரண்டாவது மனைவியாகச் சம்மதித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.




திருமணம் என்கிற முடிவை எடுக்கும்போதுகூடப் பெண்ணிய நிலை நோக்கிலேயே அதை அணுகியிருக்கிறார் முக்தார். “என்னைப் பொறுத்தவரை நான் மூன்று பெண்களின் வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்கிறேன்” என்கிறார். பின்னணி இதுதான்: முக்தார் வாழும் பகுதியில் மிகப் பிரபலமான பழக்கம் வட்ட சட்டா என்னும் பழக்கம். அதாவது தன் தங்கையை ஒருவருக்குத் திருமணம் செய்துகொடுக்கும் ஆண் பதிலுக்கு அவரது தங்கையைத் திருமணம் செய்வதுதான். அப்பாஸின் இரண்டு தங்கைகளை அவரது முதல் மனைவியின் அண்ணன்மார்கள் திருமணம் செய்திருக்கிறார்கள். அப்பாஸ் தன் முதல் மனைவியை விவாகரத்துச் செய்தால் பதிலுக்கு அவர் தங்கைகளை அவர் மனைவியின் அண்ணன்மார்கள் விவாகரத்துச் செய்வார்கள். தவிர கல்லும் கரையும் என்பது போலத் தான் தனக்கும் ‘அப்பாஸ்மீது காதல் உண்டானதாக’ முக்தார் சொல்கிறார்.




மேலும் அப்பாஸ் தற்கொலை உள்ளிட்ட மிரட்டல்கள் மூலம்தான் முக்தாரைப் பணிய வைத்தாரென்றாலும் அதற்கு முக்தாரை விமர்சிப்பதில் என்ன நியாயம் இருக்கும்?




நமது சமூகத்திலும் திரைப்படங்களிலும் இது மிகச் சாதாரணமான விஷயம். காதல் தோல்வியால், காதல் நிராகரிப்பால் தற்கொலைக்கு முயலும் ஆண்கள் பற்றிய செய்திகள் வராத தினசரிகளே இப்போதெல்லாம் வருவதில்லை. தன்னைக் கதாநாயகியின் மீது திணித்துக்கொள்ளத் தற்கொலை போன்ற ஆயுதங்களைப் பிரயோகிப்பான். . . எந்த கதாநாயகி அந்த ஆயுதத்திற்கு விழாமல் இருந்திருக்கிறாள்? அப்படி இருந்துவிட்டால் அவள் கல்நெஞ்சம் கொண்டவளாகவும் கதாநாயகன் பரிதாபத்துக்குரியவனாகவும் கருதப்படும் அவலநிலைதான் இருக்கிறது. அப்படி முன்முடிவுகள் கொண்ட சமூகத்தில் முக்தார் மாய் போன்றவர்களால் வேறு என்னதான் செய்ய முடியும்?




முக்தார் பிறந்து வளர்ந்த எளிய பின்புலத்திலிருந்து பார்க்கும்போது அவரால் வேறு எந்த முடிவும் எடுத்திருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. வன்முறையின் ஆதிக்கத்திலிருந்து மீளும் உறுதிகொண்ட முக்தார், அன்பு மற்றும் அது சார்ந்த ஆதிக்கத்திலிருந்து மீள முடியாமல் தோற்றுப் போனது அவரது தவறு அல்ல என்றே தோன்றுகிறது.




தவிர, தன்னால் இயன்றவரை இதிலும் பல விதிமீறல்களைச் செய்திருக்கிறார். அப்பாஸைவிட ஏழு வயது மூத்தவர் முக்தார். பாகிஸ்தான் போன்ற நாட்டில் இது ஒரு சாதனை. முதல் மனைவியின் உரிமைகளும் சலுகைகளும் கொஞ்சமும் பாதிக்காத வகையில் அவர் செயல்பட்டிருக்கிறார். இந்தத் திருமணத்தால் தான் நடத்தும் பள்ளிக்கூடத்துக்கும் தனது லட்சியத்துக்கும் எந்தத் தடையும் வரக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.




முதல் கணவருடன் விவாகரத்து ஆன பிறகு குர்ரான் சொல்லித் தருவதிலும் சப்பாத்தி இடுவதிலும் தனது எஞ்சிய காலத்தைக் கடத்தியிருக்க வேண்டிய முக்தார் மாய், வாழ்வு அவருக்குக் கற்றுக்கொடுத்த பெண்ணியக் கருத்தியலைப் பல சமரசங்களுக்கிடையிலாவது தான் சார்ந்த சமூகத்தில் கடைபிடிப்பது தான் அவரது வெற்றி. போராட்டம், தற்கொலை என்னும் இரண்டு பாதைகள் தெரிந்தபோது தனக்கு முன்பிருந்தவர்கள் செய்தது போலத் தற்கொலை என்னும் பாதையைத் தேர்ந்தெடுக்காமல் கடினமானதெனினும் போராட்டம் என்னும் பாதையைத் தேர்ந்தெடுத்ததுதான் முக்தார் மாய் என்னும் பெண்ணியவாதியின் அசலான அடையாளம்.

நன்றி - காலச்சுவடு

Monday, December 14, 2009

ஒட்டுமொத்த சமூக அக்கறையிலிருந்தும் தூக்கியெரியப்பட்டுள்ள மலையகத் தலித்துகள்


இன்றைய முதலாளித்துவ சமூக உருவாக்கத்தின் நவவடிவங்கள் (உலகக் கிராமங்கள் அல்லது information highway போன்ற சொற்றடர்களைப் பயன்படுத்தலாம்) எத்தனைதான் அரசியல், பொருளியல், பண்பாட்டு ரிதியான மாற்றங்களைக் ஏற்படுத்திக் கொண்டுவருகின்ற போதும் உலகின் இனக்குழுமங்களுக்கு இடையிலான உறவுகள், நெருக்கங்கள் (அல்லது நலன்கள்) என்பன மேலும் துருவமயமாகிக் கொண்டு போகும் நிலைமையும், அதிகாரத்துவம், அசமத்துவம் என்பன மேலும் இறுகும் நிலைமையும் அதிகரித்து வரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இன்று தமிழினி 2000 குறித்து கூடியிருக்கின்றோம். இலங்கை மலையகத் தமிழர்களின் உள்ளடக்காத ஒரு ஒரு ”தமிழ் இனி....”யை நாம் கற்பனை செய்ய முடியாது என்பதை நாம் ஒப்புக்கொள்வோம்.. அந்தளவுக்கு நாம் இந்த நிகழ்வுப் போக்கில் தாக்கம் செலுத்தும் வீரியமிக்க சக்தியாக வளர்ந்து விட்டோம். மலையகத் தமிழர்களில் அடக்கப்படும் சாதிய சமூகத்தின் எண்ணிக்கை ரிதியாக அதிகளவில் கொண்டிருக்கின்ற அதேநேரம் அவர் தம்மை ஒரு தேசமாக, மலையகத் தமிழ்த் தேசமாக தம்மை உருவாக்கிக் கொண்டுமுள்ளார்கள்.

வல்லாதிக்க சக்திகள் இந்த யுகத்தை தகவல் தொழில்நுட்ப யுகமாக பிரகடனப்படுத்­துகின்றன. இதன் அடிப்படை நோக்கமே உலகை தனது நலனுக்காக, ஆதிக்க சித்தாந்தமயப்படுத்துவது தான். புதிய உலக ஒழுங்குக்கு ஏனைய குறைவிருத்தி தேசங்களையும் தகவமைக்குமாறு நிர்ப்பந்திக்­கின்றன. ஆதிக்க சித்தாந்த கருத்தேற்றம் செய்து உலகை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கின்றன. இதற்காக, அவை திட்டமிட்டே பல்வேறு திட்டங்களை நிகழ்ச்சிநிரல்களையும் பன்முக தளங்களில் மிகவும் நுட்பத்துடன் செயற்பட்டு வருவதை, அதன் விளைவுகளை நாம் உணர்ந்துள்ளோம் என்றால் அது மிகையில்லை.

எனினும், இந்த நிலையிலிருந்து தான் ஆதிக்க உலக ஒழுங்குமயப்படுவதிலிருந்து அடக்கப்படும் தேசங்களாக உள்ள நாம் அவர்களின் நிகழ்ச்சி நிரலிலிருந்து தொடங்காது அவை குறித்த தேடல், புhpதல் நிலைகளி­லிருந்து எமக்கேயுரிய நிகழ்ச்சி நிரலை நாமே நமக்கேயுரிய நமது தேவைக­ளின் அடிப்படையிலிருந்து தயாரித்து ஆக வேண்டியுள்ளது. தகவல் தொழில்நுட்ப யுகம் என அவர்கள் முன்வைத்துள்ள அவர்களது திட்டத்தில் நமக்கு ஏதும் உரிமைகள் உண்டா இல்லையா என ஆராய்வதில் நமது காலத்தையும், வளங்களையும் செலவிடுவது கூட அவர்களது பொறிக்குள் நாம் காலைக் கொண்டுபோய் வைப்பதாகவே இருக்கும். எனவே தான் இந்த கருத்தாக்கங்களை நிராகரிப்போம். எமது சொந்தத் தேவைகளி­லிருந்தும், நலன்களிலிருந்தும் இந்நிகழ்ச்சி நிரல்கள் அமையப்பெறுவதும் எமது பன்முகத் தன்மைகளையும் மேலும் வளப்படுத்துவதாக பலப்படுத்துவதாக அவை அமைவதும் மிகவும் இன்றியமையததாகும்.

ஏலவே எமது நிகழ்ச்சி நிரலையும், திசை வழியையும் தீர்மானிக்கின்ற பாத்திரத்தை எமது தேசத்தினதும் சமூகங்களினதும் ஆளுங்குழுமங்கள் உலக வல்லாதிக்க சக்திகளுக்கு தாரைவார்த்து கொடுத்தாகி விட்டன. எனவே இன்று நமக்கு எமது இறைமை, என்று கூறுவதற்கு ஒன்றும் இல்லாகிவிட்டது. விரும்பியோ விரும்பா­மலோ எமது இறைமை எமது கைகளில் இல்லை என்ற யதார்த்தம் எம்மனைவரையுமே அழுத்துகின்றது. எமது இறைமை வெளி வல்லாதிக்க சக்திகளிடம் இருக்கின்றது என்பதை பல்வேறு நேரங்களில் உணர்ந்தாலும் அது அநேகமாக ஒரு சூக்குமத் தன்மை­யையும் கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, எமது இறைமை எமக்கு வெளியில் இருந்து கட்டுப்படுத்­தப்படுவதாக அமைகின்றது. எமது இறைமை வெளியாரால் தீர்மானிக்கப்படுகிறது.

இந்நிலையை மாற்றியமைக்க, பல்வேறு தேசங்களில் பல்வேறு தளங்களில் அடக்கப்­பட்ட மக்கள் தமது விடுதலைக்காகவும், சுய இருப்புக்காகவும் இறைமைக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஆதிக்க உலகிற்கெதிரான அடக்கப்பட்ட உலகின் பொது நிகழ்வுப் போக்காயுள்ள தேசங்களின் விடுதலை, சுய அடையாளம், இறைமை என்பன இந்த நூற்றாண்டின் பிரதான போக்காகவும் உலகை மாற்றியமைக்கப் போகும் காரணிகளாகவும் எழுச்சி பெற்றுவருகின்றது. எமக்கான நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்க வேண்டியிருப்பதன் முன்நிபந்தனையாக இந்த அடிப்படைகளைப் புரிந்துகொள்வோம். அந்த அடிப்படையில், பரஸ்பர உரையடால்கள் மற்றும் மாற்றங்கள் ஊடாக, எமக்கான நிகழ்ச்சி நிரலை நாமே தயாரிப்போம்.

இந்த நிலைமைகளிலிருந்து மலையகத் தேசத்தின் பிரச்சினையை அணுகுவோம். அனேகமான தேசங்களில் அத்தேசத்தின் இயக்கப் போக்கை அடையாளப்படுத்துப­வர்க­ளாக இருப்பவர்கள் அத்தேசிய சமூகத்தின் அதிகாரம் படைத்த கல்விகற்ற தரப்பினபராவர்.

எனினும் மலையகத் தமிழ்த் தேசத்தின் சமூகப் பண்பைப் பார்ப்போமாக இருந்தால், இங்கு அடிப்படையானது உடலுழைப்பில் ஈடுபடும் உழைக்கும் மக்கள் பிரிவினராலா­னதாக உள்ளது. இத்தேசத்தின் அதிக பெரும்பான்மை மக்கள் பிரிவினர் பெருந் தோட்­டத்துறை எனும் குறிப்பிட்ட உற்பத்தி நடவடிக்கையுடன் தம்மை பிணைத்துக்­கொண்ட கூலித்தொழிலாளர்களாக உள்ளனர்.

ஆக, இந்த விதத்தில், மலையகத் தமிழர் என்ற அடையாளத்தின் பிரதான பண்பைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் இத்தொழிலா­ளர்கள் அமைகின்றனர் என்பதோடு அதுவே, பிரதானமான அடையாளமாகவும் அமைந்து விடுகின்றது.

அதே போல் சாதிய அடிப்படையில் மலையகத் தமிழ்த்தேசத்தை அணுகுவோ­மாயின் தேசத்தின் 81 சதவீதத்தினர் தலித்துகளாவர். இது மலையகத் தேசத்தை தலித் தேசமாக அடையாளப்படுத்துகிறது.

அவ்வாறே உழைக்கும் மக்களால் அடை­யா­ளப்­படுத்தப்படும் மலையகத் தேசத்தின் அரைவாசிக்கும் அதிகமானோர் பெண்களாவர்.

அவ்வகையில் மலையகத் தேசத்தின் அடையாளமானது உழைக்கும், வர்க்க, தலித்திய மற்றும் பெண்களின் நேரடி பங்கேற்பின் உருவாக்கத்திலானதாகவுள்ளது. மலையகத் தேசத்தின் இப்பண்பானது, தேச உருவாக்­கங்களில், மிகவும் அபூர்வமான நிகழ்வுகளில் ஒன்றே எனக் கூறலாம்.

இவ்வாறான பண்பைக் கொண்ட மலை­யகத் தேசம் அடிப்படைவசதிகள் மறுக்கப்பட்ட பெரும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்த அதே நேரம், கடந்த நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலிருந்தே பேரினவாதத்தின் அடக்குமுறையை எதிர்கொண்டு வருகிறது. இலஙகையின் பேரினவாத வரலாற்றில் குறிப்பாக காலனித்துவ காலப்பகுதியில் மலையக மக்களுக்கு எதிராகத் தான் போpனவாதம் முதலில் கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஒப்பீட்டளவில், பலவீனமாக இருந்த ஒரு சமூகத்தின் மீது தனது பேரினவாத அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு பல ”பரிசோதனை”களை மேற்கொண்டது என்றால் அது மிகையாகாது. அது நடைமுறையாயினும் சரி, சித்தாந்தமாக இருந்தாலும் சரி. இதனுடைய பலாபலன்களை எமது தேசம் இன்றும் தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்றது.

பிரஜாவுரிமைப் பறிப்பு, கட்டாயமாக நாடு கடத்தப்படல், அடிப்படை உரிமை பறிப்பு என ஒரு தேசம் எந்தளவுக்கெல்லாம் அடக்கு­முறைக்குள்ளாக முடியுமோ அந்தளவு அடக்­குமுறைகளை மலையகத் தேசம் எதிர்கொண்டு வருகிறது.

இதன் மறுபுறம் வெளியுலகிற்கு ஏதோ ஒரு அடிமைக் கூட்டம் போலதென்படும் இம்மக்கள் சமூகம் தனது ஒவ்வொரு காலகட்ட உரிமைகளுக்காகவும் தொடர்ச்சி­யாக போராடி வருகிறது. போராட்டம் என்பது மலையக தேசத்­தின் வாழ்வுடன் பிணைந்த ஒன்றாக உள்ளது. போர்க்குணமும் ஆளுமை­யும் கொண்ட ஒரு பிரிவினரே மலையகத் தமிழர்கள். இவர்களது வாக்குரிமைகளையும் பிராஜாவுரிமைகளையும் பறிக்க வேண்டிய­ளவுக்கு சிங்களப் பேரினாதம் இருந்தது என்றால் அவர்களின் போர்க்குணாம்சத்தை அவர்களின் பலத்தையும் நீங்கள் இங்கு கற்பனை பண்ணிப் பாருங்கள்.

எனினும் தம்மை ஏனைய சமூகங்களுக்கு நிகராக வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் குறைந்தபட்சம் தம்மைப் பற்றி வெளியுலகுக்கு அறிவிக்க தகவல்களை பரிமாறிக்கொள்ளக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்­டுள்ளார்கள். இன்றைய உலகின், அதுவும் நவீன தொழில்நுட்பத் தகவல் பரிமாற்ற உலகில், தம்மை இணைத்துக் கொள்வதற்கு முன்னான பல்வேறு கட்டங்களைத் தாண்டுவதற்கே அவர்கள் போராடியாக வேண்டியுள்ளது.

பிற சிறுவர் பாடசாலைகளிலிருந்தே அவர்களுக்கு இன்று சிங்களம் மட்டும் ஊட்டப்படுகிறது. இந்த வருட போர்ச்செல­வுக்கு மாத்திரம் பல ஆயிரம் கோடிகள் ஒதுக்கப்படும் அதே நேரம் அங்கு வருடக் கணக்காக ரூபாய்க்கான கூலி உயர்வுக்காக பல நாள் பட்டினி கிடந்து போராட வேண்டிய நிலை. 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த அதேசிறிய காம்பராக்களில் தான் இன்னமும் வாழ்கின்றனர்.

மலையக மக்கள் தமக்காக தாமே போராடிக்கொள்வார்கள். ஆனால் தமிழ் பேசும் ஒட்டுமொத்த மக்கள் சமூகத்தின் தார்மீகமான ஆதரவுகள் ஒத்துழைப்புகள் என்னவாக இருக்கவேண்டும் என்பதையே இங்கு கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.

தமக்கு அயலில் சகதேசமொன்று சிங்கள அரசுக்கெதிராக போராடி வரும் வேளை பரஸ்பரம் இந்த இரு சமூகங்களுக்கிடைலான உறவுகள், மற்றும் எதிர்கொள்ளும் அடக்குமறை காரணமாக ஒன்றைஒன்று ஊடறுக்கின்ற பாதிக்கின்ற போக்குகளையும் நாம் இங்கு குறித்துக்கொள்ள வேண்டும்.

மலையக மக்களின் போராட்டங்கள் அவ­ர்­க­ளின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள் குறித்து பதிவாவது என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. இன்று இலங்­கையில் வெளிவரும் ஒரு சில பத்திரிகையின் வாயிலாகக் கிடைக்கின்ற செய்திகளைத் தவிர வேறு வழியில் மலையகத் தேசத்தின் பிரச்சினைகள் வெளிவருவதில்லை. இலங்கைக்கு வெளியில் சொல்லவே வேண்டாம். இந்த மாநாட்டுக்கு இலங்கைக்கு வெளியிலிருந்து வந்திருக்கும் உங்களில் எத்தனை பேருக்கு ஈழப்பிரச்சினை குறித்து தெரிந்திருக்க அளவுக்கு மலையகப் பிரச்சினை பற்றித் தெரிந்திருக்கிறது?

அரசு, நவபாசிச வடிவமெடுத்திருக்கிற சிங்­க­ளப் பேரினவாதம், அவர்களை கடுமை­யாக சுரண்டி கொழுக்கும் வர்த்தக சமூகத்தினர் அவர்களின் பிரச்சினைகளை வெறும் தமது பிழைப்பு அரசியலாக்கி வரும் அரசியல் சக்தி­கள், சாதியக் கட்டமைப்பை நிலைநிறுத்­து­வதில் போட்டியிட்டு வரும் ஆதிக்க சாதிக் குழுமங்­கள் மற்றும் போpனவாதமயப்பட்டுள்ள சிங்கள சிவில் சமூகத்தவர்களால் எதிர்­கொண்டுவரும் வன்முறைகள் என எத்தனை எத்தனையோ கொடுமைகள் தினந்தோறும் நடக்குகையில் அவர்களுக்காக போராடு­வதையோ அல்லது தார்மீக ஆதரவைத்தான் தரவேண்டாம். அவர்களின் பிரச்சினைகளை வெளியுலகுக்கு கொணர்வதில் எமது பங்களிப்பு என்ன?

இந்த சைபர் ஸ்பேஸ் என்று நாம் கூறுகி­ன்ற வெட்டவெளிக்குள் சகல கொடுக்கள் வாங்கல்களையும் செய்து இன்று ஒரு பெரும் மாநாட்டையே நடத்துகிறோம். பெரும்பாலும் இதற்கான நிர்வாக ஏற்பாடுகள், பேச்சாளர்க­ளுடனான உறவுகள் மற்றும் நிதி ஒழுங்குகள் என சகலதுமே தகவல் தொழில் நுட்பத்தின் வாயிலாக மேற்கொண்டு வெற்றிகரமாக நடத்திக்­கொண்டிருக்கிறோம். நாளை இவ்­வாறான மாநாடொன்றை கஸ்டப்பட்டு ஒன்று கூடி நடத்தவும் வேண்டியேற்படாத அந்தள­வுக்கு வேறு வடிவங்களில் நம்மை தகவல் தொழில்நுட்பம் இறுக இணைத்துவிடக்கூடும்.

ஆனால் இன்று மின்சாரம் வசதிகளைக் கூட அடையாமல், கல்விரிதியில் வளர்ச்சி­யடைய விடாமல், வெறும் ரூபாய்களுக்கான சம்பள உயர்வுக்காக போராடிக்கொண்டிருக்­கும் மலையக மக்கள் குறித்து எந்தவித விபரங்­களையும் உலகம் அறியாத வண்ண­முள்ளன. இன்று ஈழப்பிரச்சினை காரணமாக வடக்கு கிழக்கின் மொத்த சனத்தொகையின் மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர்ந்து வாழ்வது உங்களுக்குத் தொpயும். நண்பர் சேரன் கூறுகின்ற ஆறாம்திணையான ”புலம்பெயர்ந்தவர்”களுக்கூடாக ஈழத்தமிழர் பிரச்சினை குறித் நிலைமைகள் வெளிவரு­கின்ற போதும், மலையக மக்கள் பற்றி வெளித்தெரியாத வண்ணம் இன்றைய சூழல் இருக்கிறது. இது தற்செயலானதல்ல. ஈழத்தமிழர்கள் கொண்டுள்ள வளங்கள், ஆற்றல்கள், வாய்ப்புகள் கூட மலையக மக்க­ளுக்கு இல்லை. சக தேசத்தைச் சேர்ந்த­வர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்­கின்ற போக்கை ஈழப்போராட்ட சார்பு தகவல் தொடர்பூடகங்களில் கூட காணமுடிவதில்லை. அப்படியும் வெளிவந்துவிட்டால் அவை எதிரியை அம்பலப்படுத்துவதற்கான வழி­முறையாகத்தான் இருக்கிறதே ஒழிய, மலையகத் தேசத்தின் பிரச்சினையில் கொண்டுள்ள பிரக்ஞையால் அல்லவென்றே கூறலாம். தமிழகத்தை மையமாகக்கொண்டும், சிங்கப்பூர், மலேசியா மற்றும் வேறு புகலிட நாடுகளிலிருந்துமாக பல இணையத்தளங்கள் கூட அதிகரித்தவண்ணமுள்ளன. ஆனால் இதில் எத்தனைதூரம் மலையகத்தவர் பற்றிய குறைந்தபட்சம் அவலங்கள், போராட்டங்கள், கோரிக்கைகள், கூட பதிவாகின்றன.

நிச்சயமாக மலையகத்தவர் பற்றிய எமது அக்கறையின்மையும், அசட்டையையும் நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

வடக்கு கிழக்குக்கு வெளியில் ஏறத்தாழ 12 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்­கிறார்கள். காலனித்துவ சக்திகளால் இவர்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட போது பெரும்பாலும் அடக்கப்பட்ட சாதியப் பிரிவினரே அதிகளவு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டி­ருந்தனர்.

மலையகத் தேசத்தை ஒரு தலித் தேசமாகவும் நோக்கும் போது இலங்கையில் நிலவு­கின்ற மூன்றுவித சாதியக் கட்டமைப்பு­களான வடக்கு கிழக்கு, மலையக, சிங்கள சாதியமைப்புகளின் தன்மையை இங்கு நோக்குவது அவசியம். பொதுவாக சாதிய அதிகாரத்துவ படிநிலை நிரலொழுங்கு தலைகீழ் கூம்புவடிவத்தில் ஆதிக்க சாதி மேலும், அடக்கப்படும் சாதிகள் கீழுமாக கட்டமைக்கப்பட்டுள்ளதை நாமறிவோம். இந்திய சாதிய கட்டமைப்பை அப்படியே கொண்டுள்ள ஆனால் பிராமணரை ஆதிக்க சாதியாக கொள்ளாத சாதியமைப்பைக் கொண்டதுமான மலையக சாதியமைப்பில் அளவு ரிதியாக தலித்துகள் பெரும்பான்மை­யினராகவும் ஆதிக்க சாதிகள் சிறுபான்மை­யினராகவும் உள்ளனர். அதாவது தலைகீழ் கூம்பு வடிவமாக மேலே தலித்துகளும் கீழே உயர்த்தப்பட்ட சாதியினரும் அளவு ரிதியில் இருப்பதைக் காணலாம். ஆனால் இலங்கையில் சிங்கள சாதியமைப்பும், வடக்கு கிழக்கு சாதியமைப்பும் அளவு ரிதியில் உயர்த்தப்பட்ட சாதிகளின் எண்ணிக்கையை அதிகமாகவும் அடக்கப்படும் சாதிகளின் எண்ணிக்கை அளவில் குறைந்ததாகவும் இருக்கிறது. வடக்கு கிழக்கில் ஆதிக்க சாதியான வெள்ளாளர் சனத்தொகையில் 50 வீத்துக்கும் அதிகமாக இருப்பதைப் போல, சிங்கள சாதியமைப்பிலும் 50 வீதத்துக்கும் அதிகமாக வெள்ளாருக்கு ஒப்பான சிங்கள ஆதிக்க சாதியான கொவிகம சாதியினர் 50 வீதத்துக்கும் அதிகமுள்ளனர். உளளனர். பொதுவாகவே இந்தியாவிலிருந்து காலனித்துவ சக்திகளால் வேறுநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மக்கள் பெரும்பாலும் அடக்கப்படும் சாதிகளைச் சேர்ந்தவர்க­ளாதலால், அவர்கள் இன்றளவிலும் வாழும் நாடுகளில் பெரிய எண்ணிக்கையைக் கொண்ட அடக்கப்படும் சாதிகளைக் கொண்டுள்ளவர்க­ளாகவே உள்ளனர். எனவே தான் மலையக மக்­களை நாங்கள் தலித்திய சமூகப் பார்­வையை விட்டுவிட்டபார்க்க முடியாத கட்டா­யத்­தில் இருக்கிறோம்.

மலையக சமூக அமைப்பில் இருக்கின்ற குறைந்தளவு எண்ணிக்கையையே உடைய உயா;த்தப்­பட்ட (ஆதிக்கச்) சாதியினர்,- மேலா­திக்­கம் செலுத்துகின்ற அரசியல், பொருளாதார மற்றும் ஏனைய ஆதிக்க பண்புகளையும், வளங்களையும் வாய்ப்புகளையும் கொண்டி­ருக்­கிறனர். இவர்கள் நாளுக்குநாள் நிறுவன­மயப்­பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்தியா­வைப் போல நேரடியான தீண்டாமைக் கொடுமை இல்லாவிட்டாலும் ஏனைய அனைத்து சாதிக் கொடுமைகளுக்கும் உள்ளாவதும், ஆதிக்க சாதிகள் மேலும் தமது அதிகாரத்துவ நலன்களுக்காக நிறுவனமயப்­ப­டு­வதுமான போக்கு அதிகரித்து வருகிறது. மேலும் பறையர் மற்றும் அருந்ததியர் ஆகிய சாதிகளைச் சேர்ந்தவர்கள் நூறாண்டுகளாக அதே நிலைமையில் இருத்தப்பட்டுள்ளமை போன்ற நிலைமையை நாங்கள் கருத்திற் கொள்ள வேண்டும். இன்றைய சாதிய கட்ட­மைப்பை பழைய அதன் வடிவத்தைப் போலப் பார்க்க முடியாது. அது இன்று நவீன சமூக உருவாக்கங்களின் பண்புகளை உள்நுழைத்த புதிய அதற்கேற்க சாதிய வடிவங்கள் புதுப்பித்துக்கொண்ட வேறுவடிவங்களைத் தாங்கிய ஒன்றையே நாம் காணலாம்.

எப்படி சிங்களத் தேச அரச கட்டமைப்பு தமிழர்களின் பிரச்சினை விளங்கிக் கொள்ள­வில்லையோ, சிங்களத் தேச அரச கட்ட­மைப்பு மற்றும் தமிழீழ போராட்ட சக்திகள் இரண்டுமே மலையகத் தமிழர்களின் பிரச்­சினையை சரியாக விளங்கிக்கொள்ளவில்­லையோ. இந்த மூன்று அரசியல் சக்திகளும் வடக்கு கிழக்குக்கும், மலையகத்திற்கும் வெளியில் தமிழர்களின் பிரச்சினையை விளங்கிக் கொள்ளவில்லை. வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதியில் வாழும் தமி­ழர்கள் ஒருவகையில் புவியியல் ரிதியிலான அடையாளங்களையும் அதற்கான கோரிக்­கைக­ளையும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவை இரண்டிற்கும் வெளியில் வாழும் தமிழர்களுக்கு எந்த வித அரசியற் தலை­மையோ அல்லது பொதுவான கோரிக்கை­யையோ கொண்டிராத நிலைமை நீடித்து வருகிறது. எந்த அரசியற் சக்திகளின் பின்­னாலும் போகக் கூடிய தன்மையையும், சில பகுதிகளில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதையும் காணமுடியும். பொதுவாக வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவழியினரையும் சேர்த்து மொத்தமாக மலையகத் தேசத்தவர்கள் என்றே அழைக்­கப்பட்டு வருகிறது. இந்த அடையாள வரையறைகளில் சில சிக்கல்கள் இருக்கின்ற போதும் இங்கு ஒட்டுமொத்த பிரச்சினையின் கவனக் குவிப்புக்காக இப்பதத்தையே நானும் இங்கு கையாள்கிறேன்.

இவர்களில் அருந்ததியர்கள் நாடளாவிய ரிதியில் நகர சுத்தித் தொழிலாளர்களாக நகர சுத்தி குடியிருப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் வட மத்திய, வட மேற்கு மற்றும் தெற்குப் பகுதியில் சிங்களவர்களாகவே மாறிவிட்ட போக்கையும் மாறிவரும் போக்கையும் காணமுடியும்.

சாதியால் ஒடுக்கப்பட்டவர்களாகவும், கூலியுயர்வுக்காகப் போராடும் உழைக்கும் வர்க்கத்தினரைக் கொண்ட பெரும் தொழிற் படையாகவும், நாட்டின் மொத்த வருமானத்தில் பெருமளவை பெற்றுத்தரும் வர்க்கமாகவும், நவ பாசிச வடிமெடுத்துவரும் சிங்களப் பேரின­வாதத்துக்கும், பேரினவாதமயப்­படுத்தப்­பட்டு வரும் சிங்கள சிவில் சமூகத்தின் வன்மு­றைகளை நேரடியாக அனுபவித்துவரும் கூட்டமாகவும் இவர்கள் உள்ளனர். 150 வருடங்களுக்கு மேலாகியும் இன்னமும் குடியுரிமை அற்றவர்களாகவும், அரசியல் அனாதைகளாக ஒரு கூட்டம் இருக்கிறதென்றால் அது மலையகத் தேசத்தவர்கள் தான்.

இதில் அவதானிக்க வேண்டிய முக்கிய புள்ளிகளில் ஒன்று என்னவென்றால், இவர்கள் பற்றிய எதுவும் வெளித்தெரியாத புறநிலை­மைகள் இயங்குகின்றன என்பதே!

இன்று தமிழர்களுக்கான பல ஆயிரக்­கணக்கான இணையத்தளங்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன. இன்று ஆங்கிலம் மூலமாக இணையத்தினூடாகப் பரப்பப்படும் புனையப்பட்ட கருத்துகள், தகவல்கள், கதையாடல்களுக்கு தமிழர்கள் முழுவதுமாக ஆட்படுவதற்கு முன்னம் தமிழர்கள் இந்த தகவல் தொழில்நுட்பத்தை இலகுவாக அடைந்துவிட்டார்கள் தான். ஆனால் இந்த தகவல் என்ற விடயத்தில் தகவல் தொழில் நுட்பம் மீளவும் யாருக்கு எந்த சக்திகளுக்கு, எந்த கருத்தாக்கங்களுக்கு சேவை செய்கின்றன என்பது குறித்து நாம் அக்கறையற்று இருக்க முடியாது. தகவல் தொழில்நுட்ப நூற்றாண்டு இது என்று கூறப்படும் நிலையில் தகவல்க­ளுக்கு வறுமை பெருமளவு இருக்காது என்கிற நம்பிக்கை ஆரம்பத்தில் எனக்கு இருந்தது. ஆனால் அது தவறென நான் உணர்ந்தேன். தகவல்கள் குவிந்து கொண்டிருக்கும். ஆனால் அவை ஆதிக்க கருத்தேற்றம் செய்யப்பட்டதாக இருக்கும் என்று நம்பினேன். ஆனால் தகவல்களுக்கே எந்தளவு பஞ்சமிருப்பதை இப்போது ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இன்றைய பெரும்போக்கு எது என்பதை தீர்மானிக்கின்ற முக்கியமான கருவியாக தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது. ஆதிக்க சக்திகள், தமது பிற்போக்கு ஆதிக்க சித்தாந்தங்களை பெரும்போக்காக நிலை நிறுத்துவதில் இந்த தகவல் தொழில் நுட்பத்தைக் கொண்டுதான் துரிதமாக வெற்றி கண்டு வருகின்றன. இன்று தமிழில் கணிய மற்றும் இணையத் தொழில்நுட்பங்கள் குறித்த உட்கட்டமைப்பு மற்றும் மென்பொருள் பற்றிய அககறையும், ஆய்வுகளும் தான் மெற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அதன் புறநிலைச் செயற்பாடுகள், அதிலும் குறிப்பாக அதன் அரசியல் விளைவுகள், புரட்சிகர சமூக மாற்றத்துக்கான அரசியல் அடைவுகள் குறித்து வெறும் தனிநபர்கள் மற்றும் சிறு குழு அளவில் தான் அக்கறை கொள்ளப்படுகிறதே ஒழிய அதனை தமிழர்களின் அரசியல் எதிர்காலத்­தோடு இணைத்து ஆராயப்படு­வதை காண முடிவதில்லை.

இத்தகைய பின்னணியிலிருந்து மலையக மக்களின் இன்றைய நிலைமைகள் பதிவாகாததையும், நோக்க வேண்டும். இன்று தமிழ்த்தேசப் பிரச்சினை சர்வதேச அளவில் கரிசனைக்குரியதாக ஆக்கியதில் தகவல் தொழில் நுட்பத்தின் பங்கை நோக்க வேண்டும்.

இன்று தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்­பட்டுவரும் இனஅழிப்பு குறித்த செய்திகள் வேகமாக உலகெங்கும் சென்றடைகின்றன. உலகின் பலமான நாடுகளின் உதவியுடனும், ஒரு அரசையும் கொண்டிருக்கிற சிங்களப் பேரினவாதம் தகவல் தொழில்நுட்ப ஆற்றல் வளங்கள் என்பனவற்றை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு தடுமாறி நிலைகுலைந்து போகு­மளவுக்கு தமிழர்கள் தகவல் தொழில் நுட்பத்தை அடைந்திருக்கிறார்கள். தமிழ்த் தேசப் போராட்டத்தின் இன்றைய வளர்ச்சிக்கு தகவல் தொழில் நுட்பத்தின் பங்கு முக்கிய­மானது. ஆனால் இன்றளவிலும் தமிழ்த்தேசப் போராட்ட சக்திகளால் அல்லது அவர்களது ஆதரவாளர்களால் நடத்தப்படு­கின்­றன ஆயிரக்கணக்கான இணையத் தளங்களிலும் மலையக மக்கள் குறித்த எந்தவித பதிவுகளும் இடம்பெறாதது மிகவும் கவலை­யைத் தரும் விடயம். சக தேசமொன்று தமது எதிரிக­ளாலேயே ஒடுக்கப்பட்டுக் கொண்டிருப்­பதை காpசனை கொள்ளாததை நாம் குறித்துக் கொள்வது அவசியம்.

மலையகத் தேசத்தவர்களைப் பொருத்த­வரை அவர்கள் ஏலவே எதிர்கொள்ளும் அடிமை வாழ்க்கையை விட தமிழ்த்தேசப் போராட்டத்தின் விளைவான ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதத்திற்கும் பலியாகிவரும் தேசமாக மலையகத் தேசம் உள்ளதை கவனித்தாக வேண்டும். இந்தியாவின் மீது நம்பிக்கையிழந்து பல வருடங்களாகிவிட்டது. ஏலவே இலங்கையில் யாழ் மைய வாதத்துக்கு வடக்குகிழக்கின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரமல்ல வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழர்களும் அந்த சிக்கல்களை அனுபவித்து வந்தவர்கள். இலங்கையில் செயற்படும் தமிழ் தொடர்பூட­கங்கள் அனைத்திலும் மலையக மக்களுக்­கெதிரான பாரபட்சங்கள் நிலவுவதை காணமுடியும். மலையக மக்களின் பிரச்சினை குறித்த விடயங்கள் வெளியிடப்பட்டால் அது அப்பிரச்சினை குறித்த பிரக்ஞை என்பதை விட மலையக சந்தையை இலக்காகக் கொண்டு தான் இருக்கும்.

எப்படியோ மலையகத் தேசத்தின் எதிர் காலத்தை மற்றவர்களிடம் பொறுப்பாக்கி­விடுவது அல்ல இதன் அர்த்தம். மலையகத் தேசம் தனக்கான போராட்ட வடிவங்களையும் எதிர்காலத்தையும் தானே வடிவமைத்துக்­கொள்ளும். ஆனால் கவனிப்பாரற்று கிடக்கும் போக்கை மாற்றியமைப்பதில் எம்மெல்லோரது பங்கையும், தார்மீக ஆதரவையுமே இங்கு நாம் கோரவேண்டியுள்ளது. மலையகத் தேசத்தின் அரசியல், பொருளாதார, கலாசார, பண்பாட்டு அம்சங்களைக் கணக்கிற்கெடுக்­கின்ற தமிழ் சூழலயே வேண்டிநிற்கிறோம்.

(சென்னையில் ''தமிழினி 2000'' வாசிக்கப்பட்ட கட்டுரையின் சராம்சம்)

--என் சரவணன்

Saturday, November 28, 2009

ஆதிகால மனிதர்களும், நவீனகால மனிதர்களும்

Cave Paintings Pictures, Images and Photos
ஆதிகால மனிதர்களும், நவீன மனிதர்களுக்கும் இடையிலான உறவு குறித்து சமீபத்தில் இரண்டு ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. மிக நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே இந்த இரண்டு மனித மூதாதையர்களும் ஒருபொதுவான மரபு உயிரணு வகையில் இருந்து பிரிந்துள்ளதாக கூறப்படுவதற்கு இந்த அறிக்கைகள் மேலும் வலு சேர்க்கின்றன. மேலும், மனிதயின பரிணாமம் பல்வேறு கிளைகளாகவும், பல முடிவில்லா வழிகளிலும் உருவானது என பண்புருவாக்கப்பட்ட கண்ணோட்டத்தை இந்த முடிவுகள் ஆதரிக்கின்றன. இது உண்மையானால், பின்னர் குறைந்தபட்சம் 5 மில்லியன் ஆண்டுகளில் வெவ்வேறு காலங்களிலும், வெவ்வேறு இடங்களிலும் உயிர் வாழ்ந்த அல்லது உடன் வாழ்ந்த பல மனிதயின தோற்றங்களில் ஹோமோ சேப்பியன்கள் (பிஷீனீஷீ ஷிணீஜீவீமீஸீச்) எனப்படும் நவீனகால மனிதர்கள் தான் இறுதியாக பிழைத்திருக்கும் ஓர் உயிரினமாகிறது. உண்மையில், தற்போதைய சூழலில் ஒரேயரு மனித உயிரினம் தான் உயிர் வாழ்கிறது. அது ஒரு விதியாக (ஸிஉறீமீ) அல்லாமல் விதிவிலக்காக இருக்கலாம்.

விஞ்ஞானங்களுக்கான தேசிய ஆணைய (வீவர், ரோஸ்மென் மற்றும் ஸ்ட்ரிங்கர் ஆகியோரால் 2008) செயல்திட்டத்தில் விளக்கப்பட்ட இந்த அறிக்கைகளில் முதலாவதானது, ஆதிகால மனிதர்களிடமும், நவீனகால மனிதர்களிடமிருந்தும் எடுக்கப்பட்ட 37 மண்டை ஓடு அளவீடுகளில் கண்டறியப்பட்ட வேறுபாடுகளை அடைய எவ்வளவு காலம் மரபணு மாற்றத்திற்கு (அதாவது, மரபணுவில் ஏற்படும் ஒழுங்கற்ற மாற்றங்கள்) தேவைப்படும் என்பதை கணிக்க ஓர் ஆய்வு தேவை என்பதை குறிப்பிடுகிறது. இந்த முதலாவது அறிக்கையின் முடிவுகள், வெறும் 500,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களின் மூதாதையர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறித்து காட்டுகின்றன. அண்ணளவாக 400,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிமான (திஷீச்ச்வீறீச்) தடயங்களில் தான் முதன்மையாக ஆதிகால மனிதர்கள் காணப்படுகிறார்கள். ஆதிகால மனிதர்களுக்கும் மற்றும் நவீனகால மனிதர்களை வார்த்தெடுத்த மரபினர்களுக்கும் மற்றும் பிற மனித உயிரினங்களுக்கும், தற்போது இல்லாமல் அழிந்து போன மரபினங்களுக்கும் ஒரு பொதுவான மூதாதையர்கள் இருக்கலாம் என்று சுமார் 500,000த்திற்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்து போன ஹோமோ ஹெய்டில்பேர்ஜென்ஸிஸ் (பிஷீனீஷீ லீமீவீபீமீறீதீமீக்ஷீரீமீஸீச்வீச்) எனப்படும் மனித இனங்களில் இருந்து எடுக்கப்பட்ட புதைபடிமானங்கள் எடுத்துரைக்கின்றன. உண்மையில் 500,000க்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மரபணு உடைவு (அதாவது ஒரு புதிய உயிரினம் தோன்றும் நிகழ்வு) இருந்திருந்தால், நவீன மனித மரபணு தொகுப்பிற்கு ஆதிகால மனிதர்களால் எந்த பங்களிப்பும் செய்திருக்க சாத்தியமில்லை.

இரண்டாவது அறிக்கையானது, குரோசியாவின் (சிக்ஷீஷீணீட்வீணீ) குகையில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 38,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிகால மனிதனின் கால் எலும்பில் மேற்கொள்ளப்பட்ட மைட்டோகான்ரியல் மரபணு (விவீட்ஷீநீலீஷீஸீபீக்ஷீவீணீறீ ஞிழிகி) ஆய்வின் முடிவுகளை விளக்குகிறது. (இதன் ஒரு பகுதி ஆகஸ்டு 8, 2008ல் வெளியான ஜிலீமீ நிஉணீக்ஷீபீவீணீஸீ இதழில் உள்ளது). மைட்டோகான்ரியல் மரபணு (னீட்ஞிழிகி) என்பது கலங்களில் இருக்கும் 'சக்தி உற்பத்தி நிலையங்களான' மைட்டோகான்ரியாவில் மட்டுமே காணப்படும். ஒரு பாதி ஓர் தாயிடமும், மற்றொரு பாதி தந்தையிடமிருந்தும் எடுக்கப்படும் நியூக்ளியர்ஞிழிகி போலில்லாமல், மைட்டோகான்ரியல் மரபணு தாய்மார்களிடம் இருந்து மட்டுமே அவர்களின் வழிதோன்றலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆதிகால மனிதர்களின் னீட்ஞிழிகி, நவீனகால மனிதர்களின் னீட்ஞிழிகிவில் இருந்து தெளிவாக மாறுபட்டிருப்பதை ஜேர்மனியின் லைப்சிக் நகரிலுள்ள மக்ஸ்-பிளங்க் மனிதயின பரிணாம ஆய்வு பயிலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு குறிப்பிட்டு காட்டுகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில், ஆதிகால மனிதர்களுக்கும், இறுதியில் நவீனகால மனிதர்களை படைத்தளித்த மரபினர்களுக்கும் இடையிலான இடைவெளி அண்ணளவாக 660,000 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கலாம். இந்த 660,000 ஆண்டுகள் என்பது மேற்குறிப்பிட்ட வீவர், ரோஸ்மென் மற்றும் ஸ்ட்ரிங்கர் ஆய்வில் கணிக்கப்பட்ட காலத்திற்கு மிக அண்மையில் தான் அமைகிறது. காலப்போக்கில் ஆதிகால மனிதர்களின் னீட்ஞிழிகிவில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக அந்த ஆராய்ச்சி குறிப்பிடுவதால், இது அந்த உயிரினங்கள் மிக குறுகிய காலங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்திற்கு இட்டு செல்கிறது. ஆதிகால மனிதர்களின் நியூக்ளியர் ஞிழிகி பற்றிய முழு ஆய்வும் இந்த ஆண்டின் இறுதியில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், இந்த அறிக்கைகளும் மற்றும் பிற சமீபத்திய ஆய்வு அறிக்கைகளும் நவீனகால மனிதர்கள் மற்றும் ஆதிகால மனிதர்கள் இடையிலான உறவுகள் மீதான எதிர்விவாதங்களுக்கு மேலும் பல புதிய தகவல்களை சேர்த்துள்ளன. கிடைத்திருக்கும் புதைபடிமான தடயங்களின் அடிப்படையில், ஆதிகால மனிதர்கள் மனிதர்களின் தோற்றத்தை கொண்டிருந்தார்கள்; இவர்கள் அண்ணளவாக 400,000 ஆண்டுகள் முன்பிலிருந்து, சுமார் 38,000 ஆண்டுகள் முன்னர் வரை ஐரோப்பா மற்றும் மேற்கத்திய ஆசியாவின் பெரும்பகுதிகளில் வாழ்ந்திருந்தனர். பிரமாண்ட எலும்பு வடிவம் மற்றும் பெரிய நெற்றி முகடுகளுடன், தாடை இல்லாமல் (அதாவது, தாடை உள்வாங்கி இருக்கும்) இருந்த குறிப்பிடத்தக்க பல்வேறு உடல் தோற்றக்கூறுகள் தான், இன்று வழக்கத்தில் இல்லாத இந்த 'குகை மனிதர்கள்' பற்றிய பிரபல கருத்துருக்கள். தொடக்கத்தில் ஆதிகால மனிதர்களின் புதைபடிமானங்கள் 1856ல் ஜேர்மனியிலுள்ள நியாந்தர் பள்ளத்தாக்கில் (ழிமீணீஸீபீமீக்ஷீ க்ஷிணீறீறீமீஹ்) கண்டுப்பிடிக்கப்பட்டன. அவை, வேறு வகைப்பட்ட மனிதர்களும் பூமியில் ஒருபோது வாழ்ந்திருந்தார்கள் என்பதற்கான முதல் நேரடி ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன. இவ்வாறு, மனிதர்கள் அவர்களின் முந்தைய தோற்றங்களிலிருந்து உருவாகி இருக்கிறார்கள் என்ற புதிய மற்றும் விவாதத்திற்குரிய பல சிந்தனைகள் பின்னர் ஏற்பட அது உதவியது.

மற்றொருபுறம், சுமார் 100,000த்திற்கும் 200,000த்திற்கும் இடைப்பட்ட காலத்திற்கு முன்னர் முதன்முதலில் ஆப்ரிக்காவில் நவீனகால மனிதர்கள் தோன்றியதாக புதைபடிமான தடயங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அவர்கள் தொடர்ந்து விரைவாக, நிலப்பரப்பில், அதாவது கிழக்கு மற்றும் மேற்கத்திய நிலப்பகுதிகளில், அவர்களுக்கு முந்தைய மனித உருவங்களை விட மிக தொலைவிற்கு அவர்கள் பரவினார்கள். நவீனகால மனிதர்களுடன் தொடர்புடைய மனிதயின ஆய்வு, முந்தைய அனைத்து மனித உயிரினங்களை விட மிகவும் வளமான ஒரு கலாச்சாரத்தை வெளிப்படுத்தி காட்டுகிறது. அதில் நுட்பமான தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி, தனிநபர் அலங்கார பொருட்கள் (அதாவது, நகைகள்) மற்றும் கலை பாவனை (சான்றாக, பனிகால ஐரோப்பாவிற்கு பிந்தைய குகை ஓவியங்கள்) போன்ற கலை உணர்வுகளையும் கொண்டுள்ளது. தெளிவாக, நவீனகால மனிதர்களின் தோற்றம் மனிதயின பரிணாமத்தில் ஓர் உண்மையான அளவுரீதியான பாய்ச்சலை எடுத்துக்காட்டுகிறது.

ஆதிமனிதர்களின் புதைபடிமானங்கள் கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு பின்னர், ஆதிகால மனிதர்களும், நவீனகால மனிதர்களும் உண்மையில் எவ்வாறு வேறுபட்டுள்ளார்கள் என்பது குறித்த விஞ்ஞான கருத்துக்களும், பிற பிரபல கருத்துக்களும் தொடர்ந்து மாறுபட்டு வந்தன. மூட்டுவீக்கம் காரணமாக எலும்புகளில் அசாதாரண தன்மைகளை கொண்ட வயதான ஆணின் முழுமையான எலும்புகூட்டைச் சார்ந்து கூறப்பட்ட கருத்துகள் என்பதால் ஆதிகால மனிதர்கள் பற்றிய சில முந்தைய வர்ணனைகள் மிகவும் மாறுபட்டிருந்தன. பெருமளவிலான மாதிரிகளின் அடிப்படையில் பின்னர் மாற்றி அமைக்கப்பட்ட ஆதிகால மனிதர்களின் உருவ தோற்றம் நவீனகால மனிதர்களுடன் இருந்த ஓரளவு வேறுபாட்டை குறைத்தது. தற்போதும் உயிருடன் இன்றைய நகர தெருக்களில் நடந்து செல்லும் ஆதிகால மனிதர்கள் (பொருத்தமான உடைகள் அணிந்து, அலங்காரம் செய்து கொண்ட ஆதிகால மனிதர்கள்) யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதாக சில ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள். இந்த சிந்தனை அமெரிக்காவின் சமீபத்திய வாகனத்துறை காப்பீட்டு தொடர்பான விளம்பரங்கள் ஒன்றிலும் பிரதிபலித்திருந்தது.

பேலியோன்தாலஜியின் (ஆதிகால மனிதர்கள் பற்றிய புதைபடிமானங்களை ஆராயும் துறை) ஒரு பகுதியாகவும், மனிதயின பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்விலும் குறிப்பாக, புதைபடிமான எலும்பு மற்றும் தொல்பொருள் போன்ற பிற ஆதார தரவுகளின் பாரம்பரிய ஆராய்ச்சிகளுக்கும் கூடுதலாக, எந்த அளவிற்கு புதைபடிமான மரபணு பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதையே கடந்த தசாப்தங்களில் வெளியான ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

விஞ்ஞான ஆய்வுகளின் உண்மையான அபிவிருத்திகளையும், பல்வேறு வகையான தரவுகளின் கருத்துகளுக்கு இடையிலுள்ள முரண்பாடுகள் மீதான ஒரு செயல்முறையையும் மற்றும் தர்க்கரீதியாக நோக்கங்கள் மாறுபடுவதையும் வெளிச்சமிட்டு காட்ட இந்த புதிய தரவுகளின் அபிவிருத்தி உதவுகிறது. இந்த முரண்பாட்டின் காரணமாக, ஒரு காலத்தில் வலுவாக பொருள்படுத்தப்பட்டதாக தோன்றிய தகவல்கள், முன்னர் இருந்த தரவுகளையும், கைவசம் இருக்கும் புதிய தரவுகளையும் மிக துல்லியமாக ஒருங்கிணைக்கும் தெளிவான புதிய ஒன்றால் தூக்கி எறியப்படுகின்றன. இந்த சச்சரவான செயல்முறை, அடிக்கடி பரந்த சமூகத்தில் உள்ள அரசியல் மற்றும் சமூக போக்குகளின் 'வெளித்தாக்கத்தையும்' பிரதிபலிக்கிறது.

புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால், மனிதயின பரிணாமத்தையும், குறிப்பாக ஆதிகால மனிதர்களைப் பற்றிய சில அடிப்படை ஆய்வுகளையும் மீள்பார்வையிட வேண்டியது அவசியமாகும்.

பல்வேறு கருத்துகளின் முடிவுகளை குறிக்கும் விதமாக, ஆதிகால மனிதர்கள் குறித்த இரண்டு முக்கிய கண்ணோட்டங்கள் வரையறுக்கலாம். ஒன்று, உயிரினங்களின் அளவில் நவீனகால மனிதர்களை முற்றாக பிரித்து (வேறுபடுத்தி) பார்ப்பது. மற்றொன்று, நவீனகால மனிதர்களுடனான வேறுபாடுகள் நவீனகால மனிதர்களின் வேறுபட்ட மக்களிடையே இன்று காணப்படும் பல்வேறு வேறுபாடுகள் தான் என கருதப்படுதல். இதே போன்ற முடிவுக்கு வருபவர்கள் கருதுவது என்னவெனில், ஐரோப்பாவில் வாழ்ந்த பண்டைய ஆதிகால மனிதர்களிடமிருந்து குறிப்பாக ஐரோப்பியர்கள் சில மரபணு பாரம்பரியத்தைப் பெற்றிருக்கின்றனர் என்பதாகும். தகவல்களின் மறுபக்க கருத்துப்படி, ஆதிகால மனிதர்களும், நவீனகால மனிதர்களின் மூதாதையர்களும் நீண்ட காலத்திற்கு முன்னரே (அதாவது, 400,000த்திற்கு மேலான ஆண்டுகளுக்கு முன்னர்) கூடி இருந்ததாகவும், அவர்களுக்கு இடையிலான மரபுவழி வேறுபாடுகள் மாதிரிகளின் அளவில் வேறுபட்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறது. வேறு வார்த்தைகளில் குறிப்பிடுவதானால், இரு குழுக்களும் மரபுவழியில் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அவை தங்களுக்குள் கலப்பின சேர்க்கையிலும் ஈடுபட்டிருக்க முடியாது என்பதேயாகும். ஆதிகால மனிதர்கள் ஒருவேளை ஒரேயின ஆதிகால மனிதர்களாக, அதாவது ஓரின மரபணு மட்டுமே கொண்ட ஓர் உயிரினமாக (ஆணாகவோ அல்லது மனிதர்களாகவோ) இருந்திருக்கலாம்; ஆனால் ஹோமோசேப்பியன்களில் (நவீன மனிதர்களில்) இருந்து வேறுபட்டோ அல்லது நவீன மனித ஆதிவாசிகளாகவோ (ஹோமோசேப்பியன்களுக்கு இணையான தகுதிகளைக் கொண்ட உபஉயிரினங்களாகவோ) இருந்திருக்கலாம் என்ற கருத்துகளின்படி, இந்த வேறுபாடானது படிமுறையியலின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உபஉயிரினம் என்பது நவீன மனிதயினத்தை குறிக்கிறது.
abducted Pictures, Images and Photos
வெவ்வேறு உயிரினங்களுக்கு இடையே மரபணு பரிமாற்றம் ஏற்பட முடியுமா என்பதில் தான் உயிரினங்கள் அளவிலான பிளவுகள் அமைந்துள்ளது. ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதயினத்திற்கும் இடையே கலப்பின சேர்க்கை இருந்ததா, இல்லையா என்ற கேள்வியை வரலாற்றின் முக்கிய கலாச்சாரங்களில், சான்றாக, சிறீணீஸீ ஷீயீ ட்லீமீ நீணீஸ்மீ ஙிமீணீக்ஷீ மற்றும் னிஉமீச்ட் யீஷீக்ஷீ யீவீக்ஷீமீ போன்ற திரைப்படங்களில் தொடப்பட்டுள்ளன. அண்ணளவாக 400,000த்திற்கு முந்தைய ஆண்டுகளின் தொடக்கத்தில், நவீனகால மனிதயினம் முதன்முதலாக ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் தோன்றியதாகவும், வெளிப்படையாக ஆதிகால மனிதர்களுடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்து வாழ்ந்ததாகவும், பின்னர் இவை புதைபடிமான தடயங்களில் மறைந்துவிட்டன என்பது போன்று கடைசி உறைபனி காலத்தின் (மிநீமீ கிரீமீ ஷீக்ஷீ றிறீமீவீச்ட்ஷீநீமீஸீமீ) இறுதி பகுதிக்குரிய காலத்தை இந்த திரைப்படங்கள் எடுத்துக்காட்டின.

இந்த இரண்டு மக்களுக்குமிடையே ஏதேனும் தொடர்புகள் இருந்திருந்தால், இயல்பாக என்ன மாதிரியானதாக இருந்திருக்கும்? நவீனகால மனிதர்கள் தங்களின் பண்டைய உறவினர்களான ஆதிகால மனிதர்களுடன் புத்திசாலித்தனமாக போட்டியிட்டு, உணவுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் அல்லது ஒருவேளை வன்முறையால் அவர்களை பூண்டோடு இல்லாதொழித்தனவா? அல்லது முந்தையவர்களின் மரபணு பின்னர் வந்தவர்களால் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையில் நவீனகால மனிதர்களும் ஆதிகால மனிதர்களும் கலப்பு சேர்க்கையில் ஈடுபட்டனரா? இரண்டாவதாக கூறப்படும் கருத்து உண்மையானால், ஆதிகால மனிதர்கள் நடப்பிலிருந்து மறைந்துவிடவில்லை என்றாகிறது. அவர்கள் புதைபடிமான தடயங்களிலிருந்து மட்டுமே மறைந்திருக்கிறார்கள் என்றும், ஏனெனில் அவர்களின் வழிதோன்றல்கள் நவீனகால மனிதர்களிடம் இருந்து வேறுபடுத்த முடியாத அளவிற்கு பெருமளவில் அவர்களுள் கலந்துள்ளனர் என்றும் தோன்றுகிறது.

அடிப்படையில் வன்முறை தான் மனித இயற்கை என்பதன் அறிகுறியாக முதல் கருத்தை (அதாவது, ஆதிகால மனிதர்கள் இல்லாதொழிக்கப்பட்டனர் என்ற கருத்து) திரித்து கூறும் முயற்சிகளும் நடைமுறையில் உள்ளன. இதன் மறுபக்கம், அமைதிக்கான மனிதயின மனப்போக்கு (அதாவது, யுத்தம் இல்லாமல் அன்பை உருவாக்கும் மனப்போக்கு) இருப்பதற்கான ஒரு 'நம்பிக்கையான' அறிகுறியைக் குறிக்கும் வகையில், இரண்டு குழுக்களின் மரபணு ஒன்று கலந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. உண்மை மேலும் குழப்பமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் இந்த முடிச்சு அவிழ்க்கப்படும் போது, ஒட்டுமொத்தமாக மனிதயின பரிணாமத்தை புரிந்து கொள்வதற்கான உயர்ந்த படிப்பினை கிடைக்கும். கடந்த தசாப்தத்தின் தோற்ற பதிவேடு ஆராய்ச்சி மற்றும் மரபணு ஆராய்ச்சி இரண்டும் இந்த கேள்விக்கான பதிலை அளிக்கும் பல தகவல்களை அளித்துள்ளன.

கடந்த அரை நூற்றாண்டில், கிழக்கு ஆரிக்காவில் பண்டைய உடல்கூறு (கிஉச்ட்க்ஷீணீறீஷீஜீவீட்லீமீநீவீஸீமீ லீஷீனீவீஸீவீபீ) புதைபடிமானங்கள் கிட்டத்தட்ட கண்டுப்பிடிக்கப்பட்டதிலிருந்து, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதயினத்தின் முன்னோர் வாழ்ந்தனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. மனிதயின பரிணாமம் குறித்து பொதுவாக இரண்டு வித கண்ணோட்டங்கள் நிலவுகின்றன. ஒன்று, ஹிஸீவீறீவீஸீமீணீறீ (யூனிலீனியவாதம் -ஒரேயரு பெற்றோர் வழியில் வந்த உயிரினங்கள்); மற்றொன்று, விஉறீட்வீறீவீஸீமீணீறீ (மல்டிலீனியவாதம்- அதாவது பல பெற்றோர் வழியில் வந்த மரபு) அல்லது கிளை வழி கண்ணோட்டம் என்பது. ஹோமினிட் (பிஷீனீவீஸீவீபீ) என்ற வார்த்தை நவீனகால மனிதர்களைக் குறிக்கிறது. மேலும் அவர்களின் மூதாதையர்கள் மற்றும் அவர்களின் உடனொத்த கிளை மரபு உறவினர்களிடையே நடந்த இனக்கலப்பு ஹோமினிட்களிடையே பிரிவை ஏற்படுத்தியது. இறுதியாக, அதன் வழிதோன்றல்களான சிம்பன்சிகளை (சிலீவீனீஜீணீஸீக்ஷ்மீமீ) உருவாக்கியது. இது சுமார் 6.5 மில்லியன் மற்றும் 10 மில்லியன் ஆண்டுகளில் நடந்திருக்கலாம். மனிதர்களின் மற்றும் சிம்பன்சியின் ஞிழிகி சுமார் 96 சதவீதம் ஒத்திருக்கின்றன. பிற வாலில்லா குரங்குகளை விட இந்த இரண்டு குழுக்களுக்கு இடையே நெருங்கிய பரிணாம உறவுகள் இருப்பதை தான் இது குறிப்பிட்டு காட்டுகிறது.

1960களில் மற்றும் 1970களில் மிகவும் பரவலாக இருந்த தனித்த உயிரினங்களின் தற்காலிக கோட்பாடு என அறியப்படும் யூனிலீனியவாதம், மனித நடவடிக்கைகளான (குறிப்பாக, இவை பின்வருமாறு பண்புப்படுத்தப்பட்டன): வீ பொருட்களை எடுத்து செல்லவும், நிலையாக கருவிகளை உருவாக்கவும், பயன்படுத்தவும் ஏற்ற வகையில் கைகளை சுதந்திரமாக இயக்க உதவும் நிமிர்ந்த நடை. வீவீ) தொடர்ந்து வளர்ந்து வரும் சிக்கலான சமூக அமைப்புகள் மற்றும் வீவீவீ) அனைத்தையும் புரிந்துகொள்ளும் சிந்தனை திறன் ஆகியவை பிற அனைத்து விலங்குகளை விட்டு மிகவும் வேறுபட்டிருந்தது; மேலும், இந்த யூனிலீசவாதம் உயிரின பரிணாமத்தின் பொதுவான தோற்றங்கள் கணிசமாக மாற்றப்பட்டிருந்தன என்பதை உண்மையென ஏற்றுக் கொண்டது. இந்த கண்ணோட்டத்தில், பிற விலங்குகளைப் போல் அவற்றின் பரிணாம மாறுதல்களால் அல்லாமல் கலாச்சாரத்தால் (அறிந்துகொள்ளும் தன்மையால்) ஹோமினிட்கள் (பிஷீனீவீஸீவீபீச்) ஆரம்பம் முதலாகவே நிறைய தெரிந்து கொண்டார்கள். இதனால் புவியியல்ரீதியாக பரவலாக உயிரின கூட்டம் தொடர்ந்து நகர்ந்த போது, மனிதயினமும் பல்வேறு சூழ்நிலைகளில் பரவலாக விரிந்து சென்றது. இதன் மூலம் முழு உயிரினங்களையும் உள்ளடக்கி கிட்டத்தட்ட நிலையான மரபணு பரிமாற்றம் இருந்து வந்தது.
Medieval Man Enters Modern World Pictures, Images and Photos
யூனிலிசவாதத்தின் கண்ணோட்டத்தில், ஹோமினிட்கள் மத்தியில் இருக்கும் தொடர்ச்சியான மரபணு ஒற்றுமை குறிப்பது என்னவென்றால், தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் கூட்டத்தின் வழிதோன்றல்கள் மனிதயின மூதாதையர் மத்தியில் ஏற்படவில்லை என்பதாகும். ஆனால், உயிரியியல் பரிணாமத்தின் முதன்மை செயல்பாட்டின்படி, மரபணு வேறுபாடுகள் காரணமாக அப்போதிருந்த உயிரினங்களிலிருந்து புதிய உயிரினங்கள் பிரிந்து வந்தன என்று குறிக்கப்படுகிறது. புவியியல்ரீதியாக தூரத்திலிருந்த மனிதர்களுக்கு இடையே மரபணு வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம். கலாச்சாரரீதியான பரப்பப்பட்ட இணைந்துபோவதை அல்லது கலாச்சாரரீதியான இடம்பெயர்வை மற்றும் தொடர்ச்சியான மரபணு பரிமாற்றத்தையோ எதிர்த்த சக்திகளால் அது ஒருபோதும் இனப்பெருக்க தொடர்பின்மையை ஏற்படுத்தும் புள்ளியை சென்றடையவில்லை.

இனப்பெருக்க தொடர்பின்மை என்பது இனப்பெருக்கத்தின் மூலம் வழிதோன்றல்களை உருவாக்க வெவ்வேறு உயிரினங்கள் தங்களுக்குள் உயிர்கலப்பில் ஈடுபடும் போது அவற்றிற்கிடையில் இருக்கும் பொருத்தமின்மையைக் குறிக்கும். சான்றாக, குதிரைகளும், கழுதைகளும் உயிர்கலப்பில் ஈடுபட்டு கலப்பினங்களை உருவாக்க முடியும். ஆனால் அவ்வாறு உருவானவை, தங்களுக்குள் கலப்பின விலங்குகளை உருவாக்க முடியாது. ஆகவே, குதிரைகள் மற்றும் கழுதைகளுக்கு இடையே மரபணு பரிமாற்றம் கிடையாது. அவை வெவ்வேறானவையே, ஆனால் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடைய உயிரினங்கள். இவ்விரு உயிரினங்களின் உறுப்பினர்கள் தங்களுக்குள் உயிர்கலப்பில் ஈடுபட்டு உயிர் வாழ்வனவற்றை உருவாக்க முடியும். ஆனால் இவற்றிலிருந்து உருவான உயிர்கள் மலடாக இருக்குமேயானால், அவற்றின் வழித்தோன்றல்களின் மரபணு அமைப்பு பெருமளவில் ஒரேமாதிரியாக தான் இருக்கும்; அவை வெவ்வேறு உயிரின பிரிவுகளாக கடந்த காலத்தின் சமீபத்தில் தான் ஏற்பட்டிருக்க முடியும்.

யூனிலிசவாத பொருள்விளக்கத்தின்படி, ஹோமினிட்கள் உயிர்வாழ்ந்த முழு புவியியல் பகுதிகளிலும், மனித மரபுகளில் ஏற்பட்ட உயிரியியல் மாற்றங்கள் படிப்படியாகவும், முறையாகவும் ஏற்பட்டது. ஏதோவொரு மூலைகளில் பரவலாக பரவியிருந்த ஒரேயரு உயிரினத்தில் ஏற்பட்ட அனுகூலமான மரபணு மாற்றங்கள், அதனோடொத்த உயிரினங்களுக்கு இடையே ஏற்பட்ட உயிர்சேர்க்கைகளாலும் மற்றும்/அல்லது இடப்பெயர்வினால் அவ்விடத்தில் இருந்த உயிரினங்களுடன் ஏற்பட்ட கலப்பின சேர்க்கையாலும், மீதமிருந்த பகுதிகளிலும் பரவியது. பல மில்லியன் ஆண்டுகளில் ஹோமினிட்களின் உடல் தோற்ற அமைப்பு மாறியிருந்த போதினும், இந்த மாற்றம் படிப்படியாகவும், முன்னேற்றம் பெற்ற வகையிலும் இருப்பதாக பொருள்படுத்தப்படுகிறது. அண்ணளவாக, சமகாலத்தின் ஹோமினிட் உடற்சுவட்டு ஆதாரங்களில் எலும்புக்கூடு தோற்றத்தில் காணப்பட்ட வேறுபாடுகள், மல்டிலீனிசவாதத்தால், வெவ்வேறு ஹோமினிட் உயிரினங்கள் உயிர் வாழ்ந்ததற்கான ஆதாரமாக பொருள்படுத்துகிறது. இதுவே யூனிலிசவாதத்தில், பாலியல் வேறுபாட்டுவாதம் (பீவீனீஷீக்ஷீஜீலீவீச்னீ-அதாவது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான உடலளவு போன்ற உடல்தோற்ற வேறுபாடுகள்) மற்றும்/அல்லது பாரியளவிலான மரபணு வேறுபாட்டைக் கொண்ட மக்களின் விளைவாக குறிக்கப்படுகிறது.

எதிர்மறை சிந்தனையின் பள்ளியான மல்டிலீனிசம் அல்லது கிளை சார்பு கண்ணோட்டமானது, உண்மையில் பிற விலங்குகளில் இருந்து மனிதர்களின் ஏற்புத்திறன் மாறுபட்டு இருந்தாலும் கூட, ஹோமினிட் உயிரியியல் பரிணாமத்தின் மீது அதன் செல்வாக்கு யூனிலிசவாதிகளால் வரையறுத்து காட்டப்படுவது போன்று, குறைந்தபட்சம் நவீனகால மனிதர்கள் உருவானது வரையிலாவது அத்தனை உயர்ந்ததன்று. ஹோமினிட்களின் வாழ்க்கை பெருமளவில் வளர்ச்சி அடையும் வரையிலும் அவர்களின் மக்கள்தொகை மிக குறைவாகவே இருந்தது; மக்கள்தொகையின் அடர்த்தியும் குறைவாக இருந்தது. மேலும் தொழில்நுட்ப ஏற்புத்திறனும் குறிப்பிடும் அளவிற்கு சாதாரணமாகவும், நீண்ட காலம் மாற்றம் இல்லாமலும் தான் இருந்தன என்று மல்டிலீனிசவாதிகள் வாதிடுகிறார்கள். எனவே, மரபணு பரிமாற்றம் பொதுவாக எல்லைக்குட்பட்டு முக்கியமாக, ஹோமினிட்கள் வசித்திருந்த தொலைதூர பிரதேசங்களில் (அதாவது, ஆப்ரிக்கா மற்றும் யூரேஷியாவின் பல பகுதிகளில்) இருந்தது. இது வெகுதொலைவு மக்களுக்கு இடையே துல்லியமாக மரபணு தொடர்பின்மையை உருவாக்கியது. மேலும் ஹோமினிட்கள் ஒரு பிரத்யேக நடைமுறை பண்பாட்டை கொண்டிருந்த போதிலும், இயற்கையால் அளிக்கப்பட்ட சில குறிப்பிட்ட அழுத்தங்களுக்கு எதிராக கணிசமான இடைநிலையை உருவாக்க முடியவில்லை. அதற்கு மாறாக, ஹோமினிட்கள் தொடர்ச்சியான வழிதோன்றல்களுக்கு உள்ளானார்கள் என்றும், குறிப்பிட்ட தட்பவெப்ப சூழலுக்கும் மற்றும்/அல்லது உயிர்வாழ்வதற்கான நிலைகளுக்கும் ஏற்ப பல்வேறு உயிரினங்கள் உருவாயின என்றும் மல்டிலீனியவாதிகள் வாதிடுகின்றனர். சில விடயங்களில், சில மில்லியன் ஆண்டுகளில் வெவ்வேறு ஹோமினிட் உயிரினங்கள் புவியியல்ரீதியாக ஒரேயிடத்தில் வந்திருப்பதையும் மற்றும் காலவகையில் நெருங்கி உடன் வாழ்ந்திருப்பதையும் காணமுடிகிறது. (அதாவது, கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்காவின் உடல்வலிமை மிக்க மற்றும் வலிவற்ற ஆதிவாசிகள்)

மல்டிலீனிசவாதத்தில் கூறப்படும் மனிதயின பரிணாமம், நவீன பரிணாம கோட்பாட்டுடன் மிகவும் நெருக்கமாக உள்ளது. சான்றாக, சமநிலை வலியுறுத்திய நிஷீஉறீபீ ணீஸீபீ ணிறீபீக்ஷீவீபீரீமீ இன் கோட்பாடு. இதில் கூறப்படுவதென்னவென்றால், ஒரு தொடர்பற்ற உயிரின சட்டம், குறிப்பிட்ட பிரத்யேக அழுத்தத்திற்கும் மற்றும்/அல்லது மாறுபட்ட மரபணு மாற்றத்திற்கும் உட்படும் போது முதன்மை உயிரின உறுப்பினர்களிடம் இருந்து மரபணுரீதியாக போதியளவில் வேறுபடும். அவ்வாறில்லாத வரை ஒரு குறிப்பிட்ட உயிரினங்கள் மாற்றத்திற்குட்படாமல் தான் இருக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வழித்தோன்றல்கள் ஏற்படுகின்றன என்பதேயாகும். தர்க்கவாத வகையில், ஒரு தனிமைப்படுத்தப்பட்ட உயிரின கூட்டத்தின் மட்டுப்படுத்தப்பட்ட மரபணு தொகுப்புக்களும் மற்றும் ஒரேமாதிரியான சுற்றுசூழலால் உருவாக்கப்பட்ட இயற்கை தேர்வின் அழுத்தத்தாலும் மரபணு மாற்றத்தால் இதற்கு எதிர்மாறாக ஒரு குறிப்பிட்ட புள்ளியை எட்டுகிறது. அங்கு புதிய உயிரினங்களின் தோற்றம் அல்லது அந்த உயிரின கூட்டத்தின் அழிவு உருவாகிறது.

ஒட்டுமொத்தமாக பார்ப்போமேயானால், பல தசாப்தங்களாக நடந்து வரும் எண்ணிலடங்கா ஆராய்ச்சிகள், ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களும் ஒரே உயிரினத்தின் உறுப்பினர்களா அல்லது வெவ்வேறு உயிரினங்களின் உறுப்பினர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்க முயன்றிருக்கின்றன. எவ்வாறிருப்பினும், இந்த கேள்விக்கான பதில், மனிதயின பரிணாமம் பற்றிய யூனிலினிசம் அல்லது மல்டிலினிச கண்ணோட்டத்தைச் சார்ந்து தான் அமையும். எனவே இது மனிதயினம் எதிலிருந்து தோன்றியது என்பதை நாம் அறிந்து கொள்வதற்கு மிகவும் முக்கியமாக உள்ளது. எவ்வாறிருப்பினும், இந்த புதிய ஆராய்ச்சி முடிவுகளுக்கு இடையில், தற்போதிருக்கும் தகவல் தரவுகள் இந்த முரண்பாடுகளுக்கு இன்னும் தெளிவான தீர்வு அளிப்பதாக இல்லை.
Old lady Pictures, Images and Photos
ஆதிகால மனிதர்கள்/நவீனகால மனிதர்களின் உறவுகள் தொடர்பான கேள்விகள் சார்ந்த ஆதாரங்கள் பல வகைகளின் கீழ் வருகின்றன. இவை ஒவ்வொன்றும் உண்மையின் ஒரு பகுதியை மட்டுமோ அல்லது ஒருதலைபட்சமான கண்ணோட்டத்தையோ தான் வெளிப்படுத்துகின்றன. இருந்தும், இவ்வகைகளில் குறிப்பிடத்தக்க இரண்டு வகைகள் உயிரியலில் உள்ளன. ஒன்று படிமான ஆதாரங்கள், மற்றொன்று சமீபத்திய ஞிழிகி பகுப்பாய்வு. இதையடுத்து மூன்றாவது முக்கிய ஆதார தரவு மனிதவியல் ஆய்வியல். அதாவது இது, இரண்டு மக்கள் கூட்டங்களாலும் விட்டு செல்லப்பட்ட உற்பத்திசகய்யப்பட்ட அல்லது புத்துருக்கொடுக்கப்பட்ட பொருட்களும், பிற பொருளாயத தடயங்களும் சார்ந்த ஆய்வாகும். சமீபத்திய அறிக்கைகளின் தோற்றவாயாக (ளிக்ஷீவீரீவீஸீ) உயிரியியல் தரவுகள் இருப்பதால், நான் இந்த கட்டுரையில் அவற்றை சார்ந்து கவனம் செலுத்தவிருக்கிறேன்.

முன்பே குறிப்பிட்டது போல, ஒவ்வொரு ஆதார தரவும் அதற்குரிய சொந்த வரையறைகளையும், ஒருதலைபட்சமாக சார்ந்திருக்கும் தன்மையையும் கொண்டுள்ளன. "புதைபடிமானங்களை மீண்டும் உருவாக்க முடியாது" என்பது தொல்பொருளியியலின் உண்மை. உயிர்வாழும் உயிரினங்களின் பரிணாம உறவுகளைப் புரிந்து கொள்வதற்கான ஒரு முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால் மரபணு தனிமைப்படுத்தல் (ரீமீஸீமீட்நீ மிச்ஷீறீணீட்வீஷீஸீ) என்பதாகும். இரண்டு உயிரின கூட்டங்களின் உறுப்பினர்கள் தங்களுக்குள் வெற்றிகரமாக உயிர்கலப்பில் ஈடுபட்டு, அவற்றின் இனப்பெருக்கம் செய்யக்கூடிய வழித்தோன்றல்களை உருவாக்க முடியுமா என்றால், இதற்கான பதில், தற்போது உயிர்வாழும் விலங்குகளின் அடிப்படையில், வெளிப்படையாக நேரடியாக உள்ளது. முன்னர் அளிக்கப்பட்ட சான்றில், குதிரைகளும், கழுதைகளும் உயிர்கலப்பு செய்து கலப்பின உயிர்களை உருவாக்க முடியும். ஆனால் இந்த கலப்பின உயிர்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாது. கலப்பினங்களின் கூட்டம் சுயமாக தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது. காலப்போக்கில், குதிரைகளுக்கும், கழுதைகளுக்கும் இடையே இயற்கையாகவே மரபணு பரிமாற்றம் இல்லாமல் போவதால், அவை வெவ்வேறானவையாக ஆகிவிடுகின்றன. மற்றொரு புறம், வீட்டு நாய்கள், கொயோட்கள் (சிஷீஹ்ஷீட்மீ - ஒருவகை ஓநாய்), ஓநாய்கள் அவற்றுக்குள் உயிர்கலப்பில் ஈடுபட்டு தொடர்ந்து கலப்பின கூட்டத்தை உருவாக்க முடியும் என்பதாய் தோன்றுகிறது. இது உண்மையானால், உடல் தோற்றம் மற்றும் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்தாலும் கூட, இந்த உயிரினங்கள் அனைத்தும் ஒரே உயிரினத்தின் பகுதியாக உள்ளன; ஆனால் வெவ்வேறு உயிரினங்களாக குறிக்கப்படுகின்றன.

துரதிஷ்டவசமாக விஞ்ஞானத்திற்காக, உயிர் வாழும் எந்த ஆதிகால மனிதயினமும் கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் அதுபோன்ற எதுவும் உலகில் கண்டுபிடிக்கப்படவும் கூட இல்லை. உயிர் வாழும் மனிதயினம் அல்லது பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிமானங்கள் எடுத்துக்காட்டும் நவீனகால மனிதர்களிடமிருந்து வேறுபட்ட புதைப்படிமான எலும்புகளின் மாறுபட்ட உடற்கூறு தன்மைகளைக் கொண்டு முதன்முதலில் ஆதிகால மனிதயினம் கண்டறியப்பட்டது. புதைபடிமான உயிரினங்கள் ஒரே உயிரினங்களைச் சேர்ந்தனவா அல்லது வெவ்வேறு உயிரினங்களைச் சேர்ந்தனவா என்பதை தீர்மானிக்க, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கிடைத்திருக்கும் புதைபடிமானங்களில் மிக கவனமாக ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். பின்னர், மரபணு தொடர்பின்மையைக் குறிப்பிட போதிய வேறுபாடுகள் இருக்கின்றனவா என்பதை கணிக்க, உடல்தோற்றங்களிலும், குறிப்பிட்ட நடவடிக்கைகளிலும் உள்ள வேறுபாடுகளின் அளவுகளை ஒப்பிடுகிறார்கள். இந்த விளக்கங்கள் யாவும் தற்போது உயிர் வாழும் உயிரினங்களுக்கு இடையில் அறியப்பட்ட வேறுபாட்டு அளவுகளுடன் ஒப்புமையால் கூறப்பட்டவையாகும். வெவ்வேறு குறிப்பிட்ட உயிர்வகைகளைத் துல்லியமாக ஆய்வு செய்தாலும் கூட, மிகவும் நெருக்கமாக தொடர்புடைய உயிரினங்களை ஆய்வு செய்யும் போது, அவற்றை வேறுபடுத்தி பார்ப்பது மிகவும் கடினமாக உள்ளது.

பொதுவாக ஆதிகால மனிதர்களின் எலும்புகள் நவீனகால மனிதர்களின் எலும்புகளை விட மிகவும் பெரியதாகும். ஆதிகால மனிதர்கள் அவர்களின் கண் இமைகளின் மேல் முகடுகளையும் (இமை முகடுகள்), பொதுவாக நவீனகால மனிதர்களிடம் காணப்படாத மண்டை ஓட்டு வளைவுகளையும் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு நவீனகால மனிதர்களை விட தட்டையான, பரந்த மூக்குகள் இருந்தன. அவர்கள் சுருங்கிய தாடைகளைக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மூளை நவீனகால மனிதர்களை விட அளவில் பெரியதாக இருந்தது. (குறிப்பு: இவ்வாறு இருப்பதால் அவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருந்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. அதாவது மூளையின் அளவிற்கும், புத்திசாலித்தனத்திற்கும் நேரடியாக எந்த தொடர்பும் கிடையாது.) ஆதிகால மனிதர்களும், நவீனகால மனிதர்களும் மாறுபட்ட சூழலில் வாழக்கூடிய வழித்தோன்றல்களை உருவாக்கியிருக்க முடியாது எனும் வகையில், மேற்கூறிய ஒன்றோ அல்லது பல வேறுபாடுகளோ மரபணு வேறுபாடுகளைக் குறிக்கின்றனவா?

மேலும் நிச்சயமற்றதன்மையை கூட்டும் வகையில், ஆதிகால மனிதர்களின் புதைபடிமானங்களிலும் நிறைய மாற்றங்கள் உள்ளன. மேற்குறிப்பிட்ட ஆதிகால மனிதர்களின் பண்புருக்கள், பண்டைய ஆதிவாசிகள் (சிறீணீச்ச்வீநீ ழிமீணீஸீபீமீக்ஷீட்லீணீறீச்) என்று அழைக்கப்பட்ட, ஐரோப்பாவில் இருந்த உயிரினங்களிலும் வலுவாக காணப்படுகின்றன. இந்த பண்புகள் முற்போக்கான ஆதிவாசிகள் (றிக்ஷீஷீரீக்ஷீமீச்ச்வீஸ்மீ ழிமீணீஸீபீமீக்ஷீட்லீணீறீச்) என்று அறியப்பட்ட, மத்தியகிழக்கில் இருந்த ஆதிகால மனிதர்களிடம் குறைவாக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. இது பண்டைய ஆதிவாசிகளை விட முற்போக்கு ஆதிவாசிகள் நவீனகால மனிதர்களிடம் இருந்து மிக குறைவாக வேறுபட்டு இருந்தார்கள் என்பதை குறிக்கிறதா? அப்படியானால், முற்போக்கான ஆதிவாசி மனிதர்கள் மூலமாக, பண்டைய ஆதிவாசிகளுக்கும் நவீனகால மனிதர்களுக்கும் இடையே மரபணு பரிமாற்றம் இருந்திருக்குமா?


ஆதிகால மனிதர்களின் பிரமாண்ட தோற்றமும், தட்டை மூக்கு போன்ற பிற உடல் அமைப்பும், குறிப்பாக பண்டைய ஆதிவாசிகளுடன் ஒத்திருந்த இந்த பண்புகள், ஐரோப்பாவின் பனிகாலத்தில் ஏற்பட்ட கடுமையான சீதோஷ்ண நிலைமை மாற்றங்களால் மாற்றம் அடைந்திருக்கலாம் என்று பொருள்படுத்தப்படுகிறது. நவீனகால மனிதர்களுடன் ஒப்பிடும் போது, பின்தங்கி இருந்த ஆதிகால மனிதர்களின் தொழில்நுட்பமும், அவர்களின் பிரமாண்ட உருவ தோற்றமும், குறிப்பாக பெருமளவில் பாலூட்டிகளை மட்டும், துரத்தி சென்றும், ஈட்டி பயன்படுத்தியும் மற்றும் இரையுடன் கைகளால் சண்டையிட்டும் வேட்டையாடும் முறைகளைக் குறிப்பதாக உள்ளது என்று சிலரால் கருதப்படுகிறது. ஐரோப்பாவில் இருந்த போது ஆதிகால மனிதர்களும், நவீன மனிதர்களும் ஒரே வகையான விலங்குகளின் இரையையே உண்டு வந்தார்கள் என்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் டோனால்டு கிரேசன் மற்றும் போர்டியக்ஸ் பல்கலைக்கழகத்தின் பிரேன்கோஸ் டெல்பெக் ஆகியோரின் ஆராய்ச்சி (ரிஸீவீரீலீட், ஷிமீஜீட்மீனீதீமீக்ஷீ 2003, ழிமீஷ்ஷிநீவீமீஸீட்வீச்ட்.நீஷீனீ) குறிப்பிடுகிறது. எவ்வாறிருப்பினும், அவர்களின் வேட்டையாடும் முறைகள் சமமளவில் ஆக்கப்பூர்வமாக இருந்தன என்பதை நிரூபிக்க மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

எவ்வாறிருப்பினும், குளிர்ந்த சீதோஷ்ண நிலையைத் தாங்கும் ஆதிகால மனிதர்களின் தன்மை சற்றே மிகை மதிப்பீடு செய்யப்பட்டதாக இருக்கலாம். ஆதிகால மனிதர்களும், ஆரிங்னேசியன்கள் (கிஉக்ஷீவீரீஸீணீநீவீணீஸீச்) என்று தொல்பொருள் ஆய்வாளர்களால் அறியப்படும் ஐரோப்பாவின் முந்தைய நவீனமனிதயின மக்களும் அதிகரித்த குளிர்ச்சியாலும், அதற்கு முந்தைய குளிர் சீதோஷ்ண நிலையாலும் தெற்கு நோக்கி தள்ளப்பட்டார்கள் என்று கடந்த பனிக்காலத்திலும் (குளிர் காலத்திற்கும் சாதாரண சீதோஷண நிலைமைக்கும் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தன) இருந்த, கடுமையான பனிக்காலத்திலும் தட்பவெப்ப நிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை ஒப்பிட்டு செய்யப்பட்ட ஆராய்ச்சி (ஸ்ணீஸீ கிஸீபீமீறீ, யிணீஸீஉணீக்ஷீஹ் 2002, னிஉணீட்மீக்ஷீஸீணீக்ஷீஹ் ஸிமீச்மீணீக்ஷீநீலீ ணீஸீபீ ளிறீச்க்ஷ்மீஷ்ச்ளீவீ 2006 றிணீறீமீஷீகிஸீட்லீக்ஷீஷீஜீஷீறீஷீரீஹ்) குறிப்பிடுகிறது. இந்த சீதோஷ்ண நிலைமைகளின் கடுமையான அழுத்தத்தின் கீழ், பெரும்பாலான இரைக்குரிய உயிரினங்கள் வடக்கு ஐரோப்பாவிலிருந்து இடம் பெயர்ந்தன. ஆரிங்னேசியன்கள் (கிஉக்ஷீவீரீஸீணீநீவீணீஸீ) மற்றும் ஆதிகால மனிதர்களின் பொருளாதாரங்களும், தொழில்நுட்பங்களும் பெருமளவில் பாலூட்டிகளை வேட்டையாடுவதை மையமாக கொண்டிருந்ததால், கிடைத்த உணவு பரிவர்த்தனையில் ஏற்பட்ட மாற்றம் இவ்விரு குழுக்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்திருக்கலாம். எவ்வாறிருப்பினும், இந்த விளக்கத்தின்படி, ஆதிகால மனிதர்களை விட கலாச்சாரரீதியாக ஏற்றுக் கொள்வதற்கு தேவையான திறமை நவீனகால மனிதர்களிடம் மிகவும் இலகுவாக இருந்தது. இதனால் நவீனகால மனிதர்களால் உயிர்வாழ முடிந்தது. ஆதிகால மனிதர்களால் நிலைத்திருக்க முடியவில்லை.

மாறும் சீதோஷ்ண நிலைமைகளுக்கு நவீனகால மனிதர்கள் மாற்றியமைத்துக்கொள்ளும் தன்மையானது, ஆரிங்னேசியன்களில் இருந்து கரேவிட்டயன் (நிக்ஷீணீஸ்மீட்ட்வீணீஸீ) கலாச்சார வடிவத்திற்கு மாறியதை மனிதவர்க்க ஆய்வியல் வெளிப்படையாக பிரதிபலிக்கிறது. ஈட்டி எறிதல், வலை வீசுதல், பல்வேறு உணவு வகைகளின் கண்டுபிடிப்பு, மேலும் தைத்த ஆடைகள், நெய்த துணிவகைகள் ஆகியவற்றை கிரேவிட்டேயன் தொழில்நுட்பம் உட்கொண்டிருந்ததாக பண்புருவாக்கப்பட்டது. நவீனகால மனிதர்களுடன் ஒப்பிடும் போது, ஆதிகால மனிதர்கள் மிகவும் குறைந்த தொழில்நுட்பங்களையே கொண்டிருந்ததாக மனித இன ஆய்விற்கு கிடைத்திருக்கும் தடயங்கள் குறிப்பிடுகின்றன.

ஒட்டுமொத்தமாக, ஆதிகால மனிதர்கள் மற்றும் நவீனகால மனிதர்களிடையே உடல் தோற்றம் மற்றும் கலாச்சாரம் இரண்டுமே குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் இருந்ததைக் காண முடிகிறது. உண்மையென கொள்ளத்தக்க அளவில், இயற்கை தேவைகளால் உந்தப்பட்டு பல்வேறு பரிணாம மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும், பல்வேறு சீதோஷ்ண நிலைகளில் வாழும் மக்களிடேயே குறிப்பிடத்தக்க உடல்தோற்ற வேறுபாடுகள் உள்ளன. சான்றாக, வெப்ப ஏற்பு மற்றும் இழப்பு கட்டுப்பாட்டின் தேவையானது, ஆப்ரிக்காவிலுள்ள சூடான மற்றும் வறண்ட பகுதிகளில் வாழும் ஒல்லியான, உயர்ந்த மக்களை விட ஆர்டிக் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு குட்டையான, குண்டு உடல் தோற்றத்தை உருவாக்கி உள்ளது. இது நிலப்பரப்பு மற்றும் அளவு விகிதத்தை மாற்றுவதன் மூலம் வெப்பயியக்க சமத்தன்மை கொண்டு வரப்பட்டிருப்பதை தெளிவாக பிரதிபலிக்கிறது. இருந்த போதினும், உயிர் வாழும் அனைத்து மனிதர்களும் ஒரே உயிரினங்களின் உறுப்பினர்களே; மேலும் அவை ஒன்றோடொன்று உயிர்கலப்பு செய்யலாம் என்பதுடன் மாறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் வழிதோன்றல்களையும் அவற்றால் உருவாக்க முடியும். ஆதிகால மனிதர்களுடன் ஒப்பிடும் போது நவீனகால மனிதர்களுக்கு குறைந்த வலிமையுடைய உடல் தோற்றமே உள்ளது என்பதானது நவீனகால மனிதர்கள் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினார்கள் மற்றும் உயிரினங்கள் அளவில் ஒரு தொடர்பின்மையை அத்தியாவசியமாக எடுத்துக்காட்டும் வேறுபாடுகள் இல்லாமல் பின்னர் மிதமான தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற உடல் தோற்றத்தை பெற்றார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. உண்மையில் உணவுக்கான மற்றும் பிற அபிவிருத்திக்கான அழுத்தங்கள் (அதாவது, பற்களின் வளர்ச்சி போன்றவை) நவீன எஸ்கிமோக்களில் காணப்படுவது போன்று ஆதிகால மனிதர்களிடம் பெரியளவில் காணவில்லை என்று சில ஆய்வுகள் (நிஉணீட்மீறீறீவீ-ஷிட்மீவீஸீதீமீக்ஷீரீ, கிஉரீஉச்ட் 2003, யிஷீஉக்ஷீஸீணீறீ ஷீயீ பிஉனீணீஸீ ணிஸ்ஷீறீஉட்வீஷீஸீ) குறிப்பிடுகின்றன.

ஆதிகால மனிதர்களின் பற்கள் பற்றிய மற்றொரு ஆய்வானது, அவர்கள் நவீனகால மனிதர்களை விட விரைவாக முதிர்ச்சியடைந்தார்கள் என்றும், அதாவது 15 வயதிற்குள் முழு முதிர்ச்சிபருவத்தை அடைந்தார்கள் என்றும் தீர்மானிக்கிறது. ஆதிகால மனிதர்கள் நவீனகால மனிதர்களை விட உயர்ந்த இறப்பு விகிதத்துடனும், குறைந்த வாழ்நாட்களுடனும் உடலளவில் மிகுந்த அழுத்தமான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்றால், விரைவிலேயே ஏற்பட்ட முதிர்ச்சியானது, விரைவான பாலியியல் முதிர்ச்சிநிலை மற்றும் விரைவான இனவிருத்தியை அளித்திருக்க வேண்டும். (ஆதாரம்: ஸிணீனீவீக்ஷீமீக்ஷ் ஸிஷீக்ஷ்க்ஷ்வீ, கிஜீக்ஷீவீறீ 2004, ழிணீடுக்ஷீமீ). ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையே இருந்த முதிர்ச்சி விகித வேறுபாடுகள் கலப்பின மரபுகளின் அபிவிருத்திக்கு சாத்தியமற்ற விளைவை ஏற்படுத்தி இருக்கும். இது இரு குழுக்களுக்கும் இடையில் இனவிருத்தியைக் கட்டுப்படுத்தி இருக்கும் அல்லது தடுத்தும் கூட இருக்கலாம்.

பின்னர், புதைபடிமான தடயங்களின் சமீபத்திய ஆய்வுகளின் கூட்டு தகவல், ஆதிகால மனிதர்களைப் பற்றிய பல புதிய தகவல்களை ஒப்பு கொண்டுள்ளன. எவ்வாறிருப்பினும், இந்த தகவல் முரண்பாடான விளக்கங்களைத் தான் கொண்டு வருவதாக தோன்றுகிறது. இது, இதுவரை, ஒரேமாதிரியான விளக்க கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படவில்லை. மிக நெருக்கமான தொடர்புடைய இந்த குழுக்கள் ஒரே உயிரினத்தைச் சார்ந்தனவா அல்லது வேறுபட்ட உயிரினங்களைச் சார்ந்தனவா என்பது குறித்து ஒரு தெளிவான தீர்மானத்தை அடைய புதைபடிமான அமைப்பியல் ஆய்வுகள் மட்டும் போதியதாக இல்லாமல் இருக்கலாம்.

பொதுவாக இந்த பிரச்சனை குறித்தும் மற்றும் குறிப்பாக ஆதிகால மனிதர்கள்/நவீனகால மனிதர்களிடையேயான உறவு குறித்தும் கடந்த தசாப்தங்களில் அல்லது அதற்கு முந்தைய தசாப்தங்களில் ஒரு புதிய ஆதார தரவு உருவாக்கப்பட்டது. வாழும் உயிர்வகைகளின் மரபணுக்களை ஒப்பிடவும், பரிணாம உறவுகளின் மாதிரிகளை உருவாக்குவதற்காக அவற்றிற்கிடையிலான ஒற்றுமையின் அளவை தீர்மானிக்கவும் பல தசாப்தங்களாக ஞிழிகி பகுப்பாய்வு பயிற்சி செய்யப்பட்டது. எவ்வாறிருப்பினும், மிக சமீபத்தில் தான், புதைபடிமானங்களில் இருந்து ஞிழிகி பிரித்தெடுக்கும் நுட்பங்கள் கண்டறியப்பட்டன. ஞிழிகி கெட்டிப்படும் என்பதால், சாத்தியமான சூழ்நிலைகளில் அது புதைபடிமானங்களில் உயிர்த்திருக்க முடியும். ஜூராசிக் பார்க்கில் காட்டப்படுவது போன்று, குறைந்தபட்சம் இதுவரையிலும் நம்மால் அழிந்து போன விலங்குகளை பிரதியாக்கம் (நீறீஷீஸீமீ) செய்ய முடியவில்லை என்ற போதினும், போதியளவு ஞிழிகி மீட்டெடுக்கப்பட்டால், நீண்ட காலத்திற்கு முன்பே இறந்து போன உயிர்வகைகளின் மரபணுக்களை ஆய்வு செய்ய முடியும். இறுதி விளைவாக, வாழும் மக்களிடையே செய்யப்படுவது போன்று, அதே முறையில் அழிந்து போன மக்களிடையேயும் மரபணு ஒப்பீடுகளைச் செய்ய குறைந்தபட்சம் இது சாத்தியக்கூறை ஏற்படுத்தியுள்ளது.

புதைபடிமான ஞிழிகி பயன்படுத்திய மரபணு பகுப்பாய்வின் சமீபத்திய முடிவுகளின் முக்கியத்துவத்தை தீர்மானிக்க, இந்த ஆதார தரவுகளிலுள்ள சில குறைபாடுகளைக் கவனிக்க வேண்டியதாய் உள்ளது. முதலாவதாக, உயிர்வகைகளின் மரபணு குறியீட்டை ஞிழிகி கொண்டிருந்தாலும் கூட, பெரும்பாலான மரபணு குறியீடுகளின் செயல்பாடுகளை விஞ்ஞான ஆராய்ச்சி புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. எனவே, குறியீடுகளின் தொடர்ச்சிக்கு இடையிலான பெரும்பகுதிகளை மட்டுமே ஒப்பீடு செய்ய முடியும். ஒரு வாழும் உயிர்வகையின் குறியீட்டை இத்துடன் ஒப்பிட முடியாது. எனவே புதைபடிமான எலும்புக்குள் உள்ள புதைபடிமான ஞிழிகி , குறைந்தபட்சம் தற்போது ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் தொடர்பான தகவல்களை அளிக்கிறது. இதனை கொண்டு வெவ்வேறு ஞிழிகி மாதிரிகள் குறிப்பிடும் உயிர்வகைகள் தங்களுக்குள் உயிர்கலப்பில் ஈடுபட்டு மாறுபட்ட சூழலில் வாழக்கூடிய மரபினங்களை இனவிருத்தி செய்ய முடியுமா என்பதை உறுதியாக வரையறுப்பது சாத்தியமில்லை.

புதைபடிமான ஞிழிகி ஆய்வில் சில நடைமுறை சிக்கல்களும் உள்ளன. குறிப்பாக, குறிப்பிட்ட முடிவுகளின் நம்பகத்தன்மை மீது மனிதர்கள் கேள்வி எழுப்புவார்கள். இந்த சர்ச்சையில் கலப்பட பிரச்சனை தான் முக்கியமாக முன்நிற்கும். (ஆதாரம்: சிணீக்ஷீணீனீமீறீறீவீ மீட் ணீறீ, 16 யிஉறீஹ் 2008, றிலிஷீஷி ளிழிணி). புதைபடிமான ஞிழிகி வின் ஆதாரமாக விளங்கும் உயிரினங்களின் புதைபடிமான எலும்புகளை தோண்டி எடுப்பதற்கும், செறிவூட்டுவதற்கும் மனிதயினம் பொறுப்பாகிறது என்றாலும், மனிதர்கள் தொடர்ந்து அவர்களின் உடலிலிருந்து ஞிழிகி அடங்கியுள்ள பொருட்களை வெளியேற்றுவதாலும் (சான்றாக, தோல், முடி, உமிழ்நீர் ஆகியவை), ஞிழிகி எடுப்பு மற்றும் பகுப்பாய்வு செயல்முறை முழுவதும் மிக கடுமையான செயல்முறைகளை நடைமுறைப்படுத்தினால் ஒழிய, ஆய்வு செய்யப்பட வேண்டிய மாதிரிகளில் மனித ஞிழிகி கலந்து விடுவதற்கான நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. அவ்வாறு கலந்து விட்டால், எந்த பகுப்பாய்வின் முடிவும் சந்தேகத்திற்கு இடமாகிவிடும்.

இந்த குறைபாடுகள் இருந்த போதினும், புதைபடிமான எலும்பு ஆய்வியலில், புதைபடிமான ஞிழிகி ஆய்வானது முற்றிலுமான ஆதார தகவல்களையும் அளிக்கிறது. இதனால் பல்வேறு வகையான ஆய்வுகளில் போன்று, ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு பல வேறுபட்ட வழிகளிலான ஆதாரங்களை கருத்திற்கொள்ள முடியும். இதனூடாக மிகவும் நம்பகமான, இறுதி விளக்கத்தை பெறுவது சாத்தியமானதாகும்.

புதைபடிமான எலும்பு ஆய்வியல் மற்றும் புதைபடிமான ஞிழிகி ஆகிய இரண்டு ஆய்வுகளிலும் உள்ள ஓர் இறுதி பிரச்சனை கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது மாதிரியின் அளவு மற்றும் பிரதிநிதித்தவத்தன்மையின் பிரச்சனைகள். பத்து அல்லது நூறாயிரக்கணக்கான அல்லது மில்லியன்கணக்கான ஆண்டுகளின் காலஅளவை உட்கொண்டிருக்கும் உயிரின பரிணாமத்தை ஆராயும் போது, வாழ்ந்து இறந்த உயிர்வகைவம்சங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். இதற்கும் மேலாக, குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட உயிரினங்களின் வாழும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தாயிரம் அல்லது அதற்கு மேலாக கூட இருக்கலாம். அந்த காலத்தில் வாழ்ந்த உயிரினங்களில் எந்தவொரு தனிப்பட்ட உயிரினமும் எண்ணிலடங்கா மரபணு மற்றும் அமைப்பியலில் ஒரு சிறு பகுதியேயாகும். ஆகவே, ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் மட்டும் உயிர் வாழ்ந்தவைகளில் எந்தவொரு குறிப்பிட்ட இயல்பிலும் (சான்றாக மண்டை ஓடு, எலும்புகளின் தடிமன் போன்றவை) ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் குறித்து போதியளவு நம்பிக்கையைப் பெற வேண்டுமானால், அந்த உயிரின கூட்டத்திடமிருந்து பெருமளவிலும், புள்ளிவிபரங்களிலும் வேறுபட்ட மாதிரிகளைப் பெற வேண்டும்.

துரதிஷ்டவசமாக, ஒரு குறிப்பிட்ட உயிரினங்களின் காலகட்டத்தில் உயிர் வாழ்ந்திருக்க கூடிய அவற்றின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், ஆதிகால மனிதயினங்களின் புதைபடிமானங்களின் எண்ணிக்கையும் மற்றும் தற்போது இருக்கும் நவீனகால மனிதர்களுக்கு முந்தையவர்களின் எண்ணிக்கையும் மிக சிறிய விகிதத்திலேயே உள்ளன. இதற்கும் மேலாக, கண்டெடுக்கப்பட்ட மாதிரிகள் புள்ளியியலுக்கு உட்பட்ட மாதிரியாக இல்லாமல் ஒழுங்கற்ற வகையில் உள்ளன. ஆகவே, கிடைத்திருக்கும் புதைபடிமான மாதிரி நாம் ஆராய விரும்பும் கடந்தகால உயிரின கூட்டங்களுக்கு சொந்தமானவையே என்று உறுதியாக தீர்மானிப்பது கடினமாக உள்ளது. இதன் இறுதி வரிகள் என்னவென்றால், நிறைய மாதிரிவகைகள் கண்டறியப்பட்டு, ஆய்வு செய்யப்படும் போது, முழு விளக்கங்களுக்காக தற்போதைய விளக்கங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டியதாய் இருக்கலாம்.

தற்போதுள்ள முன்னெச்சரிக்கைகளை கருத்திற்கொண்டு, புதைபடிமானங்கள் மற்றும்/அல்லது ஞிழிகி தரவுகளைப் பயன்படுத்தி ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை அளிக்கும் சமீபத்திய ஆராய்ச்சிகளின் சில சான்றுகளை மீள்பார்வை செய்யப்படலாம்.

ஒரே உயிரினங்களுக்கான புனைவுகோளின் முன்னணி ஆதரவாளரான மிசௌரியின் புனித லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் எரிக் டிரின்காஸ், சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆதிகால மனிதர்கள் மற்றும் நவீனகால மனிதர்களுக்கு இடையே கலப்பின சேர்க்கை இருந்ததை பல புதைபடிமான மாதிரிகள் எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டார்.
சுமார் 24,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட, போர்ச்சுகல்லில் கண்டறியப்பட்ட ஒரு சிறுவனின் புதைபடிமான எலும்புக்கூடு இதற்கு ஒரு சான்றாகும். (ஆதாரம்: ஞிஉணீக்ஷீட்மீ மீட் ணீறீ. 1999, றிக்ஷீஷீநீமீமீபீவீஸீரீச் ஷீயீ ட்லீமீ ழிணீட்வீஷீஸீணீறீ கிநீணீபீமீனீஹ் ஷீயீ ஷிநீவீமீஸீநீமீச்). ஆதிகால மனிதர்கள் பிறவற்றுடன் வெளிப்படையாக காணாமல் போன ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர் உறுதியாக நவீன பண்புகளுடன் சார்ந்த பல ஆதிகால மனிதர்களின் பண்புகளை இந்த மாதிரி புதைபடிமானங்கள் கொண்டுள்ளன. இந்த சந்தேகத்திற்குரிய ஆதிகால மனிதர்களின் பண்புகள் நவீன மூளையுடன் ஒப்பிடும் போது பருத்த உடல் மற்றும் குட்டையான கால்கள் கொண்ட மூளை வளர்ச்சி பெற்ற எலும்பு கூட்டில் உள்ளன.


அந்த சிறுவன் கடல் சிப்பிகளால் கட்டப்பட்ட மாலையுடன் சிவப்பு ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிட்டு புதைக்கப்பட்டிருந்தான். இந்த புதைக்கும் பழக்கம் நவீனகால மனிதர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது. டிரின்காசின் விளக்கம் சரியென்றால், இந்த சிறுவன் ஆதிகால மனிதர்களுடன் மற்றும் நவீனகால மனிதகுழு கலந்த வம்சாவளியில் வந்த ஒரு கலப்பின கூட்டத்தின் உறுப்பினராவான். சிறுவனின் சந்தேகத்திற்கிடமான ஆதிகால மனிதபண்புகள் அந்த காலகட்டத்தில் நவீன மனிதர்களின் பல மாற்றங்களுக்குள் இருந்திருக்கலாம். மேலும் அது கலப்பின சேர்க்கையைத் தான் கட்டாயம் குறிக்கிறது என்றாகாது என்று விமர்சனங்கள் வாதிடுகின்றன. (ஆதாரம்: ஜிணீட்ட்மீக்ஷீச்ணீறீறீ ணீஸீபீ ஷிநீலீஷ்ணீக்ஷீட்க்ஷ் 1999, றிக்ஷீஷீநீமீமீபீவீஸீரீச் ஷீயீ ட்லீமீ ழிணீட்வீஷீஸீணீறீ கிநீணீபீமீனீஹ் ஷீயீ ஷிநீவீமீஸீநீமீச்).

மிக சமீபத்தில், உருமானியாவிலுள்ள ஒரு குகையில் கிடைத்த 30,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நவீனகால மனிதயின எலும்புகளை டிரின்காஸ் மற்றும் கூட்டாளிகள் ஆராய்ந்தனர். (ஆதாரம்: கிஉரீஉச்ட் 2007, சிஉக்ஷீக்ஷீமீஸீட் கிஸீட்லீக்ஷீஷீஜீஷீறீஷீரீஹ்). நவீனகால மனிதர்கள் மற்றும் ஆதிகால மனிதர்களின் பண்புகளின் கலவையை மூளை வெளிப்படுத்துவதால், உருமானிய புதைபடிமானங்கள் குறிப்பிடத்தக்க கலப்பின பெருக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன என்பது இந்த ஆய்வாளர்களின் கருத்து. தலையின் பின்புற கொண்டை (மூளையின் பின்னால் இருக்கும் வீக்கம்), மூளையின் பின்னால் இணைந்திருக்கும் ஒரு தசை மற்றும் தாடையின் பின்னால் இணைந்திருக்கும் சில தசைகள் ஆகியவற்றை ஆதிகால மனிதர்களின் தன்மைகள் உட்கொண்டிருக்கின்றன. இந்த தன்மைகள் நவீனகால மனிதர்களிடம் காணப்படுவதில்லை அல்லது எப்போதாவது மட்டும் காணப்படுகிறது.

நவீனகால மனிதர்கள் மற்றும் ஆதிகால மனிதர்களின் பொதுவான மூதாதையராக கருதப்படும் ஐந்து ஹோமோ ஹெடெல்பெர்ஜென்சிஸின் (பிஷீனீஷீ லீமீவீபீமீறீதீமீக்ஷீரீமீஸீச்வீச்) மூளைகளின் பகுதியைப் பயன்படுத்திய ஸ்பானிய ஆராய்ச்சியாளர்களின் மற்றொரு புலனாய்வு (விணீக்ஷீட்வீஸீமீக்ஷ் மீட் ணீறீ., 22 யிஉஸீமீ 2004, றிக்ஷீஷீநீமீமீபீவீஸீரீச் ஷீயீ ட்லீமீ ழிணீட்வீஷீஸீணீறீ கிநீணீபீமீனீஹ் ஷீயீ ஷிநீவீமீஸீநீமீச்) மூளையின் கணனி கதிராய்வு(சிஷீனீஜீஉட்மீக்ஷீட்ஷீனீஷீரீக்ஷீணீஜீலீவீமீ-சிஜி) வடிவத்தை உருவாக்கியது. இந்த மறுவமைப்பு, நவீனகால மனிதர்களைப் போன்றே அண்ணளவாக செவிகளைப் பெற்றிருப்பதையும், ஆனால் தெளிவாக சிம்பன்ஜிகளிடமிருந்து வேறுபட்டு இருப்பதையும் குறிக்கும் உடற்கூறு அமைப்பியல் பண்புகளை எடுத்துக்காட்டுகிறது. அதவாது, ஹோமோ ஹெடெல்பெர்ஜென்சிஸ் உயிரினங்களின் உறுப்பினர்கள் நவீனகால மனிதர்களின் பேசும் ஒலியின் அளவையே பெற்றிருந்ததாக தெரிகிறது என்பதே இதன் பொருள்விளக்கமாக உள்ளது. ஆகவே, ஆதிகால மனிதர்கள் உட்பட அவர்ளின் வம்சாவளியினருக்கும் அந்த திறன் இருந்திருக்கலாம்.

மனிதயின பரிணாம ஆய்வியலுக்கான விணீஜ் றிறீணீஸீநீளீ பயிலகத்தின் பிரத்யேக ஆய்வு, நவீனகால மனிதர்களிடம் காணப்படும் மொழி மற்றும் பேச்சுத்திறனோடு தொடர்புடைய திளிஙீறி2 எனும் மரபணு போன்ற வடிவத்திலான மரபணு ஆதிகால மனிதர்களிடமும் காணப்படுவதாக கண்டறிந்துள்ளது.

ஙிஷீநீணீ ஸிணீட்ஷீஸீ நகரில் உள்ள புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழக மனித வர்க்க ஆய்வாளர் ஸிஷீதீமீக்ஷீட் விநீநீணீக்ஷீட்லீஹ் ஆதிகால மனிதர்களின் குரல் ஒலிகளை வடிவமைத்துள்ளார். அவர்கள் ஒலிப்பு நவீனகால மனிதர்களிடம் இருந்து சிறிது வேறுபட்டிருக்கலாம், ஆனால் இருந்தபோதினும் பேச்சு திறனுக்கு பொருத்தமானதே ஆகும். (ஆதாரம்: சிணீறீறீணீஷ்ணீஹ், 15 கிஜீக்ஷீவீறீ 2008, ழிமீஷ்ஷிநீவீமீஸீட்வீச்ட்.நீஷீனீ).

முன்நிற்கும் ஆதாரங்கள் ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையிலான ஒற்றுமையைக் குறித்த போதினும், உயிரினங்கள் அளவிலான தொடர்பின்மை இரண்டிற்கும் இடையில் இருந்திருக்குமோ என்பதன் மீது ஹோமோ ஹெடெல்பெர்ஜென்சிஸ் வெளிச்சமிட்டு காட்டவில்லை.

முன்னர் விளக்கப்பட்ட கீமீணீஸ்மீக்ஷீ, ஸிஷீச்மீனீணீஸீ, ஷிட்க்ஷீவீஸீரீமீக்ஷீ போன்ற சில தோற்ற அமைப்பியல் ஆய்வுகளுடன், மரபணு ஆய்வுகளும், நவீனகால மனிதர்கள் மற்றும் ஆதிகால மனிதர்களுக்கு இடையிலான உறுதியான தொடர்பின்மை கண்ணோட்டத்திற்கு ஆதரவாக சார்ந்துள்ளது. பாரிய விரிவான புலனாய்வுகளுடன், இரண்டு குழுக்கள், ஒன்று லாரன்ஸ் பெர்க்லே தேசிய ஆய்வகம் மற்றும் அடுத்தது ஜேர்மனியிலுள்ள மனிதவர்க்க பரிணாம ஆய்வியலுக்கான விணீஜ் றிறீணீஸீநீளீ பயிலகம், இரண்டும் வெவ்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி குரோசியா நாட்டின் குகையில் கண்டெடுக்கப்பட்ட 38,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிகால மனிதர்களின் நியூக்ளியர் ஞிழிகிவை குறித்து ஆய்வு செய்தன. இந்த ஆய்வு, முன்னர் விளக்கிய விணீஜ் றிறீணீஸீநீளீ பயிலகத்தின் னீட்ஞிழிகி ஆய்விலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதன் முடிவுகளில், ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையே 99.5 சதவீதத்திற்கும் மேலாக மரபணு ஒற்றுமை இருப்பதாகவும், எனவே இவற்றிற்கிடேயே நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் உறுதிப்படுத்தியது. ஏதேனும் வகையில் ஒற்றுமைகள் இருந்த போதினும், நவீனகால மனிதர்களுக்கும் மற்றும் ஆதிகால மனிதர்களுக்கும் இடையே கலப்பின சேர்க்கை இருந்ததாக கூறும் யோசனைக்கு ஆதரவாக ஆராய்ச்சியாளர்கள் எந்த ஆதாரத்தையும் பெறவில்லை. இருப்பினும், இந்த தரவுகளைக் கொண்டு அக்கருத்தை முற்றிலுமாக விட்டுவிடவும் முடியாது. அதிகளவில் மரபணு இருப்பதாவது தொடர்ச்சியான அல்லது புதுப்பிக்கப்பட்ட மரபணு பரிமாற்றம் என்று பொருள்படுத்தப்படுவதை விட, முன்னர் குறிப்பிட்ட குதிரைகள் மற்றும் கழுதைகள் சான்றை போல ஒரு பொதுவான மூதாதையரால் ஏற்பட்டது என்று விளங்கப்படுத்தப்படுகிறது.


மரபணு ஆய்வு முடிவுகளை மதிப்பிடுகையில், உயிரினங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை துல்லியமாக ஞிழிகி தொடர்ச்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையின் ஒப்பீட்டு எண்ணிக்கையால் தீர்மானிக்க முடியாது என்பதை முக்கியமாக புரிந்து கொள்ள முடியாது. எளிய வார்த்தைகளில் கூறுவதானால், அதில் 'வடிவக்கூறு மரபணுவும்' (ணீக்ஷீநீலீவீட்மீநீடுக்ஷீமீ ரீமீஸீமீச்) உள்ளன; 'கட்டுப்பாட்டு மரபணுவும்'(நீஷீஸீட்க்ஷீஷீறீ ரீமீஸீமீச்) உள்ளன. வடிவக்கூறு மரபணுக்கள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை கட்டுப்பாட்டு மரபணுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கட்டுப்பாட்டு மரபணுவின் ஒரு சிறிய மாற்றம், ஒன்று அல்லது பல வடிவக்கூறு மரபணுக்களின் வெளிப்பாடுகளை கணிசமாக பாதிக்கலாம். எனவே மரபணு தொடர்ச்சியில் மாற்றம் ஏற்படுகிறது என்ற உண்மை இருந்த போதினும், குறிப்பிட்டளவில் வேறுபட்ட உயிர்வகைகளுக்கு வழிவகுக்கும் என்பது மிக சிறியளவேயாகும். ஆகவே, நவீனகால மனிதர்கள் ஆதிகால மனிதர்களிடம் ஒருசில தொடர்புகளில் மட்டும் மாறுபடலாம்; மிக முக்கியமாக கட்டுப்பாட்டு மரபணுக்களில் மாறுபடலாம்.

ghosts of modern man Pictures, Images and Photos

ஐரோப்பாவில் தோராயமாக ஆதிகால மனிதர்களுடன் நவீனகால மனிதர்கள் கலந்த காலத்திய புதைபடிமானங்களில் இருந்து நவீனகால மனிதர்களின் மைட்டோகான்ரியல் ஞிழிகிவை ஆராயும் மற்றொரு ஆராய்ச்சி, இன்றும் ஐரோப்பாவில் அதேபோன்ற னீட்ஞிழிகி இருப்பதாக கண்டறிந்துள்ளது. எவ்வாறிருப்பினும், இந்த னீட்ஞிழிகி ஆதிகால மனிதர்களின் னீட்ஞிழிகி இல் இருந்து கணிசமாக வேறுபட்டுள்ளது. (ஆதாரம்: சிணீக்ஷீணீனீமீறீறீவீ மீட் ணீறீ., 16 யிஉறீஹ் 2008, றிலிஷீஷி ளிழிணி). இது ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையே மரபணு தொடர்பின்மை இருப்பதை தான் மீண்டும் குறிக்கிறது.

இறுதியாக, ரேடியோகார்பனின் காலஅளவு ஒப்பீடுகளில் திருத்தங்களின் சமீபத்திய மாற்றங்கள், ஐரோப்பாவில் ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலப்பு காலத்தை ஆயிரம் ஆண்டுகள் என்ற அளவில் சுருக்கி உள்ளது. (ஆதாரம்: விமீறீறீணீக்ஷீச், 23 திமீதீக்ஷீஉணீக்ஷீஹ் 2006, ழிணீடுக்ஷீமீ). இது ஒரு நீண்ட கால கூட்டு இருப்பினதும் மற்றும், சிலவேளை ஒன்றின் மீதான ஒன்றின் தாக்கத்திற்கு பதிலாக, கலாச்சாரீதியாகவும், மரபணுரீதியாகவும் ஆதிகால மனிதர்கள் நவீனகால மனிதர்களுடன் வளத்திற்காக போராடும் திறன்யின்மையாலும் மற்றும்/அல்லது பிந்தையதால் முந்தையது இல்லாதழிக்கப்பட்டிருக்கலாம் என்பதாலும் ஆதிகால மனிதர்களின் விரைவான அழிவுக்கு இட்டு சென்றிருக்கலாம் என்ற முடிவிற்கு இட்டுச்செல்கின்றது.

ஒட்டுமொத்தமாக, ஆதிகால மனிதர்களும், நவீனகால மனிதர்களும் உயிரின அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன என்ற விளக்கத்தையே மரபணு ஆய்வுகள் சார்ந்துள்ளன. இது புதைபடிமான எலும்பு ஆய்வுகளில் இருந்து வரும் முடிவுகளுக்கு முற்றிலும் முரணாக நிற்கிறது. இருந்தபோதினும், மொத்தத்தில், உயிரின தொடர்பின்மை குறித்த வாதத்தின் பக்கத்தை சார்ந்தே ஆய்வுகளின் போக்கு இருப்பதாக தெரிகிறது.

மரபணு ஆராய்ச்சி இதுவரை ஆதிகால மனிதர்களின் ஞிழிகிவின் ஒரு பகுதியை மட்டுமே ஆய்வு செய்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கதாகும். ஆதிகால மனிதர்களின் முழு ஞிழிகி தொடர்ச்சிகளும் இந்த ஆண்டு முடிவில் ஆராய்ச்சி செய்யப்படும் போது, மேலும் தெளிவான கண்ணோட்டம் கிடைக்கலாம். பின்னர் இது மனிதயின மரபணு திட்டத்தால் (பிஉனீணீஸீ நிமீஸீஷீனீமீ றிக்ஷீஷீழீமீநீட்) வரையறுக்கப்பட்ட நவீனமனித ஞிழிகி தொடர்ச்சியுடன் ஒப்பிடப்படும்.

முன்னர் குறிப்பட்டது போல, ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களுக்கும் இடையிலான இயற்கையான தொடர்புகள் மீதான ஆராய்ச்சி பெரும்பாலும் பொதுவாக மனிதயின பரிணாம போக்கை புரிந்து கொள்ள பயன்படுகிறது. ஒருவேளை சிறப்பு ஆராய்ச்சிகளால் மனித பண்புகளில் ஒரேயரு சிகரமான புத்திஜீவித்தனமான சிந்தனை திறனின் அபிவிருத்தியையும் மூலத்தையும் அறிய இவை உதவுமா? இந்த திறன் முழுமையாக மொத்தத்தில் ஒரேதடவையில் உருவாகி விட்டதா? அல்லது படிப்படியாக பல மில்லியன் ஆண்டுகளாக பல உயிரினங்களைக் கடந்து உருவானதா? அதாவது ஒருவேளை கடந்த காலத்தில் இதன் பழைய வளர்ச்சி பெறாத நிலைகள் இருந்தனவா? அவ்வாறு இருந்தால் இந்த பரிணாம செய்முறை தொடர்ச்சியில் சமீபத்திய வரவாக நமது இன்றைய மனதின் திறன்கள் அமைகின்றன. அதேபோன்று, நமது நிலை தான் இதுவரை எட்டப்படாத மிகவும் நூதனமான ஒன்றாகவும் அமைகிறது, ஆனால் இதுவே இறுதியானதாக இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல.

Wednesday, November 18, 2009

இஸ்லாம் வாளால் பரவியதா?


முன்னுரை: இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று முஸ்லீம்கள் ஏகமாக சொல்கிறார்கள். ஆனால், முகமது மற்ற நாட்டு மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களே போதும், நமக்கு இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வதற்கு. மற்ற நாட்டு மன்னர்களுக்கு முகமது கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்தார், அபுமுஹை அவர்கள் அக்கடிதங்களின் தமிழ் மொழியாக்கத்தை பதித்துள்ளார். இக்கடிதங்களை ரஹீக் என்ற புத்தகத்திலிருந்து பதித்ததாக, அபுமுஹை அவர்கள் குறிப்பு எழுதியுள்ளார்கள்.
இக்கட்டுரையில் நாம் கீழ் கண்ட இரண்டு விவரங்களைக் காணப்போகிறோம்.



1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்.

2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?







1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்


முகமது எட்டு அரசர்களுக்கு கடிதம் மூலம் இஸ்லாமை தழுவும் படி அழைப்பு விடுத்ததாக அபூமுஹை அவர்கள் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இக்கடிதங்கள் ஆங்கிலத்தில் முஹம்மத் டாட் நெட் என்ற தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டு மன்னருக்கு முகமது அனுப்பிய முதலாவது கடிதம் கிடைக்காததால், அதை நான் இக்கட்டுரைக்கு எடுத்துக்கொள்ளவில்லை, அக்கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்.

இந்த கட்டுரைகளில் சிலவற்றில், எங்கெல்லாம் இஸ்லாமைக் கொண்டு முகமது மற்றவர்களை பயப்பட வைத்தாரோ, அங்கெல்லாம் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் அவ்வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் போல" காட்சி அளிக்கும் படி மொழிபெயர்த்துள்ளார்கள்.

அவைகளைப் பற்றிய விவரங்களை கீழே காணலாம்:

ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு நமக்கு உபயோகமாக இருக்கும் என்பதால், இக்கடிதங்களை ஆங்கிலத்தில் நான் கீழே பதித்து, அதன் பக்கத்தில் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்த விவரஙகளைத் தருகிறேன். முழு கடிதங்களைப் படிக்க கொடுக்கப்பட்ட தமிழ் அல்லது ஆங்கில தொடுப்புக்களை சொடுக்கவும்.

வரிசை எண் எந்த நாட்டு அரசனுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டது தமிழில்(அபூமுஹை த‌ள‌ம் எழுதிய‌து) இக்கடிதம் ஆங்கில‌த்தில்
1. அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷிக்கு ….. நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய். .......

Source: http://abumuhai.blogspot.com/2008/07/1.html …. I call you unto the fold of Islam; if you embrace Islam, you will find safety, ….

Source: A Deputation to Abyssinia (Ethiopia)
2. எகிப்து மன்னருக்கு நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/2.html … I invite you to accept Islam. Therefore, if you want security, accept Islam.

Source: Letter to the Vicegerent of Egypt, called Muqawqas
3. பாரசீக மன்னருக்கு …நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/3.html …… Accept Islam as your religion so that you may live in security,….

Source: A Letter to Chosroes, Emperor of Persia
4. ரோம் நாட்டு மன்னருக்கு ….நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய்….

Source: http://abumuhai.blogspot.com/2008/07/4.html ……I invite you to embrace Islam so that you may live in security.

Source: The Envoy to Caesar, King of Rome
5. யமாமா நாட்டு அரசருக்கு ….குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html … Be informed that my religion shall prevail everywhere. You should accept Islam, and whatever under your command shall remain yours."

Source: A Letter to Haudha bin 'Ali, Governor of Yamama
6. சிரியா நாட்டு மன்னருக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.''

அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html From Muhammad, Messenger of Allâh to Al-Harith bin Abi Shamir. Peace be upon him who follows true guidance, believes in it and regards it as true. I invite you to believe in Allâh Alone with no associate, thenceafter your kingdom will remain yours."

Shuja' bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered: "Who dares to disposs me of my country, I'll fight him (the Prophet)," and arrogantly rejected the Prophet's invitation to the fold of Islam.

Source:A Letter to Harith bin Abi Shamir Al-Ghassani, King of Damascus
7. ஓமன் நாட்டு அரசருக்கு நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'

Source: http://abumuhai.blogspot.com/2008/07/8.html If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you've got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship."

Source: Letter to the King of 'Oman, Jaifer, and his Brother 'Abd Al-Jalandi



2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?

மேலே உள்ள சில கட்டுரைகளில்,

ஆங்கிலத்தில் "if you embrace Islam, you will find safety" என்று உள்ளதை

தமிழில் "நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.

ஆங்கிலத்தில் உள்ள வரிகளில் "ஒரு நிபந்தனை" இருப்பதை காணமுடியும், அதாவது, "நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், பாதுகாப்பாக இருப்பீர்கள்" என்று உள்ளது. இதன் உள் அர்த்தம் என்ன? "நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லையானால், பாதுகாப்பாக இருக்கமாட்டீர்கள், அதாவது நான் வந்து போர் புரிந்து, உங்கள் மீது வெற்றிக்கொள்வேன்" என்று பொருள். இந்த விவரத்தை மிகவும் தெளிவாக, முகமது ஓமன் நாட்டு மன்னருக்கு எழுதிய கடிதத்தில் விவரித்துள்ளார்.



ஓமன் நாட்டுக்கு முகமதுவின் கடிதம்:

...நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'

...If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you've got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship."


மேலே உள்ள கடிதத்தில் முகமது சொல்வதை கவனியுங்கள். ஓமன் நாட்டு அரசர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், தன் நாட்டை தானே ஆட்சி செய்யலாமாம். யார் யாருக்கு ஆட்சிப் பொறுப்பை தருவது? நான் ஆட்சி செய்யும் நாட்டில், எனக்கு யாரோ ஒருவர் கடிதம் அனுப்பி, இஸ்லாமை ஏற்றுகொள், அப்போது நீயே உன் நாட்டை ஆட்சி செய்யலாம் என்று சொன்னால், நான் என்ன காதில் பூவைத்து இருப்பேனா? ஒருவேளை எனக்கு இராணுவ பலம் குறைவாக இருந்தால், தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளமுடியும் [அப்படி தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இதனால் அல்லாவிற்கும், இஸ்லாமுக்கும் என்ன மேன்மை சொல்லுங்கள்?]. எனக்கு இராணுவ பலம் அதிகமாக இருந்தால், முகமதுவோடு போர் புரிவேன். எது எப்படியானாலும், இது தான் அல்லாவின் தீனை பரப்பும் விதமா? சிந்தியுங்கள்.

ஒரு வேளை முஸ்லீம்கள் இக்கடிதங்களுக்கு "அப்படி அர்த்தம் இல்லை, கிறிஸ்தவர்கள் பொய் சொல்கிறார்கள்" என்று சொல்லக்கூடும். ஆனால், சிரியா அரசன், இக்கடிதம் படித்து என்ன சொன்னார் என்பதை சிறிது படித்துப்பார்த்தால் புரியும், இஸ்லாமை முகமது எப்படி பரப்பினார் என்பதை. அந்த அரசன் "என்னிடத்திலிருந்து என் ஆட்சியை யார் பிடுங்க முடியும்?" என்றுச் சொல்கிறான், அப்படியானால், அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கும் என்று தெரிந்துக்கொள்ள ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை.



அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.


Shuja' bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered: "Who dares to disposs me of my country, I'll fight him (the Prophet)," and arrogantly rejected the Prophet's invitation to the fold of Islam.



சிலர் சொல்லக்கூடும், முகமதுவின் இக்கடிதங்களுக்கு பலர் ஆமோதம் அளித்தார்கள், இஸ்லாமியர்களாக மாறினார்கள் என்று. உண்மை தான் பலர் அமோதம் அளித்தார்கள், சிலர் எதிர்த்தார்கள். இங்கு பிரச்சனை "இஸ்லாமின் கோட்பாடுகள், கட்டளைகள்" மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததா இல்லையா என்பதல்ல? முகமது இஸ்லாமை பரப்பிய விதம் சரியா? உடனே, முகமதுவை விட்டுவிட்டு மற்ற அரசர்களின் பெயர்களை குறிப்பிட்டு, இந்த நாட்டில் இப்படி அமைதியான முறையில் இஸ்லாம் பரவியது என்று சொல்லவேண்டாம், இப்போது கேள்வி, முகமது இஸ்லாமை எப்படி பரப்பினார்? என்பது தான். முகமதுவின் கடிதங்களில் உள்ள உண்மை என்ன? என்பதைப் பற்றியது தான்.




முகமது இஸ்லாமை வாளால் தான் பரப்பினார்:

இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்பதை காட்ட முஸ்லீம்கள், பல நாடுகளின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், முகமது எப்படி பரப்பினார் என்பதை இக்கடிதங்கள் படம் பிடித்துக்காட்டுகின்றன. இதற்கு முஸ்லீம்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? நான் ஒரு கேள்வியை கேட்கட்டும், அதாவது உலகத்தில் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு, இந்திய அரசாங்கம் அல்லது வேறு ஒரு மேற்கத்திய நாடு அல்லது இராணுபலம் அதிகமாக உள்ள நாடு, கீழ் கண்டவாறு கடிதம் எழுதி அனுப்பினால், எப்படி இருக்கும்.



மான்புமிகு சூடான்/பாகிஸ்தான்/சௌதி அரேபியா etc... நாட்டு அதிபருக்கு, இந்தியாவின்/சைனாவின்/அமெரிக்காவின்/ஜெர்மனியின் etc... நாட்டு அதிபர் எழுதிக்கொள்வது. உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்.

நாங்கள் a/b/c/x/y/z etc.. என்ற இறைவனை வணங்குகிறோம், மற்றும் இத்தெய்வமே உண்மையானவர். எனவே, உங்கள் அல்லாவை தொழுவதை இனி விட்டுவிடுங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால், இந்துத்துவத்தை / கிறிஸ்தவத்தை / புத்தமதத்தை / etc... ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்க‌ள் இஸ்லாமை விட்டு விட்டு எங்கள் தெய்வ‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ள‌வில்லையானால், எங்க‌ள் இராணுவ‌ம் உங்க‌ள் நாட்டில் வ‌ந்து இற‌ங்கும், எங்க‌ள் வ‌லிமையை உங்க‌ளுக்கு காட்டுவோம். எங்க‌ள் மார்க்க‌த்தை ஏற்று, உங்க‌ள் இஸ்லாமை விட்டு விடுங்க‌ள் என்று உங்க‌ளுக்கு அழைப்பு விடுக்கிறோம். அப்ப‌டி நீங்க‌ள் மாற‌வில்லையானால், அல்லாவை வ‌ண‌ங்கும் மூஸ்லீம்க‌ளின் பாவ‌ங்க‌ள் எல்லாம் உங்க‌ள் மேல் சும‌ரும் என்ப‌தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மேலே உள்ள கடிதத்திற்கும், முகமது அனுப்பின கடிதங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள். இதை படித்தவுடன் கோபம் வரவில்லையா உங்களுக்கு? அப்படித்தான், முகமதுவும் தன் தெய்வமாகிய அல்லாவை பரப்ப, ஆயுதத்தையும், போரையும், சர்வாதிகாரத்தையும் பயன்படுத்தினார். அதற்கு இக்கடிதங்களே சாட்சிகள். இக்கடிதங்களையும், அவைகளில் உள்ள செய்திகளையும், உலகத்தில் உள்ள மக்களுக்கு எப்படி விளக்குவீர்கள்? என்ன நியாயத்தை கற்பிப்பீர்கள்? சாதாரணமாக, கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தாமல், பொன்னுக்கும் மண்ணுக்கும் ஆசைப்பட்டு பல அரசர்கள் பக்கத்து நாட்டு அரசர்கள் மீது போர் தொடுப்பார்கள். ஆனால், தன்னை ஒரு இறைவனின் தூதன் என்றுச் சொல்லிக்கொண்டு, உலகத்திற்கு அமைதியை கொடுப்பேன் என்றுச் சொல்லிக்கொண்டு, இரத்தம் சிந்தியது சரிதானா என்று சிந்தித்துப் பாருங்கள். இப்படியும் ஒரு மதத்தை பரப்பனுமா? என்று உங்களை நீங்களே கேள்வியை கேட்டுப்பாருங்கள்.


முகமதுவை விட மற்ற இஸ்லாமிய அரசர்கள் நல்லவர்கள் என்று சொல்லும் இஸ்லாமியர்கள்:

இஸ்லாமை பரப்ப இஸ்லாமிய அரசர்கள் வாளைப்பயன் படுத்தவில்லை, அவர்கள் தங்கள் நல்ல நடத்தையினால் தான் பரப்பினார்கள் என்றுச் சொல்லி, இஸ்லாமுக்காக பரிந்துப்பேசும் இஸ்லாமியர்கள் ஒன்றை கவனத்தில் வைக்கவேண்டும். இப்படி நீங்கள் செய்வதினால், நீங்கள் மேற்கோள் காட்டும் இஸ்லாமிய அரசர்கள், "முகமதுவை விட நல்லவர்களாக இருந்தார்கள்" என்பதை மறைமுகமாக நீங்கள் சொல்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் முகமது கடிதங்களை அனுப்பி, அரசர்களை இஸ்லாமுக்கு அழைத்து, வரவில்லையானால் தொலைத்துவிடுவேன் என்று பயமுறுத்தி இஸ்லாமை பரப்பினார், ஆனால், அவரை பின்பற்றியவர்கள் அப்படி செய்யவில்லை என்று நீங்கள் சொல்வதினால், என்ன தவறு செய்துள்ளீர்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.


இறையடியான்

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/abumuhai/MletterSword.html